Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

தொடருங்கள் ஜீவா

Link to comment
Share on other sites

  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்... தொடருகிறேன் அண்ணா...!!!

ஆனால், மனைவி என்ற உறவில் அல்ல...

ரசிகை என்ற முறையில்...!!

 

நன்றி  பிள்ளாய்

இது யாழுக்கு புதிது.

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிடியா கதை சொல்லுறிங்கள் . உங்கடை கதை உங்கடை ஸ்ரைலிலை வரட்டும் அதுதான் நல்லது .

நன்றி அக்கா,

வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும். :) உங்கள் எதிர்பார்ப்புக்கு அமைய இருக்குமோ தெரியவில்லை.

பொறுத்தருள்க..

 

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

 

நன்றி நுணா அண்ணா.. :)

 

அது பெரிய கதை நிழலி அண்ணாக்கு தெரியும். :rolleyes:

பிரியாவும் பார்பதனால் இன்னும் உற்சாகமாக எல்லோ எழுத வேண்டும் யீவா :D

 

ஆக மொத்தம் குடும்பத்திலை ஒரு குலைப்பன் வர பண்ணாமல் விடமாட்டியள் போல .. :D:lol:

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது ஜீவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தொடரும் போடாமல் தொருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யீவா தற்சமயம் பச்சைகள் கையிருப்பில் இல்லை பின்னர் போட்டுவிடுகிறேன். நன்றாக இருக்கிறது. எழுத்துகள் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. மாமியார் வீட்டுக்குப்போகபின்னால்தான் கலகலப்பு அதிகமாக இருக்கும் என்று பட்சி சொல்கிறது. படங்களும் நன்றாக இருக்கின்றன. முக்கியமாக ஒருவிடயத்தைக் கவனத்தில் எடுத்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இடுங்கள். இதுவரை நான் உங்களுடைய  தொடரில் 3 ஐ வாசித்துவிட்டேன் இனி 4இலிருந்து வாசிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க உதவியாக இருக்கும். யீவா நம்மைப் போன்றவர்களுக்கு நேரம் கம்மி. யாழில் சிலருடைய ஆக்கங்களை ஆவலோடு தேடி வாசிப்பேன் அவர்களில் நீங்களும் ஒருவர். அதுதான் அடுத்ததடவை இதற்குள் எட்டிப்பார்க்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிக்க வசதியாக இருக்கும். :rolleyes:

 

நன்றி சகாறா அக்கா, உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கு.. :)

 

உங்கள் ஆலோசனைப்படியே செய்துவிட்டேன், ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இட்டாச்சு. நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீவா அண்ணா... :)

 

நன்றி துளசி சிஸ்டர்.... :)

ஜீவாண்ணா;சூப்பர்;ஜமாயுங்கள். :)

 

வரவுக்கும், கருத்திற்கும் நன்றி வண்டி .. சீசீ.. வண்டு பிரதர்.

 

நீங்க யாரு, எங்கை இருந்து வாறிங்கள் எண்டும் எனக்கு தெரியும். :rolleyes:  அண்ணானு என்னையே கலாய்க்கிறிங்களே பிரதர். :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார்வீடு... (தொடர்ச்சி..)  பகுதி-5

 

நடந்த படியே கவுண்டரைத்தேடிய எனக்கு ஒரு இடத்தில் வியப்பாய் இருந்தது ரேஷன் கடையில் பொருட்களுக்கு காத்திருக்கும் கூட்டமளவுக்கு நெரிசல், வெள்ளைநிறமருகி கருப்பு,மாநிறங்களின் கலவையாய் இருந்தது.

அருகில் சென்று பார்த்தால் நான் தேடிவந்த அதே சென்னை செல்லும் கட்டார் எயார்வேய்ஸ் கவுண்டர்.

கூட்டம்,நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்த ஜரோப்பாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தில் ஏறிய எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியே.

இவ்வளவு பெரிய கூட்டம்.. ஜேர்மன் மொழியும்,ஆங்கிலமும் கேட்ட காதுகளில் தமிழ் இன்பத்தேனாய் ஒலித்தது. எம்மவர்கள் என்ற மிடுக்கு வந்த போதும், காவலாளியின் குரல் சற்று காதுக்கு கசக்கவே செய்தது. " ப்ளீஸ் சிங்கிள் லைன்.. சிங்கிள் லைன்.." என்று ஒழுங்கின்றி நெருக்கி முட்டிமோதிக்கொண்டு நின்றவர்களை வரிசையில் நிற்கச்சொல்லி காவலாளி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான். வரிசையின் இறுதியில் போய் நின்று கொண்டேன். இது என் முறை பாஸ்போட்டையும் என்னையும் ஒரு தடவை மேலும் கீழும் பார்த்த பெண் போடிங்காட்டில்  என்னை குத்துற மாதிரியே ஒரு குத்து குத்தி பாதி துண்டைத் தந்தாள்.

 

வருபவர்களை வரவேற்கும் விமானப்பெண், "வணக்கம்" 26D  இடது பக்கம் முன்னாலை என்றாள். 26Dதான் எனது சீற் நம்பர்.

உள்ளே நுழைந்த எனக்கு அதிர்ச்சி உண்மையில் விமானத்தில் தானா இருக்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஏதோ "கறிக்கடைக்கு" போனது போன்ற இரைச்சல், அருகில் இருந்த சீற்றுக்குப் போய்ச்சேருவதற்கே பலமுறை "எக்ஸ்கியூஸ்மீ" சொல்ல வேண்டி இருந்தது.

 

வந்தமர்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன், எப்படா போய்ச்சேருவேன் என்று.

விமானம் புறப்படத்தாமதம் ஆகும் என்று புரிந்துகொண்டேன், இன்னும் பலர் உள்ளே வந்தும் இருக்கைகளில் அமரவில்லை என்று ஹெட்போனைக் காதில் மாட்டி திரையைத்தட்டிக்கொண்டிருக்கிறேன்.

தனுஸ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படம் இருந்தது ப்ளே பண்ணிப்பார்த்துக் கொண்டிருக்க ஒரு நாற்பது,நாற்பத்தைந்து வயதிருக்கும் பெண்மணி வந்து அருகில் நின்றார் போடிங்காட்டையும் மேலை சீற் நம்பரையும் பார்த்தார், நான் நினைத்தேன் பக்கத்து சீற்காலியாக இருக்குது அதில் இருக்கபோறார் போல என்று நினைத்து எழுந்து வழிவிட்டேன். அவர் என்னுடைய சீற்றில் உட்கார்ந்து விட்டார். எனக்கு அப்படியே "ஷாக்" ஆயிட்டுது. நான் தான் ஒரு வேளை தப்பாக இருந்து விட்டேனோ என்று எண்ணி சீற் நம்பரைப் பார்த்து உறுதி செய்துகொண்டேன்.

 

" உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ஆங்கிலத்தில் கேட்டேன்."

முறைச்சு பார்த்தார்

 

"சென்னைக்கு தானே விமானம் போகுது   தமிழாத்தான் இருக்கும் என்று எண்ணி இது என்னோட சீற் எழுந்து விடுறிங்களா என்று கேட்டேன்?"

 

பக்கத்திலை இரண்டு ஆம்பிளை பசங்க இருக்கானுங்க அதான்..

 

இதைப்பார்த்து விட்டு பின்னால் இருந்த அப்பெண்ணின் கணவன் வந்து என்ன என்று தன் மனைவிடம் விசாரிக்க,

நான் சொன்னேன் நீங்கள் இரண்டு பேரும் அருகருகில் இருங்கள் நான் விமானப்பணிப்பெண்ணிடம் சொல்லி உங்கள் இருக்கைக்கு மாறிவிடுகிறேன் என்று.

 

எப்ப சனியனை துரத்தி விடுவம் என்று நினைத்தாரோ இல்லை இந்த கொஞ்ச நேரமாவது நிம்மதியாய் இருப்பம் என்று நினைத்தாரோ என்னவோ

"பரவாயில்லை தம்பி ப்ளீஸ் இதிலையே இருக்கட்டும் என்று சொன்னார்."

இதுக்கு மேல் இதை வளர்ப்பது நாகரீகம் இல்லை என்று கருதி பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

 

போகும் போது யாழிலை தமிழ்சிறி அண்ணா இணைக்கிற அன்றைய தினப்பலனைப் பார்த்திட்டுப் போயிருக்கலாமோ என்று நினைக்கிற அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் அதிரடியாய் இருந்தன..

 

எனது சீட்டில் இருந்தவர் நான் கேட்டுக்கொண்டிருந்த ஹெட்போனைக் கழட்டி விடச்சொன்னார்.

"ஒரு ஆள் பாவித்ததை மற்றவர் பாவிக்க கூடாது தானே, ஹெல்த்திலை கவனமா இருக்கிறா குட் ஆன்டி" என்று நினைத்து

நான் இருந்த சீட்டில் இருந்த பை உடைக்காத ஹெட்போனை அவரிடம் குடுத்தேன்.

 

"வேண்டாம்" என்றார்.

அப்ப படம்,பாட்டுக்கேட்கவில்லையாக்கும் என்று நினைத்து விட்டு என்பாட்டில் இருந்து விட்டேன்.

சற்று நேரத்தின் பின் திரும்பி பார்க்கும் போது நான் பார்த்த குறையில் இருந்து 3படம் ஓடிக்கொண்டிருந்தது..

 

என் தலையைக்கொண்டுபோய் சீற்றிலை முட்டவேணும் போல இருந்துச்சு..

"ஒரு வேளை வேற்றுக்கிரகவாசிகளோ என்று கூட மனம் நினைத்தது"

 

இதுக்கே இப்படியா இந்தா அடுத்தது என்று அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது..

 

விமானம் புறப்பட முதல் எல்லாரினதும் சீற்பெல்ட்,யன்னல் சாளரங்களை சரி பார்த்து விட்டு போன பின்னர் விமானம் ஓடுபாதையில் ஓடும் போது அருகில் இருந்த பெண் கைப்பையை எடுத்து தண்ணீர் போத்தல்,தண்ணீர்குவளை வைக்கும் தட்டில்

கொழுவிவிட்டார்.

 

528937_410390435701912_739634076_n.jpg

 

எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது, இருந்தும் முதல் பயணமாக இருக்கும் போல என்று நினைத்து

"ஆன்டி இதை இங்கை வைக்க கூடாது சீற்றுக்கு கீழை வையுங்கோ போகும் போது எடுக்கலாம் என்றேன்.."

 

பார்த்த பார்வையிலையே "எனக்கு தெரியும் நீ பொத்திட்டு இரு" என்ற மாதிரி இருந்தது.

 

"ஆன்டி" என்று சொன்னதுக்கு இந்த பார்வையா இல்லை "நீ எனக்கு வகுப்பெடுக்கிறியா" என்று இந்தப்பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் நமக்கேன் வேண்டாத வேலை, பெண் வேறு கையை பிடிச்சிட்டான், காலைப்பிடிச்சிட்டான் என்று கத்தினால் தர்ம அடி தான் விழும், உதவி செய்யப்போய் உபத்திரவம் எதுக்கு என்று நினைத்து பாட்டைக் கேட்டவாறு கண்களை மூடுவது போல நடித்துக்கொண்டிருந்தேன்.

 

விமானம் நிலையாய் பறப்பில் ஆரம்பித்த சில மணிநேரத்த்இன் பின் உணவுக்கு முதல் குடிவகைகளும்,ஸ்நாக்ஸும் குடுத்தார்கள், வாங்கி கொறித்துக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்தவன்.

 

"சென்னைக்கா"?

"எங்கையிருந்து வாறாய்?"

 

பதில் விசாரிப்புக்கு நான்

 

"நீங்கள்"?

 

"பஞ்சாப்,சென்னையில் வாகனச்சாரதியாய் இருக்கிறேன், ஆங்கிலமும்,தமிழும் கொஞ்சம்,கொஞ்சம் தெரியும்"

 

அத்துடன் அவன் ரெட்லேபலில் ஜஸ் போட்டுத்தரச்சொல்லி வாங்கி அடுத்தடுத்து வாங்கி குடித்துக்கொண்டிருந்தான்.

 

ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானமும்,உதயநிதி ஸ்டாலினும் அடிக்கும் கூத்துகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு விமானப்பணிப்பெண்களை பாடாய்படுத்தி எடுத்தார்கள்.

 

"மேக்கப் போடாத பிகரைப் பார்த்தது போல இருந்தது அவர்கள் முகம்"..

 

சாப்பாடு வந்த போது அதைவிடப்பெரிய காமடி குறித்த பெண்ணுக்கு ரிக்கற் செய்தவர்கள் வெஜிட்டேரியன் என்று குடுத்திருக்க வேண்டும் போல அடையாளம் போட்டிருந்த உணவுப்பொதியை என்னிடம் ஏதும் கேட்காமலே நீட்டினாள் பணிப்பெண்.

" என்ன புதுசா இருக்கு முதலில் முதல் இருப்பவருக்கு குடுத்த பின் தானே மற்றவர்களுக்கு தருவார்கள்?! எப்படியோ நான் எனது சாப்பாட்டை திறந்து பார்க்க "வெஜ்" சரி.. எல்லாம் ஒன்று தான் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

 

அருகில் இருந்த ஆன்டிக்கு என்னுடைய "நொன்வெஜ்" மாறி வந்திட்டுது.

சிக்கன் சிறு துண்டுகளாக நன்றாக அவிந்து தேங்காய்பாலில் காய்ச்சிய ஸோஷில் செய்திருப்பார்கள் போல ...

 

"என்னிடம் கேட்டார் இது சிக்கன் தானே?"

ஆமா.. ஏன்?

 

"நான் வெஜிடேரியன்"

சுத்தம்.. சீற் மாறியது உனக்கும்,எனக்கும் தானே தெரியும் பணிப்பெண்ணுக்கு எங்கை தெரியப்போகுது என்றது என் உள்மனது.

 

"இருங்கோ நான் மாத்தி வாங்கித்தாறேன்"..

 

"வேண்டாம் .. நான் மரக்கறி என்று நினைத்து சாப்பிடுறேன், சிக்கன் சாப்பிடலாம் தானே?"!  கேள்வி வேறை..

 

என்னாலை சிரிப்பை அடக்க முடியவில்லை, அந்த நேரத்து உணர்வுகளை வார்த்தைகளிலும் வடித்து விட முடியாது ..

 

அப்பா... கொஞ்ச நேரம் தூங்குவம் என்று நினைத்து கண்ணை மூடினாலும், தூக்கம் வரவில்லை ஆறுமாதத்திற்குப்பின் என்னவளைப் பார்க்கப் போறேன் என்ற உணர்வு செல்லரித்த புத்தகமாய் எட்டிப்பார்த்தது ..

நினைவுகள் மெல்ல மெல்ல உருகி கருத்தரிக்க ஆரம்பித்தன்..

 

காகிதமே இல்லாமல் மனதின் வெண்திரைகளில் அவள் வதனம் படம் வரையத்தொடங்கின, ஏக்கங்கள் நெஞ்சாங்கூட்டை பிழிவது போன்ற உணர்வு .. தூங்கினால் அவள் நினைவுகள் என்னை கொன்று விடும் போல் இருந்தன ..

 

பேசாமல் படம் பார்ப்பம் என்று நினைக்க "உச்சா" வருவது போல இருந்திச்சு ... சரி போட்டு வருவம் என்று பார்த்தால்,

பக்கத்து சீட் ஆன்டி சாப்பாடு வைத்து சாப்பிடும் தட்டை இழுத்து விட்டு தூக்கம் மற்ற பக்கத்தாலை போகலாம் என்று பார்த்தால் இரண்டுபேரைக்கடந்து போகணும், என்ன செய்ய?

 

பாக்கெட்டில் இருந்த பேனையால் அன்டியை தட்டி, "கொஞ்சம் எழும்புறிங்களா வெளிய போட்டு வாறேன்?"

 

பாத்ரூம் போனால் ஒரு கூட்டமே லைனிலை நின்றார்கள், ஒவ்வொருத்தர் போய் வரவும் ஆகக்குறைந்தது 20முதல் அரை மணிநேரமாவது ஆயிருக்கும், முட்டிட்டு இருக்குதே என்று அடக்கிட்டு போட்டு வந்ததே பெரிய சாதனை..

 

உண்மையில் எனக்குள் பல கேள்விகள் வந்து போயின ..

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

 

ஒரே விமானநிறுவனத்தில் இரண்டு நாடுகளுக்கிடையே நடந்த பிரயாணத்திலேயே பணியாளர்களின் கவனிப்பு,முகம்சுழிப்பு என்பதை கண்கூடாக பார்க்கும் போது எங்கே எமது அடிப்படை பிழைத்துப்போகிறது என்ற விடையம் மட்டும் மில்லியன்டொலர் கேள்வியாக தொக்கி நிற்குது..

 

"இதுவும் கனவா"

என்று நினைத்த எனக்கு இன்னும் சில நேரங்களின் பின் விமானம் தரையிறங்க உள்ளது என்ற அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்தது..

 

என்னுயிரை சந்திக்கும் எண்ணம் உந்தித்தள்ள விமானத்தை விட்டு இறங்குகிறேன்.

 

தொடரும்....

 

 

 

Link to comment
Share on other sites

ஜீவா.. இதெல்லாம் சகஜமப்பா.. :D விமானம் தரையைத் தொட்டு ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுந்து வாசலுக்குப் போயிருப்பார்களே?? :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகப் போகின்றது.. விமானப் பயணங்களில் எப்போதும் நான் Aisle சீற்தான் தெரிவு செய்வேன். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு காரணம்.. விமானப் பணிப்பெண்கள் போய் வரும்போது உரசிச் செல்வார்கள் என்பது அடுத்த காரணம் :icon_mrgreen:

 

 

 

 

Link to comment
Share on other sites

மாமியார்வீடு... (தொடர்ச்சி..)  பகுதி-5

 

காகிதமே இல்லாமல் மனதின் வெண்திரைகளில் அவள் வதனம் படம் வரையத்தொடங்கின, ஏக்கங்கள் நெஞ்சாங்கூட்டை பிழிவது போன்ற உணர்வு .. தூங்கினால் அவள் நினைவுகள் என்னை கொன்று விடும் போல் இருந்தன ..

 

மனிசி வாசிக்குது எண்டவுடன என்னமா பீலா வுடுறாங்கய்யா.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிறீங்க  பாஸ்,  நான் பச்சை குத்துறதோட  சரி  ஏதாவது எழுதுவம் எண்டா வார்த்தைகள்  வருகுதில்லை .தொடருங்கள் 

Link to comment
Share on other sites

அந்தமாதிரி ரசித்து வாசிச்சேன் மச்சி. ஒருக்கா நான் லங்கா போகும்போது சிங்கை - கொழும்பு பயணத்தில் ஒருத்தன் எண்ட யன்னல் சீட்டில வந்து
குந்தீட்டான். நான் போர்டிங் பாஸ் எடுக்கும்போதே ஜன்னல் சீட்டை கேட்டு வாங்கியிருந்தேன். மரியாதையாகக் கேட்டேன், அசையவில்லை. கொஞ்சம் அந்தமாதிரி
வசனங்களைக் கலந்து விட்டேன். ஆள் எழும்பி சீட் மாரீட்டார்.

 

போனவருடம் இலங்கையில இருந்து சென்னை ஊடாக கனடா போன எனது நண்பன் தான் செத்தாலும் இனி
இந்தியா போக மாட்டேன் எண்டு சொன்னான். சென்னை எயர்  போட்டில மலசல கூட வசதி கூட இல்லை எண்டும் தான் 5 மணித்தியாலங்கள் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு இருந்தது எண்டும் சொன்னான். நீ போகேக்க என்ன மாதிரி நண்பா?



 

Link to comment
Share on other sites

ஜீவா அண்ணா தொடருங்கள்... :)

 

உண்மையில் பயணம் என்பது மகிழ்வாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் வந்தால் விமானத்தில் இருந்து இறங்கும் வரை எரிச்சலாக தான் இருக்கும். :D

 

ஒருமாதிரி விமானத்தை விட்டு இறங்கியாச்சு. எப்ப மாமியார் வீட்டுக்கு செல்வீர்கள்? மனைவியை சந்திப்பீர்கள்? என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை வாசிக்க ஆவலாக உள்ளேன். தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜீவா!! இரண்டுமூண்டு நாளாய் உள்ள சனம் முழுக்க இதுக்கைதான் நிக்கிது....அலையுறாங்கள்........கவனம்......மாமி வீட்டை போனவுடனை அடக்கிவாசி....... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, இன்று தான் இத்திரியை பார்த்தேன்... முழுபகுதியையும் வாசித்தாயிற்று..... இப்பிடிவே விறுவிறுப்பு குறையாமல் எழுதுங்கோ... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பயணக்கட்டுரையை... படங்களுடன் பதியும் போது, நாங்களும்... பயணிப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது ஜீவா.
பிரியாவீட்டில் என்னமாதிரியான உபசாரம் நடந்தது... என்பதை வாசிக்க, மிகவும் ஆவலாக உள்ளோம். :)  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

நாங்கள்தான் வெள்ளைகளுக்கு நாகரீகம் கற்றுக்கொடுத்த உத்தமர்கள்:D தொடுங்கோ....மன்னிக்கவும் தொடருங்கோ :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்குள் பல கேள்விகள் வந்து போயின ..

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

எங்களுக்கு வசதியானவற்றை மட்டும் தான், நாங்கள் எடுத்துக்கொள்வோம்! :D

 

ஏன்ரா, இந்த இனக்குழுமத்தில் வந்து பிறந்தோம், என்று நீங்கள் ஒருநாள் கூட வருத்தப் பட்டதில்லையா.ஜீவா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா லட்டு திங்கபோற இடத்திலை இது தேவையா.

 

:D :D

நன்றி சாத்திரி அண்ணா வரவுக்கும்,கருத்து பகிர்வுக்கும். :)

நன்றாக எழுதுகின்றீர்கள்

 

நன்றி வந்தியத்தேவன் அண்ணா. :)

இப்போது தான் நடை பழக ஆரம்பிக்கிறேன்.

ஜீவா கலக்கின்றீர்கள் ,தொடருங்கள் மிக இளமையாகவும் இனிமையாகவும் இருக்கு ,

 

கொசுறு -தமிழில் அமிதாப்பின் இடத்தில் அஜித் நடித்திருந்தார்

 

நன்றி அர்ஜுன் அண்ணா கருத்து பகிர்வுக்கு.. :)

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

 

நன்றி தப்பிலி அண்ணா,உங்கள் அனைவரின் ஊக்கம் தான் தொடர்ந்து எழுதும் உந்துசக்தி.. :)

பிளேன் காட்டிக்கொண்டு, நெடுக மினக்கடாம, மாமி வீட்டை கெதியாக் கூட்டிக்கொண்டு  போங்கோவன், தம்பி! :D

 

பிளேனில் நடந்த சம்பவங்கள் தான் சுவாரசியம் அண்ணா.. :D

 

இருந்தாலும் விரைவில் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். :icon_idea:

தொடருங்கள் ஜீவா

 

நன்றி தமிழ்சூரியன் அண்ணா.. :)

நன்றாக இருக்கிறது ஜீவா

 

நன்றி விழி அண்ணா, உங்கள் வருகைக்கும் எழுத்திற்கும். :)

அடிக்கடி தொடரும் போடாமல் தொடருங்கோ

 

நன்றி சஜீவன் அண்ணா.

விரைவில் முடித்துவிடுகிறேன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி வாசிக்குது எண்டவுடன என்னமா பீலா வுடுறாங்கய்யா.. :lol:

 

உங்க மனநிலைதான்  எனக்கும். :D

 

நாம  மட்டும் தான் இப்படியெல்லாம் பீலா விட்டு மனைவியை  கைக்குள்ள வைத்திருக்கோம் என்று இதுவரை பீலாவிட்டபடி இருந்தோம்.

இவங்களும்அதை செய்யும்போது கொ :lol: ஞ்சம் சுடத்தான் செய்யுது.

சரி சரி

கண்ணைத்துடைத்துக்கொள்ளுங்கள்

 

ஜீவா

நீங்கள் தொடருங்கள்

இந்த எரிச்சல்காறர்களை  கண்டு கொள்ளாதீர்கள் :lol:  :D

Link to comment
Share on other sites

சூப்பராக இருக்கு ஜீவா. எனக்கு ஒரு 5 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு, வாசிக்கும் போது . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமியார் வீடு நல்லா இருக்குது தொடருங்கோ........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.