Jump to content

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.


Recommended Posts

யார் இந்த தாக்குதலை செய்திருந்தாலும் அது கண்டனத்திற்குரியதே! ஒரு உதவி செய்யும் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, மிகவும் கீழ்த்தரமான செயல்.இன்னும் தமிழனின் பாவங்கள் தீரவில்லையா?
Link to comment
Share on other sites

மிகவும் ஈனத்தனமான, இழிந்த ஒரு செயல்!

 

தமிழனின் பொழுது விடிந்து விடக் கூடாது என்பதில், எத்தனை வஞ்சகர்கள் கவனமாக இருக்கிறார்கள்?

 

மீண்டும் தழைக்கலாம், சாந்தி!

 

எத்தனைமுறைதான் தளிர்ப்பது என்ற விரக்திதான் மேலெழுகிறது.

 

கவலையான தகவல்,

 

 நீங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றும் அனைத்தையும் எப்பொழுதும் ஒருகொப்பி பிரதி எடுத்து இன்னுமொரு பதிவேட்டில் சேமித்து வையுங்கள்.

 

5வருட ஆவணங்கள் இனி ஒவ்வொன்றாய் தரவேற்ற எற்படப்போகிற சிரமங்கள் தான் துயரைத்தருகிறது. உங்கள் அன்புக்கு நன்றிகள் சுந்தரம்.

 

Link to comment
Share on other sites

தைரியம் தரும் வார்த்தைகள் தந்த விசுகு,சுந்தரம் , புங்கையூரான் ,கோமகன் ,ரதி, கடுந்தெறல் அரசு,நந்தன்,தப்பிலி,காவாலி,சுண்டல் ,ஆராவமுதன்,நுணாவிலான் ,ராஜவன்னியன்,தமிழ் சிறி,தமிழ்சூரியன்,கறுப்பி,இணையவன்,வண்டுமுருகன்,இசைக்கலைஞன்,
BLUE BIRD,Gari,அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.




நீங்கள் புலம் பெயர் தேசத்தில் இயங்குவதால் - சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

முயற்சி செய்து இத்தகைய செயல்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு
மட்டுமல்ல, பெருமளவு நட்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்!

எனவே தாமதிக்காமல் சட்ட நடவடிக்கையில் இறங்குவது நல்லது!
 

 

இந்த சைபர் தாக்குதல் இந்தோனேசிய ஐடியிலிருந்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி அது தொடர்பான சிலரிடம் ஆலோசனை கேட்டுள்ளேன்.பார்ப்போம்.
 

Link to comment
Share on other sites

கவலை தரும் விடயம்.

 

ஏதாவது ஒரு விதத்தில் என் உதவி தேவைப்பட்டால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா ஒரு hard copy யும் back up ம் கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இனியாவது செய்து மன உளைச்சலை தவிர்க்கலாம். யார் இத்தகைய ஈனச்செயலை செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது.சந்தர்ப்பம் கிடைத்தால் யார் இத்தகையை செயலை செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்துங்கள்.
 
எம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என தெரியப்படுத்துங்கள்.

 

back upஇருக்கிறது 5வருட தரவுகளை ஒவ்வொன்றாக புதிதாகவே அப்டேற் செய்ய முடியும். மாற்றுவழியேதும் இல்லை. இதில் www.tamilwebradio.com,www.tamilnews24.com,www.chiddu.com ,www.nesakkaram.orgஆகிய நான்கு சேவர்களும்

முடக்கப்பட்டது.இந்த நான்கும் ஒரே வழங்கியில் இருந்தது. மற்றையவற்றில் அதிகம் எதுவும் இருக்கவில்லை. நேசக்கரத்தில் தான் எல்லாம் சேவ் பண்ணி வைத்திருந்தேன்.

பிரதான வழங்கியின் மூலம் எல்லாவற்றையும் அழித்தவிட்டார்கள். சில தரவுகள் எனது back upஇலும் இல்லை. உதவி தேவைப்படும் போது கட்டாயம் உதவிகள் கேட்பேன்.

 

Link to comment
Share on other sites

மிக கவலையான விடயம் .

எவ்விடர் வந்தாலும் மனித நேய பணி தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி ..மீண்டு வருவீர்களென நம்பிக்கையுடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது??? ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

யோசிக்க வேண்டியுள்ளது.

 

விசுகு ஐயாவிற்கு வணக்கம் .  தமிழ் மிகவும் இனிமையான மொழி . அதில் நாகரீகமே மேலோங்கிநிற்கும் . என்னை நாலுகால் பிராணியாக்கியதில் தங்கள் தமிழ் மொழி மீதானபற்றை என்னால் உணரமுடிகின்றது . மேலும் இந்தோனேசியாவில் இருந்து மொசார்ட் , சி ஐ ஏ , மற்றும் றோ உளவுப்பிரிவுகள் நேசக்கரத்திற்கு சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு நேசக்கரம் ஒன்றும் இராணுவ வலையமைப்பு இல்லை . நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவிற்கு வணக்கம் .  தமிழ் மிகவும் இனிமையான மொழி . அதில் நாகரீகமே மேலோங்கிநிற்கும் . என்னை நாலுகால் பிராணியாக்கியதில் தங்கள் தமிழ் மொழி மீதானபற்றை என்னால் உணரமுடிகின்றது . மேலும் இந்தோனேசியாவில் இருந்து மொசார்ட் , சி ஐ ஏ , மற்றும் றோ உளவுப்பிரிவுகள் நேசக்கரத்திற்கு சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு நேசக்கரம் ஒன்றும் இராணுவ வலையமைப்பு இல்லை . நன்றி வணக்கம் .

 

நன்றி கோ

தங்கள் விளக்கத்துக்கு.

 

ஆனால் தற்பொழுதுதான் சாந்தியக்கா இந்தோனிசியா பற்றி  எழுதியுள்ளார்.

அது ஆரம்பத்திலேயே உங்களுக்கு தெரிந்திருப்பது உங்களது திறமையைக்காட்டுகிறது.

 

 

எது எப்படியாயினும் எனது கருத்து தவறாக தெரிந்துள்ளது.

அதை வரவேற்று சாந்தியக்காவும்  ஐீவாவும் நவீனனும் விருப்பு வாக்கு இட்டதை மதித்து என் தவறை ஏற்றுக்கொள்கின்றேன்.

 

நான் யாழுக்கு வருவதற்கு ஒரு நோக்கமுண்டு.

அதற்கு எதுவுமே தடையாவதை விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

எட்டப்பர்கள் செய்துவிட்டு தேசியவாதிகள் மீது குற்றம் சாட்டலாம் கவனம் இதன் மூலம் சாந்திய தன்கள் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் 

Link to comment
Share on other sites

உங்களது இணைய வழங்கி செர்வர்களில்(Web hosting & Database servers) தானியங்கி பிரதி தொகுப்பு மென்பொருள் (Automated Backup Software) இருக்குமே? இல்லையெனில் அதை நிறுவச் சொல்லலாம். இதன் மூலம் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், நம் தலையீடு இல்லாமல் தானாகவே தரவுகளை மற்றொரு இடத்தில் பிரதி எடுத்துக்கொள்ளும் வசதிகள்(Automated scheduled backup) உண்டு. இணைய வழங்கியின் பாதுகாப்பு மென்பொருள்களை(Firewall & Intrusion Detection System) அவசியம் தற்போதைய பதிப்புக்கு(Latest version) மாற்றவும். தற்கால இணைய வழங்கி செர்வர்கள் பல்வேறு இடங்களிலிருந்து(Different countries) ஒரு தொகுப்பாக(Array & Mirrors) சாதுர்யத்துடன் செயல்படுகின்றன. உங்கள் இணைய வழங்கி செர்வர் வைத்திருப்பவரிடம் இந்த வசதி இருக்கிறதா என கேட்கலாம்.

 

இந்த நுட்பத்தில் அதிகம் தேர்ச்சியுள்ள எனது மகன் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தான். அண்மைக்காலங்களில் நடைபெற்று வந்த சைபர் தாக்குதல் பற்றி. நான் தான் பிள்ளைக்கு அடிக்கடி சொல்வேன் நேசக்கரத்தை முடக்கி ஒருவருக்கும் ஒரு பயனும் இல்லை. ஒருவரும் ஒண்டும் செய்யமாட்டினமெண்டு. ஆனால் அண்மைய இடுகைகளில் குறித்தளவு பிள்ளை செய்து வைத்திருந்தததால் அவை மட்டும் தப்பித்தது. நீங்கள் குறித்த மேற்படி முறை பற்றி மகனிடம் சொன்னேன். ஏற்கனவே பிள்ளை சொன்னதை நான் அக்கறைப்படுத்தாமையின் தாக்கத்தை புரிந்து கொண்டேன். எனினும் காலம் போனபின்னரான எனது ஞானம் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. இனிவரும் காலங்களில் எதுவும் நடக்கலாம் என்ற எச்சரிக்கையோடிருப்பேன். நன்றிகள் தங்கள் கருத்துக்கு.

 

Link to comment
Share on other sites

சாந்தி,

இந்த இணைப்பிலிருந்து ஏதாவது எடுக்கலாமா என்று பாருங்கள் :

http://web.archive.org/web/20120423213807/http://tamilnews24.com/nesakkaram/ta/?

 

இணைப்பு வேலை செய்யாவிட்டால் http://archive.org/web/web.php என்ற இணையத் தளத்திற்குச் சென்று நேசக்கர முகவரியைக் கொடுங்கள்.

 

முயற்சித்தேன் குறித்தசில எடுக்கக்கூடியதாகவுள்ளது. நன்றிகள் இணையவன்.

கவலை தரும் விடயம்.

 

ஏதாவது ஒரு விதத்தில் என் உதவி தேவைப்பட்டால் சொல்லவும்.

 

வழங்கியின் செயற்பாடு திரும்ப கிடைத்ததும் கேட்கிறேன். நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரும் செய்தி கண்டு பிடியுங் யார் அந்த இந்தோனேசிய ரவுடி கும்பல்கள் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கர இணையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பல வகையான சந்தேகத்தைத் தருகிறது. சாந்தி இது தொடர்பாக பேசும்போது மிக அவதானமாக இருக்கவும் என்பதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். மிகவும் வருத்தத்திற்குரியது. எங்கிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதனை முடக்குவதால் யாருக்கு லாபம்? தற்சமயம் ஏற்படப்போதும் சந்தேகங்களும் குழப்பங்களும் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பனவற்றில் மிக அவதானமாக இருக்கவேண்டிய சமயம்.

Link to comment
Share on other sites

கவலையான விடயம்

 

இது கோழைகளின் தாக்குதல்

 

உங்களை பின்வாங்க வைப்பதே இந்த கோழைகளின் நோக்கம்

 

அவர்களின் நோக்கம் நிறைவேறமால் நீங்கள் பொது பொலிவுடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் சேவையை.

 

மனதிற்க்கு கஷ்டமான விடயம்தான், இதைவிட எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருப்பீர்கள், இதெல்லாம் தூசி என தட்டிவிட்டு முன்னேறுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான தகவல்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா கவலையான விடயம், மனதை தளரவிட வேண்டாம், இதுவும் கடந்து போகும்

Link to comment
Share on other sites

தங்கள் ஆதரவை வழங்கிய அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகள். நேசக்கரம் இணையம் மீண்டும் இன்றிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது.



சாந்தி அக்கா கவலையான விடயம், மனதை தளரவிட வேண்டாம், இதுவும் கடந்து போகும்

 

இதுவும் கடந்து இன்று மீண்டும் உயிர்த்துள்ளது உடையார்.
 



நிச்சயமாக மீண்டுவருவீர்கள்.உங்களுக்கு அந்த துணிவு தைரியம் இருக்கு சாந்தி.

 


தைரியம் என்னிடம் இருக்கோ இல்லையோ தைரியத்தோடு திரும்பி வாவென்ற உங்கள் அன்பு மீண்டும் துளிர்க்க வைக்கிறது.



மிக கவலையான விடயம் .

எவ்விடர் வந்தாலும் மனித நேய பணி தொடரட்டும்

நன்றிகள் Arjun.



கவலையான செய்தி ..மீண்டு வருவீர்களென நம்பிக்கையுடன் இருங்கள்.

 

நன்றிகள் நிலாமதி.
 



கவலை தரும் செய்தி கண்டு பிடியுங் யார் அந்த இந்தோனேசிய ரவுடி கும்பல்கள் என்று

 

நன்றிகள் பையன்.
 



நேசக்கர இணையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பல வகையான சந்தேகத்தைத் தருகிறது. சாந்தி இது தொடர்பாக பேசும்போது மிக அவதானமாக இருக்கவும் என்பதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். மிகவும் வருத்தத்திற்குரியது. எங்கிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதனை முடக்குவதால் யாருக்கு லாபம்? தற்சமயம் ஏற்படப்போதும் சந்தேகங்களும் குழப்பங்களும் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பனவற்றில் மிக அவதானமாக இருக்கவேண்டிய சமயம்.

 

நன்றிகள் சகாரா.
 



கவலையான விடயம்

 

இது கோழைகளின் தாக்குதல்

 

உங்களை பின்வாங்க வைப்பதே இந்த கோழைகளின் நோக்கம்

 

அவர்களின் நோக்கம் நிறைவேறமால் நீங்கள் பொது பொலிவுடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் சேவையை.

 

மனதிற்க்கு கஷ்டமான விடயம்தான், இதைவிட எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருப்பீர்கள், இதெல்லாம் தூசி என தட்டிவிட்டு முன்னேறுங்கள்

 

நன்றிகள் வந்தியதேவன்.
 



எட்டப்பர்கள் செய்துவிட்டு தேசியவாதிகள் மீது குற்றம் சாட்டலாம் கவனம் இதன் மூலம் சாந்திய தன்கள் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் 

 

நன்றிகள் றமணன்.

யாரையும் நொந்து யாரையும் சந்தேகப்படவில்லை. ஆனால் செய்தவர்கள் நன்றாயிருக்கட்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நம்பிக்கைக்கு கிடைத்த  ப ரிசு ...மீண்டும் வரா வண்ணம் அவதானமாய் இருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.