Jump to content

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள்


Recommended Posts

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் – சு. அரங்கநாதன்
 

முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற்றியும், அத்தொழில்கள் அவரவர் பயன்படுத்திய நுட்பங்கள் பற்றியும் கலித்தொகை மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கட்டடத் தொழில்: குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கென இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதன் வளர்ச்சியே மாளிகைகளும், அரண்மனைகளும், வீடுகளும் ஆகும். கலித்தொகை பாடல்களில் இவை குறித்த செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

”நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்” (கலி.35:17)

என்ற வரியில் நீண்ட மாடங்களுடன் அமைக்கப்பட்ட மாளிகை குறிக்கப்படுகின்றது.

”ஆய்சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்” (கலி. 96:19)

என்பதில் அழகுடைய சாந்து பூசப்பட்ட மாடமும் அழகுடைய நிலா முற்றமும் குறிக்கப்படுகின்றன.

”சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர்சீர்த்தி” (கல்.83-13)

”பெருந்திரு நிலைஇய வீய்கு சோற்று அகல்மனை

பொருந்தி நோன்கதவ ஒற்றிப் புலம்பியாம் உலமா” (கலி.83:1-2)

ஆகிய வரிகளில் சாளரம் அமைக்கப்பட்டு, இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள வீடு பற்றிய செய்தி கூறப்படுகின்றது.

ஆடைத் தொழில்: இலைகளையும், மரப்பட்டைகளையும் ஆடைகளாக அணிந்த மனிதன், நூலினாலான ஆடைகளை உடுத்தத் தொடங்குகிறான். வளர்ச்சி அடைந்த நிலையில் பல்வேறு வண்ணங்களையும் சிறப்புக் கூறுகளையும் உருவாக்கத் தொடங்கி மனிதன் அதில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாண்டுள்ளான் என்பதனைக் கீழ்க்காணும் கலித்தொகை பாட்ல்வரிகள் காட்டுகின்றன.

அணிகலன்கள்: உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் பற்றியும், இவ்வணிகலன்கள் செய்யக் கையாளப்பட்ட நுட்பங்கள் பற்றியும் கலித்தொகையில் பல்வேறு பாடல்கள் சுட்டுகின்றன.

”அளிமாற பொழுதின் இவ்ஆயிழை கவினே (கலி-25)

நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”

”சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்”

”புனை இழை நோக்கியும்” (கலி.76)

”மாணிழை ஆறாகச் சாறு” (கலி.102)

”கடியவே கனங்குழாஅய் காடுஎன்றார்” (கலி-11)

”ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை” (கலி-96)

”கிண்கிணித் தாரொடு ஒலித்து ஆர்ப்பு ஒண்தொடிப்” (கலி-74)

என அமைந்த கலித்தொகை வரிகளால் ஆண் சுறாமீன் வடிவத்தில் உள்ள மோதிரம் அணிந்தமை பற்றியும், ஒளியை உடைய அணிகலன்கள் பற்றியும், பொன்னால் செய்த கனமான காதணி பற்றியும், கிழே தொங்கும் தன்மையுடைய புல்லிகை என்ற அணி பற்றியும், மணிகள் சேர்க்கப்பட்ட மாலை பற்றியும் அறிய முடிகிறது. மேலும், கைக்கவசம், தொடி, பொலன், கோதை, முத்தாரம், கழுத்தணி, வயந்தகம் போன்ற அணிகள் பற்றியும் அதில் செய்யப்பட்ட நுட்ப வேலைப்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

குவளை மலர் விற்றல்: பெண்கள் சூடும் மலர்களைக் கொய்து விற்பனை செய்யும் தொழில் பற்றிக் கலித்தொகை கூறுகின்றது.

”வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட” (கலி.11)

சலவைத்தொழில்:

”சலவைத் தொழிலில் சங்ககால மக்கள் ஈடுபட்டுள்ளதை,

……………………………………………………………ஊரவர்

ஆடை கொண்டு ஒலிக்கும்நின் புலைத்தி

என்ற கலித்தொகை வரி காட்டுகின்றது.

வள்ளிக்கிழங்கெடுத்தல், தேனெடுத்தல்”

குறிஞ்சிநில மக்கள் வள்ளிக்கிழங்கினைத் தோண்டியெடுத்தலும், தேனெடுத்தலும் பற்றிய குறிப்பினைக் கலித்தொகை

”வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடா” (கலி.39)

என்று கூறுகின்றது.

ஆநீரை மேய்த்தல்: முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

”தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106)

”மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

”பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர் என்பதையும் அதனைக் காக்க வேண்டிக் கோலூன்றி நின்றனர் என்பதையும் அறியமுடிகின்றது.

மோர் விற்றல்: ஆநிரையால் பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் மகளிர் ஈடுபட்டனர்.

”அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்” (கலி-108)

என்ற வரிகளினால் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதைத் தெரிய முடிகிறது.

வெண்ணெய் விற்றல்: முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர்.

”வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்” (கலி-110)

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே” (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி புனைதல் : பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அவை புட்பில் எனப்பட்டது என்பதனை முல்லைக்கலியல் உள்ள

”போழின் புனைந்த வலிப்புட்டில்” (கலி-117)

”வரிகூழ வட்டி தழீஇ” (கலி-109)

என்ற இவ்வரிகளினால் பெட்டிகள் செய்து அவற்றில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் அறிய முடிகின்றது.

தினைப் புனங்காத்தல்: விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டுவிடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்தனர்.

”ஒளிதிகழ் ஞெகிழார் கவணையார் வில்லர்

களிறுஎன ஆ‘ப்பவர் ஏனல் காவலேரே” (கலி-52)

”படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்” (கலி-50)

தினைப்புனங் காக்கும் மகளிர் கவனையும், வில்லையும் கொண்டு களிற்றினை விரட்டி ஆரவாரம் செய்தமையும் தினைப்புனத்திற்கு வருகின்ற கிளிகளைக் கவன் கொண்டு ஓட்டியமையும் கூறப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல்: சங்க காலத்தில வேட்டைத்தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து தாக்கினர். அவர்கள் வெள்ளை யானை, மான் போன்றவற்றை வேட்டையாடியதனை,

”இலங்கொளி மருப்பின் கைம்மா உளம்புநர்

புலங்கொடி கவனையின் பூஞ்சினை உதிர்க்கும்

கொலைவெம் கொள்கையோடு நாயஅகப் படுப்ப

வலைவர்க்கு அமர்ந்தே மடமான்”

என்ற பாலைக்கலி வரிகளின் மூலம் அறியலாம்.

ஆறலைக்கள்வர்: பாலை நிலம் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களிடம் அவர்தம் உடைமைகளைப் பறித்துச் செல்லும் ஆற்றலைக் கள்வர்கள் பற்றிய செய்தி கலித்தொகையில் இடம் பெறுகின்றது.

”அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம்

கொள்ளுப் பொருள் இலர்ஆயினும் வம்பலர்

துள்ளுநர்க் கண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின்” (கலி.4)

தோற்பைகள் செய்தல் : கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது.

”கழுவொரு சுடுபடை சுருக்கிய தோற்கண்” (கலி.106)

என்பதனால் ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லை நிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொள்வர் என்பதைத் தெரியமுடிகின்றது.

தச்சுத் தொழில்: சங்க காலத்தில் மரத்தினால் கட்டில்களையும் பொம்மைகளையும் செய்தனர் என்பதைப் பின்வரும் பாடல்வரிகள் மூலம் அறியமுடியும்.

”படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்” (கலி: 72)

புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி (கலி: 80)

கமயரணம் பாயாநின் கைபுனை வேழம் (கல்: 86)

முடிவுரை: சங்க காலத்தில் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்துவந்துள்ளனர், அத்தொழில்களில் அக்கால மக்கள் காட்டிய ஆர்வமும் செயல்திறனும் சிறப்புடையன. ஆண்களோடு இணைந்து அவர்கள் அறிந்த தொழிலைச் செய்து தம்குடும்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டனர். சங்க கால மக்கள் தோல், நூல், பொன், மண்டபம், மரம் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் தெரியமுடிகின்றது.

நன்றி: கட்டுரை மாலை.

Link to comment
Share on other sites

கலித்தொகை காட்டும் மகளிர் – அ. கீதாரமணி

 
 

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ”மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்” (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ”கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

”இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ”முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

”சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல” (43. 5-7) என்றும்

”நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்” (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

”நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ”அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே” இக்கருத்தினை ”வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்” என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

”அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்” என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

”வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்” (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

”வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்” (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

”வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்”

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

Link to comment
Share on other sites

கலித்தொகையில் அறக்கருத்துக்கள் – சி. தமிழ்ச்செல்வி

 

மக்கள் நல்ல முறையில் வாழப் புலவர்கள் அறநெறிகளை வழங்கினர். அறக்கருத்துக்களைக் கூறும் தனி நூல்கள் தனியாக தோன்றாத காலத்தில் அகப்பாடல்களின் மூலம் அறக்கருத்துக்களை எடுத்து ஓதினர். இவ்வாறு அகப்பாடல்களின் மூலம் கூறும் கருத்துக்கள் அகமாந்தர்களுக்கு மட்டுமின்றிச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு அறிவுறுத்திய நூல் கலித்தொகை ஆகும். அறம் என்பது ஒழுக்க நெறியாகும். பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம் ஆகும். மேலும் அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அறத்தின் தோற்றம்:

மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறருக்குத் துன்பம் தராத நல்ல நெறியிலேயே இவற்றைப் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவ்வாறு சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்கள் தோன்றின.

அறத்தின் பிரிவுகள்:

தமிழர் காதலையும் வீரத்தையும் தம் கண்களாகப் போற்றினர். காதல் உணர்வை அகம் என்றனர். வீரத்தைப் புறம் என்றனர். அகவாழ்விலும் புறவாழ்விலும் அறநெறி கொண்டு வாழ்க்கை நடத்தினர். அறத்தினை அக அறம், புற அறம் என்றும் புற அறத்தினைப் போரறம், சமுதாய அறம் என்றும் பிரிப்பர்.

அகத்திணையில் அறநெறிகள்:

ஆணும் பெண்ணும் காதல் உணர்வு கொண்டு இன்புற்று வாழும் வாழ்வு ”அகம்” என்பர். இதை அகத்திணை என்றும் கூறுவர். அகத்திணை மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி, தந்தை, தமையன் ஆகியோர் அறஒழுக்கம் கொண்டு ஒழுகினர்.

கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைமகன், தலைமகள், தோழி என்போர் புலவர்களாற் படைத்துக் கொள்ளப் பெற்றோரே எனினும் அக்காலத்து நன்மக்களின் இயல்புகளும் வாழ்க்கைக் கூறுகளுமே அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன. ஆகவே கலித்தொகை இன்பச் சுவையை கொடுப்பதுடன் அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர் வேளாளர்களும், பிறருமாகிய ஆடவரும் மகளிரும் இளமையிலும் முதுமையிலும் அறியவேண்டிய நன்னெறிகளை எடுத்தியம்புகிறது.

அகவாழ்வில் அறத்தோடு பொருந்தி இல்லற வாழ்வினை மேற்கொண்டனர். ஓர் ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம் என்பதை,

”ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (9.23-24)

என்ற கலித்தொகை வரிகள் விளக்குகின்றன. கற்புடைய பெண்டிர் பிற தெய்வங்களைத் தொழுதல் இல்லை. கற்புடைய பெண்டிர் பிழையின்றி வறட்சி நிலவிய காலத்தும் மழையைப் பெய்விக்கும் ஆற்றல் வாய்ந்தவராக விளங்கினர். கற்புடைய பெண்ணினது கணவன் சென்ற வழியில் ஏற்படும் வெயிலின் வெம்மையை அறக்கடவுள் முன்னின்று விலக்கித் துணை செய்தது என்று கற்புத் திறம் போற்றப்படுகிறது. இதனை,

”வறனோடின் வையத்து வான்தரும் கற்பினாள்” (16. 18-12) என்ற வரி விளக்குகிறது.

புறத்திணையில் அறநெறிகள்:

புறத்திணையில் அறம் என்னும் பொழுது மக்கள் நல்வாழ்வுக்கு அரசு இன்றியமையாததால் அறத்தின் வழியே ஆட்சிபுரிந்து அரசின் தலையாய கடமையாகும். மன்னன் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், மன்னன் மட்டுமின்றி மன்னன் பயன்படுத்தும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறம் செய்பவையாக அமைகின்றன. அரசனது வெண்கொற்றக் குடை அறம் செய்யும் என்பதை,

”அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை” (99.8)

மன்னன் கையில் உள்ள செங்கோல் நடுநிலைமை தப்பாது உலகம் புகழும்படி விளங்குகின்றதை

”பொய்யாமை நுவலுகின் செங்கோலச் செங்கோலின்” என்னும் வரி விளக்குகிறது.

முரசானது மக்களின் பாதுகாப்பிற்குரிய அரணாக அமைகிறது. எனவே வேந்தனது செம்மையால் மாரி சுரக்கும். வெண்கொற்றக்குடை அறனிழவாகும், செங்கோல் பொய்யாமை நுவலும் முரசம் பாதுகாப்பை ஒலிக்கும் என்பன கலித்தொகை உணர்த்தும் அரச அறங்களாகும்.

போர்க்களத்தில் வலிமை இல்லாதவரோடு போர் செய்வது அறமாகக் கொள்ளப்படுவதில்லை. பகைவன் கருவியின்றி நிற்குமிடத்துத் தனக்கு நிகராகான் என்று அவனிடம் போர் செய்யாது விடுவதும் வீழ்ந்தவன் மேல் செல்வதும் வீரமன்று என்று கலித்தொகை உணர்த்துகின்றது.

சமுதாயவியல்:

சமுதாயத்தில் பின்பற்ற வேண்டிய ஈகை, இன்னா செய்யாமை, நிலையாமை ஆகிய கருத்துக்கள் சமுதாய அறமாக விளங்குகின்றன. ஈதலின் சிறப்பாக ”இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும், பயன் கருதாது ஒருவருக்கு ஒரே பொருளைக் கொடுத்தலே ஈகையறமாகும். இதனை,

”ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்” (133.6)

என்று நெய்தற் கலிப்பாடல் மூலம் அறியமுடிகிறது. ஈகை செய்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகும் என்பதை,

”ஈதலின் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய

தீதிலான் செல்வம் போல்” (27.2)

என்ற வரிகள் அறிவுறுத்துகின்றன. மேலும் செய்த வினைப்பயன் பற்றுவிடாது பயன் தறுதல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றில் அறத்தின் திறஞ்சேரார் மடலூர்தல் ஆகியவை கலித்தொகை கூறும் சமுதாய அறங்களாகும்.

மனவியல்:

”மகிழ்ச்சியினால் அறிவு பொலிவு பெறும்” மன ஒழுக்கத்தினால் வாழ்நாள் சிறக்கும்” ”உண்கடன் வழிபொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங்கொண்டது கொடுக்குங்கால் மகனும் வேறாகும்”, ”நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை”, என்பவை மனவியல் வழங்கும் உண்மைகளாகும்.

பறவை விலங்குகளின் வாழ்வை விளக்குவதன் மூலம் கலித்தொகை பல அறக்கருத்துக்களைக் கூறுகின்றது. மேலும் இறைவனின் படைப்பு ஓருயிர் மற்றொருயிரை செகுத்துண்ணுமாறு அமைக்கும் நோக்கமில்லாதது என்னும் உயரிய அறம் புலப்படுகின்றது.

நிலையாமை:

மன்னர் உலகத்து மன்னுதல் குறித்தோர் உணர வேண்டிய நிலையாமையை நெஞ்சில் நின்று நிலைபெறுமாறு கலித்தொகை கூறுகின்றது. வாழ்நாள், அழகு, இளமை, பொருள், காமம், ஆகிய ஐம்பெரும் நிலையாமை அழகான உவமைகளின் மூலம் விளக்கப்பெற்றுள்ளது.

”வளியினும் வரைநில்லாதது வாழுநாள் ஆகவே,

கடைநாள் இதுவென்று அறிந்தாரில்லை” (கலி. 20.9)

அழகு, நீள்கதிர், அவிர்மதி நிறைவு போல் நிறையாது நாள்தோறுந் தன் நிலை குலைந்து விடும் என்பன இளமை பற்றிய செய்திகளை கலித்தொகை அறிவுறுத்துகிறது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் சிதறிக் கிடைக்கின்றன. இவ்வாறில்லாமல் ஒரேவொரு பாட்டாலும் பல அறவுரைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

”ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை

அறிவெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்

செறிவெனப் படுவது மறைபிற ரறியாமை

முறையெனப் படுவது கண்ணோட்டா துயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”, (133-14)

என்றிவ்வாறு அறநெறிக் கருத்துக்களைக் கலித்தொகை முதன்மைப்படுத்திக் கூறுகின்றது.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இப்பாடலில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறவுரைகள் ஒரே பாடலில் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை அகப்பாடலின் வாயிலாக மென்மையாக எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினர். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அறிவு புகட்டும் வகையில் கலித்தொகையில் அறநெறிகள் மிகுந்து காணப்படுகிறது.

”ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் பொருளேபோல் தமியவே தேயும்” என்று கலித்தொகையில் அறிவுரைக்கு அறவுரையே உவமையாக கூறப்பட்டுள்ளது. இதைக் காணும் பொழுது,

”அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு” (குறள்.35)

என்னும் நீதிக்கு நீதியையே உவமை காட்டும் திருக்குறளை எண்ண வைக்கின்றது. ஆகவே நீதி இலக்கியப் பண்புகள் சங்க காலத்தில் தோன்றிய கலித்தொகையில் அரும்பத் தொடங்கியுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. கலித்தொகைப்பாடல்கள் அறநெறிகளோடு வாழவேண்டும் என்கின்ற பொதுவான கருத்துக்களைத் தெளிவுபட விளக்குகின்றன. அறவாழ்க்கையின் நோக்கத்தைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் கலித்தொகைப் பாடல்கள் தெளிவிக்கின்றன.

நன்றி: கட்டுரை மாலை

Link to comment
Share on other sites

  • 7 years later...

கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்

 
கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்
-முனைவர். மா. தியாகராசன்.
முன்னுரை
சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலிஎன்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒரு பாடல். சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ பாடிய பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்து கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிப் பாடல்கள் இருபத்தொன்பது. மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக் கலிப்பாடல்கள் முப்பத்தைந்து,, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக் கலிப் பாடல்கள் பதினேழு. கடவுள் வாழ்த்துப்பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தற் கலிப் பாடல்கள் முப்பத்து மூன்று ஆக மொத்தம் நூற்றைம்பது பாடல்கள் இந்நூலின் கண் அழகுற அமைந்துள்ளன.
இந்நூலின் மூலமாகப் பண்டைய தமிழர் தம் வாழ்வியல். பழக்க வழக்கங்கள், பண்பு நலன் முதலியவற்றைத் தெள்ளிதின் உணர முடியும். இக்கட்டுரையின் வழியாகக் கலித்தொகை காட்டுகின்ற பண்பு நலன்களில் சிலவற்றை ஆய்ந்தறிவோம்.

பண்பு பற்றிய விளக்கம்
பொதுவாகப் பண்புஎன்னும் சொல்லுக்குக் குணம்என்பது பொருள், பலவகையான குணங்களையும் பண்புஎன்னும் சொல் குறிக்கும் எனினும் பண்பு என்னும் சொல்லுக்குத் தனிப்பட்ட ஒரு பொருளையும் கலித்தொகை விளக்கி கூறுகிறது. மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் புனைந்துள்ள நெய்தற் கலியில் மாமலர் முண்டகம்” (கலித்தொகை பாடல் எண் 133, நெய்தற்கலி பாடல் எண் 16) என்று தொடங்கும் பாடலில் பலவகையான குணநலன்களுக்குரிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஆற்றுதல் என்ப தொன்று அலந்தவர்க்கு உதவுதல்என்னும் அடி. இல்லறம் நடத்துதல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. வறுமையுற்றவர்க்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதேயாகும்என்னும் பொருள் அமையப் புணையப்பட்டுள்ளது. அடுத்ததாகப் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைஎன்னும் தொடர். இது பாதுகாத்தல்என்று சிறப்புறக் கூறத்தக்கது தன்னுடன் கூடியவரைப் பிரியாமல் இருப்பதுவே யாகும்என்னும் பொருளில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பண்புஎன்னும் சொல்லுக்குரிய விளக்கமாகப் பண்பெனப்படுவது பாடறிந்தொழுதல்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கட்பண்பு என்று சிறப்பித்துக் கூறப்படுவது. உலக நடையை அறிந்து அதற்கேற்ப நடத்தல்என்பது அதன் பொருளாகும்.

இதனை அடுத்து அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை பொறை ஆகிய சொற்களுக்குரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. அன்பு என்று கூறப்படுவது தன் சுற்றத்தாரைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல். அறிவு எனப்படுவது. அறிவிலார் தன்னைப் பழித்துப் பேசியவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல், செறிவு என்பது, கூறிய ஒன்றை மறுத்துக் கூறாமல் இருத்தல். நிறை என்பது, ஒரு செயலைப் பிறர் அறியாதாவாறு மறைந்து செய்தல். முறை என்பது நியாயம் வழங்கும்போது வேண்டியவர், வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் அவர் செய்த தவறுக்கேற்ற தண்டணை வழங்குதல் பொறை எனப்படுவது பகைவரை வீழ்த்துவதற்கு உரிய காலம் வரும் வரையில் பொறுத்திருத்தல் என்று விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இந்தக் கலித்தொகைப்பாடல் பண்புஎன்பதற்குத் தனிப்பட்ட விளக்கம் வழங்கியுள்ளது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.

போற்றி உரைத்த பண்புகள்
 “அருள் செய்து வந்த அறவோர், தாபதர் முதலியோர்க்குத் தலைவன் அறவுணர்வுடன் வேண்டுவன கொடுக்கக்கூடயவன்என்னும் கருத்து. பாலைக்கலி 11ஆம் பாடலில். அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்என்று கூறப்பட்டுள்ளது. கொடை கொடுக்கும் அறவுணர்வு கொண்டவன் தலைவன் என்பதால், கலித்தொகையில் கொடைப்பண்பு பாராட்டிக் கூறப்பட்ட ஒரு பண்பாக விளங்குகிறது. அறத்திறனைப் பாராட்டி கலித்தொகை அடுத்த அடியில் பெரிதாய பகை வென்று பேணாரைத்தெறுதலும்எனத் தலைவனது. மறத்திறன் பாராட்டப் பெற்றுள்ளது. கொடைப் பண்பு போற்றுதற்குரியது. மேலும் கொடையளிப்போர் தம் செல்வம் தழைத்துச் செழிக்கும் என்னும் நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்ததைக் கலித்தொகை எடுத்தியம்புகிறது. இதோ கலித்தொகை கூறும் கருத்து நீர்வளம் மிக்க ஓர் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்துத் தழைத்திருந்தன. அந்தக் காட்சிக்கு உவமையாகக் கலித்தொகை, “ஈகைத்திறம் மிக்க தீதற்றோர் செல்வம் வளர்ந்து செழிப்பதைஎடுத்துக் காட்டியுள்ளது. ஈதலிற் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீங்கரை மரநந்த” (பாலைக்கலிபாடல் எண் 27) என்பன கலித்தொகைப் பாடல் வரிகளாகும்.

உலகம் நிலையாமை உடையது; அந்த நிலைமையை உணர்ந்தோர், தம்மிடம் உள்ள செல்வங்களை வாரி வாரி வழங்குவார்கள். அதுபோல மரங்கள் மலர்ந்த மலர்களைச் சொரிந்தன. என்பதனை. உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்’ (பாலைக்கலி-31) என்று கலித்தொகை கூறியுள்ளது.

கல்வி, கேள்வி, ஒழுக்கங்களால் சிறந்த ஆன்றோர் அடக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்னும் கருத்து. ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினையொடும்” (பாலைக்கலி-31) கிளைகளில் உள்ள அரும்புகள் மலராகின்ற வரையில் அடக்கமாக இருக்கும் காட்சிக்கு ஆன்றோர் அடக்கமாக இருத்தல் உவமை கூறப்பட்டுள்ளது.

மேலோர் தம்முடைய புகழை மற்றவர் கூறக்கேட்கும் போது நாணத்தால் தலை குனிந்து இருப்பார்கள். அதுபோல இரவில் மரங்கள் தலை சாய்த்து உறங்கினஎன்றும் கருத்தினைத் தம்பு கழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச” (நெய்தற் கலி பாடல்-2) எனக் கலித் தொகை விளக்கிக் கூறுவது சான்றோர் தம் அடக்கப் பண்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

சான்றோர் பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகக் கருதி அதனைப் போக்க அறம் செய்யும் பண்பு உடையவர்என்பதைப் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன்.” (நெய்தல் கலிப்பாடல் 22) என கலித்தொகை எடுத்துக் கூறியுள்ளது.

வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் பண்பு கலித்தொகையில் போற்றி கூறப்பட்டுள்ளது. ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல் போல் அறம் புரி நெஞ்சத்தவன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.6) என்பது கலித்தொகைத் தொடர். ஒரு பக்கம் சாயாமல் நடுநின்று தன்பால் வைக்கப்படும் பொருளுக்கேற்ப சாய்கின்ற துலாக்கோல் போல நடுநிற்கின்ற அறிவுணர்வு கொண்டவன் தலைவன்என்பது இத்தொடரின் பொருளாகும்.

பகைத்து வருபவன் கூற்றுவன் ஆனாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்ற வீரமும், நட்புக் கொண்டவர்களிடம் தோற்பதற்கு நாணம் அடையாத பெருந்தன்மையும் உயர்ந்த பண்புகள் என கலித்தொகையில் சுட்டிக் காட்டியுள்ளது. பகை எனின் சுற்றம்வரின் தொலையான்றவன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்” (குறிஞ்சிக் கலிப்பாடல் எண். 7) என்பவை கலித்தொகையின் வரிகள்.

மேலும் தலைவன்தன் மீது பொறாமைக் கொண்டவர்கள் தன்னைப் பற்றி குறைகளை கூறினாலும், தான் யார் மீதும் குறை கூறாதவன்என்று தலைவன் பண்பு பாராட்டப்பட்டுள்ளது.

மாறு கொண்டாற்றாரெனினும் பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.7) என்பவை கலித்தொகை வரிகள்.

வெறுத்து ஒதுக்கிய பண்புகள்
 ஒருவர் தம் அருகில் இருக்கும்போது அவரை புகழ்ந்து பாராட்டுவதும், அவர் எதிரில் இல்லாதபோது அவரைப் பற்றிய பழி தூற்றிக் கூறுவதும் இன்று பரவலாக நாம் பார்க்கக்கூடிய பண்பு இதனைக் கலித்தொகை எடுத்துக் காட்டுவதற்கும் இழித்து கூறுவதற்கும் தயங்கவில்லை. சிறப்பு செய் துழையராப் புகழ் போற்றி மற்றவர் புறக்கொடையே பழி துற்றும் புல்லியார்” (பாலைக்கலி பாடல் எண்.24) என கலித்தொகை புறங் கூறுபவர்களை புல்லியர் எனக் கூறியுள்ளது.

ஒருவர் செல்வராக இருக்கும்பொழுது அவருடன் சேர்ந்து அவர் செல்வத்தை எல்லாம் துய்த்து மகிழ்ந்து, பின்னர் அவர் வறுமையை அடைந்தபோது அவருக்கு உதவாமல் புறக்கணித்து பிரிகின்ற பண்பைப் கலித்தொகை, குற்றமென்று குறித்து காட்டுகிறது.

செல்வத்துல் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடந்து உலப்பிலா உணர்விலார்” (பாலைக்கலிப் பாடல் எண்.24) என்பது கலித்தொகை.

ஒருவருடன் மனம் ஒன்றி நட்புக் கொண்டு அதன் காரணமாக அவர் நம்மைப் பற்றிய மறைபொருளையெல்லாம் கூறக் கேட்டறிந்து கொண்டு அவரைப் பிரிந்து பின்னர் தம் கேட்டறிந்தவற்றை பிறருக்கு எடுத்துக் கூறுகின்ற பண்பை கலித்தொகை இழித்துக் கூறுகிறது.

பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்” (பாலைக்கலிப் பாடல் எண். 24) கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.

நெய்தல் கலி 32ம் பாடலில் தனக்கு கற்பித்த ஆசிரியருக்கு பொருளளிக்காமல் அவரை வருத்தமுற செய்தவன் கற்ற கல்வியை தவறாக பயன்படுத்துபவன் ஆகியோர் செல்வம் அழியும் தக்க நேரத்தில் தனக்கு உதவியவனுக்கு திரும்ப உதவாதவன் செல்வம் அவன் பிள்ளைகளிடத்து சென்றாலும் அச்செல்வம் அவர்களையும் துன்புறுத்தாமல் விடாது. சுற்றத்தார் மனம் வருந்துமாறு சேர்ந்த செல்வமும் அழியும். ஒருவன் தான் கொடுத்த வாக்குறுதியை தவற விட்டு விட்டால் அவன் அப்போது வெற்றி பெற்றாலும் பின்னர் அத்தவறுதல் அவனை அழிக்காமல் விடாதுஎன்பவை நெய்தற்கலி இடித்துரைக்கும் பண்புகள்.

இதோ நெய்தற்கலிப்பாடலில் மேறகூறிய கருத்தமைந்த பகுதி.

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்து உண்ணான். ருவிச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்இப்பகுதியில் கற்ற கல்விக்கு மாறாக நடப்பவன் பொருள் அழியும் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. கற்று அறியாதவன் அறியாமையால் தவறு செய்தால் அது மன்னிக்கப்பட்டாலும், அறிந்தவன் செய்யும் தவறு அறவே மன்னிக்க இயலாது. அதனால்தான் கடந்த நூற்றாண்டு கவிஞன் மகாகவி பாரதியாரும் படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான்! போவான்! ஐயோவென்று போவான்என்று சீற்றத்துடன் பாடினார். எனவே கற்றக் கல்விக்கு மாறாக நடப்பதை கலித்தொகை சாடுகிறது - அவர் செல்வம் அழியும் என்று கவிதை பாடுகிறது.

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதவன் மற்று அவன் எச்சத்துள் ஆயினும். அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள். நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தான் இலான் குடியே போல் தமியவே தேயுமால் சூள்வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்என்பவவை கலித்தொகை பாடல் அடிகள்.

முடிவுரை
கடைப் பிடித்தற்குரிய உயரிய பண்புகளும் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாத தீய பண்புகளும் கலித்தொகையில் அகப்பொருளை எடுத்துக் கூறும் பாடல்களுக்கு இடையிடையே ஏற்றவகையில் கற்போர்க்கு ஏற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பண்புகள் கவினார்ந்த உவமைகள் வழியாகவும் கவர்ச்சி மிகு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இவற்றால் பண்டைத் தமிழர் தம் பண்பாட்டு நலனை நாம் அறிந்தும் மகிழவும். அவற்றை நம் வாழ்விலும் கடைப்பிடித்து ஒழுகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கலித்தொகை காட்டுகின்ற பண்புகளுக்குள் சில பண்புகள் மட்டுமே கட்டுரையின் அளவு கருதிக் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் போக்கினையும் நோக்கினையும் தொடர்ந்து கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.