Jump to content

பாட்டி வீட்டுப் பழம் பானை


Recommended Posts

பாட்டி வீட்டுப் பழம் பானை

 

paaanai.png

 

 

பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா
அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா
மெள்ள வெளியில் வருவதற்கும்
ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா
பானையைக் காலை திறந்தவுடன்
அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா
அதை அப்படியே கௌவிச் சென்றதடா
கள்ள வழியில் செல்பவரை எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம்
நாளும் துணையாக நிற்குமடா!


படித்ததில் பிடித்தது

 

 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பாட்டிவீட்டுப் பானை போல் தெரியவில்லை. தொல் பழங்காலத்துப் பானை போல் உள்ளதே :)

Link to comment
Share on other sites

இது பாட்டிவீட்டுப் பானை போல் தெரியவில்லை. தொல் பழங்காலத்துப் பானை போல் உள்ளதே :)

 

விட்டால் சுமேரியர் காலத்திலை இருந்த பானை இதுதான் எண்டு சொல்லுவியள் போலை கிடக்கு  :lol:  :lol: .  பக்கத்திலை உள்ளுக்கை போன மூஞ்சூறு நிக்குதெல்லோ  :D ??? உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் சுமே :) :) .

 

Link to comment
Share on other sites

எலிக்கு தெரியுமா அது அது கள்ள பாதை என்று ? ஓட்டை பானைக்குள் நெல்லை போட்ட பாட்டியில் தான் எல்லா பழியும் சேரும் .

பாவம் எலி .

Link to comment
Share on other sites

எலிக்கு தெரியுமா அது அது கள்ள பாதை என்று ? ஓட்டை பானைக்குள் நெல்லை போட்ட பாட்டியில் தான் எல்லா பழியும் சேரும் .

பாவம் எலி .

 

அடபோங்கோ அர்ஜுன் . எலி எங்கை நேர்வழியாலை போய் சாப்பிட்டது :lol: :lol: ???. ஆச்சிதான் பாவம் இருந்த நெல்லையும் குடுத்துப்போட்டு நிக்கிறா  :D  :D  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டிக்கு அறுதல் சொல்லவா எலிக்கு சொல்லவா? ...ம்ஹும்...

Link to comment
Share on other sites

பாட்டிக்கு அறுதல் சொல்லவா எலிக்கு சொல்லவா? ...ம்ஹும்...

 

வரவிற்கும் கருத்திற்கும் மிக்கநன்றி வல்வையூரான் .

 

 

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்.  பாட்டிவீட்டுப்பானைக் கவிக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்.  பாட்டிவீட்டுப்பானைக் கவிக்கும் நன்றிகள்.

 

நீங்களாவது சொல்லுங்கோ பாட்டியிலை பிழையோ எலியிலை பிழையோ ??? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சாந்தி :) :) .

 

Link to comment
Share on other sites

  • 7 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.