Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி

இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன.

அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து, முகாம்களின் தற்போதைய நிலை, அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இதையடுத்து இரு அமைச்சர்களும் மண்டபம் முகாம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வை முடித்து விட்ட அமைச்சர்கள் அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையை ¬கருணாநிதியிடம் வழங்கியுள்ளனர். அதில் ஏராளமான பரிந்துரைகளை இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 103 அகதிகள் முகாம்களிலும் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாமில் 2,000 வீடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதி வீடுகள் படு மோசமான நிலையில் உள்ளன. தரை எல்லாம் பெயர்ந்துவிட்டது. வெறும் மண் தான் தரை. பல வீடுகளுக்கு கூரையே இல்லை.

மழைக் காலங்களில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகள், பெண்களின் நிலைமை தான் மிகவும் மோசம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிப்பறைகள் எல்லாம் உடைந்து, சிதிலமடைந்து கிடக்கின்றன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளன. அகதிகள் மிகவும் சிரமமான நிலையில் தான் இங்கு வசித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதரங்களுடன் கூடிய இந்த அறிக்கையை கருணாநிதியிடம் தந்தனர்.

மேலும் அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரிய கருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.

மொத்தம் உள்ள 53,000 அகதிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் அவர்களின் அவல நிலைக்கு முடிவு கட்ட ஒரே வழி என்பதை சுப.தங்கவேலன் உறுதியாகத் தெரிவித்துள்ளா÷ர்.

அதேபோல அகதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியையும் அதிகரிக்க வேண்டும் என்று பெரியகருப்பண் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது அகதிகளுக்கு மாதம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை வழங்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் அகதிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கை ஒன்றையும் அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் பல அகதிகளின் குழந்தைகள் மிகச் சிறப்பாக படிப்பது தான் அமைச்சர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிகளில் பிற மாணவர்களை இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகின்றனர்.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அகதிகள் கோரியுள்ளனர்.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளித்தால் இவர்கள் மிகச் கல்வியைப் பெற முடியும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒரு அகதியின் மகன் பிளஸ் டூவில் 1,130 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் உயர் கல்வி கற்க அவருக்கு வசதி இல்லை. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அரசு உதவியுடன் மருத்துவம் படிக்க அந்த மாணவன் ஆசையாக உள்ளாராம்.

இதுகுறித்து கருணாநிதியிடம் அமைச்சர்கள் விளக்கியபோது ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டாராம். அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் கருணாநிதியிடம் அமைச்சர்கள் கோரினராம்.

15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி விவாதித்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களின் அறிக்கையைப் பார்த்த இலங்கை விஷயத்தில் இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமருடன் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஈழத்தமிழர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது திரு. குருக்காலபோனவனின் கமெண்டைப் பார்த்தால்....

இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அலை ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் சாத்தியமான ஒன்றாக இருந்ததா என்பதை கொஞ்சம் நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.... ம்....ம்... ம்... இதைத்தான் நன்றிக்கெட்டத் தனம் என்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்ச்சி,நன்றியுனர்வு,பனிவ

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பதைப் பார்த்து எமது நிலையை எடுப்போம்.முன்னர் நாம் பலமற்றவர்கள் ,இப்போது பலமுள்ளவர்கள், ஆகவே இதனை அவர்கள் கருசனையில் எடுப்பார்கள் என்று நம்புவோம்,இல்லாது விடின் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

தங்கள் நலங்களைப் பாதுகாக்க வேனும் அவர்கள் சில மாற்றங்களை தமது கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டும்.பொறுத்திருப்போம்.

மேற்குறிப்பிட்ட செய்தி அவர்கள் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுதுவதற்கான தயார் படுதலாகக் கூட இருக்கும்.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.
Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

ஜெயலலிதாவே அல்லது வேறு எந்த ஒரு அரசியல்வாதிகள் போல் அல்லாது கலைஞரை ஒரு elderly statesman ஆக legendary figure ஆகத்தான் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கு. ஆனால் அவர் இன்னமும் ஒரு சதாரண அரசியல்வாதியாக சாக்கடை அரசியலில் நாட்டம் கொண்டவராக நடந்து கொள்வதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

Link to comment
Share on other sites

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

வணக்கம்.... கலைஞர் அகதிகள் நலனைப் பற்றி ஆட்சியில் இல்லாதபோது முதலைக்கண்ணீர் வடித்திருந்தால் அது தன் கட்சி நலன் என்று எடுத்துக்கொண்டிருக்கலாம்.... வாக்கு வங்கி அரசியல் என்றும் எடுத்துக் கொண்டிருக்கலாம்....

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.... நல்லது செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.... அவருக்கு எந்த லாபமும் இல்லை.... அவரை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை.... ஜெயாவை யாராவது கேள்வி கேட்டார்களா? - இதையெல்லாம் கூட சிந்திக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் என்னவெல்லாமோ நினைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.... எம்.ஜி.ஆர் நடத்தியது அரசியல்... கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தபோது அதற்கு எதிராக ஏதாவது செய்யவேண்டுமே என்று புலிகளை ஆதரித்தவர் அவர்....

சென்னையில் புலிகளின் தலைவர் குடும்பத்தை சிறை வைத்து டெல்லியில் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளுமாறு செய்தது யார் என்று எனக்குத் தெரியும்.... ஒப்பந்தங்களில் ஆங்கிலத்தில் இருந்த விஷயங்களை தப்புத் தப்பாக புலித்தலைவருக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் யார் தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரன்.... இப்போது விஜயகாந்த் கட்சியில் இருக்கிறார்.... எம்.ஜி.ஆரின் வலதுகரம்.... இவற்றையெல்லாம் 90க்கு முன்பாக அரசியலை உன்னித்துக் கவனித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.

வழக்கம்போல யதார்த்தத்தை உணர்ந்து விவேகமாக எழுதப்பட்ட கருத்து நண்பர் வசும்புவுடையது....

Link to comment
Share on other sites

ஆட்சியில் இருக்கும் போது செய்பவற்றிற்கு அரசியல் காரணங்கள் இருக்காது என்று நீர் நினைப்பது உமது பக்குவக்குறைவு.

நீர்தான் ஜெயலலிதாவை ஏன் கேட்கவில்லை என்று ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து கலைஞரை தரம் இறக்குறீர்.

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

இது நிச்சயமாக சரியான கருத்து.... ஒரு தமிழக அரசியல் கட்சித்தலைவராக அவருக்கு பல கடமைகள் உண்டு.... அவரை நம்பி ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்....

கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே நீங்கள் விரும்பும் கலைஞரை காண முடியும்....

Link to comment
Share on other sites

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள்.உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம்.தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள். உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம். தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

நீங்கள் சொன்னதில் நிறைய விஷயம் எனக்கு காமெடியாகத் தான் இருக்கிறது.... இருந்தாலும் இறுக்கமான ஒரு சூழ்நிலை நிலவும் வேளையில் நான் எதையும் எதிர்மறையாக விமர்சிக்க விரும்பவில்லை.... :lol:

தன்னம்பிக்கை இருக்க வேண்டியது தான்... அதற்காக ஓவர் தன்னம்பிக்கை இருந்தால் அது மற்றவர்களின் நகைப்புக்குத் தான் ஆளாகும்.... :lol:

Link to comment
Share on other sites

எதை ஓவர் தன்னம்பிக்கை என்கிறீர்கள் லக்கி :roll:

எங்கட தலைவரின் தன்னம்பிக்கை தான் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற விடுதலை போராட்டமாக மாறி இருக்கு

எமது மக்களின் தன்னம்பிக்கை நாளைக்கு உங்களுக்கே எடுத்துக்காட்டான ஒரு தமிழீழம் அமையும் போது உங்களுக்கு தெரிய வரும் :wink: :P

Link to comment
Share on other sites

நீங்கள் நகைத்துக் கொள்ளுங்கள் ,உங்களுக்கு முடிந்ததைத் தானே உங்களால் செய்ய முடியும்.புலிகளின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொள்ள விரும்பின் தமிழ் சசியின் பதிவுகளைப் படியுங்கள் கொஞ்சமாவது விளங்கும்.

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

உங்களை நினைத்து புன்முறுவல் செய்வதைத்தவிர வேறொன்றையும் புதிதாக நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. இனி நிகழும் சம்பவங்கள் நான் சொன்னவற்றை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.

Link to comment
Share on other sites

வளமை போல புலனாய்வு அறிக்கை படிக்காமல் பொறுப்பு உணர்ந்து கலைஞர் செயற்பட துணிந்தது போல ஒரு தோற்றப்பாட்டை காட்டி இருக்கிறார்..... அதுக்காக ஒரு வணக்கம்.... அது உண்மை நிலை எண்று இல்லாவிட்டாலும் கலைஞர் முன்வைத்த காலை பின்வைக்காதவர் எண்ற வகையில் அவருக்கு நண்றியையும் சொல்லவேண்டும்....!

கடந்த முறை இந்திய வெளியுறவுச்செயலர் மலேசியாவில் விட்ட செய்திக்குப்பின்னர் பல நிகழ்வுக்கள் சட சடவென நடக்கிண்றது....

முக்கியமாக பாஜக்கவின் அறிக்கை, ஈழ ஆதரவு அமைப்புக்களின் பேரணி, பமகவின் தனியான அறிக்கை, இப்போ கலைஞரின் கூட்டணி தீர்மானம் எண்று அதன் பின்னர் உடனடியான பிரதமரின் கரிசனை... அதை அண்டி முக்கிய எதிர் கட்ச்சியான ஜேவின் கரிசனையான பார்வை எண்று ஒட்டு மொத்த தமிழகமும் ஈழ மக்களுக்காக கவலை கொள்வது மனதில் பால்வார்க்கும் விடயம்தான்...

இன்நடவடிக்கையை இந்திய புலநாய்வுத்துறையின் நாடகம் எண்று நினைக்காமல் உண்மையிலேயே மகிழலாம் காரணம் இம்முறை இந்திய அரசால் எங்களை வஞ்சிக்க முடியாது காரணம் ஈழ தமிழர்களால் இந்தியாவுக்கு நன்மைகள் அடைய வேண்டி இருக்கிறது.... முக்கியமாக அமைதியான சூழள் ஐநா நிரந்தர உறுப்புரிமைக்கு அது முகவும் முக்கியமானது....!

Link to comment
Share on other sites

யோவ் லக்கி தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்ற கதையாக கிடக்கிறது.லக்கி அவன்கள் நாடு வேனும் என்று சன்டை பிடிக்கிறாங்கள்.நீ என்ன என்ற நம்ம அரசிய்ல்வாதி டயல்க் விட்டுட்டு இருக்கிறய்.அவன்களாவ்து சுதந்திர காற்றாய் சுவாசிக்கட்டும்

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை இருந்ததால் தான் இன்று தமிழர்களிற்கான ஓர் முகவரி கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட  நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.... ரொம்பவும் புரட்சியாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு புரியாத எழுத்துக்களைப் போட்டு நீண்ட கருத்துக்களை வைத்து விட்டால் எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்பதில்லை....

இங்கே வீரம் பேசும் நீங்கள் அனைவருமே வெளிநாடுகளில் நல்ல வேலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்.... நீங்கள் பேசும் இதே வீரத்தை தமிழக அகதி முகாம்களில் வாடும் தமிழன் பேச முடியாது.... நாளை என்ன என்ற நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருபவன் அவன்....

அவன் அனுபவிக்கும் பசியும், இருண்ட வாழ்வையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் இதுபோல எல்லாம் பொய் வீரம் பேசித் திரிய மாட்டீர்கள்....

தமிழக அகதிகள் வாழ்வில் கொஞ்சமாக வெளிச்சம் தெரியப்போகிறது.... அதுகூட உங்களில் சிலருக்கு பொறுக்காதா?

கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்து கதையுங்கள்....

Link to comment
Share on other sites

இங்கே எழுதுபவர்கள் யாரும் வானத்தில இருந்து குதிக்கவில்லை லக்கி ஈழத்தில இருந்து நீங்க சொன்ன மாதிரியே கஸ்டப்பட்டுதான் வந்தார்கள்

அதால நீங்க சொல்லுற அகதித் தமிழனது நிலை உங்களை விட எங்களுக்கு நன்றாகவே விளங்கும் இங்குள்ள எல்லாருக்கும் தமிழ் நாட்டிலுள்ள எமது உறவுகள் வாழ்வு சீர்படுவது சந்தோஸம் தான் :wink:

ஆனால் நீங்க தான் எமது யதார்த்தத்தை புரியாமல் எழுதுறீங்களோ எண்டு தோணுது :roll:

Link to comment
Share on other sites

ஏங்க... அந்த வயதான தனி மனிசனோட போறிங்க... அவராலாய்... என்னங்க செய்யமுடியும்... அதிகரா நிர்வாக அரசு யந்திரத்தை மீறி ஒன்னும் செய்யமுடியாதுங்க... ஆட்சி மாற்ற புலுடாவை நம்பாதீங்க... வேணுமென்னா குறளுக்கு உரை..பாயும் புலி பண்டராவன்னியன் எழுதினால் ரசிக்கலாமுங்க... அவ்வளவு தானுங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.