Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி

இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன.

அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து, முகாம்களின் தற்போதைய நிலை, அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இதையடுத்து இரு அமைச்சர்களும் மண்டபம் முகாம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வை முடித்து விட்ட அமைச்சர்கள் அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையை ¬கருணாநிதியிடம் வழங்கியுள்ளனர். அதில் ஏராளமான பரிந்துரைகளை இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 103 அகதிகள் முகாம்களிலும் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாமில் 2,000 வீடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதி வீடுகள் படு மோசமான நிலையில் உள்ளன. தரை எல்லாம் பெயர்ந்துவிட்டது. வெறும் மண் தான் தரை. பல வீடுகளுக்கு கூரையே இல்லை.

மழைக் காலங்களில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகள், பெண்களின் நிலைமை தான் மிகவும் மோசம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிப்பறைகள் எல்லாம் உடைந்து, சிதிலமடைந்து கிடக்கின்றன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளன. அகதிகள் மிகவும் சிரமமான நிலையில் தான் இங்கு வசித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதரங்களுடன் கூடிய இந்த அறிக்கையை கருணாநிதியிடம் தந்தனர்.

மேலும் அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரிய கருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.

மொத்தம் உள்ள 53,000 அகதிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் அவர்களின் அவல நிலைக்கு முடிவு கட்ட ஒரே வழி என்பதை சுப.தங்கவேலன் உறுதியாகத் தெரிவித்துள்ளா÷ர்.

அதேபோல அகதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியையும் அதிகரிக்க வேண்டும் என்று பெரியகருப்பண் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது அகதிகளுக்கு மாதம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை வழங்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் அகதிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கை ஒன்றையும் அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் பல அகதிகளின் குழந்தைகள் மிகச் சிறப்பாக படிப்பது தான் அமைச்சர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிகளில் பிற மாணவர்களை இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகின்றனர்.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அகதிகள் கோரியுள்ளனர்.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளித்தால் இவர்கள் மிகச் கல்வியைப் பெற முடியும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒரு அகதியின் மகன் பிளஸ் டூவில் 1,130 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் உயர் கல்வி கற்க அவருக்கு வசதி இல்லை. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அரசு உதவியுடன் மருத்துவம் படிக்க அந்த மாணவன் ஆசையாக உள்ளாராம்.

இதுகுறித்து கருணாநிதியிடம் அமைச்சர்கள் விளக்கியபோது ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டாராம். அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் கருணாநிதியிடம் அமைச்சர்கள் கோரினராம்.

15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி விவாதித்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களின் அறிக்கையைப் பார்த்த இலங்கை விஷயத்தில் இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமருடன் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஈழத்தமிழர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது திரு. குருக்காலபோனவனின் கமெண்டைப் பார்த்தால்....

இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அலை ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் சாத்தியமான ஒன்றாக இருந்ததா என்பதை கொஞ்சம் நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.... ம்....ம்... ம்... இதைத்தான் நன்றிக்கெட்டத் தனம் என்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்ச்சி,நன்றியுனர்வு,பனிவ

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பதைப் பார்த்து எமது நிலையை எடுப்போம்.முன்னர் நாம் பலமற்றவர்கள் ,இப்போது பலமுள்ளவர்கள், ஆகவே இதனை அவர்கள் கருசனையில் எடுப்பார்கள் என்று நம்புவோம்,இல்லாது விடின் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

தங்கள் நலங்களைப் பாதுகாக்க வேனும் அவர்கள் சில மாற்றங்களை தமது கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டும்.பொறுத்திருப்போம்.

மேற்குறிப்பிட்ட செய்தி அவர்கள் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுதுவதற்கான தயார் படுதலாகக் கூட இருக்கும்.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.
Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

ஜெயலலிதாவே அல்லது வேறு எந்த ஒரு அரசியல்வாதிகள் போல் அல்லாது கலைஞரை ஒரு elderly statesman ஆக legendary figure ஆகத்தான் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கு. ஆனால் அவர் இன்னமும் ஒரு சதாரண அரசியல்வாதியாக சாக்கடை அரசியலில் நாட்டம் கொண்டவராக நடந்து கொள்வதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

Link to comment
Share on other sites

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

வணக்கம்.... கலைஞர் அகதிகள் நலனைப் பற்றி ஆட்சியில் இல்லாதபோது முதலைக்கண்ணீர் வடித்திருந்தால் அது தன் கட்சி நலன் என்று எடுத்துக்கொண்டிருக்கலாம்.... வாக்கு வங்கி அரசியல் என்றும் எடுத்துக் கொண்டிருக்கலாம்....

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.... நல்லது செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.... அவருக்கு எந்த லாபமும் இல்லை.... அவரை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை.... ஜெயாவை யாராவது கேள்வி கேட்டார்களா? - இதையெல்லாம் கூட சிந்திக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் என்னவெல்லாமோ நினைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.... எம்.ஜி.ஆர் நடத்தியது அரசியல்... கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தபோது அதற்கு எதிராக ஏதாவது செய்யவேண்டுமே என்று புலிகளை ஆதரித்தவர் அவர்....

சென்னையில் புலிகளின் தலைவர் குடும்பத்தை சிறை வைத்து டெல்லியில் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளுமாறு செய்தது யார் என்று எனக்குத் தெரியும்.... ஒப்பந்தங்களில் ஆங்கிலத்தில் இருந்த விஷயங்களை தப்புத் தப்பாக புலித்தலைவருக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் யார் தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரன்.... இப்போது விஜயகாந்த் கட்சியில் இருக்கிறார்.... எம்.ஜி.ஆரின் வலதுகரம்.... இவற்றையெல்லாம் 90க்கு முன்பாக அரசியலை உன்னித்துக் கவனித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.

வழக்கம்போல யதார்த்தத்தை உணர்ந்து விவேகமாக எழுதப்பட்ட கருத்து நண்பர் வசும்புவுடையது....

Link to comment
Share on other sites

ஆட்சியில் இருக்கும் போது செய்பவற்றிற்கு அரசியல் காரணங்கள் இருக்காது என்று நீர் நினைப்பது உமது பக்குவக்குறைவு.

நீர்தான் ஜெயலலிதாவை ஏன் கேட்கவில்லை என்று ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து கலைஞரை தரம் இறக்குறீர்.

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

இது நிச்சயமாக சரியான கருத்து.... ஒரு தமிழக அரசியல் கட்சித்தலைவராக அவருக்கு பல கடமைகள் உண்டு.... அவரை நம்பி ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்....

கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே நீங்கள் விரும்பும் கலைஞரை காண முடியும்....

Link to comment
Share on other sites

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள்.உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம்.தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள். உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம். தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

நீங்கள் சொன்னதில் நிறைய விஷயம் எனக்கு காமெடியாகத் தான் இருக்கிறது.... இருந்தாலும் இறுக்கமான ஒரு சூழ்நிலை நிலவும் வேளையில் நான் எதையும் எதிர்மறையாக விமர்சிக்க விரும்பவில்லை.... :lol:

தன்னம்பிக்கை இருக்க வேண்டியது தான்... அதற்காக ஓவர் தன்னம்பிக்கை இருந்தால் அது மற்றவர்களின் நகைப்புக்குத் தான் ஆளாகும்.... :lol:

Link to comment
Share on other sites

எதை ஓவர் தன்னம்பிக்கை என்கிறீர்கள் லக்கி :roll:

எங்கட தலைவரின் தன்னம்பிக்கை தான் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற விடுதலை போராட்டமாக மாறி இருக்கு

எமது மக்களின் தன்னம்பிக்கை நாளைக்கு உங்களுக்கே எடுத்துக்காட்டான ஒரு தமிழீழம் அமையும் போது உங்களுக்கு தெரிய வரும் :wink: :P

Link to comment
Share on other sites

நீங்கள் நகைத்துக் கொள்ளுங்கள் ,உங்களுக்கு முடிந்ததைத் தானே உங்களால் செய்ய முடியும்.புலிகளின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொள்ள விரும்பின் தமிழ் சசியின் பதிவுகளைப் படியுங்கள் கொஞ்சமாவது விளங்கும்.

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

உங்களை நினைத்து புன்முறுவல் செய்வதைத்தவிர வேறொன்றையும் புதிதாக நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. இனி நிகழும் சம்பவங்கள் நான் சொன்னவற்றை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.

Link to comment
Share on other sites

வளமை போல புலனாய்வு அறிக்கை படிக்காமல் பொறுப்பு உணர்ந்து கலைஞர் செயற்பட துணிந்தது போல ஒரு தோற்றப்பாட்டை காட்டி இருக்கிறார்..... அதுக்காக ஒரு வணக்கம்.... அது உண்மை நிலை எண்று இல்லாவிட்டாலும் கலைஞர் முன்வைத்த காலை பின்வைக்காதவர் எண்ற வகையில் அவருக்கு நண்றியையும் சொல்லவேண்டும்....!

கடந்த முறை இந்திய வெளியுறவுச்செயலர் மலேசியாவில் விட்ட செய்திக்குப்பின்னர் பல நிகழ்வுக்கள் சட சடவென நடக்கிண்றது....

முக்கியமாக பாஜக்கவின் அறிக்கை, ஈழ ஆதரவு அமைப்புக்களின் பேரணி, பமகவின் தனியான அறிக்கை, இப்போ கலைஞரின் கூட்டணி தீர்மானம் எண்று அதன் பின்னர் உடனடியான பிரதமரின் கரிசனை... அதை அண்டி முக்கிய எதிர் கட்ச்சியான ஜேவின் கரிசனையான பார்வை எண்று ஒட்டு மொத்த தமிழகமும் ஈழ மக்களுக்காக கவலை கொள்வது மனதில் பால்வார்க்கும் விடயம்தான்...

இன்நடவடிக்கையை இந்திய புலநாய்வுத்துறையின் நாடகம் எண்று நினைக்காமல் உண்மையிலேயே மகிழலாம் காரணம் இம்முறை இந்திய அரசால் எங்களை வஞ்சிக்க முடியாது காரணம் ஈழ தமிழர்களால் இந்தியாவுக்கு நன்மைகள் அடைய வேண்டி இருக்கிறது.... முக்கியமாக அமைதியான சூழள் ஐநா நிரந்தர உறுப்புரிமைக்கு அது முகவும் முக்கியமானது....!

Link to comment
Share on other sites

யோவ் லக்கி தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்ற கதையாக கிடக்கிறது.லக்கி அவன்கள் நாடு வேனும் என்று சன்டை பிடிக்கிறாங்கள்.நீ என்ன என்ற நம்ம அரசிய்ல்வாதி டயல்க் விட்டுட்டு இருக்கிறய்.அவன்களாவ்து சுதந்திர காற்றாய் சுவாசிக்கட்டும்

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை இருந்ததால் தான் இன்று தமிழர்களிற்கான ஓர் முகவரி கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட  நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.... ரொம்பவும் புரட்சியாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு புரியாத எழுத்துக்களைப் போட்டு நீண்ட கருத்துக்களை வைத்து விட்டால் எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்பதில்லை....

இங்கே வீரம் பேசும் நீங்கள் அனைவருமே வெளிநாடுகளில் நல்ல வேலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்.... நீங்கள் பேசும் இதே வீரத்தை தமிழக அகதி முகாம்களில் வாடும் தமிழன் பேச முடியாது.... நாளை என்ன என்ற நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருபவன் அவன்....

அவன் அனுபவிக்கும் பசியும், இருண்ட வாழ்வையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் இதுபோல எல்லாம் பொய் வீரம் பேசித் திரிய மாட்டீர்கள்....

தமிழக அகதிகள் வாழ்வில் கொஞ்சமாக வெளிச்சம் தெரியப்போகிறது.... அதுகூட உங்களில் சிலருக்கு பொறுக்காதா?

கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்து கதையுங்கள்....

Link to comment
Share on other sites

இங்கே எழுதுபவர்கள் யாரும் வானத்தில இருந்து குதிக்கவில்லை லக்கி ஈழத்தில இருந்து நீங்க சொன்ன மாதிரியே கஸ்டப்பட்டுதான் வந்தார்கள்

அதால நீங்க சொல்லுற அகதித் தமிழனது நிலை உங்களை விட எங்களுக்கு நன்றாகவே விளங்கும் இங்குள்ள எல்லாருக்கும் தமிழ் நாட்டிலுள்ள எமது உறவுகள் வாழ்வு சீர்படுவது சந்தோஸம் தான் :wink:

ஆனால் நீங்க தான் எமது யதார்த்தத்தை புரியாமல் எழுதுறீங்களோ எண்டு தோணுது :roll:

Link to comment
Share on other sites

ஏங்க... அந்த வயதான தனி மனிசனோட போறிங்க... அவராலாய்... என்னங்க செய்யமுடியும்... அதிகரா நிர்வாக அரசு யந்திரத்தை மீறி ஒன்னும் செய்யமுடியாதுங்க... ஆட்சி மாற்ற புலுடாவை நம்பாதீங்க... வேணுமென்னா குறளுக்கு உரை..பாயும் புலி பண்டராவன்னியன் எழுதினால் ரசிக்கலாமுங்க... அவ்வளவு தானுங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.