Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி

இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன.

அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து, முகாம்களின் தற்போதைய நிலை, அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இதையடுத்து இரு அமைச்சர்களும் மண்டபம் முகாம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வை முடித்து விட்ட அமைச்சர்கள் அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையை ¬கருணாநிதியிடம் வழங்கியுள்ளனர். அதில் ஏராளமான பரிந்துரைகளை இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 103 அகதிகள் முகாம்களிலும் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாமில் 2,000 வீடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதி வீடுகள் படு மோசமான நிலையில் உள்ளன. தரை எல்லாம் பெயர்ந்துவிட்டது. வெறும் மண் தான் தரை. பல வீடுகளுக்கு கூரையே இல்லை.

மழைக் காலங்களில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகள், பெண்களின் நிலைமை தான் மிகவும் மோசம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிப்பறைகள் எல்லாம் உடைந்து, சிதிலமடைந்து கிடக்கின்றன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளன. அகதிகள் மிகவும் சிரமமான நிலையில் தான் இங்கு வசித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதரங்களுடன் கூடிய இந்த அறிக்கையை கருணாநிதியிடம் தந்தனர்.

மேலும் அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரிய கருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.

மொத்தம் உள்ள 53,000 அகதிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் அவர்களின் அவல நிலைக்கு முடிவு கட்ட ஒரே வழி என்பதை சுப.தங்கவேலன் உறுதியாகத் தெரிவித்துள்ளா÷ர்.

அதேபோல அகதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியையும் அதிகரிக்க வேண்டும் என்று பெரியகருப்பண் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது அகதிகளுக்கு மாதம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை வழங்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் அகதிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கை ஒன்றையும் அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் பல அகதிகளின் குழந்தைகள் மிகச் சிறப்பாக படிப்பது தான் அமைச்சர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிகளில் பிற மாணவர்களை இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகின்றனர்.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அகதிகள் கோரியுள்ளனர்.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளித்தால் இவர்கள் மிகச் கல்வியைப் பெற முடியும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒரு அகதியின் மகன் பிளஸ் டூவில் 1,130 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் உயர் கல்வி கற்க அவருக்கு வசதி இல்லை. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அரசு உதவியுடன் மருத்துவம் படிக்க அந்த மாணவன் ஆசையாக உள்ளாராம்.

இதுகுறித்து கருணாநிதியிடம் அமைச்சர்கள் விளக்கியபோது ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டாராம். அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் கருணாநிதியிடம் அமைச்சர்கள் கோரினராம்.

15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி விவாதித்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களின் அறிக்கையைப் பார்த்த இலங்கை விஷயத்தில் இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமருடன் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஈழத்தமிழர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது திரு. குருக்காலபோனவனின் கமெண்டைப் பார்த்தால்....

இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அலை ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் சாத்தியமான ஒன்றாக இருந்ததா என்பதை கொஞ்சம் நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.... ம்....ம்... ம்... இதைத்தான் நன்றிக்கெட்டத் தனம் என்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்ச்சி,நன்றியுனர்வு,பனிவ

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பதைப் பார்த்து எமது நிலையை எடுப்போம்.முன்னர் நாம் பலமற்றவர்கள் ,இப்போது பலமுள்ளவர்கள், ஆகவே இதனை அவர்கள் கருசனையில் எடுப்பார்கள் என்று நம்புவோம்,இல்லாது விடின் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

தங்கள் நலங்களைப் பாதுகாக்க வேனும் அவர்கள் சில மாற்றங்களை தமது கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டும்.பொறுத்திருப்போம்.

மேற்குறிப்பிட்ட செய்தி அவர்கள் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுதுவதற்கான தயார் படுதலாகக் கூட இருக்கும்.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.
Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

ஜெயலலிதாவே அல்லது வேறு எந்த ஒரு அரசியல்வாதிகள் போல் அல்லாது கலைஞரை ஒரு elderly statesman ஆக legendary figure ஆகத்தான் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கு. ஆனால் அவர் இன்னமும் ஒரு சதாரண அரசியல்வாதியாக சாக்கடை அரசியலில் நாட்டம் கொண்டவராக நடந்து கொள்வதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

Link to comment
Share on other sites

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

வணக்கம்.... கலைஞர் அகதிகள் நலனைப் பற்றி ஆட்சியில் இல்லாதபோது முதலைக்கண்ணீர் வடித்திருந்தால் அது தன் கட்சி நலன் என்று எடுத்துக்கொண்டிருக்கலாம்.... வாக்கு வங்கி அரசியல் என்றும் எடுத்துக் கொண்டிருக்கலாம்....

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.... நல்லது செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.... அவருக்கு எந்த லாபமும் இல்லை.... அவரை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை.... ஜெயாவை யாராவது கேள்வி கேட்டார்களா? - இதையெல்லாம் கூட சிந்திக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

Link to comment
Share on other sites

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் என்னவெல்லாமோ நினைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.... எம்.ஜி.ஆர் நடத்தியது அரசியல்... கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தபோது அதற்கு எதிராக ஏதாவது செய்யவேண்டுமே என்று புலிகளை ஆதரித்தவர் அவர்....

சென்னையில் புலிகளின் தலைவர் குடும்பத்தை சிறை வைத்து டெல்லியில் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளுமாறு செய்தது யார் என்று எனக்குத் தெரியும்.... ஒப்பந்தங்களில் ஆங்கிலத்தில் இருந்த விஷயங்களை தப்புத் தப்பாக புலித்தலைவருக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் யார் தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரன்.... இப்போது விஜயகாந்த் கட்சியில் இருக்கிறார்.... எம்.ஜி.ஆரின் வலதுகரம்.... இவற்றையெல்லாம் 90க்கு முன்பாக அரசியலை உன்னித்துக் கவனித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.

வழக்கம்போல யதார்த்தத்தை உணர்ந்து விவேகமாக எழுதப்பட்ட கருத்து நண்பர் வசும்புவுடையது....

Link to comment
Share on other sites

ஆட்சியில் இருக்கும் போது செய்பவற்றிற்கு அரசியல் காரணங்கள் இருக்காது என்று நீர் நினைப்பது உமது பக்குவக்குறைவு.

நீர்தான் ஜெயலலிதாவை ஏன் கேட்கவில்லை என்று ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து கலைஞரை தரம் இறக்குறீர்.

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

இது நிச்சயமாக சரியான கருத்து.... ஒரு தமிழக அரசியல் கட்சித்தலைவராக அவருக்கு பல கடமைகள் உண்டு.... அவரை நம்பி ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்....

கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே நீங்கள் விரும்பும் கலைஞரை காண முடியும்....

Link to comment
Share on other sites

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள்.உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம்.தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள். உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம். தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

நீங்கள் சொன்னதில் நிறைய விஷயம் எனக்கு காமெடியாகத் தான் இருக்கிறது.... இருந்தாலும் இறுக்கமான ஒரு சூழ்நிலை நிலவும் வேளையில் நான் எதையும் எதிர்மறையாக விமர்சிக்க விரும்பவில்லை.... :lol:

தன்னம்பிக்கை இருக்க வேண்டியது தான்... அதற்காக ஓவர் தன்னம்பிக்கை இருந்தால் அது மற்றவர்களின் நகைப்புக்குத் தான் ஆளாகும்.... :lol:

Link to comment
Share on other sites

எதை ஓவர் தன்னம்பிக்கை என்கிறீர்கள் லக்கி :roll:

எங்கட தலைவரின் தன்னம்பிக்கை தான் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற விடுதலை போராட்டமாக மாறி இருக்கு

எமது மக்களின் தன்னம்பிக்கை நாளைக்கு உங்களுக்கே எடுத்துக்காட்டான ஒரு தமிழீழம் அமையும் போது உங்களுக்கு தெரிய வரும் :wink: :P

Link to comment
Share on other sites

நீங்கள் நகைத்துக் கொள்ளுங்கள் ,உங்களுக்கு முடிந்ததைத் தானே உங்களால் செய்ய முடியும்.புலிகளின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொள்ள விரும்பின் தமிழ் சசியின் பதிவுகளைப் படியுங்கள் கொஞ்சமாவது விளங்கும்.

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

உங்களை நினைத்து புன்முறுவல் செய்வதைத்தவிர வேறொன்றையும் புதிதாக நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. இனி நிகழும் சம்பவங்கள் நான் சொன்னவற்றை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.

Link to comment
Share on other sites

வளமை போல புலனாய்வு அறிக்கை படிக்காமல் பொறுப்பு உணர்ந்து கலைஞர் செயற்பட துணிந்தது போல ஒரு தோற்றப்பாட்டை காட்டி இருக்கிறார்..... அதுக்காக ஒரு வணக்கம்.... அது உண்மை நிலை எண்று இல்லாவிட்டாலும் கலைஞர் முன்வைத்த காலை பின்வைக்காதவர் எண்ற வகையில் அவருக்கு நண்றியையும் சொல்லவேண்டும்....!

கடந்த முறை இந்திய வெளியுறவுச்செயலர் மலேசியாவில் விட்ட செய்திக்குப்பின்னர் பல நிகழ்வுக்கள் சட சடவென நடக்கிண்றது....

முக்கியமாக பாஜக்கவின் அறிக்கை, ஈழ ஆதரவு அமைப்புக்களின் பேரணி, பமகவின் தனியான அறிக்கை, இப்போ கலைஞரின் கூட்டணி தீர்மானம் எண்று அதன் பின்னர் உடனடியான பிரதமரின் கரிசனை... அதை அண்டி முக்கிய எதிர் கட்ச்சியான ஜேவின் கரிசனையான பார்வை எண்று ஒட்டு மொத்த தமிழகமும் ஈழ மக்களுக்காக கவலை கொள்வது மனதில் பால்வார்க்கும் விடயம்தான்...

இன்நடவடிக்கையை இந்திய புலநாய்வுத்துறையின் நாடகம் எண்று நினைக்காமல் உண்மையிலேயே மகிழலாம் காரணம் இம்முறை இந்திய அரசால் எங்களை வஞ்சிக்க முடியாது காரணம் ஈழ தமிழர்களால் இந்தியாவுக்கு நன்மைகள் அடைய வேண்டி இருக்கிறது.... முக்கியமாக அமைதியான சூழள் ஐநா நிரந்தர உறுப்புரிமைக்கு அது முகவும் முக்கியமானது....!

Link to comment
Share on other sites

யோவ் லக்கி தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்ற கதையாக கிடக்கிறது.லக்கி அவன்கள் நாடு வேனும் என்று சன்டை பிடிக்கிறாங்கள்.நீ என்ன என்ற நம்ம அரசிய்ல்வாதி டயல்க் விட்டுட்டு இருக்கிறய்.அவன்களாவ்து சுதந்திர காற்றாய் சுவாசிக்கட்டும்

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை இருந்ததால் தான் இன்று தமிழர்களிற்கான ஓர் முகவரி கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட  நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.... ரொம்பவும் புரட்சியாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு புரியாத எழுத்துக்களைப் போட்டு நீண்ட கருத்துக்களை வைத்து விட்டால் எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்பதில்லை....

இங்கே வீரம் பேசும் நீங்கள் அனைவருமே வெளிநாடுகளில் நல்ல வேலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்.... நீங்கள் பேசும் இதே வீரத்தை தமிழக அகதி முகாம்களில் வாடும் தமிழன் பேச முடியாது.... நாளை என்ன என்ற நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருபவன் அவன்....

அவன் அனுபவிக்கும் பசியும், இருண்ட வாழ்வையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் இதுபோல எல்லாம் பொய் வீரம் பேசித் திரிய மாட்டீர்கள்....

தமிழக அகதிகள் வாழ்வில் கொஞ்சமாக வெளிச்சம் தெரியப்போகிறது.... அதுகூட உங்களில் சிலருக்கு பொறுக்காதா?

கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்து கதையுங்கள்....

Link to comment
Share on other sites

இங்கே எழுதுபவர்கள் யாரும் வானத்தில இருந்து குதிக்கவில்லை லக்கி ஈழத்தில இருந்து நீங்க சொன்ன மாதிரியே கஸ்டப்பட்டுதான் வந்தார்கள்

அதால நீங்க சொல்லுற அகதித் தமிழனது நிலை உங்களை விட எங்களுக்கு நன்றாகவே விளங்கும் இங்குள்ள எல்லாருக்கும் தமிழ் நாட்டிலுள்ள எமது உறவுகள் வாழ்வு சீர்படுவது சந்தோஸம் தான் :wink:

ஆனால் நீங்க தான் எமது யதார்த்தத்தை புரியாமல் எழுதுறீங்களோ எண்டு தோணுது :roll:

Link to comment
Share on other sites

ஏங்க... அந்த வயதான தனி மனிசனோட போறிங்க... அவராலாய்... என்னங்க செய்யமுடியும்... அதிகரா நிர்வாக அரசு யந்திரத்தை மீறி ஒன்னும் செய்யமுடியாதுங்க... ஆட்சி மாற்ற புலுடாவை நம்பாதீங்க... வேணுமென்னா குறளுக்கு உரை..பாயும் புலி பண்டராவன்னியன் எழுதினால் ரசிக்கலாமுங்க... அவ்வளவு தானுங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.