Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரிய கருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

பெரிய கருப்பன் - சுப தங்கவேலன் போன்றோருக்கு முதற் கண் நன்றிகள்.

கலைஞர்

தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கு ஏதாவது செய்வார் என நம்புகிறேன்.

அவரது அரசியல் வேறு

ஈழ அகதிகள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை வேறு........

கலைஞரை பிடிக்காவிடினும்

அவர் ஈழ அகதிகளுக்கு செய்தவற்றை நாம் மறக்கலாகாது.

இரு வருடங்களுக்கு முன்

அங்கு வாழ்வோரது நிலையை நானே சென்று பார்த்திருக்கிறேன்.

அப்போது எனக்கு ஒரு புகைப்படம் எடுக்கக் கூட

அனுமதி தராது மறுக்கப்பட்டது.

தமிழருக்காக குரல் கொடுப்போர்

அங்கு அவலப்படும் யாருக்கும் உதவியதில்லை.

நாமெல்லாம் வெளிநாடுகளில்

வந்து வசதியாக வாழ்கிறோம்.

முடிந்தால் தயவு செய்து

இந்தியா போகும் போது அவர்களை ஒரு முறை போய் பாருங்கள்.

உதவிகளை விட அவர்களுக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.

அரசியலில் பல பொய் முகங்களை எனக்குத் தெரியும்.

தற்போதைய நிலையில் அவர்களைப் பற்றி பேசும் தருணம் இதுவல்ல.

எனவே

உறவுகளே

எது வேண்டுமானாலும்

பேசலாம் என்று - நமக்கு ஆதரவாக இருப்போரையும்

இழக்கும் வகையில் பேசுவதை சற்றே மட்டுப்படுத்த வேண்டுகிறேன்.

கடந்த மாதம்

நான் அமெரிக்கா போன போது

இந்திய தமிழர்களது வீடுகளில்தான் தங்கினேன்.

அவர்கள் அனைவருமே படித்த அறிவாளிகள்.

இவர்கள் அனைவருமே தமிழீழ ஆதரவாளர்கள்.

அது அவர்களுக்குள் வெறியாக இருப்பதை பார்த்து வியந்து போனேன்.

என்னோடு பேசும் போது தமிழ் சங்க தலைவராயிருப்பவர் சொன்னார்

அஜீவன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் இல்லை

என்று ஈழநாதனிடம் கேட்டு தெரிந்த பின்தான் உங்களையே வரவேற்றோம் என்றார்.

"இல்லை என்றால்?" என்றேன்.

"வீட்டு கதவைக் கூட தட்ட அனுமதிக்க மாட்டோம்" என்றார்

எனக்கு இது பற்றி

நான் அங்கு போய்

அவர் சொல்லும் வரை தெரியாது.

ஒருவர்

லீனா மணிமேகலையிடம்

அஜீவன் அமெரிக்கா வருவதாயிருக்கிறார் என்று

சொன்ன போது

லீனா "அஜீவன் விடுதலைப் புலிகளுக்கு எதரானவர்.

அவரை ஏன் அழைக்கிறீர்கள்!"

என்று கேட்டாராம்............. :lol:

அதே போல

அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய வைத்தியர்

பல முறை கிளிநொச்சி சென்று பணிபுரிந்து இருக்கிறார்.

நான் அவரோடு ஒரு முழு நாளைக் கழித்தேன்.

அவர் அமெரிக்காவில் பிறந்து - கல்வி கற்றவர் -பின்னர் தமிழகத்தில் தமிழைக் கற்றவர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த 28-30 வயது இளைஞனாக

அவர் இருந்தாலும்

தமிழில் ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காமல் பேசுவார்.

ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை என் வார்த்தைகளோடு

வந்தால் அதன் தமிழ் இது என்பார்.

ஒரு தமிழ் - ஆங்கில அகராதி எனலாம்.

தமிழீழத்தில் இருக்கும் காலத்தில் மட்டுமே

நான் ஒரு தமிழனாக வாழ்வதாய் உணர்கிறேன் என்ற போது

எனக்கே வெட்கமாயிருந்தது.

நம்மில் எத்தனை பேர் அப்படி வாழ முயல்வார்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

பெரிய கருப்பன் - சுப தங்கவேலன் போன்றோருக்கு முதற் கண் நன்றிகள்.

பெரிய கருப்பன் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.... ஆனால் சுப. தங்கவேலன் திமுகவில் இருக்கும் தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்....

இவரைப்போல திமுகவில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று இங்கிருந்து வேதாந்தம் பேசுபவர்களுக்கு தெரியுமா?

ஈழத்தமிழ் ஆதரவாளர் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டா அலைய முடியும்?

அகதிகள் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலைஞரால் அறிவிக்கப்பட்டிருப்பதாலேயே சிலருக்கு ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்..... :lol::D:D

இவர்களெல்லாம் தேர்தலுக்கு முன்பாக ஜெ. அம்மையாரைப் போற்றி புகழ்ந்துக் கொண்டிருந்ததையும் நான் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்?

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.... ரொம்பவும் புரட்சியாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு புரியாத எழுத்துக்களைப் போட்டு நீண்ட கருத்துக்களை வைத்து விட்டால் எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்பதில்லை....

இங்கே வீரம் பேசும் நீங்கள் அனைவருமே வெளிநாடுகளில் நல்ல வேலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்.... நீங்கள் பேசும் இதே வீரத்தை தமிழக அகதி முகாம்களில் வாடும் தமிழன் பேச முடியாது.... நாளை என்ன என்ற நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருபவன் அவன்....

அவன் அனுபவிக்கும் பசியும், இருண்ட வாழ்வையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் இதுபோல எல்லாம் பொய் வீரம் பேசித் திரிய மாட்டீர்கள்....

தமிழக அகதிகள் வாழ்வில் கொஞ்சமாக வெளிச்சம் தெரியப்போகிறது.... அதுகூட உங்களில் சிலருக்கு பொறுக்காதா?

கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்து கதையுங்கள்....

லகி இங்கு நான் வீரம் பேசவில்லை, நிதர்சனமான உண்மைகளை உமக்கு விளக்கிக் கொண்டிருகிறேன், நீர் எழுதிய வற்றிற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.இங்கே நீர் தான் மிகவும் எளனமான தொனியில்,உமது மட்டுப்படுத்தப்பட்ட கருத்து வறற்சியை நிவர்த்தி செய்யும் வகையில் எழுத்தமாற்றான சொற்களை விளக்கம் இன்றி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறீர்.

என்னைப் பற்றி உமக்கு ஒன்றும் தெரியாது ஆகவே உமது அனுமானங்களின் அடிப்படையில் ஆன தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளும். நான் தமிழ் நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்தவன்,எனக்கு அங்குள்ள அரசியல் நிலைமைகள் நன்கு தெரியும், அத்தோடு அகதிகள் மத்தியில் வேலையும் செய்தவன்.

ரொம்ப ஓவர்? எது ஓவர்?

வெறும் வீரம், எது வெறும் வீரம்?

எனக்கு விளங்கவில்லை? எது விளங்க வில்லை , ஏன் விளங்கவில்லை என்று எழுதினால் , அதை மீண்டும் விளங்க முயற்ச்சிகிறேன், நீர் மேற் குறிப்பட்டவற்றைக் குறிப்பாகக் கூறினால் தான் அதற்கு விளக்கம் தர முடியும்.

ஆனால் உம்மால் அப்படி குறிப்பிட்டு எந்த பதிலையும் தரமுடியாத நிலையிலயே இவ்வாறான , சொல்லாடல்களைப் பாவிகிறீர் என்பது எல்லாருக்கும் தெரியும்,இது உமது அறிவின் எல்லை.அதை நிவர்த்தி செய்ய என்னால் முடியாது.

மேலும் அஜீவனுக்கு,

பரந்துபட்ட தமிழ் நாட்டு மக்களின் ஆதரவை நாம் எல்லோரும் நன்கு அறிவோம் ,அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தோராயினும் அவர்கள் தமிழ் ஈழத்தின் பாலும் விடுதலைப் புலிகள் பாலும் அளவுகடந்த விருப்பை உடயவர்கள் என்பதையும் அறிவோம்.ஆனால் எல்லாக் கட்சிகளுக்குள்ளும் சில சுய நலமிகள், பச்சோந்திகள் தமிழ் ஈழ எதிர்ப்பாளர்கள் இருகிறார்கள்.முக்கியமாக தமிழ் நாட்டு பார்ப்பனர்கள், இதனை நாங்கள் எங்கு சென்றாலும் பார்க்கலாம்.மற்றது இந்திய அரசின் நிலைப்பாடு தமிழ் நாட்டு மக்கள் சார்ந்தது கிடயாது அது இந்திய ஆளும் வர்க்க நலன் சார்ந்தது.அதனாலயே அது தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கவில்லை.ஆனால் இன்று கள நிலமைகள் அந்த அதிகார மையங்களையும் தமது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதுவே உண்மை.

Link to comment
Share on other sites

கருணாநிதி ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருகின்ற பொழுதும் மண்டப முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிருக்கு சில வசதிகளை செய்து கொடுப்பது வழக்கம். இம் முறையும் செய்திருக்கிறார்.

தமிழர்களின் தாயகங்களில் ஒன்றாகிய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கின்ற கலைஞர் கருணாநிதி இதை செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (இந்த வசதிகளை கன்னடத்து ஜெயலலிதாவோ சிங்களத்து மகிந்த ராஜபக்ஷவோ செய்திருந்தால்தான் ஆச்சரியம்)

ஆனால் ஈழத்தில் இருந்து அகதிகள் வருகின்ற நிலை ஒழிய வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்கு தமிழினம் விடுதலை பெற வேண்டும்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காய் கலைஞரின் குரல் எப்பொழுது ஒலிக்கும்?

Link to comment
Share on other sites

ஆரம்ப பகுதியில் கோடிட்டு குறிப்பிட்டதற்கு மாத்திரமே

எனது கருத்தை எழுதினேன்

நாரதர் குறிப்பிடுவது போல

இன்று கள நிலமைகள் அந்த அதிகார மையங்களையும் தமது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதுவே உண்மை

எனும் கருத்து முற்று முழுதான உண்மை.

இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை

நாம் இணைய வேண்டிய நேரத்தில்

அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதைத் தவிர

முரண்பாடுகள் தொடர வழி வகுக்கக் கூடாது என்பதே.

அதை லக்கிலுக்கும் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறேன்.

இளையதம்பியின்:-

ஆனால் ஈழத்தில் இருந்து அகதிகள் வருகின்ற நிலை ஒழிய வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்கு தமிழினம் விடுதலை பெற வேண்டும்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காய் கலைஞரின் குரல் எப்பொழுது ஒலிக்கும்?

ஆதங்கத்துக்கு விடை விரைவில் கிடைத்தால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் அகதிகளுக்கு 16 ஆயிரம் வீடுகள்

தமிழ்நாடு வந்துள்ள ஈழத் தமிழர்களுக்காக 16 ஆயிரம் வீடுகளைக் கட்ட தமிழ்நாடு அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அகதிகள் முகாமைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள் சு.ப.தங்கவேலன் மற்றும் பெரிய கருப்பன் ஆகியோர் அடங்கிய இக்குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.

அமைச்சர்கள் குழுவினர் 15 பக்க அறிக்கையை முதல்வர் கலைஞரிடம் கொடுத்துள்ளனர்.

அகதிகளுக்கான இலவச மின்சாரம், தூய குடிநீர், உரிய கழிப்பிட வசதிகளுக்கு அந்த அறிக்கையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ உதவிகள், மாதாந்திர கொடுப்பனவு அதிகரிப்பு, உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், வெளியில் பணிகளுக்குச் செல்லும் அகதிகள் மீதான கண்காணிப்பு தளர்வு உள்ளிட்வைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ அகதிகளுக்காகத் தமிழகத்தில்

50,000 வீடுகள் அமைக்க சிபாரிசு

இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கென 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக் கப்பட வேண்டுமென்று தமி ழகத்தின் இரண்டு அமைச்சர்கள், முதலமைச் சர் கருணாநிதியிடம் பரிந்துரை செய்துள்ள னர்.

இராமேஸ்வரத்தில் இலங்கை அகதிகளின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்க ளுக்கு உதவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தமிழக சட்டசபை யில் கோரிக்கை விடுத்திருந்தார். இதைக் தொடர்ந்து அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் பெரியகருப்பன், சுப. தங்க வேலன் ஆகியோரை முதல்வர் கருணாநிதி நியமித்தார்.

இவர்கள் இருவரும் இராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிந்து, அறிக்கை அளித்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பத்தின ருக்கு வீடுகள் கட்டித் தரலாம் என இந்த அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகம் முழுவதும் 103 இலங்கை அகதி கள் முகாம்கள் உள்ளன. அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அமைச்சர்கள் தங் களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இந்த அகதிகளுக்கென சுமார் 50 ஆயிரம் வீடுகளை அரசு கட்டித் தரலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அகதிகள் முகாமில் தற்போது 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலா னவை மக்கள் வசிப்பதற்கே லாயக்கற்ற சூழ லில் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் கள், பெரும்பாலான வீடுகளில் மேற்கூரையே கிடையாதெனவும், இதனால் மழைக் காலங் களில் இவற்றில் மக்கள் வசிக்கவே முடியாதெ னவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இராமேஸ்வரம் அகதிகள் முகாமில் உள்ள கழிப்பிடங்கள், பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் இல்லை. இதனால், அகதிகள் முகாமில் உள்ளவர்கள் குறிப்பாகப் பெண் கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அந்த அமைச்சர்கள் மேலும் குறிப்பிட்டுள்ள னர்.

அகதிகள் முகாமில் உள்ள உண்மை நிலை வரத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களை முதல்வர் கருணாநிதி பார்த்துக் கண் கலங்கினார் எனவும் தெரிகிறது.

-உதயன்

Link to comment
Share on other sites

²§¾¡ ´ÕÅ÷ ¾ýÉ¡Ä¡É º¢Ú ¯¾Å¢¸¨Ç

ÓÊó¾Å¨Ã ¦ºö ÓüÀÎõ §À¡Ð

«¨¾ ÅçÅüÀ¨¾Å¢ÎòÐ, §¸Ä¢ ¦ºöŨ¾

¾Å¢÷òЦ¸¡ñ¼¡ø ¡ÅÕìÌõ ¿øħ¾.

«Å÷ «Ãº¢Âø ¿ÄÛ측¸§Å¡ «ýÈ¢ ¾É¢Àð¼

¿ÄÛ측¸§Å¡ ¦ºöÂÓüÀð¼¡Öõ þ¾É¡ø ´Õ

º¢Ú Àí¸¡ÅÐ þÄí¨¸ ¾Á¢ú «¸¾¢¸û ¿ý¨Á¨¼Å¡÷¸§Ç¡¢ý «Ð ÅçÅü¸ò¾ì¸§¾...

Link to comment
Share on other sites

என்னைப் பற்றி உமக்கு ஒன்றும் தெரியாது ஆகவே உமது அனுமானங்களின் அடிப்படையில் ஆன தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளும்.

ஒத்துக் கொள்கிறேன்.... அதுபோலவே என்னைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?

இது உமது அறிவின் எல்லை.அதை நிவர்த்தி செய்ய என்னால் முடியாது.

இதை தனிநபர் விமர்சனம் இல்லை என்கிறீர்களா? ஒரு விஷயம் தெரியுமா உலகத்திலேயே பெரிய முட்டாள்தனம் மற்றவர்களை முட்டாளாக நினைப்பது தான்.... :lol:

மற்றவர்களுடைய அறிவின் எல்லை எது என்று தீர்மானிக்க நீங்கள் யார்? தங்களைத் தாங்களே அறிவாளிகளாக எண்ணிக் கொள்பவர்களால் மட்டுமே இதுபோல சிந்திக்க முடியும்.... ஆனால் அவர்கள் மற்றவர்களின் பார்வையில் கோமாளிகளாகத் தான் இருப்பார்கள்....

"கலைஞருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்" என்று நீங்கள் கூறியது உண்மையிலேயே எனக்கு நகைச்சுவையாக இருந்தது.... எந்தத் தமிழகத் தமிழனும் இந்த வார்த்தைகளைப் பார்த்திருந்தால் நகைக்கவே செய்வான்.... சந்தர்ப்பம் பெறும் நிலையில் அவரும் இல்லை.... கொடுக்கும் நிலையில் நீங்களும் இல்லை.... என்பதே என் கருத்து......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

²§¾¡ ´ÕÅ÷ ¾ýÉ¡Ä¡É º¢Ú ¯¾Å¢¸¨Ç

ÓÊó¾Å¨Ã ¦ºö ÓüÀÎõ §À¡Ð

«¨¾ ÅçÅüÀ¨¾Å¢ÎòÐ, §¸Ä¢ ¦ºöŨ¾

¾Å¢÷òЦ¸¡ñ¼¡ø ¡ÅÕìÌõ ¿øħ¾.

«Å÷ «Ãº¢Âø ¿ÄÛ측¸§Å¡ «ýÈ¢ ¾É¢Àð¼

¿ÄÛ측¸§Å¡ ¦ºöÂÓüÀð¼¡Öõ þ¾É¡ø ´Õ

º¢Ú Àí¸¡ÅÐ þÄí¨¸ ¾Á¢ú «¸¾¢¸û ¿ý¨Á¨¼Å¡÷¸§Ç¡¢ý «Ð ÅçÅü¸ò¾ì¸§¾

இக் கருத்தினை நானும் அமோதிக்கிறேன்

Link to comment
Share on other sites

//மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்//

80களிலை இப்படித்தான் எம்ஜி ஆரோடை சேர்ந்து காயை நகர்த்தினவை.......புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற மாதிரி விளையாட்டு நடக்க போகுது போலை.... என்ன நடக்குதென்று பார்ப்பம்

Link to comment
Share on other sites

ஒத்துக் கொள்கிறேன்.... அதுபோலவே என்னைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?..

மடிப்பாக்கத்தில் மொட்டைத்தலையோட ஹீரோ கொண்டாவில வலம்வருகிற ....... (திமுக) கட்ச்சியை சேர்ந்தவர் எண்டு நல்லா தெரியுமோய்.....!

உமக்கு தெரியாமல் போன விசயம் ஒண்டு இருக்கு.... பிச்சை எடுக்கிறவன் கூட அதை வாங்கலாமா வேண்டாமா எண்டு முடிவெடுக்கும் திறன் அவன் கையிலை இருக்கு. அவனுக்கே இருக்கும் போது ஈழத்தவனுக்கு இல்லையா...???

அப்பிடி இல்லை எண்டு சொல்ல முடியுமானால் சுத்தமான ஜனநாயக வாதிகள் ஆகிடூவீங்கப்பா...! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒத்துக் கொள்கிறேன்.... அதுபோலவே என்னைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?

உம்மைப் பற்றி அனுமானங்களின் அடிப்படையில் நான் தனி நபர் விமர்சனம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

இதை தனிநபர் விமர்சனம் இல்லை என்கிறீர்களா? ஒரு விஷயம் தெரியுமா உலகத்திலேயே பெரிய முட்டாள்தனம் மற்றவர்களை முட்டாளாக நினைப்பது தான்.... :lol:

எனக்கு விளங்கவில்லை என்று நீர் தான் எழுதுனீர், நான் தமிழில் தான் எழுதி உள்ளேன் ,ஆகவே மற்றவர்களுக்கு விளங்குவது உமக்கு விளங்கவில்லை என்றால், அதன் அர்த்தம் உமது அறிவின் எல்லை அவ்வளவே என்பதுவே.இதை நான் சொல்லவில்லை நீரே சொல்லி உள்ளீர்.

மற்றவர்களுடைய அறிவின் எல்லை எது என்று தீர்மானிக்க நீங்கள் யார்? தங்களைத் தாங்களே அறிவாளிகளாக எண்ணிக் கொள்பவர்களால் மட்டுமே இதுபோல சிந்திக்க முடியும்.... ஆனால் அவர்கள் மற்றவர்களின் பார்வையில் கோமாளிகளாகத் தான் இருப்பார்கள்....

"கலைஞருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்" என்று நீங்கள் கூறியது உண்மையிலேயே எனக்கு நகைச்சுவையாக இருந்தது.... எந்தத் தமிழகத் தமிழனும் இந்த வார்த்தைகளைப் பார்த்திருந்தால் நகைக்கவே செய்வான்.... சந்தர்ப்பம் பெறும் நிலையில் அவரும் இல்லை.... கொடுக்கும் நிலையில் நீங்களும் இல்லை.... என்பதே என் கருத்து......

கலைஞரைப் பற்றி உமக்கு ஒரு கருத்து உள்ளது என்றால், எமக்கும் ஒரு கருத்து இருக்கும்.கடந்தகாலங்களில் அவர் எவ்வாறு நடந்தார் என்பது எமக்கு எல்லாருக்கும் தெரியும்.அதை எல்லாம் இப்பொழுது கிளறுவது தேவையற்றது என்பதாலயே பொறுத்திருந்து ,அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அழியுங்கள் என்று எழுதி உள்ளேன்.

ஜெயலலிதாவை விட கலஞ்சரின் அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை,ஆனால் அவரையும் விட பல தலைவர்களும் தொண்டர்களும் ஈழத் தமிழர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இங்கே கண்களில் நீர் வழிந்தது என்றெல்லாம் எழுதி இருப்பது மிகைப் படுதப்படதாகவே இருக்கிறது, தனிப்பட்ட ரீதியில் சம்பந்தப் பட்டவர்களை நன்கு அறிந்திருந்தவன் என்ற வகையிலும், எண்பதுகளில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்பதை மிக அருகில் இருந்து அறிந்தவன் என்ற ரீதிலும், யார் யார் எவற்றை முன் நிலைப் படுத்தி காரியம் ஆற்றுபவர்கள் என்பதை நன்கு அறிவேன்.மேலும் இங்கே அவற்றை எழுதி தேவயற்ற முரன்பாடுகளை வளர்க்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

கலைஞரைப் பற்றி உமக்கு ஒரு கருத்து உள்ளது என்றால், எமக்கும் ஒரு கருத்து இருக்கும்.கடந்தகாலங்களில் அவர் எவ்வாறு நடந்தார் என்பது எமக்கு எல்லாருக்கும் தெரியும்.அதை எல்லாம் இப்பொழுது கிளறுவது தேவையற்றது என்பதாலயே பொறுத்திருந்து ,அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அழியுங்கள் என்று எழுதி உள்ளேன்.

ஜெயலலிதாவை விட கலஞ்சரின் அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை,ஆனால் அவரையும் விட பல தலைவர்களும் தொண்டர்களும் ஈழத் தமிழர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இங்கே கண்களில் நீர் வழிந்தது என்றெல்லாம் எழுதி இருப்பது மிகைப் படுதப்படதாகவே இருக்கிறது, தனிப்பட்ட ரீதியில் சம்பந்தப் பட்டவர்களை நன்கு அறிந்திருந்தவன் என்ற வகையிலும், எண்பதுகளில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்பதை மிக அருகில் இருந்து அறிந்தவன் என்ற ரீதிலும், யார் யார் எவற்றை முன் நிலைப் படுத்தி காரியம் ஆற்றுபவர்கள் என்பதை நன்கு அறிவேன்.மேலும் இங்கே அவற்றை எழுதி தேவயற்ற முரன்பாடுகளை வளர்க்க விரும்பவில்லை.

எல்லாம்சரி அண்ணா இந்த விளக்கத்தை இவருக்கு ஏன்...??? :roll:

இந்த கதைக்கு முடிவு சரி இல்லை முடிவை மாத்தவேணும் எண்டு வந்து சொல்லுவார்... இருந்து பாருங்கோ...! :wink: :P :P :P

Link to comment
Share on other sites

ºரி இந்த பகுதி முடுறதுக்குள்ள நாரதர் அண்ணாவின் நிலைமை அவளவும் தான்,,,,,,,

யார் முகத்தில் முழித்திர்கள்? :P :P

இதுக்கு என்று பதில் சொல்ல தனி வழி இருக்கு ஆனால் மோகன் அண்ணாவும் இராவணஸ், கூட்டம் கத்தி கொண்டு திரிவார்கள்.........

இவர்களுக்கு இவர்கள் பாசையில் புரியும் படி சொல்ல வேண்டும் மற்றும் படி புரிய வைப்பது கஸ்டம் :P :P :P

Link to comment
Share on other sites

²§¾¡ ´ÕÅ÷ ¾ýÉ¡Ä¡É º¢Ú ¯¾Å¢¸¨Ç

ÓÊó¾Å¨Ã ¦ºö ÓüÀÎõ §À¡Ð

«¨¾ ÅçÅüÀ¨¾Å¢ÎòÐ, §¸Ä¢ ¦ºöŨ¾

¾Å¢÷òЦ¸¡ñ¼¡ø ¡ÅÕìÌõ ¿øħ¾.

«Å÷ «Ãº¢Âø ¿ÄÛ측¸§Å¡ «ýÈ¢ ¾É¢Àð¼

¿ÄÛ측¸§Å¡ ¦ºöÂÓüÀð¼¡Öõ þ¾É¡ø ´Õ

º¢Ú Àí¸¡ÅÐ þÄí¨¸ ¾Á¢ú «¸¾¢¸û ¿ý¨Á¨¼Å¡÷¸§Ç¡¢ý «Ð ÅçÅü¸ò¾ì¸§¾...

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

இரண்டிற்கு இடையில் பாரிய இடவெளி. எது யதார்த்தமாக இருக்கு தற்பொழுது? :roll: :? :lol:

Link to comment
Share on other sites

கிந்துவின் பார்வையில் கலஞ்சரின் அறிக்கையின் பின்னணி,

According to DMK sources, Mr. Karunanidhi took the initiative to evolve a consensus among the alliance partners on the issue after some of them, including the Dravidar Kazhagam (DK) and the Pattali Makkal Katchi (PMK), began making demands to the State Government and the Centre. He could not afford to allow chinks in the armour at this crucial juncture, they point out.

The PMK was preparing to join a protest along with Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) and the Dalit Panthers, which are part of the AIADMK-led alliance, on June 16. Among other things, the demonstration was aimed at demanding that the Centre should send a fact-finding team comprising MPs to Sri Lanka.

The PMK pulled out of the agitation at the eleventh hour, citing "certain political reasons." Its sudden shift in the stand is being attributed to the persuasive efforts of Mr. Karunanidhi.

The two Communist parties and the Congress had made it clear at the meeting that any effort by India should be aimed at ensuring that the people of the island, Sinhalese and Tamils, live in peace and harmony.By adopting resolutions unanimously calling for India's efforts to restore peace in the island, besides protecting the Tamil Nadu fishermen from the Sri Lankan Navy, the DMK has steered clear of controversies while addressing some of the concerns expressed by the DK and the PMK.

The DMK's quick intervention is being described as a move to prevent the Opposition parties from hijacking the issue. It also sent a clear message to parties such as the MDMK and Dalit Panthers not to cross the `Lakshman Rekha,' as it would lead them to taking extreme positions, a veteran communist leader said. The DMK also made a point that even as the party and its allies were able to evolve a consensus on the issue, differences continued to haunt the AIADMK-led alliance.

http://www.hindu.com/2006/06/22/stories/20...62217860800.htm

Link to comment
Share on other sites

இந்துஸ்தான் டைம்ஸ் பிகே பாலச்சந்திரனின் பார்வையில்,

Lankan Tamil dailies laud Karunanidhi

PK Balachandran

Colombo, June 21, 2006

Related Stories [X] close

June 14: India deeply worried over Sri Lanka »

June 3: India won't play active role in Lankan peace:

Sri Lankan Tamils have welcomed the change in the stance of Tamil Nadu and New Delhi towards the ethnic conflict in the island.

On Wednesday, Colombo-based Tamil dailies prominently carried news about Prime Minister Manmohan Singh's telephonic conversation with the Tamil Nadu Chief Minister M Karunanidhi and his decision to send the National Security Advisor MK Narayanan to Chennai to discuss the matter with the regional satrap.

The most popular Tamil daily Virakesari said in an edit that it was heartening that the people of Tamil Nadu were voicing their concern about the plight of the Tamils in Sri Lanka, as they did earlier (in the 1980s).

It said that the Sri Lankan Tamils were initially disappointed that Karunanidhi, who had boasted that he was "living for the world Tamils" had made no comment on the worsening situation in Sri Lanka after he assumed office.

The disappointment was all the more when they found that other political parties in Tamil Nadu, including the BJP, were wanting Karunanidhi and New Delhi to take some action to help out the suffering Tamils of Sri Lanka.

Virakesari recalled that Vijayakanth, the popular actor and leader of a new Dravidian political party, had criticised the Sri Lankan government for using the Air Force to bomb its own people.

Vijayakanth had pointed out that even in the midst of the killings in Kashmir, the Indian government never used the Air Force to bomb the troubled areas.

Karunanidhi's silence was intriguing when the media in Tamil Nadu was highlighting the plight of fellow Tamils across the Palk Strait and was demanding that India step in, stop the killings, and bring relief to the beleaguered Tamil minority.

The respected Chennai-based daily Dinamani had even asked the Indian government to help implement the Ceasefire Agreement in Sri Lanka.

Change of heart

Eventually, though belatedly, all this did rub off on Karunanidhi, Virkesari said.

He broke his silence and said that he had never forgotten the Sri Lankan Tamils.

This provided timely succour to the suffering Tamils in Sri Lanka, the paper said.

Karunanidhi then went on to tell his coalition partners that it was important for India to help Sri Lanka find a peaceful solution to the conflict.

A resolution to this effect was adopted after a lengthy debate held in the DMK's headquarters in Chennai.

India can't shirk responsibility

Virakesari said that the suffering Tamils of Sri Lanka believed that their security lay in fleeing to India.

In this context, India could not shirk its responsibility to arrest the worsening situation in Sri Lanka and help bring peace there, it stressed.

The question as to how long India could afford to watch from the sidelines, the growing tension in Sri Lanka had arisen, the paper said.

Sooner or later the tension in the island would impact on New Delhi's own regional security interests, it pointed out.India would also have to take into account the possibility that if war were to break out in Sri Lanka, other powers like Pakistan and US could enter the scene and help the Sri Lankan government militarily.

"One might expect India to be watchful in this regard," the paper said.

It noted the fact that Indian leaders had said on many occasions that New Delhi would not be a silent spectator if war were to start and people were being killed.

India has already started opening new refugee camps to meet the increasing flow of refugees from Sri Lanka, Virakesari pointed out.

"Many feel that it will be very heartening if India were to do what it could to foster the peace process in Sri Lanka."

"It is very important to stop the harassment and killing of innocent Tamils," the paper said.

Right time to intervene

"This is the time for India to make efforts to stop the killings and restore human rights. India should not miss the opportunity to help find a peaceful solution to the conflict in the island and help the people lead a peaceful life."

"The people of Tamil Nadu are voicing the concerns of the Tamils of Sri Lanka out of humanitarian considerations. New Delhi should listen to their voice," Virakesari said.

http://www.hindustantimes.com/news/181_172...01302310000.htm

Link to comment
Share on other sites

எத்தனை வருடமாக நம்ம மீனவர் பாதுகாப்பு இல்லாமல் கட்லுக்கு போராங்க அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்ககானம் ,அதுக்குல்லா ஈழத்தமிழனம் அகதியாம்.அறிக்கையாம்?????????????????????

Link to comment
Share on other sites

வணக்கம்,

மேற்படி தலைப்பின் கீழான வாதங்களைப் பார்க்கின்ற போது கவலையாக இருக்கிறது. ஆரோக்கியமான கருத்துப் பகிர்வு நல்லது தான் ஆனால். இங்கே அவலட்சணமான தனிநபர் சாடலாகத் தான் இருக்கிறது.

ஒரு விடயம் என்னை உறுத்துகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு இஸ்லாமிய சகோதரன் துன்பப்படும் போது தாக்கப்படும்போது முழு உலகிலும் வாழும் இஸ்லாமியர்களும் கொதிக்கிறார்கள். அது பொலவே யுதர்களுக்காக பலரும் குரல் பொடுக்கிறார்கள். அனேகமான இன்ததவாகள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் ஏன் நாய்களைப் போலக் கடித்துக் கொள்கிறோம்?அல்ல அல்ல குரைத்துக் கொள்கிறோம் என்பது தான் சரியாக இருக்கும்.

ஈழத்தில் தமிழாகள் கொலைசெய்யப் படுவதைக் கண்டு மனங்குமுறி தீக்களித்தானே தமிழ்நாட்டு மகனொருவன். இதுபோல சிறையிலே இன்றுமு; வாடிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோபேர். இப்படியிருக்க நாங்கள் தமிழ்நாட்டின் மீது வார்த்தைகளைக் கொட்டுவதும் சரியில்லை. அதுபோல தமிழ்நாட்டுச் சகோதரர்களும் பிறத்தியானுடன் சமர்புரிவது போல வார்த்தைகளை உபயோகிப்பதும் சரியில்லை.

தயவுசெய்து தமிழன்னையின் பேரால் இந்த அழுக்குகளை நிறுத்திக் கொள்ளுங்கள்

(அவசரத்தில் நடுத்தெருவில் இருந்து எழுதுவதால் எழுத்துப் பிழைகளுக்கு மன்னித்துக் கொள்ங்கள்)

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

லக்கிலுக்குவை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு சகோதரர்களை எடைபோடுவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த மக்களின் ஆதரவு எவ்வளவு என்று. இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டும் இந்திய வல்லரசு எமக்கெதிராக செயற்படுவதை வைத்தும் நாம் எமக்காக அங்கு ஆதரவுதரும் மக்களைத்தூற்றக்கூடாது. அதையும் இப்படி ஒரு பதிவாக வெளியிட்டு எம் தமிழ் மக்களுக்கு இழுக்கு ஏற்படுத்தவேண்டாம்.

Link to comment
Share on other sites

இது உண்மையா? எனக்கு கிடைத்த தகவல்கள் வேறுமாறி இருக்கிறதே. அல்லது முன்பு அப்படியா?

யார் என்று யாருக்குத் தெரிய வேண்டுமோ

அவர்களுக்குத் தெரிந்தால் போதும் பிருந்தன்.

அது தெரிய வேண்டியவருக்குத் தெரியும்.

என்னை நல்லாவே தெரியும்!

நான் ஏற்கனவே எழுதியதை

நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

தமிழர்க்கு ஒரு தாயகம் வேண்டுமென்ற உணர்வுடன்

எவனொருவன் யாரோடு இணைந்து போராட வந்திருந்தாலும் - அவன்

நிச்சயம் அது கிடைக்க வேண்டுமென்றே விரும்புவான்.

(நீங்கள் நினைப்பது சரியா? :lol: )

அதற்காக சரியானவற்றை ஏற்கவும்

தவறானவற்றை விமர்சிக்கவும்

ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

நாம் இன்னும்

நம்மோடு இருப்பவர்களையே இனம் கண்டு ஏற்க மனது வரவில்லை.

இந்த நிலையே

பலர் மனதில் அச்சத்தை உருவாக்கி தூரத்தே வைத்து உள்ளது.

அது மாற வேண்டும்.

"பேசாமல் இருப்பவர்கள் அனைவரும் எதிரிகளுமல்ல.

பேசுபவர்கள் அனைவரும் சார்பாளர்களுமல்ல........"

நன்றி!

Link to comment
Share on other sites

அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எனதும் விருப்பம், உங்கள் நிலைப்பாடு அறியவே அப்படி கேட்டேன். ஏன் என்றால் எனக்கு தகவல் கிடைத்த இடம் அவ்வளவு நம்பிக்கைக்குரியது, ஆனால் உங்கள் பேச்சுக்கும் கிடைத்த தகவலுக்கும் நிறையவேற்றுமைகள். தகவல் கிடைத்த காலமும் நிறைய. அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பதே எனது அவா. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.