Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும்

நான்

யாரென்பது தெரியும்.........

நீங்கள் கேட்டவை சரியாக இருக்கலாம்?

யாருக்குத் தெரியும்? :P

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

இந்தப் பாடலுக்கும்

எனக்கும்

தமிழீழ விடுதலை விரும்பிகளுக்கும் நிறையவே

ஒற்றுமையுண்டு.

ஆபாவாணன் (சின்னா = சின்னசாமி)

மற்றும்

அவர்களது நண்பர்களையும் எம்மோடு இணைக்க வைத்த காலம் அது.

ஒருவன் சிங்கப்பூரிலிருந்து

தமிழீழ விடுதலைக்காக போராட வந்த

காலம் மட்டுமல்ல.........

வேண்டாம்.............................

நன்றி........................

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

:wink:

இதுதானே வேணாம்கிறது..............

இருந்தாலும் தூயவனின் லொல்லு எனக்கு பிடிக்கும்.

நானும் முன்ன இப்படித்தான் :lol:

ஆரம்ப காலத்தில்

தமிழீழத்தின் குரல் என்று ஒரு வானோலியை மக்கள்

கேட்டார்கள்.............

அதனுடன் சிங்களப் பகுதி வானோலி ஒன்றும்

தொலைக் காட்சிப் பகுதியொன்றும்

இருந்தது.

அதில் என் குரல் மட்டுமல்ல உழைப்பும்

வான் அலைகளில்

வலம் வந்தது............. :oops:

என்னுடன் இருந்தவர்களில்

இப்போது பிரான்சிலிருந்து ஒளிபரப்பாகும்

டீடீஎன் தொலைக் காட்சியில் ஒருவரும்

ஐபீசியில் ஒருவரும் இருக்கிறார்கள்.

பலரை தெரியவில்லை.

நான் அதிகம் பேசுவேன். :P

சரியென்று பட்டதற்காக வாதாடுவேன்.

இதனால் பலருக்கு என்னைப் பிடிக்கும்

சிலருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. :lol:

எனக்கு அப்போது பயம் என்றது என்னவென்று தெரியாது.

இதனாலேயே எனக்கு தெரியாமலே

உள்ளே ஆபத்து நிறைவே காத்து இருந்தது.

(இதனால்தான் அரசியலுக்கு டாட்டா காட்டி விட்டு

படம் செய்கிறேன்.........காட்டவில்லை :P )

என்னை காவு கொள்ள வந்தவர்களே

எனக்கு காவலானார்கள்!

அப்போது ஒரு நாடகம் எழுதி

கே.கே.நகர் அம்மன்கோவில்

சத்துணவு திட்ட அரங்கில் நடத்தினேன்.

அதன் பெயர்

"கோலங்கள்"

ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள்.

ஒரு குடும்பத்தில் அனைவரும்

ஒற்றுமையில்லாமல் இருப்பதால்

வெளியே இருந்து வரும் எதிரிகள்

அனைவரையும் அழிப்பதும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் போராடி வெல்ல முடியும்

............

நாடகம் முடிந்ததும்

என்னை வம்பில் மாட்டி விட

சுத்துமாத்தான ஒரு பேர்வழி

"உமது நாடகம்

ஒரு குடும்பத்தை பற்றியா?

அல்லது இயக்க உள் முரண்பாடு பற்றியா?

அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குள் உள்ள முரண்பாடு பற்றியா?

அதை தெளிவாக்குங்கள்........."என்று அனைவர் முன்னாலும் என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன்......

"விளங்க வேண்டியவர்களுக்கு விளக்கியிருக்கிறது.

சந்தோசம்............. :!:

தொப்பி அளவாயிருந்தால்............

ஏதோ செய்யச் சொல்வார்களே?......." என்று விடை பெற்றேன். :wink:

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இப்போதும் - அந்த

குணம் மாறவேயில்லை என்பதில்

எனக்கு வருத்தமே.

சொல்லி விட்டே வெளியேறினேன்.

அந்த தைரியம் எப்படி என

வியப்பதுண்டு.

அக்காலத்தில்தான்

எனக்கு அடையாறு திரைப்படக் கல்லூரியில்

சிறப்பு பயிற்சி பெற எம்.ஜீ.ஆர்.அவர்கள் வழி

வகுத்துத் தந்தார்கள்.

அதனால் திரைப்பட மாணவர்களைத் தெரியும்.

கனடாவில் என் நண்பனே

கள நண்பர்கள் சந்திப்பின் போது

யாழ்கள நண்பர்களிடம் சொன்னான்.

இவன் செத்திருப்பான் என்றுதான் நினைத்தேன்.

உயிரோட இருக்கிறதை பார்க்க வியப்பாயிருக்கு என்று? :lol:

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

Link to comment
Share on other sites

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

அச்சம் விட்டது சுதந்தரம் ;

அன்பு விடாதது சுதந்தரம் ;

இச்சைப் படிசெயல் சுதந்தரம் ;

இடர்செய் யாதது சுதந்தரம் ;

பிச்சை கொள்ள விரும்பாது

பிறருக் கீய வருந்தாது

கொச்சை மொழிகளைச் சொல்லாது

கோணல் வழிகளிற் செல்லாது.

மடமை விட்டது சுதந்தரம் ;

மானம் விடாதது சுதந்தரம் ;

கடமை கற்றது சுதந்தரம் ;

கபடம் அற்றது சுதந்தரம் ;

கொடுமை கண்டு பொறுக்காது

கொடியர் தமையும் வெறுக்காது

அடிமை செய்து சுகிக்காது

யாரையும் அடிமை வகிக்காது.

கொல்லக் கூசும் சுதந்தரம்

கொள்கைக் குயிர்தரும் சுதந்தரம்

எல்லை விட்டு நடக்காது

எதிரியை ஒண்டி மடக்காது

வெல்லற் கேனும் பொய்யாது

வேற்றுமைக் காரரை வையாது

பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது

பட்டதன் தோல்வி ஒளிக்காது.

தன்சோ றுண்பது சுதந்தரம்

தன்துணி யணிவது சுதந்தரம்

என்னே வறுமை வந்தாலும்

எத்தனை துன்பம் தந்தாலும்

தன்னேர் செம்மை பிரியாது

தன்குறை சொல்லித் திரியாது

பொன்சேர் போகம் மதிக்காது

பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.

போராடுவது மட்டுமல்ல - மனதால்

அந்த வெற்றிக்காய் எண்ணுவதும்

வேண்டுவதும்

இப்போதைய காலத்தில் மேன்மையானதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனுக்கு உள்ள தகுதியே, மற்றவர்களைப் போட்டுக் மீண்டும்மீண்டும் குழப்புவது தான். அஜீவன் அண்ணா ஒரு சிறந்த கலைஞன் என்று ஒத்துக் கொள்கின்றேன்!

:wink: :P :P :P

Link to comment
Share on other sites

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வைத்து ஏமாறுகின்ற பழக்கமா? அது "புதிய பாதை என்று போட் போட்டாலும், கடைசி வேறை எங்கு போய்த் தானே நிற்குமாம்.

Link to comment
Share on other sites

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

Link to comment
Share on other sites

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

"காத்தடிக்குது புயல் அடிக்குது

காரை நகரில EP அடிக்குது.

சோத்து பாசலை PLOT அடிக்குது.

சீனி மூட்டையை tela அடிக்குது."

இப்பிடி வருமே அந்தப்பாட்டா.....???? எனக்கு தெரியவே தெரியாதப்பா....! :wink: :P :P

Link to comment
Share on other sites

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

நான் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தும்

அவர்களோடு வாழ்ந்தும்

அவர்களது துன்பங்களை பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன்.

என் மனம் விரும்பாத ஒன்றை

என்னால் தொடர முடியாது.............

அவர்கள் சிதற முன்னமே

நான் வெளியேறினேன்.

ஆபத்துதான்...........அதிலிருக்கும் திரில் :P

இப்போ எல்லாம்

அவற்றை மறந்தே விட்டேன். :P

நாரதர் கலகம் நன்மையில் முடிய :lol: ஒத்துழைத்திருக்கிறேன். :P

நன்றி.........வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பேசாமல் இருப்பவர்கள் அனைவரும் எதிரிகளுமல்ல.

பேசுபவர்கள் அனைவரும் சார்பாளர்களுமல்ல........"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா என்ன இப்படி சிரிக்கிறீங்க. ஒண்டுமே புரியல. சொல்லிட்டு சிரிச்சா நானும் சேந்து சிரிக்கலாமெல்லா :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... அதே தான்! :):lol:

இந்தப்பாடல் ஒலி வடிவில் எங்கு பெறமுடியும்? இணையத்தில் உண்டா? இவ்வாறன பழையபாடல்கள் வேறு இருந்தாலும் நல்லா இருக்கும்! :wink:

Link to comment
Share on other sites

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

±øÄ¡Õõ ¬ÃõÀò¾¢ø §À¡Ã¡¼ ±ýÚ ¦º¡øĢ즸¡ñξ¡ý ¦ÅǢ츢ð¼¨Å. 83 ¬õ ¬ñÎ

þÉôÀΦ¸¡¨ÄìÌôÀ¢ýɧà þÂì¸í¸Ç¢ø «¾¢¸

«ÇÅ¢ø Áì¸û ¾í¸¨Ç þ½òÐ즸¡ñ¼É÷.

²¾¡ÅÐ ´Õ þÂì¸ò¾¢ø þ¨½óÐ

§À¡Ã¡¼§ÅñÎõ ±ýÈ ¯óоĢø þ¨½ó¾¡÷¸§ÇÂýÈ¢

þó¾ þÂì¸ò¾¢ø þ¨½óо¡ý §À¡Ã¡¼§ÅϦÁýÈ

¯Ú¾¢Ô¼ý þÕì¸Å¢ø¨Ä.

þÂì¸í¸¨Ç Àü颃 ¦¾Ç¢×õ «ó¾¿¡ð¸Ç¢ø

þÕó¾¾¢ø¨Ä.

þÂì¸í¸Ç¢ý ¾¨ÄÅ÷¸û, §ÁøÁð¼ ¯ÚôÀ¢É÷¸û

Ţ𼠾ÅÚ¸ÙìÌ. «ÊÁð¼ ¯ÚôÀ¢É÷¸û À¡Åõ

±ýÉ ¦ºöÅ¡÷¸û.

Link to comment
Share on other sites

ஓம் அது சரி தான் பலரது வாழ்க்கை இந்த மோசடித் தலைவர்களால் சீரழிக்கப்பட்டது, ஆனால் இந்தத் துயரம் இன்றும் தொடர்வது தான் கவலை அழிக்கும் விடயம்.என்று இவர்கள் சரியான பாதயைத் தேர்ந்து எடுக்கப் போகிறார்கள்?

மோசடியான தலமையை இனங்கண்டு கொள்ளாததில் இவர்களின்

பங்கும் உண்டு அல்லவா?தாங்களாகவே விலகி ,போராட்டத்தின் சரியான தலமையின் கீழ் ஒன்று இணயலாமே?

தொண்டர்கள் இருப்பதால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.தொண்டர்கள் இல்லாது விடின் தலமை இல்லை.ஆகவே என்று இந்த தொண்டர்கள் தங்கள் பிழையை உணர்ந்து விலகுகிறார்களோ அன்றே இந்த மோசடித் தலமைகள் தனித்து விடப்படும்.இன்றய டக்கிளசு,வரதர் அணி,கருணா குழு இஎன்டிஎலெf எல்லாம் தொண்டர்கள் இன்றி இயங்க முடியாது.

Link to comment
Share on other sites

கேக்கிறதுக்கு நல்லாயிருக்கிற விடயங்கள்

செயல்படுத்தும் போதுதான்...................:?: ஆகின்றன.

கமியூனிசம் பேசுறதை கேட்கும் போது

ஆகா என்று வாய் பிளக்க வைக்கும்.

ஆனால் நடைமுறையில்

சாத்தியக் குறைவுகள் அதிகம்.

நாம்

ஒன்றுபட வேண்டும் என்று சொல்லுகின்ற நண்பர்களே

நமக்குள் பிரிவுகள் அதிகரிக்கக் கூடிய

விடயங்களை தூக்கிப் பிடித்து பேசுகிறோம்.

தலைவர்களாக இருப்போர் கூட

இப்படிப் பேசாதீர்கள் - நாம்

பழைய பிரச்சனைகளை மறந்து

இப்போதாவது ஒன்றுபட வேண்டும் என்று

மனம் திறந்து சொல்வதில்லை.

பிரிவுபட்டு இருப்பது என்னவோ

தற்காலிகமாக வெற்றியாகத் தெரியலாம்.

அது தொடர் வெற்றியாக வாய்ப்பே இல்லை.

சிந்திக்க வேண்டியோர் சிந்திப்பார்களா?

நாமே

நமக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு நின்றால்

நாம் எப்போது ஒன்றுபடுவது?

உலகமே நம்மை எதிர்த்தாலும்

நாம் மனதாலாவது இணைந்து நின்றால் - அதுவே

ஒரு பாரிய சக்தியை உருவாக்கும்.

நேற்றைய மாலை நான் எனது சுவிஸ் நண்பர்களோடு கழித்தேன்.

காரணம் சுவிசின் உதைபந்தாட்ட விழா ஒருங்கிணைப்புக்காக..........

அவர்களது தேசப்பற்று மட்டுமல்ல அவர்களோடு வாழும்

வேற்று இனத்தவர்களையும் மதிக்கும் குணத்தைக் கண்டு

நெகிழ்வாக இருந்தது.

ஒரு சுவிஸ் நண்பன்

முதல் நடந்த குரவேசியா விளையாட்டைப் பற்றிய பேச்சோடு

"யுகோகள்.......அவர்கள் கிரிமினல்கள்" என்றான்.

பக்கத்திலிருந்தவன் சொன்னான்

"நீ றேசிசமாக (இனவாதமாக) பேசுகிறாய்

அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப் பேசாதே" என்றான்.

முதலில் பேசியவன் மெளனமானான்.

உதைபந்தாட்டத்தை அகன்ற திரையில் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சுவிஸ் வீரர்களுக்காக மட்டுமல்ல.

கொரிய வீரர்களது அபாரத்துக்காகவும்

அவர்கள் கரகோசம் செய்தார்கள்.

:?: :?: :?: :?:

இரவு முழுதும் நானும்

நான் வாழும் தேச வெற்றிக் கழிப்பில்

என் நண்பர்களோடு கலந்தேன்.

pr1556030ge.jpg

இது போல்

நம் மனங்களும் ஒன்றுபடுமானால் எதிர்காலத்தில்

நாமும் ஒன்று பட்டு நிற்போம்.

என்று எனக்குள் தோன்றியது.

அதை இங்கு உள்ள யாழ் கள நண்பர்களான நாமாவது செய்வோமா?

நீ வழிகாட்டியாய் இரு

அடுத்தவன் அதைத் தொடர்வான்.-யாரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதிக்கும் நீதிக்கும் வித்தியாசம் தெறியாதவர்கள் இங்கே கதைக்க கூடாது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.