Jump to content

கறுப்பு பெட்சீட்.


Recommended Posts


 

அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன்.



“அண்ணை நான் இங்கு பீட்டர்”



“பீட்டர் “



“அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “



“டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?”



“ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில்
வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில்
இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம்  கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான்
.பிள்ளைகள் இருக்கா அண்ணை?”



“ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு”



“போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை
கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்கடை கதையும் வந்தது
,அவன்தான் போன் நம்பரும் தந்தவன்”



“கலியாணம் கட்டியாச்சா”



“இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கினம்,அடுத்த முறை டொராண்டோ வரும்போது கட்டாயம்
உங்கட வீட்டிற்கு வருகின்றேன் ,நீங்களும் அமேரிக்கா பக்கம் வந்தால் டெக்சாசிற்கும்
வாருங்கோ ,என்னோடேயே நிக்கலாம்.உங்க கனக்க கொம்பனி ஆட்கள் இருக்கினம். ஒட்டாவாவில்
படிப்புடன் இருந்ததில் பெரிதாக எவருடனும் தொடர்பு ஏற்படவில்லை ,நந்தனுடன்
மாத்திரம் தான் அடிக்கடி கதைப்பேன் ,அவன்தான் நான் படிக்கவும் உதவிசெய்தவன் வேறென்ன
பிறகு சந்திப்பம்.நான் இப்பவும் அந்த கறுப்பு பெட்சீட்டை நினைத்து சிரிக்கின்றனான்,
மறந்து போனிங்களோ. “



“எல்லாவற்றையும் அடிக்கடி நினைக்க சிரிப்பும் வரும் அழுகையும் வரும் ,அந்த
கறுப்பு பெட்சீட் தேவனும் இங்குதான் இருக்கின்றான் ,சரி பிறகு கதைக்கின்றன். BYE.” .



போனை வைத்துவிட்டு  பீட்டர் சொன்ன கறுப்பு
பெட்சீட்டை நினைத்து பார்க்கின்றேன்.



சென்னையில் கே கே.நகரில் நாங்கள் இருந்த வீட்டின் மொட்டைமாடி அந்த ஏரியாவிலேயே
மிக உயரமானது. சுற்ற வர தென்னை ,மா மரங்கள் என்று சூழப்பட்டு ஆனி.ஆடி என்று அள்ளும்
வெக்கையிலும் எங்கள் மொட்டை மாடி குளிர்மையாக இருக்கும் .அதைவிட குளிர்மை அதிலிருந்து
காலையில் அயலில்  கோலம்போடும் கன்னிகைகள்
தொடங்கி பின்னர் அழகான யூனிபோமுடன் வலம்வரும் ஊர்சிவசிகள் , மாலையில் சயிக்கிளில்
டுயுசன் என்று பவனி வரும் ரம்பைகளின் தரிசனம்.  நாங்களும் பாடசாலை? என்ற ஒன்றில் படித்துக்கொண்டு
இருந்ததால் எங்களுக்கும் படிக்கின்ற பெடியங்கள் என்ற நினைப்பு .



அந்த மொட்டைமாடியுடன் கூடிய  முழு வீட்டில்
பதினெட்டு பெயர்கள் இருந்து படித்துக்கொண்டு இருந்தோம்.இந்த பதினெட்டு பெயர்களும்
முழு முகாம்களிலும் இருந்து முதல் படிப்பு முடித்து அடுத்த நிலைக்கு தெரிவு
செய்யபட்டவர்கள்.அனைத்து பிரதேசங்களிலும்(STANDARDIZATION?) இருந்து மாணவர்களை தெரிவு செய்ய
வேண்டும் என்ற நிலைப்பாட்டால் தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் இருந்தும்  வந்திருந்தார்கள் .



பாடசாலையின் பெயர் –தமிழிழ சமூக கல்லூரி( TAMILEELAM SCHOOL OF SOCIAL SCIENCE) .அதை சுருக்கி T3S
என்று அழைப்போம்.



அதிபர் –இப்போ
லண்டனில் இருக்கின்றார் . அவர் அங்கு தங்குவதில்லை .



பாடசாலைக்கும் அந்த பதினெட்டு
பேருக்கும் பொறுப்பு நான்தான் .



 



பாடசாலை –வீட்டிற்கு
அடுத்து இருக்கும் பாவனையில் இல்லாத சத்துஉணவு கூட மண்டபம்  ,இதன் முன் பெரிய மைதானம் இருக்கு .கே கே நகர்
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் .நாங்களும் இடைக்கிடை விளையாடுவோம்



படிப்பு -முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். இதனால் பலர் பட்ட பாடு சொல்லிமாளாது .ஒரு
சின்ன குட்டி கதை. இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கின்றேன் ,அருகில் ஏழு எட்டு
பேருக்கு ஒருவர் (எனது மனைவியின் தம்பி) ஆங்கிலம் படிப்பிக்கின்றார் .புத்தகம் WREN AND MARTIN
GRAMMER  BOOK , IDIOMS  விளங்கபடுத்திக்கொண்டு
இருக்கின்றார் .CARRY COALS TO
NEWCASTLE  . புதுமாளிகை என்றால்  அங்கு எல்லா சாமான்களும்  இருக்கும் அங்கு போய் நிலக்கரி வேண்டுமா என்று
கேட்டால் யார் வாங்குவார்கள்? நான் மெல்ல திரும்பி நல்லா இருக்கு
விளக்கம்.இங்கிலாந்தில் NEWCASTLE என்ற இடம் இருக்கு அங்கு தான் பெரும் நிலக்கரி எடுப்பார்கள்
அதானால் தான் அந்த பழமொழி வந்தது என்று சொல்ல இரண்டும் ஒன்றுதான் என்று
சமாளித்துவிட்டான்.)



ஆங்கிலம் –ஒரு இந்திய பெண் ஆசிரியை .மிக கண்டிப்பானவர் ,எவரும் தமிழில் ஒரு
வார்த்தை பேசக்ககூடாது.



இரண்டாம் பாடம் - மார்க்சிசம் ,கொம்னியுசம் பற்றி இந்திய கொம்னியூசிற்
கட்சியில் இருந்து மூன்று பெயர்கள் மாறி மாறி வருவார்கள்.த .பாண்டியனும் ஒருவர்.



மதிய இடைவேளை-சாப்பாடு,சிலர் குட்டித்தூக்கம் .



மூன்றாம் பாடம் –உலக அரசியல் ,சர்வதேச உறவுகள்,அரசியல் விஞ்ஞானம்,சமூக
விஞ்ஞானம்,மனோ தத்துவ இயல் –சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,பத்திரிக்கை
ஆசிரியர்கள்.சூரிய நாராயணா ,மனோகரன் இன்னும் சிலர் .



சனி -சிலவேளை காலை ஆங்கில வகுப்பு இருக்கும் ,சனி மாலையும் ஞாயிறும் விடுதலை .



பெரிய வீடு ,மொட்டை மாடி ,முன்னுக்கு அழகிய மைதானம்.ஆங்கிலத்தில் படிக்கும்
பெடியங்கள் (போராளிகள்?). இதனால் உமா, அனைத்து முக்கிய உறுப்பினார்களும்
அடிக்கடி விஜயம் செய்வார்கள்.,ஞாயிறு காலைகளில் மத்திய குழு கூட்டங்களும் இங்கு
நடக்கும் .



இந்த T3S இல் தான் அஜீவனை நான் சந்தித்தது.அஜீவன்
வீடியோ படங்களும் எடுத்துக்கொண்டிருந்ததால் அவர் வெளியில் போய் வர அனுமதியுண்டு .மற்றவர்கள்
அயலில் உள்ள கடைகளுக்கு சாமான்கள் வாங்க அதுவும் கொப்பியில் பதிந்து விட்டு
போகலாமே ஒழிய மற்றப்படி வேறெங்கும் போகமுடியாது .இந்த சமயத்தில் அதிபர் உமாவிடம்
கதைத்து  ஞாயிறுகளில் இவர்கள் படிப்பு
சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கு (பகிடியாக FACTS  எடுக்க
போகின்றது என்போம் ) கன்னிமாரா நூலகத்திற்கு  செல்ல அனுமதி பெற்றிருந்தார் .அதன் பின் எல்லோரும்
எப்ப ஞாயிற்றுகிழமை வரும் என்று காவல் இருப்பார்கள் .அனுமதியும் பஸ்ஸில் போக பணமும்
நான் தான் கொடுப்பது ஆக கூடியது நான்கு மணித்தியாலங்கள் தான் அனுமதி. ஞாயிறு காலை கன்னிமாரா
நூலகதிற்குள் போகும் போது  சிரிப்பாக
இருக்கும் ஆழுக்கொரு கொப்பியுடன் ஏதேதோ புத்தகங்களை புரட்டிக்கொண்டு சீரியசாக
இருப்பார்கள் .பயந்த பெடிகள் நூலகம் முடிய வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் பலர் ஒரு பத்துநிமிடம்
கன்னிமாராவில் இருந்துவிட்டு அவனவன் படம் பார்க்க ,உறவினர்கள் வீடு என்று போக
தொடங்கிவிட்டார்கள் .எனக்கு எல்லோரும் இருட்ட முதல் வந்தால் காணும் என்று கண்டும்
காணாமல் விட்டுவிடுவேன் ,இதனால் பலர் சிகரெட் பத்தவும் தொடங்கியிருந்தார்கள்
இன்னமும் இரண்டு மாதத்தில் முகாம்களுக்கு திரும்ப போகின்றார்கள் என்ற எண்ணம்
அவர்களை எதுவும் கேட்டாமல் தடுத்துவிட்டது .



இந்த காலகட்டத்தில் தான் பெசன்ட்நகரில் பாலசிங்ககத்தின்  வீடு  குண்டுவைக்கப்பட்டது
,பொலிஸ் எமது வீட்டிற்கு வந்து இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கு என்று மூன்று
பேரை காவல் நிலையம் கொண்டுபோகபோவதாக சொன்னார்கள்.செயலதிபரின் அனுமதியிலாமல் யாரும்
வர முடியாது என்று ஒரே அடியாக மறுத்து அவர்களுடன் பெரிய வாய்த்தர்க்கபட்டு பின்னர்
ஒருவர் அருகில் இருக்கும் கடைக்கு போய் உமாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமா
அவர்களை தான் ஒரு இடத்தில் சந்திப்பதாக சொல்ல அதை வந்து போலீசிடம் சொல்லி அவர்களை
அனுப்பிவைத்தோம் .( உமா போலீசிடம் உங்களது மேலிடம் தான் வைத்தது அவர்களிடம் போய்
விசாரியுங்கள் என்று சொன்னதாக அறிந்தேன்)



ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய
இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த
நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்
பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி
வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .



அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .



(தொடரும் ) 

எழுத்து சிறிதாக இருந்ததால் எடிற் பண்ணினேன் .

Edited by arjun
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .

யாழ்ப்பாணத்தில் இருந்த தேநீர்க்கடைகளில் ' தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்' என்று பெரிதாக ஒரு பலகையில் எழுதித் தூக்கியிருப்பார்கள்!

 

ஆனாலும் அதற்காக ஒருவரும் விவாதங்களை நிறுத்துவதில்லை.

 

ஒருவேளை இது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியோ எனப் பல தடவைகள் சிந்தித்ததுண்டு!

 

உங்கள் கதை தொடரட்டும்!  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன்)

.இன விடுதலையுடன் கூடிய வர்க்க போரை ஈழத்துக்கு வெளியே அழகாக நடத்திய போராளிகள்.அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்றவர்கள்.ஈழ தமிழ் மக்களின் அனுமதியின்றி மாலைதீவின் விடுதலைக்காய் போராடியவர்கள்.இவர்கள் சிந்திய குருதியின் ஈரம் தமிழகத்தின் சவுக்கம் காடுகளிலும் மாலைத்தீவின் கடற்கரையோரங்களிலும் பெண் போராளிகளின் குருதி மணியன் தோட்டத்தின் புதைகுளிககளிலும் இன்னும் காயாமல் உள்ளது.

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா,

 

மனப்பாரங்களை குறைக்கவும், நாங்கள் அறியாதவற்றை அறியவும், நாங்கள் செய்தவற்றை நாங்களே நினைவு மீட்டி பார்க்கவும், மற்றவர்களுக்கு அவர்களின் ஞாபகங்களை திருப்பி கொடுக்கவும் நீங்கள் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் உங்கள் அனுபவத்தின் வடிவங்களாக அழகாக மிளிர்கின்றன.

 

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளும் எங்களுக்கு வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எழுதுங்கள் அண்ணா தெரியாத பல விச‌யங்களை உங்கள் கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!

காலத்தின் தேவை இது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .


(தொடரும் )

 

இறுதியாக ராசவள்ளிக்கிழங்கு கதை எழுதியதாக ஞாபகம் . நீண்ட இடைவெளியின்பின்பு எழுதுகின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அர்ஜுன் . கறுப்பு பெட்சீட் கதையை நானும் கேட்க ஆவலாக இருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

இந்தியனின் சிவப்பு கரை போட்ட கருப்பு பெட்சீட்டா அதுக்கு பின்னலை பல கதைகள் நினைவுக்கு வருகின்றது. தொடருங்கள்

Link to comment
Share on other sites

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.


 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.

 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

 

அர்ஜீன் அண்ணா தண்ணீ போட்டு எழுதத் தொடங்கிட்டு பிறகு மறந்திருப்பார் :lol:

Link to comment
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .



155770_125970757462996_3643705_n.jpg

சத்துணவு கூடத்திற்கு முன் இருக்கும் மைதானம் ,இறுதிநாள் பிரதம விருந்தினராக வரும் கம்னியூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் .



76903_125970574129681_5051053_n.jpg

இதுதான் அந்த மொட்டைமாடி .கட்டம் போட்ட சேட்டுடன் இருப்பது உமா ,நாடியில் கை வைத்திருப்பது சித்தார்த்தன் ,திரும்பி பார்ப்பது வாசு .



150008_125970924129646_7442915_n.jpg

அது ஒரு கனா காலம் .தாடியுடன் நடுவில் நிற்பவர்தான் அதிபர் .

  • Like 1
Link to comment
Share on other sites

திரும்பி பார்ப்பது மட்டு வாசுவா?? வாசு தேவா

Link to comment
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .

 

 

தொடருங்கள்... இதில ஒருவரைப்பற்றி எழுதலாம்....

Link to comment
Share on other sites

பின்னூட்டம் விட்ட அனைவருக்கும் நன்றி ,

தப்பிலி அந்த கதை மிச்சம் எழுதிவிட்டு பின்னர் ஏதோ நினைவில் விட்டுவிட்டேன் .

ரதி போத்தல் உடைப்பதுதான் ஆனால் போத்தலே வாழ்க்கை இல்லை ,

சாத்திரி அது பரமதேவாவின் அண்ணை வாசுதான் .மனைவி இங்கு இருக்கின்றார் .

வந்தி  நீங்கள் அறிந்ததை நானும் அறிய ஆவல் .

Link to comment
Share on other sites

 

பரமதேவாவின் அண்ணை வாசுதான்

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

Link to comment
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

அது வாமதேவன் என்று நினைக்கிறேன்

 

வாமதேவன் மிகவும் திறமையான ஒரு வாகனசாரதி என்றும், ஆரம்ப காலங்களில் நடந்த வங்கிகொள்ளைகளுக்கு இவர் தான் கார் சாரதியாக இருந்ததாகவும் நண்பர்கள் சொல்லி

கேள்விபட்டுள்ளேன்.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

 

நவீனன் கூறியது மாதிரி தந்தை செல்வாவின் சாரதி வாமதேவன். அவர் அதிகம் பம்பாயில்தான் இருந்தார். வக்கீலுடன் சேர்ந்து இயங்கி இருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites


 

மிகவும் உரத்த  குரலில்
கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்த அவனை நான் அணுகி



“சத்தம் போடாதை ,என்ன பிரச்சனை” என்று கேட்டேன் .



“தனியாக இருக்கின்ற பொம்பிளை வீட்டிற்குள் உங்கட ஆள் ஒருவன் நேற்றிரவு
பாய்ந்துவிட்டான்,ஆளை இப்ப அனுப்பு “என்றான் .



“சும்மா நீ நினைத்தபடிக்கு ஒன்றும் செய்ய முடியாது,இங்கிருப்பவர்கள்
அப்படியானவர்களும் இல்லை,என்ன நடந்தது என எனக்கு தெரியாது ,ஏதும் நடந்திருந்தால்
ஆளை பிடித்து தண்டனை கொடுக்கலாம் ,எதற்கும் நாளை வா ,விசாரித்துவைக்கின்றேன்
“என்றேன் .



அவன் குடித்து வேறு இருந்தான் ,சயிக்கிளை உருட்டிக்கொண்டு ‘ நாளைக்கு வாறான்
அவன் வேணும்” என்று கொண்டு போய்விட்டான்.



பெடியங்கள் எல்லாம் என்ன ? என்ற மாதிரி பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .ஏதோ
இசக்கு பிசக்காக நடந்துவிட்டது என்பதை விளங்கிவிட்டார்கள் .



“இரவு கள்வன் யாரோ அடுத்தவீட்டிற்குள் எங்கட மொட்டை மாடியால் தான் வந்தவனாம்
,எங்களில் யாரையோ சந்தேகப்படுகின்றான்.அவனுக்கு வெறி  இருந்தாலும் எல்லாரையும் விசாரிக்கின்றேன் என
அனுப்பிவிட்டேன்.நாளை திரும்ப வருவான் ” என்று 
பெடியங்களிடம் சொன்னேன் .



அடுத்த சனி நடக்க இருக்கும் கூட்டத்தில் தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டுமேன்பதில்
எல்லோரும் ஆர்வமாக இருந்ததில் கலைந்துவிட்டார்கள். படித்த அந்த மூன்று மாதத்திலும்
ஒவ்வொரு மாதம் முடியவும் ஒவ்வொரு குரூப்பும் (மொத்தம் நாலு குரூப்) ஒரு
தலையங்கத்தின் கீழ் ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டும்.சனி மாலை மூன்று பேர்கள்
தலைமையில் இது நடக்கும் ,பார்வையாளர்கள் பலர் (இயக்க ஆட்கள் ) கலந்து கொள்வார்கள்
.குரூப்பின் தலைவர் பார்வையாளர்கள்  மத்தியில் தங்களது கட்டுரையை வாசித்து அவர்கள்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அழிக்கவேண்டும் இதனால் எல்லோரும் குரூப் குரூப்பாக
இருந்து ஒரே  படிப்பு .



கட்டுரைக்கான தலையங்கங்கள்  



தமிழிழத்தின் வெளிநாட்டு கொள்கை  (இதுதான்
எனது குரூப்பிற்கு தந்தது)



போராட்டத்தில் மகளிர் பங்களிப்பு.



எமது போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்



ஐக்கியமும் போராட்டமும் (மாற்று இயக்கங்கள் ,இனங்கள் )



வழக்கம் போல் இரவு சாப்பாடு எல்லோரும் கூடி இருந்து சாப்பிட்டுவிட்டு (காலை –இட்டலி
அல்லது தோசை எடுப்பு சாப்பாடு ,மதியம் சமையல் நாங்களே செய்து சாப்பிடுவோம், இரவு
பாணும் சம்பலும் ) மொட்டைமாடிக்கு படுக்க போகின்றோம்.



ஒரு 4x8 கோரை பாய் ,கருப்பில் சிவப்பு கோடு போட்ட பெட்சீட் ,ஒரு
அலுமினிய பிளேட் ,ஒரு ரம்ளர் இதுதான் ஒவ்வொருவரினதும் சொத்து ,அதைவிட உடுப்புகள்
இரண்டோ மூன்றோ சோடிகள் ஒரு பையில் வைத்திருப்பார்கள் .



ஆளுக்கு ஆள் பாயையும்
பெட்சீட்டையும் தூக்கிக்கொண்டு மொட்டைமாடிக்கு  போனாலும் ஒருபாயிலேயே பத்து பேர் மரவள்ளி கிழங்கு
அடுக்கிய மாதிரி படுத்துக்கிடந்து பல கதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஒருவன் எந்த
நாளும் “வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே” என தனது பழைய காதலியை நினைத்து
பாடாமல் படுக்கமாட்டான் .நான் எப்பவும் தனியாகத்தான் .பொறுப்பாளர் என்பதாலோ
மற்றவர்களை கொஞ்சம் எட்ட வைக்கும் எனது சுபாவத்தினாலோ அல்லது பயிற்சி ஒன்றாக
எடுக்காத காரணத்தினாலோ என்னவோ எப்பவும் நான் சற்று அந்நியம் தான் ,இருந்தாலும்
அவர்களின் கதைகள் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பேன் .



இன்று மொட்டைமாடிக்கு
வந்து நாலு பக்கமும் சுற்றி பார்க்கின்றேன் .முன்பக்கம் வீதியுடன் வாசல் ,இடதுபக்கம்
இருக்கும் வீடு எமது வானொலிகாரர் குடும்பத்துடன் இருக்கின்றார் (இப்போ பிரான்சில்
இருந்து இடைக்கிடை யாழில் எட்டி பார்ப்பவர்) வலது பக்கம் சத்துணவு கூடம் சற்று
இடைவெளி விட்டு தள்ளி இருக்கின்றது .பின்பக்கம் உமாவின் பெற்றோர்,சகோதரி,புருஷன்
,இரண்டு சிறு பிள்ளைகள் .இவர்கள் இருக்கும் வீட்டு மொட்டைமாடியில் ஒரு இளம்
பெண்ணும்  ஒரு குழந்தையும்
இருக்கின்றார்கள் .இந்த பெண்ணின் வீட்டிற்கு தான் எமது பெடியன் ஒருவன் பாய்ந்ததாக
ஒருவன் வந்து கத்திவிட்டு நாளை வருவதாக போய்விட்டான்.



அவர்கள் வீட்டு
மொட்டைமாடிக்கும் எமது வீட்டு மொட்டைமாடிக்கும் இடையில் ஒரு ஆறு அடிகள் இடைவெளி இருக்கும்
.அந்த இடைவெளிக்குள் நேரே கீழே அந்த வீட்டு ஒரு கிணறு இருக்கு . அந்த இடைவெளியை
கீழே பார்க்கவே பயமாக இருக்கும் அதை விட உமாவின் பெற்றோர் அங்கு இருந்ததால் சற்று
அடக்கியே வாசிப்போம் .



அந்த மொட்டை
மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்.



நாம் எல்லோரும்
சும்மா சில நேரம் அவாவின் சேட்டைகள்  பற்றி
சிலாகிப்பதுடன் அந்த பெண் நினைவு மறைந்துவிடும்.எங்களுக்கு  அதில் ஈடுபாடு இல்லை என்பது இல்லை. முகாமில்
மரக்கறி வாங்க போன தோழர் ஒருவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து பயிற்சியில்
இருந்த அனைவருக்கும்  முன்  வைத்து அவர் மாதக்கணக்கில் வாங்கிய அடி பற்றி
திரும்ப திரும்ப கதைப்பார்கள் .அதனால் அந்த நினைப்பே எவருக்கும் வருவதே இல்லை
,தனிய அங்க லட்சணங்கள் பற்றி அங்கலாய்ப்பதுடன் முடிந்து விடும் அனைவரின் கனவும் .



பின்னிரவாக மொட்டைமாடி
மெல்ல அமைதியாகி அனைவரும் தூங்கிபோகின்றார்கள் .நாளைக்கு அவன் வந்தால் நான் என்ன
செய்வது? உண்மையில் யாரும் பாய்ந்திருப்பார்களா? முறைப்படி தலைமைக்கு அறிவித்தால்
கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை
அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்? நித்திரை வருகுதில்லை. மொட்டை
மாடி எங்கும்  கறுப்பு பெட்சீட்டால்
போர்த்தியபடி தூங்குகின்றார்கள்.



இதில் யாராக
இருக்கும் பாய்ந்தது?  



இவன் சிவா தான்
தாக்குதலுக்கு போய் செத்தாலும் அதற்கு முதல் இந்த இரண்டு வருட வெப்புசாரத்தை
தீர்க்க  நாலு சிங்களத்திகளுக்கு அலுவல்
பார்க்காமல் விடமாட்டன் என்று சொல்லுகின்றவன்



குளிக்கேக்கை எந்த
வித உடுப்பும் இல்லாமல் ஆளுக்கு ஆள் தண்ணி எத்தி நிர்வாணாமாக எங்கும் அலைந்து
திரியும் சைமன்,நேதாஜி,ரவி,வில்லியம் .



அமுசடைக்கையாக என்ன
செய்கின்றான் என்றே தெரியாமல் இருக்கும் பவன்



ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
இன் டுயுவல் படத்தில் யார் அந்த டிரைவர் என்று எல்லோரையும் ஐமிச்ச படுவதுபோல்
நானும் அனைவரையும் பற்றி யோசிக்கின்றேன்.



சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று முடிவெடுத்து நாளை விடிய அந்த
பெண்ணிடமே என்ன நடந்தது என்று கேட்க முடிவெடுத்துவிட்டு தூங்கிவிடுகின்றேன் .



(தொடரும் )



 



  

Edited by arjun
  • Like 3
Link to comment
Share on other sites

Quote: " முறைப்படி தலைமைக்கு அறிவித்தால் கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்"

 

உள்ளுக்குளேயே ஒற்றுமையில்லை

 

 

Quote: "மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்."

 

அவ என்ன செய்கின்றா என்று எந்தநேரமும் புலனாய்வு செய்திருந்தால் எப்படி பெடியளை கவனிச்சனீங்கள்?

 

Link to comment
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

Link to comment
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

 

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

Link to comment
Share on other sites

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

 

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

Link to comment
Share on other sites

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

 

அவர் எழுதும் பாணி மிக வித்தியாசமானது.

 

ஓரளவு எழுத்துக் கூட்டி அம்புலிமாமா வாசிக்க ஆரம்பித்ததுமே,  தீவீர இலக்கியத் தேடலில் ஜமேலா / பட்லி / பெண் அடிமை / கறுப்பு  ராஜா வாசித்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டோம். :D

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

 

உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

 

புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

 

(இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.