Jump to content

கறுப்பு பெட்சீட்.


Recommended Posts


 

அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன்.



“அண்ணை நான் இங்கு பீட்டர்”



“பீட்டர் “



“அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “



“டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?”



“ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில்
வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில்
இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம்  கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான்
.பிள்ளைகள் இருக்கா அண்ணை?”



“ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு”



“போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை
கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்கடை கதையும் வந்தது
,அவன்தான் போன் நம்பரும் தந்தவன்”



“கலியாணம் கட்டியாச்சா”



“இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கினம்,அடுத்த முறை டொராண்டோ வரும்போது கட்டாயம்
உங்கட வீட்டிற்கு வருகின்றேன் ,நீங்களும் அமேரிக்கா பக்கம் வந்தால் டெக்சாசிற்கும்
வாருங்கோ ,என்னோடேயே நிக்கலாம்.உங்க கனக்க கொம்பனி ஆட்கள் இருக்கினம். ஒட்டாவாவில்
படிப்புடன் இருந்ததில் பெரிதாக எவருடனும் தொடர்பு ஏற்படவில்லை ,நந்தனுடன்
மாத்திரம் தான் அடிக்கடி கதைப்பேன் ,அவன்தான் நான் படிக்கவும் உதவிசெய்தவன் வேறென்ன
பிறகு சந்திப்பம்.நான் இப்பவும் அந்த கறுப்பு பெட்சீட்டை நினைத்து சிரிக்கின்றனான்,
மறந்து போனிங்களோ. “



“எல்லாவற்றையும் அடிக்கடி நினைக்க சிரிப்பும் வரும் அழுகையும் வரும் ,அந்த
கறுப்பு பெட்சீட் தேவனும் இங்குதான் இருக்கின்றான் ,சரி பிறகு கதைக்கின்றன். BYE.” .



போனை வைத்துவிட்டு  பீட்டர் சொன்ன கறுப்பு
பெட்சீட்டை நினைத்து பார்க்கின்றேன்.



சென்னையில் கே கே.நகரில் நாங்கள் இருந்த வீட்டின் மொட்டைமாடி அந்த ஏரியாவிலேயே
மிக உயரமானது. சுற்ற வர தென்னை ,மா மரங்கள் என்று சூழப்பட்டு ஆனி.ஆடி என்று அள்ளும்
வெக்கையிலும் எங்கள் மொட்டை மாடி குளிர்மையாக இருக்கும் .அதைவிட குளிர்மை அதிலிருந்து
காலையில் அயலில்  கோலம்போடும் கன்னிகைகள்
தொடங்கி பின்னர் அழகான யூனிபோமுடன் வலம்வரும் ஊர்சிவசிகள் , மாலையில் சயிக்கிளில்
டுயுசன் என்று பவனி வரும் ரம்பைகளின் தரிசனம்.  நாங்களும் பாடசாலை? என்ற ஒன்றில் படித்துக்கொண்டு
இருந்ததால் எங்களுக்கும் படிக்கின்ற பெடியங்கள் என்ற நினைப்பு .



அந்த மொட்டைமாடியுடன் கூடிய  முழு வீட்டில்
பதினெட்டு பெயர்கள் இருந்து படித்துக்கொண்டு இருந்தோம்.இந்த பதினெட்டு பெயர்களும்
முழு முகாம்களிலும் இருந்து முதல் படிப்பு முடித்து அடுத்த நிலைக்கு தெரிவு
செய்யபட்டவர்கள்.அனைத்து பிரதேசங்களிலும்(STANDARDIZATION?) இருந்து மாணவர்களை தெரிவு செய்ய
வேண்டும் என்ற நிலைப்பாட்டால் தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் இருந்தும்  வந்திருந்தார்கள் .



பாடசாலையின் பெயர் –தமிழிழ சமூக கல்லூரி( TAMILEELAM SCHOOL OF SOCIAL SCIENCE) .அதை சுருக்கி T3S
என்று அழைப்போம்.



அதிபர் –இப்போ
லண்டனில் இருக்கின்றார் . அவர் அங்கு தங்குவதில்லை .



பாடசாலைக்கும் அந்த பதினெட்டு
பேருக்கும் பொறுப்பு நான்தான் .



 



பாடசாலை –வீட்டிற்கு
அடுத்து இருக்கும் பாவனையில் இல்லாத சத்துஉணவு கூட மண்டபம்  ,இதன் முன் பெரிய மைதானம் இருக்கு .கே கே நகர்
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் .நாங்களும் இடைக்கிடை விளையாடுவோம்



படிப்பு -முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். இதனால் பலர் பட்ட பாடு சொல்லிமாளாது .ஒரு
சின்ன குட்டி கதை. இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கின்றேன் ,அருகில் ஏழு எட்டு
பேருக்கு ஒருவர் (எனது மனைவியின் தம்பி) ஆங்கிலம் படிப்பிக்கின்றார் .புத்தகம் WREN AND MARTIN
GRAMMER  BOOK , IDIOMS  விளங்கபடுத்திக்கொண்டு
இருக்கின்றார் .CARRY COALS TO
NEWCASTLE  . புதுமாளிகை என்றால்  அங்கு எல்லா சாமான்களும்  இருக்கும் அங்கு போய் நிலக்கரி வேண்டுமா என்று
கேட்டால் யார் வாங்குவார்கள்? நான் மெல்ல திரும்பி நல்லா இருக்கு
விளக்கம்.இங்கிலாந்தில் NEWCASTLE என்ற இடம் இருக்கு அங்கு தான் பெரும் நிலக்கரி எடுப்பார்கள்
அதானால் தான் அந்த பழமொழி வந்தது என்று சொல்ல இரண்டும் ஒன்றுதான் என்று
சமாளித்துவிட்டான்.)



ஆங்கிலம் –ஒரு இந்திய பெண் ஆசிரியை .மிக கண்டிப்பானவர் ,எவரும் தமிழில் ஒரு
வார்த்தை பேசக்ககூடாது.



இரண்டாம் பாடம் - மார்க்சிசம் ,கொம்னியுசம் பற்றி இந்திய கொம்னியூசிற்
கட்சியில் இருந்து மூன்று பெயர்கள் மாறி மாறி வருவார்கள்.த .பாண்டியனும் ஒருவர்.



மதிய இடைவேளை-சாப்பாடு,சிலர் குட்டித்தூக்கம் .



மூன்றாம் பாடம் –உலக அரசியல் ,சர்வதேச உறவுகள்,அரசியல் விஞ்ஞானம்,சமூக
விஞ்ஞானம்,மனோ தத்துவ இயல் –சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,பத்திரிக்கை
ஆசிரியர்கள்.சூரிய நாராயணா ,மனோகரன் இன்னும் சிலர் .



சனி -சிலவேளை காலை ஆங்கில வகுப்பு இருக்கும் ,சனி மாலையும் ஞாயிறும் விடுதலை .



பெரிய வீடு ,மொட்டை மாடி ,முன்னுக்கு அழகிய மைதானம்.ஆங்கிலத்தில் படிக்கும்
பெடியங்கள் (போராளிகள்?). இதனால் உமா, அனைத்து முக்கிய உறுப்பினார்களும்
அடிக்கடி விஜயம் செய்வார்கள்.,ஞாயிறு காலைகளில் மத்திய குழு கூட்டங்களும் இங்கு
நடக்கும் .



இந்த T3S இல் தான் அஜீவனை நான் சந்தித்தது.அஜீவன்
வீடியோ படங்களும் எடுத்துக்கொண்டிருந்ததால் அவர் வெளியில் போய் வர அனுமதியுண்டு .மற்றவர்கள்
அயலில் உள்ள கடைகளுக்கு சாமான்கள் வாங்க அதுவும் கொப்பியில் பதிந்து விட்டு
போகலாமே ஒழிய மற்றப்படி வேறெங்கும் போகமுடியாது .இந்த சமயத்தில் அதிபர் உமாவிடம்
கதைத்து  ஞாயிறுகளில் இவர்கள் படிப்பு
சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கு (பகிடியாக FACTS  எடுக்க
போகின்றது என்போம் ) கன்னிமாரா நூலகத்திற்கு  செல்ல அனுமதி பெற்றிருந்தார் .அதன் பின் எல்லோரும்
எப்ப ஞாயிற்றுகிழமை வரும் என்று காவல் இருப்பார்கள் .அனுமதியும் பஸ்ஸில் போக பணமும்
நான் தான் கொடுப்பது ஆக கூடியது நான்கு மணித்தியாலங்கள் தான் அனுமதி. ஞாயிறு காலை கன்னிமாரா
நூலகதிற்குள் போகும் போது  சிரிப்பாக
இருக்கும் ஆழுக்கொரு கொப்பியுடன் ஏதேதோ புத்தகங்களை புரட்டிக்கொண்டு சீரியசாக
இருப்பார்கள் .பயந்த பெடிகள் நூலகம் முடிய வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் பலர் ஒரு பத்துநிமிடம்
கன்னிமாராவில் இருந்துவிட்டு அவனவன் படம் பார்க்க ,உறவினர்கள் வீடு என்று போக
தொடங்கிவிட்டார்கள் .எனக்கு எல்லோரும் இருட்ட முதல் வந்தால் காணும் என்று கண்டும்
காணாமல் விட்டுவிடுவேன் ,இதனால் பலர் சிகரெட் பத்தவும் தொடங்கியிருந்தார்கள்
இன்னமும் இரண்டு மாதத்தில் முகாம்களுக்கு திரும்ப போகின்றார்கள் என்ற எண்ணம்
அவர்களை எதுவும் கேட்டாமல் தடுத்துவிட்டது .



இந்த காலகட்டத்தில் தான் பெசன்ட்நகரில் பாலசிங்ககத்தின்  வீடு  குண்டுவைக்கப்பட்டது
,பொலிஸ் எமது வீட்டிற்கு வந்து இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கு என்று மூன்று
பேரை காவல் நிலையம் கொண்டுபோகபோவதாக சொன்னார்கள்.செயலதிபரின் அனுமதியிலாமல் யாரும்
வர முடியாது என்று ஒரே அடியாக மறுத்து அவர்களுடன் பெரிய வாய்த்தர்க்கபட்டு பின்னர்
ஒருவர் அருகில் இருக்கும் கடைக்கு போய் உமாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமா
அவர்களை தான் ஒரு இடத்தில் சந்திப்பதாக சொல்ல அதை வந்து போலீசிடம் சொல்லி அவர்களை
அனுப்பிவைத்தோம் .( உமா போலீசிடம் உங்களது மேலிடம் தான் வைத்தது அவர்களிடம் போய்
விசாரியுங்கள் என்று சொன்னதாக அறிந்தேன்)



ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய
இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த
நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்
பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி
வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .



அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .



(தொடரும் ) 

எழுத்து சிறிதாக இருந்ததால் எடிற் பண்ணினேன் .

Edited by arjun
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .

யாழ்ப்பாணத்தில் இருந்த தேநீர்க்கடைகளில் ' தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்' என்று பெரிதாக ஒரு பலகையில் எழுதித் தூக்கியிருப்பார்கள்!

 

ஆனாலும் அதற்காக ஒருவரும் விவாதங்களை நிறுத்துவதில்லை.

 

ஒருவேளை இது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியோ எனப் பல தடவைகள் சிந்தித்ததுண்டு!

 

உங்கள் கதை தொடரட்டும்!  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன்)

.இன விடுதலையுடன் கூடிய வர்க்க போரை ஈழத்துக்கு வெளியே அழகாக நடத்திய போராளிகள்.அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்றவர்கள்.ஈழ தமிழ் மக்களின் அனுமதியின்றி மாலைதீவின் விடுதலைக்காய் போராடியவர்கள்.இவர்கள் சிந்திய குருதியின் ஈரம் தமிழகத்தின் சவுக்கம் காடுகளிலும் மாலைத்தீவின் கடற்கரையோரங்களிலும் பெண் போராளிகளின் குருதி மணியன் தோட்டத்தின் புதைகுளிககளிலும் இன்னும் காயாமல் உள்ளது.

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா,

 

மனப்பாரங்களை குறைக்கவும், நாங்கள் அறியாதவற்றை அறியவும், நாங்கள் செய்தவற்றை நாங்களே நினைவு மீட்டி பார்க்கவும், மற்றவர்களுக்கு அவர்களின் ஞாபகங்களை திருப்பி கொடுக்கவும் நீங்கள் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் உங்கள் அனுபவத்தின் வடிவங்களாக அழகாக மிளிர்கின்றன.

 

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளும் எங்களுக்கு வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எழுதுங்கள் அண்ணா தெரியாத பல விச‌யங்களை உங்கள் கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!

காலத்தின் தேவை இது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .


(தொடரும் )

 

இறுதியாக ராசவள்ளிக்கிழங்கு கதை எழுதியதாக ஞாபகம் . நீண்ட இடைவெளியின்பின்பு எழுதுகின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அர்ஜுன் . கறுப்பு பெட்சீட் கதையை நானும் கேட்க ஆவலாக இருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

இந்தியனின் சிவப்பு கரை போட்ட கருப்பு பெட்சீட்டா அதுக்கு பின்னலை பல கதைகள் நினைவுக்கு வருகின்றது. தொடருங்கள்

Link to comment
Share on other sites

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.


 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.

 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

 

அர்ஜீன் அண்ணா தண்ணீ போட்டு எழுதத் தொடங்கிட்டு பிறகு மறந்திருப்பார் :lol:

Link to comment
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .



155770_125970757462996_3643705_n.jpg

சத்துணவு கூடத்திற்கு முன் இருக்கும் மைதானம் ,இறுதிநாள் பிரதம விருந்தினராக வரும் கம்னியூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் .



76903_125970574129681_5051053_n.jpg

இதுதான் அந்த மொட்டைமாடி .கட்டம் போட்ட சேட்டுடன் இருப்பது உமா ,நாடியில் கை வைத்திருப்பது சித்தார்த்தன் ,திரும்பி பார்ப்பது வாசு .



150008_125970924129646_7442915_n.jpg

அது ஒரு கனா காலம் .தாடியுடன் நடுவில் நிற்பவர்தான் அதிபர் .

  • Like 1
Link to comment
Share on other sites

திரும்பி பார்ப்பது மட்டு வாசுவா?? வாசு தேவா

Link to comment
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .

 

 

தொடருங்கள்... இதில ஒருவரைப்பற்றி எழுதலாம்....

Link to comment
Share on other sites

பின்னூட்டம் விட்ட அனைவருக்கும் நன்றி ,

தப்பிலி அந்த கதை மிச்சம் எழுதிவிட்டு பின்னர் ஏதோ நினைவில் விட்டுவிட்டேன் .

ரதி போத்தல் உடைப்பதுதான் ஆனால் போத்தலே வாழ்க்கை இல்லை ,

சாத்திரி அது பரமதேவாவின் அண்ணை வாசுதான் .மனைவி இங்கு இருக்கின்றார் .

வந்தி  நீங்கள் அறிந்ததை நானும் அறிய ஆவல் .

Link to comment
Share on other sites

 

பரமதேவாவின் அண்ணை வாசுதான்

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

Link to comment
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

அது வாமதேவன் என்று நினைக்கிறேன்

 

வாமதேவன் மிகவும் திறமையான ஒரு வாகனசாரதி என்றும், ஆரம்ப காலங்களில் நடந்த வங்கிகொள்ளைகளுக்கு இவர் தான் கார் சாரதியாக இருந்ததாகவும் நண்பர்கள் சொல்லி

கேள்விபட்டுள்ளேன்.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

 

நவீனன் கூறியது மாதிரி தந்தை செல்வாவின் சாரதி வாமதேவன். அவர் அதிகம் பம்பாயில்தான் இருந்தார். வக்கீலுடன் சேர்ந்து இயங்கி இருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites


 

மிகவும் உரத்த  குரலில்
கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்த அவனை நான் அணுகி



“சத்தம் போடாதை ,என்ன பிரச்சனை” என்று கேட்டேன் .



“தனியாக இருக்கின்ற பொம்பிளை வீட்டிற்குள் உங்கட ஆள் ஒருவன் நேற்றிரவு
பாய்ந்துவிட்டான்,ஆளை இப்ப அனுப்பு “என்றான் .



“சும்மா நீ நினைத்தபடிக்கு ஒன்றும் செய்ய முடியாது,இங்கிருப்பவர்கள்
அப்படியானவர்களும் இல்லை,என்ன நடந்தது என எனக்கு தெரியாது ,ஏதும் நடந்திருந்தால்
ஆளை பிடித்து தண்டனை கொடுக்கலாம் ,எதற்கும் நாளை வா ,விசாரித்துவைக்கின்றேன்
“என்றேன் .



அவன் குடித்து வேறு இருந்தான் ,சயிக்கிளை உருட்டிக்கொண்டு ‘ நாளைக்கு வாறான்
அவன் வேணும்” என்று கொண்டு போய்விட்டான்.



பெடியங்கள் எல்லாம் என்ன ? என்ற மாதிரி பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .ஏதோ
இசக்கு பிசக்காக நடந்துவிட்டது என்பதை விளங்கிவிட்டார்கள் .



“இரவு கள்வன் யாரோ அடுத்தவீட்டிற்குள் எங்கட மொட்டை மாடியால் தான் வந்தவனாம்
,எங்களில் யாரையோ சந்தேகப்படுகின்றான்.அவனுக்கு வெறி  இருந்தாலும் எல்லாரையும் விசாரிக்கின்றேன் என
அனுப்பிவிட்டேன்.நாளை திரும்ப வருவான் ” என்று 
பெடியங்களிடம் சொன்னேன் .



அடுத்த சனி நடக்க இருக்கும் கூட்டத்தில் தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டுமேன்பதில்
எல்லோரும் ஆர்வமாக இருந்ததில் கலைந்துவிட்டார்கள். படித்த அந்த மூன்று மாதத்திலும்
ஒவ்வொரு மாதம் முடியவும் ஒவ்வொரு குரூப்பும் (மொத்தம் நாலு குரூப்) ஒரு
தலையங்கத்தின் கீழ் ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டும்.சனி மாலை மூன்று பேர்கள்
தலைமையில் இது நடக்கும் ,பார்வையாளர்கள் பலர் (இயக்க ஆட்கள் ) கலந்து கொள்வார்கள்
.குரூப்பின் தலைவர் பார்வையாளர்கள்  மத்தியில் தங்களது கட்டுரையை வாசித்து அவர்கள்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அழிக்கவேண்டும் இதனால் எல்லோரும் குரூப் குரூப்பாக
இருந்து ஒரே  படிப்பு .



கட்டுரைக்கான தலையங்கங்கள்  



தமிழிழத்தின் வெளிநாட்டு கொள்கை  (இதுதான்
எனது குரூப்பிற்கு தந்தது)



போராட்டத்தில் மகளிர் பங்களிப்பு.



எமது போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்



ஐக்கியமும் போராட்டமும் (மாற்று இயக்கங்கள் ,இனங்கள் )



வழக்கம் போல் இரவு சாப்பாடு எல்லோரும் கூடி இருந்து சாப்பிட்டுவிட்டு (காலை –இட்டலி
அல்லது தோசை எடுப்பு சாப்பாடு ,மதியம் சமையல் நாங்களே செய்து சாப்பிடுவோம், இரவு
பாணும் சம்பலும் ) மொட்டைமாடிக்கு படுக்க போகின்றோம்.



ஒரு 4x8 கோரை பாய் ,கருப்பில் சிவப்பு கோடு போட்ட பெட்சீட் ,ஒரு
அலுமினிய பிளேட் ,ஒரு ரம்ளர் இதுதான் ஒவ்வொருவரினதும் சொத்து ,அதைவிட உடுப்புகள்
இரண்டோ மூன்றோ சோடிகள் ஒரு பையில் வைத்திருப்பார்கள் .



ஆளுக்கு ஆள் பாயையும்
பெட்சீட்டையும் தூக்கிக்கொண்டு மொட்டைமாடிக்கு  போனாலும் ஒருபாயிலேயே பத்து பேர் மரவள்ளி கிழங்கு
அடுக்கிய மாதிரி படுத்துக்கிடந்து பல கதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஒருவன் எந்த
நாளும் “வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே” என தனது பழைய காதலியை நினைத்து
பாடாமல் படுக்கமாட்டான் .நான் எப்பவும் தனியாகத்தான் .பொறுப்பாளர் என்பதாலோ
மற்றவர்களை கொஞ்சம் எட்ட வைக்கும் எனது சுபாவத்தினாலோ அல்லது பயிற்சி ஒன்றாக
எடுக்காத காரணத்தினாலோ என்னவோ எப்பவும் நான் சற்று அந்நியம் தான் ,இருந்தாலும்
அவர்களின் கதைகள் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பேன் .



இன்று மொட்டைமாடிக்கு
வந்து நாலு பக்கமும் சுற்றி பார்க்கின்றேன் .முன்பக்கம் வீதியுடன் வாசல் ,இடதுபக்கம்
இருக்கும் வீடு எமது வானொலிகாரர் குடும்பத்துடன் இருக்கின்றார் (இப்போ பிரான்சில்
இருந்து இடைக்கிடை யாழில் எட்டி பார்ப்பவர்) வலது பக்கம் சத்துணவு கூடம் சற்று
இடைவெளி விட்டு தள்ளி இருக்கின்றது .பின்பக்கம் உமாவின் பெற்றோர்,சகோதரி,புருஷன்
,இரண்டு சிறு பிள்ளைகள் .இவர்கள் இருக்கும் வீட்டு மொட்டைமாடியில் ஒரு இளம்
பெண்ணும்  ஒரு குழந்தையும்
இருக்கின்றார்கள் .இந்த பெண்ணின் வீட்டிற்கு தான் எமது பெடியன் ஒருவன் பாய்ந்ததாக
ஒருவன் வந்து கத்திவிட்டு நாளை வருவதாக போய்விட்டான்.



அவர்கள் வீட்டு
மொட்டைமாடிக்கும் எமது வீட்டு மொட்டைமாடிக்கும் இடையில் ஒரு ஆறு அடிகள் இடைவெளி இருக்கும்
.அந்த இடைவெளிக்குள் நேரே கீழே அந்த வீட்டு ஒரு கிணறு இருக்கு . அந்த இடைவெளியை
கீழே பார்க்கவே பயமாக இருக்கும் அதை விட உமாவின் பெற்றோர் அங்கு இருந்ததால் சற்று
அடக்கியே வாசிப்போம் .



அந்த மொட்டை
மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்.



நாம் எல்லோரும்
சும்மா சில நேரம் அவாவின் சேட்டைகள்  பற்றி
சிலாகிப்பதுடன் அந்த பெண் நினைவு மறைந்துவிடும்.எங்களுக்கு  அதில் ஈடுபாடு இல்லை என்பது இல்லை. முகாமில்
மரக்கறி வாங்க போன தோழர் ஒருவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து பயிற்சியில்
இருந்த அனைவருக்கும்  முன்  வைத்து அவர் மாதக்கணக்கில் வாங்கிய அடி பற்றி
திரும்ப திரும்ப கதைப்பார்கள் .அதனால் அந்த நினைப்பே எவருக்கும் வருவதே இல்லை
,தனிய அங்க லட்சணங்கள் பற்றி அங்கலாய்ப்பதுடன் முடிந்து விடும் அனைவரின் கனவும் .



பின்னிரவாக மொட்டைமாடி
மெல்ல அமைதியாகி அனைவரும் தூங்கிபோகின்றார்கள் .நாளைக்கு அவன் வந்தால் நான் என்ன
செய்வது? உண்மையில் யாரும் பாய்ந்திருப்பார்களா? முறைப்படி தலைமைக்கு அறிவித்தால்
கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை
அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்? நித்திரை வருகுதில்லை. மொட்டை
மாடி எங்கும்  கறுப்பு பெட்சீட்டால்
போர்த்தியபடி தூங்குகின்றார்கள்.



இதில் யாராக
இருக்கும் பாய்ந்தது?  



இவன் சிவா தான்
தாக்குதலுக்கு போய் செத்தாலும் அதற்கு முதல் இந்த இரண்டு வருட வெப்புசாரத்தை
தீர்க்க  நாலு சிங்களத்திகளுக்கு அலுவல்
பார்க்காமல் விடமாட்டன் என்று சொல்லுகின்றவன்



குளிக்கேக்கை எந்த
வித உடுப்பும் இல்லாமல் ஆளுக்கு ஆள் தண்ணி எத்தி நிர்வாணாமாக எங்கும் அலைந்து
திரியும் சைமன்,நேதாஜி,ரவி,வில்லியம் .



அமுசடைக்கையாக என்ன
செய்கின்றான் என்றே தெரியாமல் இருக்கும் பவன்



ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
இன் டுயுவல் படத்தில் யார் அந்த டிரைவர் என்று எல்லோரையும் ஐமிச்ச படுவதுபோல்
நானும் அனைவரையும் பற்றி யோசிக்கின்றேன்.



சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று முடிவெடுத்து நாளை விடிய அந்த
பெண்ணிடமே என்ன நடந்தது என்று கேட்க முடிவெடுத்துவிட்டு தூங்கிவிடுகின்றேன் .



(தொடரும் )



 



  

Edited by arjun
  • Like 3
Link to comment
Share on other sites

Quote: " முறைப்படி தலைமைக்கு அறிவித்தால் கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்"

 

உள்ளுக்குளேயே ஒற்றுமையில்லை

 

 

Quote: "மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்."

 

அவ என்ன செய்கின்றா என்று எந்தநேரமும் புலனாய்வு செய்திருந்தால் எப்படி பெடியளை கவனிச்சனீங்கள்?

 

Link to comment
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

Link to comment
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

 

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

Link to comment
Share on other sites

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

 

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

Link to comment
Share on other sites

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

 

அவர் எழுதும் பாணி மிக வித்தியாசமானது.

 

ஓரளவு எழுத்துக் கூட்டி அம்புலிமாமா வாசிக்க ஆரம்பித்ததுமே,  தீவீர இலக்கியத் தேடலில் ஜமேலா / பட்லி / பெண் அடிமை / கறுப்பு  ராஜா வாசித்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டோம். :D

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

 

உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

 

புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

 

(இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.