-
Tell a friend
-
Topics
-
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா.. நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்.. மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது? என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்ற, உதவாத செயற்பாடுகளும், பரந்த நோக்கற்ற மனபாங்கும் தானே காரணங்கள் என கூறலாம்.. இவற்றை இல்லாதெழிக்க இன்னமும் எத்தனை காலங்கள் போகுமோ தெரியாது.. எங்களது வரலாற்றைப்பற்றிய எல்லா விடயங்களும் பதியப்படுகிறது/பதியப்படவேண்டும், ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றக்கொள்ளாமல் இன்னமும் இருப்பதுதான் வேதனைக்குரியது.. -
By விளங்க நினைப்பவன் · Posted
இவர் சிறையில் இருந்து தோட்ட வேலை செய்தாலும் நடைபயிற்சி செய்திருக்கிறார். அது போதாது என்று யோகாசனம், உடற்பயிற்சி, கடும் உணவு கட்டுப்பாடு என்று இருந்தவரையே கொரோனா விடவில்லை. வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை நடத்துவிட்டு நடைபயிற்ச்சி செய்கிறேன் என்கின்ற நம்மவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் 😟 -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
புலம்பெயர்தேசத்தவர்கள் பல உதவிகளை செய்து வருகிறார்கள்.. ஆனாலும் அவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டிய சிலவற்றை இந்த சொற்சமர் கூறுகிறது.. இதில் பங்குபற்றியவர்கள் சிறுவயதினர் என்றாலும் அவர்கள் கூறும் கருத்துக்களைப்பற்றி யோசிக்கவேண்டும்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. -
By goshan_che · Posted
மேலே ஜஸ்டின், கமலா யாருக்கு ஜனாதிபதி, அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக கூறி உள்ளார். அந்த தெளிவு தமக்கும் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவில் நாம் ஏமாந்த சோணகிரிகள், சோத்து பெயரை கண்டால் குதூகலிப்போம் என்றால்? ஜஸ்டீன் சொன்ன தெளிவு உங்களுக்கு அறவே இல்லை என்பதா? கமலா 1. முதல் பெண் துணை ஜனாதிபதி 2. ஒரு குடியேறியின் மகள் 3. நிறவெறிக்கு எதிராக போரடிய ஒரு தமிழ் தாயின் மகள் 4. அவர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள தன் தமிழ் உறவுகளோடு நெருங்கிய தொடர்பை வைதுள்ளார் 5. தன் தமிழ் மரபுரிமையை நினைவுகூறுகிறார். எனக்கு இவ்வளவும் போதும் அவரை கொண்டாட. தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆட அல்ல. அவர் எமது இனத்துக்கு எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லை. பிகு: கமலா யாழ் சைவ வேளாள மரபில் வராதபடியால் அவரை வாழ்த்த சிலருக்கு முடியாமல் இருக்க கூடும். -
By goshan_che · Posted
ஏற்கனவே DMK IT wing தாறகாசை எங்க வைக்கிறெண்டு தெரியாம நிக்கிறன், இதுக்க கமலா அக்காவோட grant வேறையா🤣. சாக்கிலதான் அள்ளோணும்🤣
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.