Jump to content

மிக்க நன்றி ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ...............

 

 

அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி .  நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து   எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து  எழுதும் ..நபர்களால் சிதைக்க  படுகிறது  பல  நல்ல உள்ளங்கள்.   பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய்  விட ...தீ நாக்குகளால்  தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி  அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ...............

 

 

அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி .  நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து   எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து  எழுதும் ..நபர்களால் சிதைக்க  படுகிறது  பல  நல்ல உள்ளங்கள்.   பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய்  விட ...தீ நாக்குகளால்  தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி  அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)

 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர். 417

 

நுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையபவர்கள் , ஒரு

பொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள் .

எனது கருத்தும் அதுவே . நிர்வாகத்திற்கு எனது தலை சாய்கின்றது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ...............

 

 

அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி .  நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து   எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து  எழுதும் ..நபர்களால் சிதைக்க  படுகிறது  பல  நல்ல உள்ளங்கள்.   பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய்  விட ...தீ நாக்குகளால்  தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி  அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)

 

வணக்கம் பாட்டி

ஒருவர் பிழைவிடுவதும் அதை உணர்வதும் மனித இயல்பு.

அதை உணர்ந்து

அவர்கள் மன்னிப்பும் கேட்டபின் (அவர்கள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் அல்ல)

அத்திரி பூட்டப்பட்டபின்

நாம் பெரியவர்

வயதில் மூத்தவர்

இன்னொரு திரியைத்திறந்து களத்தை மாற்றி அது தொடர வழி செய்யலாமா?

 

Link to comment
Share on other sites

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை (Transparency) என்பனவற்றின் மீது நம்பிக்கையும், தளராத பற்றும் உள்ளவர்களுக்கு  தணிக்கையும், மட்டுறுத்தல்களும், தடைகளும் என்றுமே விருப்புக்குரியவைகளாக இருப்பதில்லை. இவை மூன்றும் இருக்கும் வரைக்கும் எவராலும் முற்றிலும் சுதந்திரமாக கருத்துகளை வைப்பது இயலாத காரியமாகவே இருக்கும். எனவே இவற்றில் தளர்ச்சி போக்கை கடைப்பிடிக்க பரீட்சார்த்தமாக ஒரு திரியை அமைக்க எண்ணி உருவானதுதான் அரட்டைக் களம். அத்துடன் மட்டுறுத்தல் இல்லாத (அதாவது வெட்டிக் கொத்தாத) ஒரு பகுதி வேண்டும் என்ற கோரிக்கையும் காலத்துக்கு காலம் யாழில் எழுப்பப்படுவதையும் கவனத்தில் எடுத்து ஆரம்பிக்கப்பட்ட திரிதான் அது.

 

ஆனால், எம் தமிழ் சூழலில் மட்டுறுத்தல் இல்லாத, தணிக்கை இல்லாத ஒரு ஊடகத்தினை நடத்த முடியாது என்பதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தினை எமக்கு மிகவும் கசப்பாக உணர்த்திய திரிதான் அரட்டைக்களமும் அதில் இடம்பெற்ற அநாகரீக உரையாடல்களும். 100 பேர் ஆரோக்கியமாக உரையாடும் போது ஒரு சிலரே போதும் அந்த ஆரோக்கியத்தினைக் குழப்பவும், நன்கு உரையாடுபவர்களையும் சகதிக்குள் இழுத்து விடவும் என எமக்கு உணர்த்தி விட்டுள்ளது இந்த திரி.

 

ஆரோக்கியமாக எழுதுகின்ற உறுப்பினர்களும், நிர்வகிக்கின்ற உறுப்பினர்களும் செல்வழிக்கின்ற நேரத்தினை பெறுமதி இல்லாமல் செய்யும் எந்த செயல்களும் இனி அனுமதிக்கபடப் போவதுமில்லை, பொறுத்துக் கொள்ள போவதுமில்லை. இதே போன்று நிர்வாகத்தினரின் செயல்களில் மூக்கை நுளைக்கும், தலையிடும் செயல்களை தொடரவும் அனுமதிக்க போவது இல்லை. இப்படியான கடுமையான நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்களுக்கு விலகிப் போகும் தெரிவு இருக்கு என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

 

இன்னுமொரு விடயம்: உலகில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் இருப்பது போன்று யாழுக்கும் என்று ஒரு அரசியல் இருக்கு. இலக்கு இருக்கு. இதன் போக்கில் நடுநிலை என்பது எல்லாப் சந்தர்ப்பங்களிலும் சாத்தியாமாகக் கூடிய ஏது நிலை இல்லை என்ற யதார்த்தமும் இருக்கு.

 

 

நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விசுகு அண்ணாவின் கருத்தையே வழிமொழிகிறேன்.

 

நிர்வாகத்திற்கு நன்றி சொல்வதற்கு மேலால்..... மறக்க மன்னிக்கப்பட வேண்டியதை நீ அதைச் செய்யாதே என்ற வகையில்.. தூண்டிவிடத்தக்க ஒரு தலைப்பு.

 

எம்மவர்களுக்கு sorry.. apologise  க்கு அர்த்தம் புரிவதில்லைப் போலும். இதுதான் வெள்ளைக்கும் நம்மவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

 

பந்தி எழுத்துக்கள் என்பது கூடிய விளக்கங்களுக்காக எழுதப்படுவது. அதையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறவர்களால் எப்படி வரிக் கருத்துக்களில் உள்ளவற்றை விளங்கிக் கொள்ள முடியும்..??! யாழில் ஒரு வரி எழுத்தாளர்களால் எழுந்த பிரச்சனைகளும் உண்டு..!

 

மேலும் ஆங்கில போறங்களிலும்.. தவறுகள் செய்கிறார்கள். ஆனால் அங்கு தீ அணையும் போதும்... இப்படியான எண்ணொய் ஊற்று விட்டு கூத்துப் பார்க்கும் ஆக்கள் குறைவு.

 

தயவுசெய்து.. உங்கள் சொந்த விடயங்களை நல்லது என்று கருதி..  மேற்கோள் காட்டும் வகைக்கு இங்கு பதிவிட்டு விட்டு.. அப்புறம் அதனை மற்றவர்கள் மேற்கோள் காட்டும் போது அதன் விளைவாக கருத்தாடல்கள் நீளும் போது.. சச்சரவை உண்டு பண்ணாதீர்கள். அதிலும் அதனை பகிர்ந்து கொள்ள முன்.. நல்லதா கெட்டதா என்று ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தியுங்கள். :):icon_idea:

 

இந்த நன்றி நவிலலைப் பார்த்ததும் எண்ணத்தில் உதித்தைப் பதிந்துள்ளேன். கருத்தாடலுக்காக அல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா, பச்சை முடிந்து விட்டது. 

 

ஆனால் உங்கள் கருத்தும், நிழலியின் கருத்தும் மிகவும் முக்கியமானவை! 

 

வார்த்தைகளைத் துப்பிவிட்ட பின்பு, அவற்றை அள்ளி எடுப்பதை விட, வார்த்தைகளைச் சிந்தாமல் விட நாம் எம்மைப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்!

 

'தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே,

நாவினால் சுட்ட வடு'                                          -வள்ளுவன் 

Link to comment
Share on other sites

Don't worry புங்க்ஸ் அண்ணா Australia சார்பா நிலா அக்காக்கு ஒரு பச்சை குத்திட்டன் :D

சபாஷ் நிலா அக்கா

சரியான நேரத்தில் சரியான சாட்டை அடி

Link to comment
Share on other sites

நன்றி நிலா அக்கா. நீங்கள் இப்பிடி கோவப்பட்டு கருத்தெழுதி முன்பொரு முறையும் கண்டதில்லை, ஆனால் உங்களின் நெத்தியடி சூப்பரோ சூப்பர்.

 

கடுமையான நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்களுக்கு விலகிப் போகும்
தெரிவு இருக்கு என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் - நிழலி


நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

இதில் விசுகு அண்ணாவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 

மிக்க நன்றி ...............

 

 

அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி .  நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து   எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து  எழுதும் ..நபர்களால் சிதைக்க  படுகிறது  பல  நல்ல உள்ளங்கள்.   பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய்  விட ...தீ நாக்குகளால்  தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி  அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)

 

நான் யாழில் மதிக்கும் உறவுகளில் நீங்களும் ஒருவர். ஆனால் இதில் எழுதியுள்ள பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை.

 

நியானி: பிற திரியில் இருந்து காவப்பட்ட விடயங்கள் தணிக்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.