Jump to content

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!


Recommended Posts

தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்

 

 

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!


ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், நினைவுக்கல் நடுகையும் நடைபெறவுள்ளது.

 

தமிழர்களின் உரிமைக்காய் தன் உடலில் தீயிட்டு 1995 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த 'அப்துல் ரவூப்" தொடக்கம் 2012 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்மை தியிற்கு இரையாக்கி வீரச்சாவைத் தழுவிய 21 ஈகியர்கள் நினைவாகவும் 'நினைவுக்கல் நடுகை" இடம்பெறவுள்ளது.


இவர்களில் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாலும், அரச படைகளாலும் தமிழினம் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுக்கக் கோரி தமிழகத்திலும், மலேசியாவிலும், ஜெனீவாவிலும் தம் உடலில் தீயிட்டு உயிர்த்தியாகம் செய்து தம் உறவைக்காக்கக் கோரிய வீர மறவர்கள்.

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

 

அப்துல் ரவூம், முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உட்பட்ட 21 ஈகியர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டும், தேசிய அடையாளங்களை மிகவும் தற்றூபமாக உட்புகுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'நினைவுக்கல்" பிரித்தானிய மண்ணில் நிறுவப்படுவதானது தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவாகவும் அமையவுள்ளது.

 

539754_477946535618565_442847370_n.jpg

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை 'ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

 

இந் நிகழ்விற்கு அனைத்து மக்களையும் வந்து கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு சர்வதேசங்களையும், உறங்கிக் கொண்டிருந்த தமிழர்களையும் விழிப்படையச் செய்த 21 ஈகியர்களுக்கும் மலர்தூவி மனம் நெகிழ்ந்து வீர வணக்கம் செலுத்த அனைவரையும் உரிமையுடம் அழைக்கிறோம்



http://www.vmurugathas.org/



Link to comment
Share on other sites

அகிம்சை போராளிகளுக்கு வீர வணக்கம் !

 

Link to comment
Share on other sites

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அவங்க தான் குழம்பிப்போய் இருக்காங்கன்னா.. நீங்க அதை எல்லா இடமும் காவிக்கிட்டு.. திரியுறதின்ர நோக்கம் என்னவோ..???! :(:unsure::rolleyes:

 

மக்களுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்களை அவர்களின் நினைவு நாட்களிலாவது மக்கள் சற்று நேரம்.. நிம்மதியா நினைக்க.. பிரார்த்திக்க விடுங்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

யார் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்? மிகத் திட்டமிட்டு முருகதாசன் குடும்பத்தினரையும், நடுகல் நடுகைக்கு ஆதரவாக நின்றவர்களையும் இழிவுபடுத்தும் ஒரு செய்தியை ஒருங்கிணைப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளம் வெளியிடுகிறது. இந்தச் சதி செயலை "ஒரு குழப்பம்" என்று மென்மைப்படுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?

மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு செய்யப்படுகின்ற ஒரு நடுகல் நிகழ்வை இங்கே கொச்சைப்படுத்தியது யார்? மக்களை நிம்மதியாக இருக்க விடச் சொல்லி அவர்களை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

 

இதை மிக நீண்ட காலமாகச் செய்கிறீங்க. இப்படியான நாசகாரத்தில் எத்தனை சதவீதத்தை அம்பலப்படுத்தி அழிச்சீர்கள்..! நீங்களும் இப்படிச் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அவங்களும் செய்துகிட்டே இருக்காங்க. இது என்னவோ இரண்டு பேரும் பேசிப் பறைச்சு மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறதாத் தான் தெரியுது. கற்பனை பண்ணிக்கலாம். சும்மா சும்மா நீங்களே.. பெரிய அளவில அதைச் செய்யக் கூடாது.. அதையே பெரிசாக் காட்டிட்டு இருக்கக் கூடாது. அதுதான் நாசகாரிகளை ஊக்குவிக்கும் செயல்..!

 

இதன் மூலம் தற்கொடையாளர்கள் தான் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றனர். எவனோ நாலு பேரை சண்டை போட வைச்சு.. நாற்பது பேர் போடுறதாக் காட்டி பிரச்சனைகளில் சிக்க வைத்து மக்களை திசை திருப்பும் எதிரிகளின் வேலைக்கு இலவசமாக பரப்புரை செய்வது போல இருக்குது இது. :icon_idea:

Link to comment
Share on other sites

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இந்த செய்திதான் உண்மை இல்லை மற்றையது தான் உண்மையானது என அறுதியான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை.

 

அத்துடன் அந்த தியாகியின் குடும்பத்தை செய்திகளில் இணைப்பதும் நாகரீகமாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

murugathasan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் இந்த காவித்திரியும் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

 

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்

உங்களுக்குள் நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை (வியாபார ஊடக) தீர்க்க

மக்களுக்காக மரணித்தவர்களுக்கான அஞ்சலி  நிகழ்வுகளை பயன்படுத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

வீர வணக்கம் !

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் சென்றவருடம் கல்லறை திறந்தபோது   நீங்கள் இணைத்த இணைப்பு கீழ் உள்ளது,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111904

 

அதை மீண்டும் உடைத்து இப்போ  திரும்ப கட்டுகிறார்களா? அப்படியாயின்  இது ஒவ்வொரு வருடமும் நடைபெறபோகிறதா?  தயவு செய்து மாவீரர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் சென்றவருடம் கல்லறை திறந்தபோது   நீங்கள் இணைத்த இணைப்பு கீழ் உள்ளது,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111904

 

அதை மீண்டும் உடைத்து இப்போ  திரும்ப கட்டுகிறார்களா? அப்படியாயின்  இது ஒவ்வொரு வருடமும் நடைபெறபோகிறதா?  தயவு செய்து மாவீரர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.

 

 

சுந்தரம்,

இந்த திரியின் மூல செய்தியில் இவ்வாறு உள்ளது ( குறிப்பு நான் இணைத்தவன் மட்டுமே, அதன் செய்கைகளுக்கு காரணம் ஆனவன் அல்ல), அதாவது 21 ஈகியர்கள் நினைவாக நினைவுகல் அமைக்கப்பட உள்ளது.

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

 

இது நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து

 

மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

விசுகு!

உங்களுக்கு ஏன் இத்தனை பதட்டம்? இங்கே இணைக்கப்ட்டு செய்தி சம்பந்தமாகவே என்னுடைய கருத்தும் அது பற்றிய இணைப்பும் அமைந்தது. இதிலே என்னை எதற்கு கண்டிக்கிறீர்கள்?

உங்களிடம் உண்மையில் "அறம்" என்கின்ற ஒன்று இருந்தால் முருகதாஸ் குடும்பத்தினரையும் மற்றும் நடுகல் நட்டவர்களையும் "தேசவிரோதிகள்" என்றும் "மிலேச்சவாதிகள்" என்றும் செய்தி வெளியிட்டவர்களை கண்டித்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்தால் இப்படியான செயல்களை நிறுத்தும்படி அவர்களை கோருங்கள். நீங்கள் பேசுங்கள். நான் என்பாட்டில் போகிறேன்.

Link to comment
Share on other sites

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில் இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர் பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள் இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம் முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

Link to comment
Share on other sites

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில் இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர் பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள் இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம் முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

 

நன்றி தகவல்களுக்கு சாத்திரி,

 

இந்தியாவில் இருந்து புலிகளின் இலச்சினைகளுடன் ஒருகல்லறை தருவிக்கப்பட்டுள்ளது,  அதாவது தாயகமக்களுக்காக புலம்பெயர் தேசத்தில் தன்னையே ஆகுதியாக்கிய அந்த அகிம்சை போராளிக்கு  புலிச்சாயம் பூசப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

 

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
 

அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

 

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
 

முருகதாசன்

 

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் புலிக்கொடியை எறிந்து விட்டார்களாம். இன்னொரு பக்கம் புலிச்சாயம் பூசி விட்டார்களாம். ஏதாவது புரிகிறதா??!!

Link to comment
Share on other sites

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

 

இது நடந்தது பிரித்தானியாவில். எனவே இது ஒரு காவல்துறை விசராணை நடக்கும் நிலையில் இருக்கும் என எண்ணுகின்றேன். அது பற்றிய முடிவுகள் தெரிந்தபின்னர் உண்மைகள் முழுமையாக வெளியே வரலாம்.

Link to comment
Share on other sites

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

 

 

நன்றி அகூதா உங்கள் தகவல்களுக்கு.

Link to comment
Share on other sites

 

 

murugathaasan11.jpg?resize=310%2C266தொடர்ந்தும் புலம்பெயர் மக்களை குழப்பத்திலும் இடைவிடாத பிரச்சனைகளுக்கு மத்தியில் வைத்திருந்தால் இன அழிப்பு போர்க்குற்றம் போன்றவற்றில் இருந்து தப்பிக்க அவகாசமும்,

சிங்கள பயங்கரவாதி மகிந்த உலக நாடுகளுக்கு வலம் வரும்போது எதிர்ப்புகளும் இல்லாமல் செய்வதற்கு சிங்கள பயங்கரவாத அரசும் அதன் அடியாட்களும் தினந்தோரும் புதிய திட்டங்களுடன் வலம் வருகின்றார்கள்.

அதன் ஒரு பகுதிதான் ஈகப்பேரொளி முருகதாசனுக்கு இட்டிருக்கும் பெயர் சிறிலங்கன் தமிழ்!!

சில நாட்கள் முன்னர் ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை தகர்க்கப்பட்டு புதிதாக ஒரு கல்லரையை கட்டியிருக்கின்றார்கள். விதைக்கப்பட்ட இடத்தில் கல்லரை கட்டப்பட்டு மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் அதை இடித்து புதிதாக கல்லரை ஒன்றை கட்டியிருக்கின்றார்கள்.

இக்கல்லரை ஈகப்பேரொளி முருகதாசனுடைய பெற்றோர்கள் எழுப்பியதாக அறிவித்துள்ளார்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தையின் காணொளியும், தாயின் தொலைக்காட்சி பேட்டியும் இருக்கின்றது.

ஆனால் இச்செயல் பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டிருக்கின்றது.

நண்பர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் கல்லரையை கட்டுவதாக ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தை கூறும் காணொளி

முதலாவது ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை இக்கல்லரையை தான் சிலருடைய உதவியுடன் உருவாக்கியதாக தனது கடிதத்தில் கூறுகின்றார்.

ஆனால் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் அவர்களுடன் தொலைக்காட்சியில் தோன்றிய ஒருவர் தாமே இதை இந்தியாவில் இருந்து தருவித்ததாகவும் அதற்கு பெருந்தொகை பலரிடம் கடனாக பெற்று இக்கல்லரையை உருவாக்கியதாகவும் அக்கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்றும் கோருகின்றார் இதை அருகில் அமர்ந்திருந்த ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் மறுக்கவில்லை.

12 ஆயிரம் பவுஸ்களுக்கு மேல் கடன் வாங்கி கல்லரையை தாம் கட்டியதாக இவர் கூறுவது உண்மையா? அல்லது ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை கல்லரையை தாம் கட்டியதாக கூறுவது உண்மையா?

ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை தனது கடிதத்தில் முதலில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கட்டிய கல்லரைக்கு முன்பே தாம் புதிய கல்லரைக்கு கட்ட பணம் கொடுத்ததாக எழுதியிருக்கின்றார்.

ஆனால் ஈகப்பேரோளி முருகதாசனின் தாயாருடன் தேன்றுபவர் குறுகிய காலத்தில் கல்லரை கட்டப்பட்டதால் பணம் முளுவதும் செலுத்த முடியில்லை என்றும் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றார் அதை காணொளியில் பாருங்கள், ஈகப்பேரோளி தந்தையின் கடிதத்தை செய்திக்கு கீழே பார்க்கலாம் ஆக பெரும் பித்தலாட்டம் ஒன்று நடைபெற்று உள்ளதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

தொலைக்காட்சியில் தோன்றும் இவர் போலியான தலைமைச் செயலகத்துடன் இயங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல சங்கதி இணையத்தில் இவர் முதலில் தமிழ் இளையோர் அமைப்பில் இருக்கும் பொழுது பெரும் தொகை பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக இதில் யார் கூறுவது உண்மை ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை தாமே உருவாக்கியதாக கூறுவது உண்மையா? அல்லது தொலைக்காட்சியில் தேன்றியவர் கூறியது உண்மையா? தந்தையின் கூற்றுப் படி  உதவி பெற்றுக் கட்டப்பட்டதா அல்லது கடன் பெற்று கட்டப்பட்டதா?

ஏற்கனவே கட்டப்பட்ட கல்லரையை கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஏதாவது குறை உள்ளதா? இக்கல்லரை பல ஆயிரம் பவுண்ஸ் செலவழித்து மக்களுடைய பணத்தில் கட்டிய கல்லரை இதை இடிக்க வேண்டிய தேவை என்ன? இதை இடித்து கடனுக்கு பணம் வாங்கி புதிதாக கல்லரை கட்ட வேண்டிய தேவை என்ன?

murugathaasan2.jpg?resize=261%2C350

முதலாவதாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கல்லரையும், பின்புறம் பறக்கும் தேசியக் கொடியும்

அத்தோடு முடியவில்லை பிரச்சனை கல்லரை இடிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த கல்லரை மீது பறந்த தேசியக் கொடியும் பூக்களும் புதிதாக கட்டப்பட்ட கல்லரைக்கு பின்பாக வீசி எறியப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ஈகப்பேரொளி முருகதாசன் ஏன் எதற்காக தன்னுயிரை தீக்கு இரையாக்கி தமிழீழ மக்களுக்காக கொடுத்தானோ அதை மறந்து ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை மீதே  சிறிலங்கன் தமிழர்களுக்காக  என எழுதியிருக்கின்றார்கள் இந்த பாவிகள்.

ஈகப்பேரொளி முருகதாசன் எந்த கொள்கையில் வீரமணத்தை அனைத்துக்கொண்டாரோ அது இப்போது பலனற்று அவரது கல்லரையிலேயே அவரது குடும்பத்தினரை சாட்சியாக்கி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.

murugathasan-kallarai-and-Disregard-flag

புதிதாக கட்டப்பட்ட கல்லரையும் அவமதித்து தூக்கி எறியப்பட்ட தேசியக் கொடியும்

முன்னால் முதல்வர் கருணாநிதியும், இன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர் என முழங்கியபோது தேர்தலின் போது ஈழத்தமிழர் இப்போது மட்டும் இலங்கைத் தமிழரா என உலகெங்கும் இருந்து கண்டனங்கள் பாய்ந்தன ஆனால் இன்று தமிழீழத்திற்காக உயிர் விட்டவன் கல்லரை மீதே அச்சொல்லை அழுத்தமாக பதிந்திருக்கின்றார்கள் இந்த மூடர்கள்.

இதில் முட்டாள்கள் செய்த மற்றுமொரு வேடிக்கை, சிறிலங்கன் தமிழ் என எழுதிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்தை அக்கல்லரையில் பதித்திருக்கின்றார்கள்!. சிறிலங்கன் தமிழருக்கு ஏதடா சின்னம்????????????

ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை அவர்கள் இக்கல்லரையை தாமே உருவாக்கியதாக கூறியிருக்கின்றார். ஆனால் அவர் எப்படி தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் மாபெரும் இயக்கத்தின் சின்னத்தை அக்கல்லரையில் பதிக்க முடியும்?

அதற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் என எழுத்துக்கள் அற்ற தமிழீழத் தேசியக் கொடி அல்லவா அங்கே பதிந்திருக்க வேண்டும். தந்தையே உங்கள் மகனின் விதைகுழியில் ஏன் இப்படி ஓர் கீழ்த்தரமான சிந்தனைகொண்ட செயலும் எழுத்தும் இடம்பெற வைத்துள்ளீர்கள்?

உங்கள் மகன் தமிழீழ தமிழர்களுக்காக அல்லவா உயிர் நீத்தார் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் இறுதி சாசனத்தின் வரிகளை படியுங்கள்

நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்தச் முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் கோபம்கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும்

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
முருகதாசன்

murugathasan-as-srilankan2.jpg?resize=30இப்படி தன்னுயிரால் சிங்கள பயங்கரவாத அரசின் முகமூடியை கிழித்து எறிந்தவன் உடல் மீதா பதித்திருக்கின்றீர்கள் சிறிலங்கன் தமிழ், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழங்கியவன் மீதா பதித்திருக்கின்றார்கள் சிறிலங்கன் தமிழ் என்று என்று இதை விட ஈகப்பேரொளி எப்படி அவமதிக்க முடியும்?

இச்செயலுக்கு பின்னால் மாவீரர் தினம் என்றவுடன் மட்டும் திடீர் என குதித்து நாம் மட்டுமே மாவீரர் தினம் நடத்த உரிமை உள்ளவர்கள் என கூச்சல் போடும் போலியான தலைமைச் செயலகம் எனும் பெயரில் உள்ள சதிகாரர்கள் இருப்பதையும் மறந்துவிட வேண்டாம். 2009க்கு பிறகு இதுநாள்வரை சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக ஒரு சிறு துரும்பை கூட அசைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தவறாமல் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் கொச்சைப்படுத்தாமல் விட்டதில்லை இது இதுதான் போலியான தலைமைச் செயலகம்.

உலகத் தமிழ் உறவுகளே தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் தலைமைச் செயலகம் என்பது. இன்று இந்த பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் ஊடறுத்துள்ளார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

பொருத்தமானவர்கள் தோன்றி தலைமைச் செயலகத்தை உரிமை கோரும் வரை அப்படிப்பட்ட பெயரில் வரும் செய்திகள் அறிக்கைகள் எவற்றையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
www.rste.org
info@rste.org

ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையின் கடிதம்murugathaasan-father-letter.jpg?resize=8

Link to comment
Share on other sites

இதுக்கு மேலும்  ஒருவனின் தியாகத்தை சொச்சைப் படுத்த முனைபவர்கள்   அறிக்கைகளையும்  ஆராச்சிகளையும் தொடரட்டும். தங்கள்  பிள்ளையை  பறி கொடுத்தவர்களிற்குத்தான் அதன் வலி தெரியும்.  அவர்கள்  எதை யும் செய்யலாம் அதற்கான உரிமை அவர்களிற்கே உள்ளது   மகனின் தியாகம்  எமக்கானது  ஆனால் தாய் தந்தை  துரோகி  என்று  எழுத எவரிற்கும் உரிமை கிடையாது  ஆனால் முருகதாசன் நினைவுக் கல் அமைப்பதற்கு பின்னால் நடந்த  விடயங்களை மட்டும்  ஒரு கட்டுரையாக எழுதி போட்டு விடுகிறேன்.  அதே நேரம் முருக தாசனின்  மரணத்திற்கு  பின்னாலான பிரச்சனைகளும்  பிரித்தானிய காவல்த்துறையினரின்  விசாரணைகள் பற்றிய விபரங்களும் அடங்கும்.  ஆனாலும் இப்போதைக்கு வராது நிம்மதியாய்  பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

இதுக்கு மேலும்  ஒருவனின் தியாகத்தை சொச்சைப் படுத்த முனைபவர்கள்   அறிக்கைகளையும்  ஆராச்சிகளையும் தொடரட்டும். தங்கள்  பிள்ளையை  பறி கொடுத்தவர்களிற்குத்தான் அதன் வலி தெரியும்.  அவர்கள்  எதை யும் செய்யலாம் அதற்கான உரிமை அவர்களிற்கே உள்ளது   மகனின் தியாகம்  எமக்கானது  ஆனால் தாய் தந்தை  துரோகி  என்று  எழுத எவரிற்கும் உரிமை கிடையாது  ஆனால் முருகதாசன் நினைவுக் கல் அமைப்பதற்கு பின்னால் நடந்த  விடயங்களை மட்டும்  ஒரு கட்டுரையாக எழுதி போட்டு விடுகிறேன்.  அதே நேரம் முருக தாசனின்  மரணத்திற்கு  பின்னாலான பிரச்சனைகளும்  பிரித்தானிய காவல்த்துறையினரின்  விசாரணைகள் பற்றிய விபரங்களும் அடங்கும்.  ஆனாலும் இப்போதைக்கு வராது நிம்மதியாய்  பொறுத்திருங்கள்.

நீங்கள் எழுதுவது என்றால் சில தகவல்களை நேரடியாக அறிந்து எழுதினால் மட்டுமே அவை உண்மையாக அமையலாம். உண்மை இருந்தாலே எழுதுவதில் ஒரு சமூக நோக்கம் இருக்கும்.

 

 இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு பிற நாட்டில் நடப்பவற்றை எழுதுவது என்றால் மூன்றாம் தரப்பு ஊடான தகவல்களை வைத்தே எழுத முடியும். எனவே அவ்வாறு எழுதுவதால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

Link to comment
Share on other sites

ஆமாம்! யாரும் இனி வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் நடப்பது பற்றியும் எழுதாதீர்கள்! இனிமேல் அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள்தான் அந்த அந்த நாட்டைப் பற்றி எழுத வேண்டும். மீறினால் எச்சரிக்கைப் புள்ளி வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.