Jump to content

பிசிக்கோலொஜி


Recommended Posts

என்ன நடந்ததென்றால்..

நான் சங்கக்கடைக்கு போனேனா ..

ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்..

ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்..

சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ...

வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ...

இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய்  ...

தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்..

காணவில்லை..

 

"நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா.

 

சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது.

 

பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி கட்டடம் ( பின்னாளில் சர்வதேச மாணவர் பேரவை இயங்கிய இடம்) இந்திய இராணுவத்தின் சித்திரவதை கூடமாகவும், பல்கலைகழக மாணவர்களை கட்டுபட்டுத்தும் இடமாகவும் விளங்கியது.

 

அந்த கட்டடத்தில் பின்னுக்கு இருந்த ஒரு அறையில், எனக்கு ஒரு சோலாபூரி செருப்பை அளவு பார்த்துவிட்டு, அது அளவில்லாமல் போக, செவிட்டை பொத்தி ஒரு அறைவிட்டான், இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஒரு ஈழ தமிழன்.

( வாசகர்களே செருப்பு கடை என்று நினைத்து விடாதீர்கள் ..தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும்)

 

யாரடா அவன் பிசிக்கோலொஜி.?

 

இந்த கேள்வியை என்னிடம் அவன் ஒன்பதாவது தடவையாக கேட்கிறான்.

எனக்கோ அந்த வயதில் அந்த பெயரை அப்போது அவன் வாயில் இருந்து தான் கேள்விபடுகிறேன்.

 

மறுபக்கத்தில் பொறுமையை இழந்த இராணுவ அதிகாரி சர்மா,தான இருந்த கதிரையை பின்னுக்கு நகர்த்திவிட்டு எழும்பி நின்று, உண்மையை சொல்லு என்ன நடந்தது என்று அம்மாவிடம் அதட்டும் தொனியில் கேட்க.

 

அம்மாவோ ..

 

என்ன நடந்ததென்றால்..

நான் சங்கக்கடைக்கு போனேனா ..

ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்..

ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்..

.......

........

 

Stop It .

 

அந்த கட்டடமே அதிரும்படி கத்தினான் அந்த அதிகாரி.

 

இத்தனைக்கும் காரணமான அம்மாவின் ஏசியா சைக்கிள், அந்த இராணுவ முகாமின் சுவரில் சாத்தியபடி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி சிவனே என்று நின்றுகொண்டு இருந்தது.

 

அப்படி என்னதான் நடந்தது ..

 

எங்கட அம்மா ஒரு விஞ்ஞான ஆசிரியை.

அப்பாவிடம் அடம்பிடித்து பள்ளிக்கூடம் போவதற்காக ஏசியா லேடிஸ் சைக்கிள் தான் வேணும் எண்டு ஒரு மாதத்துக்கு முதல் தான் ஒரு சைக்கிளை வாங்கி இருந்தா. ரிம்முக்குள்ளே போடுற பூ இல் இருந்து எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினா.

 

எங்கட வீட்ல தங்கி, மருத்துவபீடத்தில் படித்து கொண்டிருந்த சத்தியேந்திரா அண்ணா எப்பவுமே எங்களுக்கு ஒரு முன் உதாரணம்.

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும் அர்ச்சனையில் ஒரு பகுதி.

 

சத்தியேந்திரா அண்ணா எப்பவுமே ஒரு பெரிய இங்கிலிசில் எழுதின புத்தகமும் கையுமாக தான் திரிவார்.

 

ஒரு நாள் அம்மாவிடம், கம்பசுக்கு போறதுக்கு எண்டு சைக்கிளை கேட்டார், அம்மாவும் படிக்கிற பிள்ளை என்று கேட்டு கேள்வி இல்லாமலே சைக்கிளை கொடுத்துவிட்டா.

 

எங்கட ஒழுங்கையாலே போய் மெயின் ரோட்டிலே ஏறும் இடத்தில் இந்திய இராணுவம்.

எதிர்பாராத சந்திப்பு. எல்லாரையும் check பண்ணி கொண்டு நிண்டான்.

 

தான் எப்படியும் பிடிபட போகிறேன் என்று எண்ணிய சந்தியேந்திரா அண்ணா, இடுப்பிலே இருந்த ஒரே கிரினைடையும் கிளிப்பை கழட்டி எறிஞ்சுபோட்டு, செருப்பையும் கழட்டிப்போட்டு ஒரே ஓட்டம். பனை வளவுகளுக்காலே விழுந்து, வேலிகள் பாய்ந்து கண்காணாமல் ஓடி போயிட்டார்.

 

இந்திய இராணுவத்துக்கு கிடைத்தது.

 

ஒரு ஏசியா லேடீஸ் சையிக்கிள்.

ஒரு சோடி சோழபூரி செருப்பு.

பெயர் என்ற இடத்தில் psychology என்று எழுதியபடி ஒரு அப்பியாச கோப்பி..

 

அன்று தொடக்கம் இன்று வரை அவங்கள் கைது செய்யும் எல்லாரிடமும் இரண்டே இரண்டு நடைமுறை தான்.

 

சோழபூரி செருப்பை போட்டு பார்ப்பான்கள் அளவு என்றால் அவன் புலி.

அடுத்த கேள்வி உனக்கு பிசிக்கோலொஜியை தெரியுமா .??

 

மூன்று நாள் கழித்து வீட்டுக்கு வந்த சத்தியேந்திரா அண்ணா தான் அம்மாவிடம் சொன்னார். சையிக்கில் பரமேஸ்வரா சந்தியிலே இருக்கிற இந்திய இராணுவ முகாமில் நிக்குது எண்டு.

 

அம்மாவுக்கு அவர் மேல கோபம் இருந்தாலும் படிக்கிற பெடியன் என்று பாசமும் இருந்தது. ஆனாலும் அவர் ஒரு புலி போராளி என்று தெரிஞ்ச போது பெருமையும் இருந்தது. (அது அந்த காலம்)

 

 

 

அம்மா என்னையும் கூடி கொண்டு, மாற்று திறப்பையும் கொண்டு காலமையிலே இருந்து இந்த காம்பில தான் நிக்கிறம்.

 

டேய் உண்மையை சொல்லுடா ..யாரடா அவன் பிசிக்கோலொஜி.?
உங்கட அம்மா தானே புலிக்கு சைக்கிள் கொடுத்து...

 

இல்லை அண்ணே , அம்மா எண்ணெய் எடுக்க ... சொல்லி முடிக்க கூட இல்லை வாயை பொத்தி ஒன்று விட்டான்.

இவ்வளவு  நேரமா பொத்தி வைச்ச அழுகை பீறிட்டு கொண்டு வந்தது.

 

ஓ.... அம்மா ...என்று கத்தி அழுதேன்.

 

சர்மா ஓடிவந்து எட்டி பார்த்திட்டு , அவன் சின்ன பொடியன் அவனை விடுங்கள் என்று சொல்லிட்டு கூட்டி கொண்டு போனான்.

 

ஒரு சொக்கிலேட் தந்தான்.

தம்பி ..உங்கட அம்மா LTTE இற்கு சைக்கிள் கொடுத்தவ தானே ..

 

இல்லை சேர். அம்மா எண்ணெய் போத்தில் எடுக்க வீட்டுக்குள்ளே வரேக்க...

 

ஐயோ...

 

 

டீச்சர்.. நீங்கள் சைக்கிளை கொண்டு போகலாம்.

 

 

 

 

 

 

அம்மா ஏசியா சைக்கிளை ஓடும்போது, நான் பின் கரியரில் இருந்து ரோட்டை பார்த்து கொண்டு வரும்போதும் அதே யோசனை.

 

அவருக்கு பெயர் சத்தியேந்திரா தானே ..

 

யாராக இருக்கும் இந்த பிசிக்கோலொஜி...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நல்ல ஐடியா

நேரத்திற்கு ஏற்ற கதை

ஆனாலும் அதற்குள்ளும் எம்மவர்.......

தொடர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கால  ஞாபகங்கள்....இன்னும் உங்கள் நினைவில் ... ரசித்தேன்.

Link to comment
Share on other sites

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை
பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும்
அர்ச்சனையில் ஒரு பகுதி.

 

எப்பவுமே மற்றவையோடை ஒப்பிட்டு பாத்து எங்களை வளர்த்த அம்மாக்களை என்னவெண்டு சொல்ல ??? அதாலைதான் இண்டைக்கும் நாங்கள் புலத்திலை எங்களை மத்தவையோடை ஒப்பிட்டு பாத்தே எங்கடை சீவியத்தை துலைக்கிறமோ ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், நல்ல ஒரு நினைவு மீட்டல்! வழக்கம் போல நகைச்சுவையின் ததும்பல்!

 

என்ன தான் இருந்தாலும், வாழ்க்கையை வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், இன்னும் எனது நினைவில் நிழலாடுகின்றது,

முதல் சம்பளத்தில் நான் வாங்கி அப்பாவுக்குப் பெருமையுடன் கொடுத்த அந்த 'அப்போலோ' சைக்கிள்! :D

 

யாழ் களம், சில வேளைகளில் சீரியசாகப் போற நேரத்தில், உங்கட பதிவு, அல்லது ஜீவாவின் பதிவு போன்றவை, இடைக்கிடை வந்து,

தமிழ்ப்படங்களிலை இடையில வாற நகைச்சுவை மாதிரிக் களத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடும்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையுடன் நல்ல பதிவு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்  ,  வாழ்த்துக்கள் பகலவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் கலக்கீட்டிங்கள் நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

ம்ம்ம்

நல்ல ஐடியா

நேரத்திற்கு ஏற்ற கதை

ஆனாலும் அதற்குள்ளும் எம்மவர்.......

தொடர்க

 

நன்றி விசுகு அண்ணா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

 

அந்தக் கால  ஞாபகங்கள்....இன்னும் உங்கள் நினைவில் ... ரசித்தேன்.

 

ஒரு நினைவு  இன்னொரு ஞாபகத்தை கிளறிவிடும் அக்கா. அந்த வகையில் வந்தது தான் இந்த ஞாபகம்.

நன்றி நிலா அக்கா உங்கள் பதிவிற்கு.

 

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை

பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும்

அர்ச்சனையில் ஒரு பகுதி.

 

எப்பவுமே மற்றவையோடை ஒப்பிட்டு பாத்து எங்களை வளர்த்த அம்மாக்களை என்னவெண்டு சொல்ல ??? அதாலைதான் இண்டைக்கும் நாங்கள் புலத்திலை எங்களை மத்தவையோடை ஒப்பிட்டு பாத்தே எங்கடை சீவியத்தை துலைக்கிறமோ ????

 

கோமகன், இண்டைக்கு மட்டும் அம்மாமார் அந்த கொள்கையை மட்டும் கைவிடவில்லை. நன்றி கோமகன் உங்கள் பகிர்வுக்கு.

 

பகலவன், நல்ல ஒரு நினைவு மீட்டல்! வழக்கம் போல நகைச்சுவையின் ததும்பல்!

 

என்ன தான் இருந்தாலும், வாழ்க்கையை வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், இன்னும் எனது நினைவில் நிழலாடுகின்றது,

முதல் சம்பளத்தில் நான் வாங்கி அப்பாவுக்குப் பெருமையுடன் கொடுத்த அந்த 'அப்போலோ' சைக்கிள்! :D

 

யாழ் களம், சில வேளைகளில் சீரியசாகப் போற நேரத்தில், உங்கட பதிவு, அல்லது ஜீவாவின் பதிவு போன்றவை, இடைக்கிடை வந்து,

தமிழ்ப்படங்களிலை இடையில வாற நகைச்சுவை மாதிரிக் களத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடும்! :icon_idea:

 

நாங்கள் வாழுவது சந்தோசமாக சிரித்து மகிழ தான். சண்டைபிடிக்க நிறையபேர் இருந்தாலும் சிரிக்க வைக்க கொஞ்ச பேராவாது இருக்க தானே வேண்டும் புங்கையூரான்.

நன்றி உங்கள் ஊக்கத்துக்கு.

 

நகைச்சுவையுடன் நல்ல பதிவு .

 

நன்றி சுமோ அக்கா. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

 

உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்  ,  வாழ்த்துக்கள் பகலவன் 

 

நன்றி நந்தன் அண்ணா. எனது பதிவுகளை முதலில் வாசித்து பச்சை குத்தி ஊக்கபடுத்தும் ஒரு உறவு என்றால் அது நீங்கள் தான்.

மற்றவர்களை சிரிக்கவைப்பது ஒரு தனிக் கலை. வாழ்த்துகள். 

 

உண்மைதான் நீதிமதி. நான் அந்த பாணியை தான் பெரிதும் விரும்புவன். வாசிப்பவர்களை தங்களின் துன்பங்களை மறந்து அந்த நேரத்திலாவது சிரிக்க வைத்தோம் என்ற திருப்தி. நன்றி நீதிமதி.

 

நல்ல பதிவு பகலவன்! தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாய் உள்ளோம்!

 

நன்றி அலை அக்கா.

 

பகலவன் கலக்கீட்டிங்கள் நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்

 

கலக்கல் எலாம் உங்களிடம் கற்று கொண்டது தான் புத்தன் அண்ணா. நன்றி உங்கள் பதிவிற்கு 

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு பகலவன் உங்கள் கதை.
 
இதே காலப்பகுதியில், இதே மாதிரி இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஒரு ஈழத்தமிழன், எனக்கும் எங்கள் ஊர்ப் பொறுப்பாளரைத் தெரியுமா என்று கேட்டு, தெரியாது என்றதற்காக கன்னத்தில் விரல் பதித்தான். அவனுடைய அடிக்கான என்னுடைய எதிர்வினையும் ஏறத்தாள உங்களுடையதை ஒத்ததாகவே இருந்தது. அவன் கேட்ட கேள்வி, அதற்கு நான் சொல்லப்போகும் பொய், அதுபற்றி நான் யோசித்த வினாடிகள், பின் பதில் சொன்னமை, அதைத் தொடர்ந்து அவன் அடித்தமை அனனத்தும் இத்தனை வருடங்களின் பின்னர் இன்னமும்  ஸ்லோமோஷனில் நினைத்துப் பார்கக்கூடியதாய் இருக்கிறது. 
 
சத்தியேந்திரா காலத்தில் அடிவாங்கக்கூடிய வயதுடையவராய் நீங்கள் இருந்தீர்கள் என்பது சற்று வியப்பாய் இருக்கிறது. சுண்டல்,ஜீவா வயதை ஒத்த அல்லது அதற்குச் சற்று அதிகமான வயதுடையவர் என்று நினைத்திருந்தேன்.
 
விஞ்ஞான ஆசிரியராய் இருந்த அம்மா சைக்கிள் வாங்குவதற்காய் அப்பாவின் அனுமதிக்காய்ப் போரிட்டதையும் சிம்பிளா சேர்த்துப் போயிருக்கிறீர்கள்.
 
நன்றாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

நல்லா இருக்கு பகலவன் உங்கள் கதை.
 
இதே காலப்பகுதியில், இதே மாதிரி இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஒரு ஈழத்தமிழன், எனக்கும் எங்கள் ஊர்ப் பொறுப்பாளரைத் தெரியுமா என்று கேட்டு, தெரியாது என்றதற்காக கன்னத்தில் விரல் பதித்தான். அவனுடைய அடிக்கான என்னுடைய எதிர்வினையும் ஏறத்தாள உங்களுடையதை ஒத்ததாகவே இருந்தது. அவன் கேட்ட கேள்வி, அதற்கு நான் சொல்லப்போகும் பொய், அதுபற்றி நான் யோசித்த வினாடிகள், பின் பதில் சொன்னமை, அதைத் தொடர்ந்து அவன் அடித்தமை அனனத்தும் இத்தனை வருடங்களின் பின்னர் இன்னமும்  ஸ்லோமோஷனில் நினைத்துப் பார்கக்கூடியதாய் இருக்கிறது. 
 
சத்தியேந்திரா காலத்தில் அடிவாங்கக்கூடிய வயதுடையவராய் நீங்கள் இருந்தீர்கள் என்பது சற்று வியப்பாய் இருக்கிறது. சுண்டல்,ஜீவா வயதை ஒத்த அல்லது அதற்குச் சற்று அதிகமான வயதுடையவர் என்று நினைத்திருந்தேன்.
 
விஞ்ஞான ஆசிரியராய் இருந்த அம்மா சைக்கிள் வாங்குவதற்காய் அப்பாவின் அனுமதிக்காய்ப் போரிட்டதையும் சிம்பிளா சேர்த்துப் போயிருக்கிறீர்கள்.
 
நன்றாக இருக்கிறது.

 

நன்றி இன்னுமொருவன் மீண்டும் ஒருமுறை உங்களின் விமர்சனத்துக்கு.

 

அடிவாங்குவதற்கும் அழுவதற்கும் வயசு உண்டு என்ற உங்கள் கணிப்பீட்டை விளங்கி கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. இருந்தாலும் நான் எனது வாழ்க்கையில் அறிவு தெரிந்த நேரத்தில் இராணுவம் என்று நேரில் கண்ட இராணுவம் இந்திய இராணுவம்.  சாப்பாத்தி மணமும், புதுவித பெட்ரோல் புகை மணமும் நான் இன்னும் மறக்கவில்லை. 89 களில்  மைக் பிடித்த திலீபன் அண்ணாவின் பச்சை கலர் நோட்டிஸ் ஓட்டியமைக்காக, கையை கட்டி வாயால் கிழிக்க சொன்ன போது பசியை நக்கி நக்கி கிழித்த வயசு.

 

எண்ணங்கள் எண்ணங்களால் தோண்டி எடுக்கபடுகின்றன. மீண்டும் என் நினைவில் இருந்து மறைவதற்குள் பதிவிடுகிறேன்.

 

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு.

 

 

சூப்பர் பகல்

 

 

நன்றி சஜீவன் அண்ணா. உங்கள் வருகைக்கும் ஊக்குவிற்புக்கும்.

Link to comment
Share on other sites

முடிந்தவரை உங்கள் நினைவுகளை கதைகளாக எழுதுங்கள் .பலருக்கு எட்டாத அனுபவங்கள் இவை ,அதை இவ்வளவு நகைச்சுவையாக எழுத எல்லாரும் முடியாது .

கதை நடந்த இடம்   எனக்கு மிக பரீட்சையமான இடமாதலால் இன்னமும் நன்றாக இருந்தது .

Link to comment
Share on other sites

முடிந்தவரை உங்கள் நினைவுகளை கதைகளாக எழுதுங்கள் .பலருக்கு எட்டாத அனுபவங்கள் இவை ,அதை இவ்வளவு நகைச்சுவையாக எழுத எல்லாரும் முடியாது .

கதை நடந்த இடம்   எனக்கு மிக பரீட்சையமான இடமாதலால் இன்னமும் நன்றாக இருந்தது .

 

நிச்சயமாக எழுதுகிறேன் அர்ஜுன் அண்ணா. உங்கள் கறுப்பு பெட்ஷீட் தான் இந்த நினைவுகளை எனக்கு மீட்க சந்தர்ப்பம் அளித்தது. என்னும் எத்தனையோ அனுபவங்கள் எழுதப்படாமல் இருக்கிறது. நீங்களும் அவற்றை எழுத வேண்டும் என்பதே எனது அவாவும் கூட.

 

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது, கதை கொண்டு போன விதம்.


 

மற்றது,  நான் சொல்லுவது தவறாக இருக்கலாம்.


 

நீங்கள் சொல்லுபவரும் நான் நினைப்பவரும்/கருதுபவரும் வேறு வேறு ஆக இருக்கலாம்.


 

ஆனால் நான் நினைக்கிறன் அவர் ஒரு புலி போராளி அல்ல என்று. அவர் ஒரு ஆதரவாளர் / தீவிர ஆதரவாளர் ஆக இருக்கலாம். ஏனெனில் மருத்துவ பீட உணவ சாலையில்/மாணவர் ஒன்று கூடும் இடத்தில், இருந்த படம் ஒன்றில் சத்தியேந்திர என்று பெயருடைய ஒருவர் இருந்தவர் அதில்-கப்டன்/போராளி/லெப் கேணல்....போன்ற இயக்க இராணுவ தகுதி நிலைகள் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது, கதை கொண்டு போன விதம்.

 

மற்றது,  நான் சொல்லுவது தவறாக இருக்கலாம்.

 

நீங்கள் சொல்லுபவரும் நான் நினைப்பவரும்/கருதுபவரும் வேறு வேறு ஆக இருக்கலாம்.

 

ஆனால் நான் நினைக்கிறன் அவர் ஒரு புலி போராளி அல்ல என்று. அவர் ஒரு ஆதரவாளர் / தீவிர ஆதரவாளர் ஆக இருக்கலாம். ஏனெனில் மருத்துவ பீட உணவ சாலையில்/மாணவர் ஒன்று கூடும் இடத்தில், இருந்த படம் ஒன்றில் சத்தியேந்திர என்று பெயருடைய ஒருவர் இருந்தவர் அதில்-கப்டன்/போராளி/லெப் கேணல்....போன்ற இயக்க இராணுவ தகுதி நிலைகள் இருக்கவில்லை.

 

நன்றி வோல்கனோ உங்கள் வரவிற்கும் பதிவிற்கும்.

 

நான் குறிப்பிடுபவருக்கு சத்தியேந்திரா அல்ல உண்மையான பெயர். ஆனால் இதை ஒத்த பெயர் தான் அவருக்கும். அவர் பின்னாட்களில் வன்னி பகுதியில் மருத்துவராக கடைமையாற்றி இறுதி யுத்தத்துக்கு பின்னர்  வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரி உள்ளார். அவரது பெயரை தவிர்த்தமைக்கு அது தான் காரணம். அவர் இறுதிவரை புலியாகவே வாழ்ந்து இன்றும் உயிரோடு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பகலவன் உங்கள் தகவலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மிக நன்றாக எழுதுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி கனகதையள் கிடக்கு . அதை கிண்டி பாக்கிறதிலையும் ஒரு ருசி இருக்கத்தான் செய்யுது . பாராட்டுக்கள் பகலவன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றுதான் வாசித்தேன் பகலவன்.. கதை நன்றாக இருக்கின்றது. நானும் அதே காலப்பகுதியில் அநேகமாக உங்களின் அன்றைய வயதில் தான் இந்திய ஏவல் இராணுவத்தின் காலத்தின் போது அங்கு இருந்தேன்...

Link to comment
Share on other sites

தம்பி மிக நன்றாக எழுதுகிறீர்கள் 

 

நன்றி லியோ அண்ணா.

 

 

இப்பிடி கனகதையள் கிடக்கு . அதை கிண்டி பாக்கிறதிலையும் ஒரு ருசி இருக்கத்தான் செய்யுது . பாராட்டுக்கள் பகலவன் .

 

நன்றி மைத்தி, உங்களுக்கும் இப்படி கதைகள் தெரியும் என்றால் எழுதுங்கோவன். நினைவுகள் எழுதுவதில் தான் ஒரு சுகம். 

 

இன்றுதான் வாசித்தேன் பகலவன்.. கதை நன்றாக இருக்கின்றது. நானும் அதே காலப்பகுதியில் அநேகமாக உங்களின் அன்றைய வயதில் தான் இந்திய ஏவல் இராணுவத்தின் காலத்தின் போது அங்கு இருந்தேன்...

 

நன்றி நிழலி, உங்கள் நினைவுகளையும் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

இந்திய இராணுவ காலம் மனங்களில் வடுக்களையும் வலிகளையும் தந்த காலம். பகிர்வுக்கு நன்றிகள் பகலவன்.

Link to comment
Share on other sites

  • 5 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.