Jump to content

ரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.


easyjobs

Recommended Posts

ரஷ்யாவில் இன்று காலை திடீரென வானத்தில் இருந்து தீக்குழம்பாக எரிந்து கொண்டிருந்த

ஒர் விண்கல் கீழே விழுந்ததால், ஒரு மொபைல் உள்பட பல கட்டிடங்கள்

பாதிப்புக்குள்ளாயின. இந்த சம்பவத்தில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

ரஷ்ய நேரப்படி காலை 9.20 மணிக்கு, பெரும் நெருப்புக்குழம்பாக எரிந்து கொண்டு,

ஒரு மிகப்பெரிய விண்கள் ஒன்று வானவில் போன்று வளைந்து வந்து மிகவும்

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சாலையில் விழுந்ததால், பொதுமக்கள்

அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 6000 சதுர அடியில் இயங்கிக்கொண்டிருந்த

துத்தநாக தொழிற்சாலை ஒன்று அடியோடு அழிந்தது. மேலும் பல கட்டிடங்கள்

நொறுங்கியது. சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சுக்குநூறாயின.

 

 

இதனால் பதட்டமடைந்த மக்கள் அங்கும் இங்கும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்

கொள்வதற்காக ஓடினர். இதனால் பெரும் இடிபாடுகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில்

ஒரு மிகப்பெரிய மொபைல் கோபுரம் முற்றிலும் சேதமடைந்தது.

 

எரிகல் விழும் அதிர்ச்சி மிகுந்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க...

Link to comment
Share on other sites

மக்கள் செறிவான இடத்தில் விழுந்தும் பெரியளவில் மக்கள் இறக்காதது அதியசமே.

 

அதேவேளை ஒரு வளர்ந்த நாடான உருசியாவிலேயே இதைப்பற்றி முன்கூட்டியே தெரியவில்லை என்றால் ஒரு மூன்றாம் உலக நாட்டில் விழுந்தால் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் பகுதியில் விழக்கூடும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் .. எங்கும் எதுவும் நடக்கலாம். இயற்கையை  அச்சொட்டாக  கூற முடியாது.

Link to comment
Share on other sites

மக்கள் செறிவான இடத்தில் விழுந்தும் பெரியளவில் மக்கள் இறக்காதது அதியசமே.

 

அதேவேளை ஒரு வளர்ந்த நாடான உருசியாவிலேயே இதைப்பற்றி முன்கூட்டியே தெரியவில்லை என்றால் ஒரு மூன்றாம் உலக நாட்டில் விழுந்தால் :(

 

 

ஏரிக்குள் விழுந்தமையால் தான் பாதிப்பு பெரிய இல்லை.

 

ஒரு வருடத்தில் அண்ணளவாக 40,000 தொன் நிறைக்குரிய விண்கற்கள் பூமியில் விழுகின்றன. விழுவனவற்றில் மிகச் சிலதுதான் பெரிய கற்கள். விண்மீன் மோதுகை போன்றவற்றினைத்தான் எதிர்வு கூற முடியுமாம். விண்கற்கள் வீழ்வதை கண்டறிவது கடினமாம்.

 

இது ரொரன்டோவில் விழுந்து இருந்தால் இண்டைக்கு நான் வேலைக்கு வந்திருக்க வேண்டி வந்திருக்காது. விண்கற்களுக்கும் மனசாட்சி இல்லை.. :(

Link to comment
Share on other sites

தம்மால் நாட்டிற்குள் வரும் ஏவுகணைகளை நிற்பாட்ட முடியும் என்கிறார்கள். அப்படியானால் ஏன் இதை நிற்பாட்ட முடியாமல் போனது?

எரிகோளின் வேகம் காரணமா?

Link to comment
Share on other sites

ரஸ்சியாவுக்கு ஒரு பாடம். இனி திரும்ப வெல்ல முடியாத அணுஆயுத போராட்டங்களுக்கு ஆயத்தப்படுத்தாமல் சர்வேத அரசியலில் விழுந்திருக்கும் ஓட்டைகளை நல்ல கொள்கைகளை வைத்து நிரப்பட்டும். உதாரணத்துக்கு தமிழருடன் எந்த வித பிணக்கும் இல்லாதிருந்த ரஸ்சியா தனது நியாயங்களை எடுத்து சொல்லியிருந்திருந்தால் இந்தியா, சீனா நிச்சயம் கேட்டிருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சொல்லியதை, ரஷ்யா அப்படியே... நம்பி விட்டது போலுள்ளது.
கீழே கொடுத்திருக்கும் இணைப்பை, சொடுக்கவும். :)


http://www.yarl.com/forum3/index.php?showtopic=116875

Link to comment
Share on other sites

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

 

என்ரை வீட்டு வளவுக்குள்ளும்... கன கல்லு இருக்குது, வானத்திலிருந்து முந்தி விழுந்த கல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் இசை.

அதை... நீங்க மொத்தமாய் வாங்கினால்... மலிவு விலையில் விற்க, நான் ரெடி. :lol:

Link to comment
Share on other sites

என்ரை வீட்டு வளவுக்குள்ளும்... கன கல்லு இருக்குது, வானத்திலிருந்து முந்தி விழுந்த கல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் இசை.

அதை... நீங்க மொத்தமாய் வாங்கினால்... மலிவு விலையில் விற்க, நான் ரெடி. :lol:

 

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

 

முதலில் தலை போகாமல் இருக்கவேண்டும் :D

அடுத்து உங்கள் நாட்டு அரசு பறிக்காமல் இருக்கவேண்டும் :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டு வளவுக்குள்ளும்... கன கல்லு இருக்குது, வானத்திலிருந்து முந்தி விழுந்த கல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் இசை.

அதை... நீங்க மொத்தமாய் வாங்கினால்... மலிவு விலையில் விற்க, நான் ரெடி. :lol:

 

உந்த கல்லை வாங்கி..இசைக்கலைஞன் அண்ணா...வீட்டில் தனக்கு தானே சூனியம் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஃஃஃஃஃ ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

 

விண் கல்லுடன், சக்தியுள்ள காந்தம் ஒட்டுமா? அதனைப் பற்றிய... தகவல்களை, நீங்கள் அறிந்தவற்றை எமக்கும்.... விரிவாகக் கூறலாமே..... :rolleyes:

அப்ப தானே... எமது அறிவும் விருத்தியடையும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கல்லை வாங்கி..இசைக்கலைஞன் அண்ணா...வீட்டில் தனக்கு தானே சூனியம் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்... :lol:

 

உண்மையில்... எனது பாட்டியின், பாட்டிக்கு... பாட்டி சொன்ன கதை என்று,

எனது நேரடி பாட்டி சொன்னதை எனது கண்ணால் கேட்டனான். //விண் கல்லு விழும் போது பார்த்தால்... அதிர்ஷ்டம். அதை... விட எமது வாழைத் தோட்டத்துக்குள் விழுந்தால்.. உடனே, அதை... கிடங்கு வெட்டி, வாழைப் பாத்திக்குள் தாட்டுவிட்டால்... லட்சாதிபதி ஆகலாமாம்//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... எனது பாட்டியின், பாட்டிக்கு... பாட்டி சொன்ன கதை என்று,

எனது நேரடி பாட்டி சொன்னதை எனது கண்ணால் கேட்டனான். //விண் கல்லு விழும் போது பார்த்தால்... அதிர்ஷ்டம். அதை... விட எமது வாழைத் தோட்டத்துக்குள் விழுந்தால்.. உடனே, அதை... கிடங்கு வெட்டி, வாழைப் பாத்திக்குள் தாட்டுவிட்டால்... லட்சாதிபதி ஆகலாமாம்//

 

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

 

பாட்டி சொன்னதைக் கேட்டு... நானும், மண் வெட்டியோடை.... எப்ப விண்கல்லு விழும்... உடனை போய்.. வாழைத்தோட்டத்துக்குள்ளை தாக்க வேணும் என்று... கொஞ்சவருசம், பள்ளிக்கூட "ஹோம் வேர்க்கும்" செய்யாமல் வானத்தை அண்ணாந்து பாத்துக் கொண்டிருந்தனான். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி சொன்னதைக் கேட்டு... நானும், மண் வெட்டியோடை.... எப்ப விண்கல்லு விழும்... உடனை போய்.. வாழைத்தோட்டத்துக்குள்ளை தாக்க வேணும் என்று... கொஞ்சவருசம், பள்ளிக்கூட "ஹோம் வேர்க்கும்" செய்யாமல் வானத்தை அண்ணாந்து பாத்துக் கொண்டிருந்தனான். :rolleyes::D

உந்தக்கூத்து முடிஞ்சு பள்ளிகுடம் போக..வாத்தி மண்வெட்டியோட நிணடிருக்குமே..உங்களைத்தாக்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

 

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

 

சிறியைக்கண்டால் என்னோவெல்லாம் ஒட்டுது

இந்த கல்  ஒட்டுவது பெரிய  விடயமா?

ஆனால் பாவம் கல்....... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக்கூத்து முடிஞ்சு பள்ளிகுடம் போக..வாத்தி மண்வெட்டியோட நிணடிருக்குமே..உங்களைத்தாக்க.. :D

 

வாத்தி, மண்வெட்டியாலை... தாக்கியிருந்தாலும் தாங்கியிருப்பன். பின் வாங்கிலை, இருந்த என்னை...  முன் வாங்கிலை வந்து இரு, என்று சொல்லிப் போட்டான் பாவி. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

 

சிறியைக்கண்டால் என்னோவெல்லாம் ஒட்டுது

இந்த கல்  ஒட்டுவது பெரிய  விடயமா?

ஆனால் பாவம் கல்....... :lol:  :D  :D

 

விசுகண்ணை.... சொல்லுறதைப் பார்த்தால்... இசை, "டபிள் மீனிங்கிலை" கதைச்சிருக்கிறார் போலை கிடக்குது. :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்டிராய்ட் DA14 ராட்சத எரிகல் பற்றிய சுவையான தகவல்கள்!

 

பூமியை நெருங்கும் மிகப்பெரிய, ராட்சத எரிகல் என்று கூறப்பட்ட ஆஸ்டிராய்டு டிஏ 14 என்ற எரிகல் பூமிக்கு அருகே கடந்தாலும் ரஷ்யாவில் அதன் தாக்கத்தினால் சுமார் 400 பேர் காயம்டைந்துள்ளனர். கட்டிடங்களில் ஜன்னல்கள் உடைந்துள்ளது, மேலும் செல்போன் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா தங்கள் பகுதியில் இதன் தாக்கம் இருக்கும் என்று கணித்ததை நாசா முன்பே மறுத்துள்ளது. ஆனால் ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது என்ன ஆஸ்டிராய்ட் டி.ஏ14 எரிகல்? இதோ சில சுவையான தகவல்கள்:

ஆஸ்டிராய்ட் டிஏ14- கண்டுபிடித்தது யார்?

ஸ்பெயினில் மல்லோர்க்காவில் உள்ள வானிலை விண்வெளி கண்காணிப்பு மையத்தினால் நடத்தப்படும் லா சக்ரா ஸ்கை சர்வே என்ற ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிப்ரவரி 23, 2012-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த அன்று அந்த எரிகல் 4.3 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தது. அவர்களது இந்த கண்டுபிடிப்பு நாசா நிதியுதவியுடன் நடக்கும் மைனர் பிளேனட் சென்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ராட்சத எரிகல் போன்று இன்னும் எத்தனை இதே சைசில் உள்ளது?

அதாவது பூமிக்கு அருகில் இதுபோன்று சுமார் 5,00,000 எரிகற்கள் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1%க்கும் குறைவாகவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டிராய்ட் டிஏ14 போன்ற ராட்சத எரிகற்கள் எத்தனை முறை பூமிக்கு இவ்வளவு அருகாமையில் சென்றுள்ளது?

ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் இது நிகழும். அதில் 1200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோளுடன் எரிகல் மோதும் வாய்ப்புள்ளதா?

இப்போது விழுந்த ஆஸ்டிராய்ட் செயற்கைக் கோளை தாக்கவில்லை. ஏனெனில் ஆஸ்டிராய்ட் பூமியின் கீழ்ப்பகுதியிலிருந்து செல்லும் அணுகுறை கொண்டது இந்த ஆஸ்டிராய்ட். செயற்கைக்கோள்களின் வெளிப்புறங்களுக்கு இடையே கடந்துள்ளது. இந்தா ஆஸ்டிராய்ட் கடக்கும் இடங்களில் செயற்கை கோள்கள் இல்லை.

டிஏ14 ஆஸ்டிராய்டினால் பூமிக்கு என்ன நேரும்... அலைகள், பூமிப்பாறைகளில் தாக்கம்?

புவியீர்ப்பு சக்தியினால் ஏற்படும் தாக்கம் மிகமிகமிகச் சிறியதே.

பூமியில் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்றால் எப்படியிருக்கும்?

இந்த எரிகல்லினால் பூமிக்கு தாக்கம் ஏற்படாது. ஆனால் இதே அளவு ராட்சத சைசில் பூமியை தாக்கம் செய்யும் எரிகல்லாக இருந்தால் அதிலிருந்து 2.5 மெகா டன்கள் எரிசக்தி விண்வெளியில் வெளியாகும். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேரழிவு ஏற்படலாம்.

சைபீரியாவில் டுகுஸ்காவில் இதே சைஸ் எரிகல் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. இது எரிகல் ஆய்வுக் குழாமில் டுகுஸ்கா நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. அப்போது சுமார் 2,200 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு காடுகளில் அனைத்தும் அழிந்து போனது.

அருகில் வரும்போது எரிகல்லை பார்க்க முடியுமா?

இந்த டிஏ14 எரிகல் பூமிக்கு அருகில் பறந்தாலும் இது சிறியதுதான். இது தெரியாது மிகவும் மங்கலாகவே இது தெரியும். இதனை பார்க்க டெலெஸ்கோப் வேண்டும். ஆனாலும் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த எரிகல்லின் பகுதியை காண முடியும்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/letusknow/1302/15/1130215035_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

வயசுப்பொண்ணுகள் இருக்குமிடத்தில்..என்ன கேள்வி இது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி, மண்வெட்டியாலை... தாக்கியிருந்தாலும் தாங்கியிருப்பன். பின் வாங்கிலை, இருந்த என்னை...  முன் வாங்கிலை வந்து இரு, என்று சொல்லிப் போட்டான் பாவி. :D  :lol:

வாத்தி உங்கள் வாழ்வில்..விளையாடிவிட்டான் தமிழ் சிறி அண்ணை... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.