Jump to content

ரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.


easyjobs

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வயசுப்பொண்ணுகள் இருக்குமிடத்தில்..என்ன கேள்வி இது.. :D

எங்க ....எங்க ...எங்க .......

Link to comment
Share on other sites

2046 இல் மீண்டும் ஒரு எரிகல் கிட்ட வருமாம்.

 

ஆனால் அது இதைப்போல கிட்ட வராதாம். இது சில செய்மதி கோள்களை விட அருகில் வந்ததாம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இரட்டைகோபுர தாக்குதலைவிட இது எவ்வளவோ பயங்கரமானது....அல்லது இதுவோரு பூமிக்கான எச்சரிக்கை! 

Link to comment
Share on other sites

karunanidhi_350_120512033848.jpg

திமுக ஆட்சியில் இப்படி நடந்ததில்லை..! அதிமுக ஆட்சியில் தான் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கின்றன --கலைஞர்!

 

jayalalitha.jpg

கடந்த திமுக ஆட்சியின் பொறுப்பற்ற திறன் தான் இப்பொழுது விண்கல் பூமி நோக்கி வர காரணம் -- ஜெயலலிதா

 

 

arjun-sarja.jpg

உது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------

 

Link to comment
Share on other sites

 

 

arjun-sarja.jpg

உது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------

 

 

முடியல.. :lol:  இறுதிப்படம் நல்ல கற்பனை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் இயற்கையோடு சம்பந்தப்பட்ட முக்கியமான செய்தி ஒன்று யாழில் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் காலம்கடத்துவது வருத்ததிற்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலா இருக்கட்டும்.. சமூக.. அநியாயமா இருக்கட்டும்.. அறிவியலா இருக்கட்டும்.. சினிமாவா இருக்கட்டும்.. எதையும் ஒரு நேர்மையோட எழுதிற பக்குவம் இந்திய ஊடகங்களுக்குக் கிடையாது..! ஒன்றில் வாசகரைக் கிளுகிளுப்பூட்டனும்.. இல்ல பிரமிக்க வைக்கனும்.. இது தான் அவற்றின் குறிக்கோள்..!

 

ரஷ்சிய எரிகல் விபத்திற்கும்.. விண்கல் கடந்து போன நிகழ்விற்கும் இடையில் தொடர்பு இல்லை. ஆனால்.. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரை.. அது நயன்தாரா - ஆர்யா  திரிஷா - விஷால் கிசு கிசு மாதிரி ஆயிடிச்சு..!

 

இப்ப தெரியுது இவங்க ஏன் வெளிநாட்டு ஊடகங்களை ஒருவிதமான பெருமிதத்தோட.. அதைப் படிக்கிறதே.. தங்களுக்கான பெருமிதம் என்ற வகையில்.. பார்க்கிறாங்கன்னு..!

 

The asteroid's arrival was preceded by a damaging meteor event in Russia on Friday - but indications from the meteor's path suggest that the two events are entirely unrelated - just a "cosmic coincidence", as Alan Fitzsimmons of Queens University Belfast told BBC News.

 

_65863869_asteroid_route304-03.gif

 

http://www.bbc.co.uk/news/science-environment-21442863

Link to comment
Share on other sites

ரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திர விழுந்து வெடித்ததினால்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு
செய்திகள் தெரிவிக்கின்றன.



ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால்
பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம்
வெடித்துச் சிதறியுள்ளது.



விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளதன் பிரகாரம் 10 தொன் நிறையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.



மணித்தியாலயத்திற்கு 54 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வாயுகோளத்திற்குள்
புகுந்த எரிநட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 30 க்கும் 50 க்கும்
இடைப்பட்ட தூரத்தில் வெடித்து சிதறியுள்ளது.



அதன் பின்னர் அது எரிமழையாக பொழிந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில்
வெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்திகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/59006--1100-.html?utm_source=twitterfeed&utm_medium=facebook&utm_campaign=Feed%3A+TamilmirrorBreakingNews+%28TamilMirror.lk+%3A%3A%3A+Breaking+News%29&utm_content=FaceBook

Link to comment
Share on other sites

விண் கல்லுடன், சக்தியுள்ள காந்தம் ஒட்டுமா? அதனைப் பற்றிய... தகவல்களை, நீங்கள் அறிந்தவற்றை எமக்கும்.... விரிவாகக் கூறலாமே..... :rolleyes:

அப்ப தானே... எமது அறிவும் விருத்தியடையும். :icon_idea:

 

தமிழ்ஸ்..

 

இங்கே உள்ள கற்களை விட விண்கற்களில் இரும்பின் அளவு அதிகம் இருக்கும். ஏன் அப்படி என்று தெரியவில்லை. பெரும்பாலானவை அப்படித்தான். ஆகவே இந்தக் கற்களைப் பொறுக்கச் செல்பவர்கள் காந்தத்தையும் எடுத்துச் செல்வார்கள்.

 

அதுபோல பூவுலகுக்குள் இந்தப் பாறைகள் நுழையும்போது பெரும்பாலானவை வழிமண்டல ஒராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும். ஒருசில கற்கள்தான் முழுவதும் எரியாமல் நிலத்தில் விழுபவை.

 

இவை எரிந்துகொண்டு வருவதனால் அவற்றில் எரிவு அடையாளங்கள் அதாவது fusion crust காணப்படும்.

 

cameldonga462b_s.jpg

 

இந்த அடையாளத்தை வைத்தும் இக்கற்களைக் கண்டுபிடித்து எடுப்பார்கள்.

 

இக்கற்களை விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார்கள். வெளிச் சந்தைகளுக்கும் விற்கலாம். இதை வாங்கிச் சேகரிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

 

கனடாவில் இதைக் கண்டெடுத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. ஆனால் அந்தக் கல்லை வெளிநாட்டில் விற்பதாக இருந்தாலும், கொண்டு செல்வதாக இருந்தாலும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

நேற்றுப் போன விண்கல் மறுபடியும் வருகிறது
 
நேற்று சுமார் 27.000 கி.மீ தூரத்தில் பூமியைக் கடந்து போன 45 மீட்டர் நீளமும், 130.000 தொன் எடையும் கொண்ட விண்கல் அஸ்ரேடன் டீ.ஏ.14 மறுபடியும் பூமிக்கு வரும் என்று நாஸா அறிவித்துள்ளது.


எதிர்வரும் 2046ம் ஆண்டில் தனது பாதையில் சுற்றியபடியே புவிக்கு வரும் ஆனால் அப்போது அதனுடைய இடைவெளி நேற்றுப் போனதைப்போல அண்மித்திருக்காது, சுமார் 1.48 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த விண்கல் ஒளிபோல நகர்ந்து போவதை நேற்று பலர் பார்த்து இணையத்திலும் பதிந்துள்ளார்கள்.

 

இதுபோன்ற விண் கற்கள் வருடந்தோறும் ஒரு மில்லியன் அளவில் புவியை கடந்து போவதாக டேனிஸ் விண்வெளி ஆய்வு மையமான ருக்கபாக சென்டரில் இருந்து டேனிஸ் வானியலாளர் யூப் கிறா தெரிவித்தார்.
 
புவி மேற்பரப்பில் மனிதன் வாழாத பகுதிகளாக கடல், காடு, பனிமலைகள் என்று சுமார் 70 வீதமான பகுதிகள் இருப்பதால் பல கற்கள் மனிதனுக்கு தெரியாமலே புவியில் விழுந்துவிடுகின்றன.

ஆனால் முன்னைய காலத்தைப் போல் அல்லாது இன்று இது போன்ற கற்றள் வரும் காலம், இடைத்தூரம் என்பவற்றை துல்லியமாகக் கணிக்குமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

http://www.alaikal.com/news/?p=122527

Link to comment
Share on other sites

ஏவுகணை தாக்குதல் நடத்தி எரிகல்லை அழித்த ரஷியா?- பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டது 
Written by delani   // February 16, 2013   // Comments Off 
 ரஷியாவில் யூரல் மலைப் பகுதியில் நேற்று காலை திடீரென சக்தி வாய்ந்த எரிகல் ஒன்று வந்து விழுந்தது. சிறு நட்சத்திர வகையைச் சேர்ந்த எரிகல் சுமார் 10 டன் எடை கொண்டது. நேற்று காலை 9.30 மணிக்கு அந்த எரி நட்சத்திரம் ஒளிப் பிழம்பை கக்கியபடி வந்து மோதியது.
எரி நட்சத்திரம் தரையில் மோதுவதற்கு முன்பு 3 துண்டுகளாக உடைந்தது. 54 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து அது மோதியது. இதனால் ரஷியாவின் மையப் பகுதியில் பூமி குலுங்குவது போல இடி சத்தம் கேட்டது.
எரி கல்லின் துகள்கள் அதாவது பெரிய, பெரிய எரிகற்கள் நாலாபுறமும் தெறித்து விழுந்தன. இதில் சுமார் 1000 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே எரி கற்கள் விழுந்த இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
20 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரி கல்லின் 3 பெரிய பாகங்கள் விழுந்த இடத்தில் 3 பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோல வேறு எங்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடந்து வருகிறது.
எரிகல் விழுந்து தாக்கியதில் செலியாபிர்ஸ்க் என்ற இடத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அந்த இடங்களில் அணு கதிர் வீச்சு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று தேசிய பேரிடம் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ் கோமோஸ் எரிகல் விழுந்திருப்பதை வீடியோவில் பதிவு செய்துள்ளது. அதில் வெள்ளை நிறத்தில் புகையை கக்கியபடி மிகப்பிரகாசமாக எரிகல் வருவது தெளிவாக தெரிகிறது. அந்த காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரஷியாவில் விழுந்த எரிகல் மிக, மிக சக்தி வாய்ந்து வந்ததாகவும், இதை கண்டுபிடித்த ரஷியா ஏவுகணையை செலுத்தி, அந்த எரிகல்லை நடுவானில் தகர்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஷிய ராணுவம் இதை மறுத்தது.
என்றாலும் ஏவுகணையை செலுத்தி எரிகல்லை ரஷியா அழித்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ரஷியா செய்தி நிறுவன இணைத்தளத்தில், எரிகல்லை ஏவுகணை அழித்ததாக தகவல் வெளியானதால் பலரும் இதை உண்மை என்றே நம்பினார்கள்.
இதற்கிடையே ரஷியா டுடே பத்திரிகையில் பூமிக்கு மேல் 20 கிலோ மீட்டர் தொலைவில் எரிகல் வந்தபோது, அதை ரஷிய ஏவுகணை வழிமறித்து தாக்கி அழித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாக் எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்று ஏவு கணை மூலம் எரிகல் தாக்கி தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. எனவே எரிகல் சிதறலில் தொடர்ந்து புரளிகளும், யூகங்களும் நிலவுகிறது.
எரிகல் நடுவானில் தகர்க்கப்பட்டதால்தான் ரஷியாவில் நிகழ இருந்த பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்க உடுப்பின்றி

சாப்பாடின்றி

மருந்தின்றி

அவயங்களை  இழந்து

அரை   உயிராக நின்ற  எம்மக்களை  உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்

அதை  நான் பார்ப்பேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்க உடுப்பின்றி

சாப்பாடின்றி

மருந்தின்றி

அவயங்களை  இழந்து

அரை   உயிராக நின்ற  எம்மக்களை  உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்

அதை  நான் பார்ப்பேன்

 

அரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு.. அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு

Link to comment
Share on other sites

அரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு..அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு

நீங்கள் லயன் பியர் அடித்து விட்டு சிங்கள கிரிக்கெட் பார்க்கும் ஆக்கள் போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கல்லுகள் விழுகிறதை தடுக்க, ஏதேனும் கல்லு வைத்த மோதிரம் போடலாமோ?

 

இது விழுவதற்கு 2-3 மணித்தியாலம் முந்தி வேலை இடத்தில் கவனியாமல் ஓரு கதிரையில் இருந்து இன்னுமொரு கதிரைக்கு மாறியபோது மேலே இருந்த கப்போர்ட் இடித்து-தலை கிர் என்று போயிற்று, சிறிய காயமும் வந்தது.  
 

எனது தலையில் விழ வேண்டிய கல்லுத்தான் இப்படி ஒரு வேறு வழியில் வந்ததோ என்று தெரியவில்லை? இன்னுமொரு இடத்தில் விழமுன்பு/ அல்லது எனது தலையில் விழ முன்பு ஏதாவது செய்ய வேண்டும். :icon_idea: 
 

 

Link to comment
Share on other sites

ரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல்

 

rusia.jpgரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல் வெளிப்படுத்திய சக்தி இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த ஆயுதங்களின் சக்தியைவிட அதிகம் என நாசா மதிப்பிட்டுள்ளது.இது குறித்து நாசா எரிகல் சூழலியல் தலைவர் பில் குக்கி கூறியதாவது: இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களின் சக்தியை விட அந்த எரிகல் பூமியில் மோதியபோது வெளிப்பட்ட சக்தி அதிகம். அந்த நெருப்புக்கோளம் சூரியனை விட பிரகாசமாக எரிந்தது. அதில் இருந்து 50 ஆயிரம் கிலோ அளவுள்ள எரிசக்தி வெளிப்பட்டது. இது, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட 30 மடங்கு அதிகம்.

மணிக்கு 6 லட்சத்து 43 ஆயிரத்து 734 கி.மீட்டர் வேகத்தில் மோதிய அந்த எரிகல் வெடித்த 32.5 விநாடிகளுக்கு வளிமண்டலத்தில் 24 கி.மீ. தொலைவு வரை அதன் ஒளிப்பிழம்பு தெரிந்தது என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

1908ஆம் ஆண்டுக்குப் பின் விழுந்த எரிகற்களிலேயே இதுதான் மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.