Jump to content

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்கள உறவான கலைஞனின்(கரும்பு, முரளி, மாப்பு) தந்தையார் சற்று முன்னர் இறைபதம் எய்தினார். தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

        



        குருநாதசுவாமி கோவிலடி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை
வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுருநாதன் அவர்கள் 17.02.2013 அன்று
இறைவனடி சேர்ந்தார்

        sinathamby1.jpg

அன்னார் காலஞ்சென்றவர்களான
சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம்
நீலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமிர்தாம்பிகையின் ஆருயிர்
கணவரும், செல்வஜோதி (அவுஸ்திரேலியா), சிவசக்தி (டென்மார்க்), வாசுகி
(அமெரிக்கா), கோணேஸ்வரன் (கனடா), முரளிதரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு
தந்தையும், ரட்ணஜெயம், பாஸ்கரன், பத்மலால் (பத்தி), துஷ்யந்தி ஆகியோரின்
அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவகாமசுந்தரி,
ஆறுமுகதாசன், பொன்னம்பலவாணர், அன்னலக்சுமி, காலஞ்சென்ற பரமகுருநாதன்,
ஞானசரஸ்வதி, சக்திவேல், விக்னேஸ்வரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச்
சகோதரரும், ஆர்த்தி, ரூபன், அனோஷ், ஆதீனா, நீரஜா, கிரிஷான், தர்சன்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


Viewing: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough (23.02.2013 5.00 pm – 9.00 pm)

         

        Cremation: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough (24.02.2013 9.00 am – 10.30 am)

        St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto (24.02.2013 10.30 am – 11.00 am)


தகவல்: மனைவி, பிள்ளைகள் (647.342.2636)

 

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

HW0_34960.jpg

 

ஓ.... கவலையான செய்தி.

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

May the departed soul Rest in peace.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

 

Link to comment
Share on other sites

துயரமான செய்தி. அன்னாரின் ஆத்மசாந்திக்குஇ இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும்இ உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அதிர்ச்சியான செய்தி. கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அன்னாருக்கு அஞ்சலிகள் . தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் 

Link to comment
Share on other sites

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் 

Link to comment
Share on other sites

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

முரளியின் தந்தைக்கு என் கண்ணீர் அஞ்சலிகளும் இழப்பால் துயருறும் முரளிக்கும் அவர் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

கடந்த 2 நாட்களாக என் Cell phone செயலற்று இருப்பதால் முரளியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை (அவர் தொ.பே இலக்கம் என் செல் போனில்தான் இருக்கு). திங்களின் பின் Mobile phone இனை சரி செய்து தொடர்பு கொள்வோம் என்று கொஞ்சம் அசமந்தமாக இருக்கும் போது அவரின் தந்தையின் இறப்புச் செய்தி வந்துள்ளது.

 

முரளியின் அப்பாவை இரண்டு முறை சந்தித்தும் இருக்கின்றேன்.

 

முரளி யாழுக்கு வெளியிலும் யாழ் கள உறவுகளின் சந்தோச / துயர நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் ஒரு அன்பு உறவு. அவரின் தந்தையின் மரண வீட்டுக்கு கண்டிப்பாக நான் செல்வேன். யாழ் கள உறவுகள் சிலர் ஒன்று சேர்ந்து சென்றால் இன்னும் கொஞ்சம் நல்லம் என நினைக்கின்றேன். கனடா உறவுகள் யாராவது செல்வதாயின் எனக்கும் ஒருக்கால் சொல்லுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி.அன்னாரின் அத்மா சாந்தி அடையட்டும்.அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் கலைஞனக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.கலைஞனின் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

தந்தையை இழந்த துயரில் துரயருற்றிருக்கும் முரளிக்கும் முரளியின் குடும்பத்தினரின் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். குடும்பம் அம்மா அப்பா உறவுகளை முரளி எவ்வளவு நேசிக்கிறீங்கள் என்பதனை உங்கள் பல கருத்துக்களும் எழுத்துக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரு இழப்பிலிருந்து மீள எழுவது என்பது உடனடியாக இயலாது ஆனால் நீங்கள் மீண்டு வர வேண்டும். வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

 

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு.. சுற்றத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

(நல்லாத்தானே இருந்தார் கலைஞன் இணைத்த படங்களில்... திடீர் என்று ஏனோ இப்படி ஆச்சுது. வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது இதனை வாசிக்கும் போது.)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8320.gif

 

:( ஐயாவின் பிரிவால் துயர் உற்று இருக்கும் கலைஞன் அண்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் அண்ணாவுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும்

எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

அன்னாரின் ஆத்மா சந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

(கலைஞன்

நேற்று அவரது படத்தை பார்த்தேன்.  அப்பொழுது என் மனதில் பட்டதை எழுதுகின்றேன்.

அவர் தங்களுடன் இருக்கின்றார்.  எனவே அவருக்கு எந்த குறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவரது வயது உடல்நிலையைப்பார்த்தபோது  இனி  அவர் வேதனைப்படாது அவரால் நீங்கள் வேதனைப்படாது இறைவன் எடுத்துக்கொள்வதே நல்லது என்று பட்டது.   இனி  அவரைக்காணமுடியாது  அல்லது  இனி அவரை நீங்கள் பராமரிக்க கொடுத்து வைக்கவில்லை என்பது உண்மைதான்.  ஆனால் அதைவிட முக்கியம் அவர் வேதனைப்படாதிருப்பது.  உங்களை  வேதனைப்படுத்துகின்றேன் என்று  தன்னுக்குள் உருகுவது.   எனவே  இறைவன்  அவருக்கு நன்மை செய்து தானாக எடுத்துக்கொண்டான் என்று அமைதி  அடையுங்கள்.  இன்று எனது தாயாருக்கு நான் வேண்டுவது இதுவே. அதை  தங்களுக்கு இறைவன் அளித்துள்ளான்.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.