Jump to content

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள் பகிரும் இடத்தில் இப்படியான  கருத்துக்களை பகிர்வது தவறு மன்னித்துக்கொள்ளுங்கள்..

 

 ஸ்காபிறோவில் உள்ள மருத்துமனைகளில் இரண்டில் ஒன்றில் கலைஞன் அண்ணாவின் அப்பாவுக்கு இப்படி நடந்திருந்தால் நம்பித்தான் ஆகவேண்டும்.. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்டவயதை தாண்டிய மனிதர்களை ஊனப்பட்டவர்களை கண்டால் எல்லாம் ஏளனம்..கொஞ்சம் ஏலாட்டிக்கும் சொல்வார்கள் இப்படியானர்களோடு மினக்கடும் நேரம்.. இளவயதினரை காப்பாற்றுவது நன்று என்பார்கள்..என் காதலயே கேட்டுட்டு ரொம்ப மனம் நொந்து இருக்கிறன்...சத்திரசிகிச்சைக்கு என்று சொல்லுகீனம் என்றாலே இனி வரும் காலத்தில் யோசித்து யார் என்றாலும் முடிவை எடுங்கள்...கொஞ்சம் தூரம் என்றாலும் டவுண்ரவுண் பக்கம் உள்ள மருத்துமனைக்கு மாற்ற சொல்லி கேட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

வயதானவர்களைப் பராமரிக்காமல் புறந்தள்ளுவது வயது பேதம் (Age Discrimination) பார்ப்பது ஆகும். இவ்வாறான நிகழ்வுகளைக் காண நேரும்போது முறைப்பாடு செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

 

https://www.cpso.on.ca/policies/complaints/default.aspx?id=2092

Link to comment
Share on other sites

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...

Link to comment
Share on other sites

மறைந்த தந்தைக்கு  அஞ்சலிகள்...   பிரிவின் துயரால் வாடும் முரளிக்கு காலம் தான் துயரை ஆற்றவேண்டும்... 

 

ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் தந்தைதான் முதலாவது கதாநாயகன் அதோடு உதாரண மனிதர்... 

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவாவால் துயரிற்றிருக்கும் முரளிக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் பிரிவில் துயருற்றிருக்கும் கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளியுடன் கதைத்தேன் இன்னும் இறுதிக் கிரியைகள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.

 

முரளியின் அப்பா காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்களின் ஆணவத்தாலும், அலட்சியத்தினாலும் தான் இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் முரளி கூறினார். ஒரு வித Age discrimination நடந்துள்ளது என்றும் "85 வயதுவரைக்கும் வாழ்ந்து விட்டார் இனி என்னத்துக்கு" போன்ற உணர்வு வெளிப்பாடுதான் மருத்துவர்களிடம் காணப்பட்டதாகவும்,தனக்கு தெரிந்த மருத்துவ நண்பரை அழைத்துக் கொண்டு காட்டும் போது தவறாக சிகிச்சை கொடுத்துள்ளதாக சந்தேகிக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்.

 

தந்தையை தன் குழந்தையாகவே பார்க்கும் முரளிக்கு தந்தையின் இழப்பு மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது என்பதை உணர முடிந்தது. என்னால் முடிந்த ஆதரவையும் உதவியையும் தருகின்றேன் என்று கூறி ஆறுதல் படுத்தினேன்.  ஆதரவாகவும், மனம் விட்டுக் கதைப்பதும் துயரத்தினை போக்கும் முக்கிய நிவாரணிகள்.

 

எல்லாத் துயரங்களையும் ஆற்றும் காலம், முரளியின் துயரையும் ஆற்றும்.

இது எனக்கும் தொரிம்.அவருக்கு அந்த இழப்பை தாங்கும் சத்தியை இயற்ககை வழங்கும் எனன்று எதிர்பாக்கிறேன்.அந்த பக்குவம் அவருக்கு இருக்கு.மற்றம் இங்கு வைத்திய்ர்களின் அசமந்தப்பொக்கு யாவரும் அறிந்ததே.இதே போக்கால் எமது இனததை சேர்ந்த நன்பன் ஒருவனையும் ஒரு மாததற்க்கு முன் நான் இழந்தேன். :(

Link to comment
Share on other sites

கலைஞன் அண்ணாவின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி.... :(

கலைஞன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

இணைக்கப்பட்டதில் முதலிரு படங்களும் சத்திர சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்டது, மூன்றாவது படம் சத்திர சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். வயது கூடிய நேரங்களில் சத்திரசிகிச்சை செய்வதும் ஆபத்து... :rolleyes:

 

 

 

எங்கே இணைத்திருந்தவர்??

Link to comment
Share on other sites

எங்கே இணைத்திருந்தவர்??

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117164&p=864379

 

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

நான் தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்கும் நண்பர்களில் முக்கியமானவர் முரளியாகும் ஆதலால் அவர் தனது தாய் தந்தையுடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்றும், இன்று தந்தையை  இழந்த அவரது  உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

அவரது தந்தையின் இழப்பு பற்றிய செய்தியை அவர்மூலமாகவே தொலைபேசியில் கேட்டபோது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது.
இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற வார்த்தையுடன் அனுதாபம் தெரிவிப்பது இலகுவாகும் ஆனால் அனுபவரீதியாக அதை சந்திக்கும்போது மனம் ஏற்றுக் கொள்வதில்லை அதுதான் பாசத்தின் வெளிப்பாடு.

முரளி தனது தந்தையை இழந்து தனது தாயாருடன் தனிமையில் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலமையில் இருப்பதாக தோன்றுகின்றது.
அவரது உறவினர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதால் வந்துசேர்வதிற்கு தாமதமாகிறது போலுள்ளது.

தங்களது குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் முரளிக்கும், தாயாருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.!
ஓம் சாந்தி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் முரளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களும்.. கலைஞனின் தந்தையாரது ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுதல்களும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..எதோ ஒரு விதத்தில் மறந்து போனேன்...

அவரின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

மிகவும் துயரமான செய்தி . தந்தையை இழந்து தவிக்கும் கலைனன் அண்ணாவிற்கும் ,அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ...

Link to comment
Share on other sites

வணக்கம் முரளி அண்ணா, மிக அதிர்ச்சிகரமான செய்தி. நேற்றுத்தான் மற்றைய திரியில் எனது கருத்தையும் எழுதி வாழ்த்துவதற்காக ஒரு பச்சையையும் குத்தியிருந்தேன். உங்களை அறிந்ததிலிருந்து, நீங்கள் மிக மென்மையானவர் என்றும் குடும்பத்தினரில் மிகவும் பாசமானவர் என்றும் நன்கு தெரியும். ஐயாவை இழந்து தவிக்கும் உங்களுக்கும், உங்கள் அம்மா, அக்காமார் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மனதைத் தளரவிட வேண்டாம். உங்கள் மனப்
பாரங்கள் கவலைகள் நீங்கி, நீங்கள் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றேன்.

 

முரளி உங்கள் அம்மாவுக்கு பக்கபலமாக ஆறுதலாக இருங்கள்.

Link to comment
Share on other sites

தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் முரளியினதும் அவரது குடும்பத்தினரதும் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

தந்தையை இழந்து தவிக்கும் முரளிக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!. தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துக்கமான செய்தி....ஐயாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.  முரளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து தவிக்கும் முரளிக்கும் தாயாருக்கும் அவரது உறவுகளுக்கும்

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்

 

தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றேன்.
.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.