Jump to content

கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்


Recommended Posts

கீழ் உள்ள பெடியங்களின் பதிவு ஒரு நையாண்டிப் பதிவு என்பதை கூறிக் கொண்டு அதனை இடுகிறேன்,இணயத்தில் ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று பிதற்றிக் கொன்டிருப்பவர்களை நோக்கி இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.சும்மா சொல்லாக்கூடாது நல்லாத் தான் ரீல் விட்டிருகிறாங்கள் பெடியங்கள்....

பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை.

கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன.

இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எந்தவிதத் தடையுமின்றி மிகத் தெளிவாக நாம் காணலாம். கொழும்பின் முக்கிய கட்டடங்கள், கொழும்புத்துறைமுகம், இராணுவ நிலைகள், வான்படை முகாம், திருகோணமலைத் துறைமுகம் என்பன போன்று அதியுயர் இரகசிய இடங்களைக்கூட மிகமிகத் தெளிவாக நாம் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணப்பக்கம் போனீர்களென்றால் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானப்படைத்தளம் முதற்கொண்டு அனைத்தும் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. அதாவது அரசின் இரகசிய இடங்களைக்கூட கூகிள் தணிக்கை செய்யவில்லை. மிகத்தெளிவாக அனைத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியைப் பார்ப்போம் என்று நீங்கள் யாராவது முயன்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வவுனியா மாவட்டத்தின் சிலபகுதிகளும் காட்டப்படுகின்றன. ஆனால் வன்னியின் புதுக்குடியிருப்பை உங்களால் பார்க்க முடியாது. சுண்டிக்குளம், வெத்திலைக்கேணி, கட்டைக்காடு உட்பட முக்கிய கடற்கரைப்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. (முக்கியமான கடற்புலிகளின் பகுதிகள்). விசுவமடு உட்பட பல இடங்களை உங்களால் பார்க்க முடியாது. கிளிநொச்சி நகர்ப்பகுதியை மையமாக வைத்து பெரும்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. இத்தாவில், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என்று புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகள் உள்ள எந்தப்பகுதியையும் உங்களால் பார்க்க முடியாது.

ஆம். மேற்கண்ட அனைத்துப்பகுதிகளும் கூகிள் ஏர்த் மென்பொருளில் மறைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் யாழ்.கோட்டைப் பகுதியை அண்டிய சிறுபகுதி மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. (ஆனால் காங்கேசன்துறை, பலாலி, காரைநகர் போன்றன மிகத்தெளிவாகக் காட்டப்படுகின்றன). அதைவிட தென்மராட்சியில் இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளும் மறைக்கப்பட்டுள்ளன. அவைகூட புலிகளின் பகுதிகளை மறைக்க முற்பட்ட வேளையில் சேர்ந்து மறைக்கப்பட்டவையே என்று கருத இடமுண்டு.

இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது. பாசிசப்புலிகள் உலகில் எவரையும் விட்டுவைப்பதில்லை. எங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. அரசபடையின் அதிமுக்கியமான இடங்களே எந்த மறைப்புமின்றி துல்லியமாகக் காட்டப்படும்போது புலிகளின் தளங்கள், நிலைகள், கடற்கரைகள் மட்டும் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன?

இதைப்பற்றி கூகிள் நிர்வாகம் எதுவும் சொல்லப்போவதில்லை. அவர்களை வெருட்டி வைத்துள்ளனர் நாசகாரிகள். ஜனநாயக வாதிகளான நாங்கள்தான் இவற்றையெதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணிதிரட்டி மக்கள் புரட்சிமூலம் கூகிள் ஏர்த்தைக் காப்பாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சிமூலம் பாசிசத்தை ஒழிக்க வேண்டும். இதற்கான செயற்றிட்டம் எம்மிடமுண்டு.

எம்மோடு தோள்கொடுக்க நினைக்கும் மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயகக் காவலர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.

"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட

போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்"

(கூகிள் ஏர்த் பற்றிய எமது குறிப்பில் நம்பிக்கையில்லாதவர்கள் தயவுசெய்து நாம் சொன்ன இடங்களைத் தேடிப்பாருங்கள். அதன்பின் எம்மோடு போராட்டத்தில் இணையுங்கள்.)

-உம்மாண்டி-

http://tamizboyz.blogspot.com/2006/06/blog...og-post_23.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான புலிக்காச்சலுக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு! சிறிறங்கன் ரேஞ்சுக்கு உயர வாழ்த்துவோம்! :wink: :P

Link to comment
Share on other sites

'சிரி' ரங்கனின் மிளகாய் அரைப்புக்கும் ஒரு பதிவு....

மிளகாய் அரைப்பு

உறைக்கிறது தலை.

யாரோ ஒருவனின் அரைப்புக்கு

அம்மியாயின எங்கள் தலைகள்

உச்சியிலடித்த உறைப்பு

தெரிந்த பின்னும்

சேர்ந்தே அரைப்பர் சிலர்

அறியாமல் அரைபடும் தலைகளுக்கு

ஆழ்ந்த அனுதாபங்கள்

-உம்மாண்டி-

பட உதவி: மகிழன்

அம்மிக்கும் குழவிக்கும் அவ்விரு கைகளுக்கும் நன்றி.

Comments:

என்னடாப்பா, பெடியங்களை முடக்கிட்டாங்கள்/ முடங்கிப்போட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்ப திருப்ப வெளிக்கிட்டிட்டாங்கள் போல :-)

# posted by டிசே தமிழன் : 5:31 AM

அண்ணே டி.சே,

நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.

# posted by பெடியன்கள் : 7:03 PM

அனாமதேயமாக வந்த ஒருவரின் பின்னூட்டம் மட்டுறுத்தலில் நீக்கப்பட்டுள்ளது.

ஐயா, நாட்டு நடப்பு கண்டபடி கிடக்க, நீங்கள் குறுக்கால பூந்து விளையாட்டுக் காட்டாதையுங்கோ. தனியொரு மனிதனுக்கு எம்பதிவுமூலம் நேரடியாகப் பங்கம் விளைவிப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

குறைந்தபட்சம் எங்களின் நேர்மையைப் புரிந்துகொள்ள வேணும்.

நாங்கள் அமெரிக்கராக இருந்துகொண்டு ஈழத்தவரெண்டு சொல்வதில்லை.

மட்டக்களப்பானாக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தான் எண்டு கதை விடுவதில்லை.

டாக்குத்தராக வேலை செய்துகொண்டு சோற்றுக்குச் சிங்கியடிக்கிற கூலிக்காரன் எண்டு வண்டில் விடுவதில்லை.

எங்களுக்குள் நாங்களே பின்னூட்டச் சண்டையிட்டுப் பதிவைத் தூக்கி நிறுத்த நினைப்பதில்லை.

மாறாக இவற்றையெல்லாம் செய்தால்தான் அவர் நேர்மையான, ஜனநாயக, மாற்றுக்கருத்துப் பன்னாடை என்றால் எங்களுக்கு அந்தப்பட்டம் வேண்டாம்.

திரும்பவும் சொல்கிறேன், உங்கள் தளம் வேறு, எங்கள் தளம் வேறு.

காரணங்கள் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சுத் தம்பி.

(தொடக்கத்தில ஐயாவாக தொடங்கி இறுதியில தம்பியாகி முடிஞ்சிருக்கிறதில விசயம் கிடக்கு. விளங்குதோ?)

# posted by பெடியன்கள் : 7:54 PM

//நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.//

பெயரிலி இதே மாதிரி சொன்னவரெல்லோ?

# posted by Anonymous : 8:01 PM

எழுதிக்கொள்வது: yaro

milakaay araippu URaikkiRathu....

23.4 15.6.2006

# posted by Anonymous : 2:06 PM

எழுதிக்கொள்வது: சேதுக்கரசி

நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க!

21.12 15.6.2006

# posted by Anonymous : 6:17 PM

ஐயா அனாமதேயம்,

முதல் வந்து மட்டுறுத்தப்பட்டவர் தானோ நீங்கள்?

ஓம். பெயரிலி டீ.சேக்கு இதேமாதிரியொரு பதில் சொல்லியிருக்கிறார். நீங்கள் வேற ஒரு அருத்தத்திலயும் சொல்லேலதானே?

# posted by பெடியன்கள் : 12:36 AM

பெடியன், (கள்)?

# posted by கானா பிரபா : 6:21 AM

யாரோ, சேதுக்கரசி, கானாபிரபா,

வருகவருக.

முதல்முதலா வந்திருக்கிறியள்.

பிரபா,

என்ன கேக்கிறியள் எண்டு விளங்கேல. நாங்கள் பன்மையா எண்டு சந்தேகம் எண்டா, முந்தின பதிவுகளைப் படியுங்கோ.

அல்லது ஏதாவது இலக்கணப்பிழை இருந்தா, ஐயா ஆளைவிடுங்கோ சாமி. எங்களுக்கு உது கனதூரம்.

# posted by பெடியன்கள் : 7:28 A

http://tamizboyz.blogspot.com/2006/06/blog-post.html

Link to comment
Share on other sites

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை

மனநோயளிகளை குனப்படுதுவதா இல்லை அதுகளை அப்படியே அதுகளின் வழியில் விடுவத என்று :P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஏன் இப்படியும் இருக்கலாமே? அந்த கூகிள் ஏர்த் வளர்ச்சிக்கு உதவி செய்தது சிங்களவர்களாக இருந்தால், அவர்களுக்கு வன்னி பிரதேசம் தெரியாமல் இருந்திருக்கும் அல்லவா?

எனக்கு தெரிந்தவரை கூகிளிற்கு உதவி செய்தவர்கள், கொழும்பு பல்கலைக்கழக(கணனி) 3 சிங்கள மாணவர்களே!

கூகிள் ஏர்த்தில் இலங்கையில் உள்ள அநேகமான பிரதேசங்களின் பெயர்கள் சிங்களத்தில் அல்லவா உள்ளது,. இதிலிருந்தே தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

கூகிளைவிட அமெரிக்க இராணுவ செய்மதிகள் திறமையா படம்பிடிச்சு..கொடுக்க வேண்டியவைக்குக் கொடுக்குமே..! இது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமில்லாம...ஆளில்லா விமானங்கள் வேற அழகாப் பறக்கின்றன..! கூகிளை நம்பித்தான் இலங்கைப் படைகள் இருப்பது போல..அப்பாவியா கட்டுரை வரைஞ்சிருக்கு...அதை வேற அப்பாவித்தனமா இங்க வேற வைச்சிருக்கு...! ஏதோ...ஏமாறிறவை இருக்கும் வரை ஏமாற்றுப்படைப்புகளும் இங்கு வரத்தான் செய்யும்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

ஏன் இப்படியும் இருக்கலாமே? அந்த கூகிள் ஏர்த் வளர்ச்சிக்கு உதவி செய்தது சிங்களவர்களாக இருந்தால், அவர்களுக்கு வன்னி பிரதேசம் தெரியாமல் இருந்திருக்கும் அல்லவா?

எனக்கு தெரிந்தவரை கூகிளிற்கு உதவி செய்தவர்கள், கொழும்பு பல்கலைக்கழக(கணனி) 3 சிங்கள மாணவர்களே!

கூகிள் ஏர்த்தில் இலங்கையில் உள்ள அநேகமான பிரதேசங்களின் பெயர்கள் சிங்களத்தில் அல்லவா உள்ளது,. இதிலிருந்தே தெரியவில்லையா?

சுட்டி நீங்கள் சொல்வதும் ஓரளவு சரி போலத்தான் தெரியுது..காரணம்..கூகிள் ஏத்தில் சில தமிழ் பிரதேசங்கள் சிங்களப் பெயரில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன..! :P :idea:

Link to comment
Share on other sites

கூகிளைவிட அமெரிக்க இராணுவ செய்மதிகள் திறமையா படம்பிடிச்சு..கொடுக்க வேண்டியவைக்குக் கொடுக்குமே..! இது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமில்லாம...ஆளில்லா விமானங்கள் வேற அழகாப் பறக்கின்றன..! கூகிளை நம்பித்தான் இலங்கைப் படைகள் இருப்பது போல..அப்பாவியா கட்டுரை வரைஞ்சிருக்கு...அதை வேற அப்பாவித்தனமா இங்க வேற வைச்சிருக்கு...! ஏதோ...ஏமாறிறவை இருக்கும் வரை ஏமாற்றுப்படைப்புகளும் இங்கு வரத்தான் செய்யும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டுமில்லை நாரதர்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமாம். ஊரில் பக்கத்து வீட்டுச் சமாச்சாரத்தை சந்தியில் வைத்து அசிங்கமாக கதைச்சு வைச்ச குணம் மாறிப் போகுமா?

Link to comment
Share on other sites

அது ஒண்டுமில்லை நாரதர்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமாம். ஊரில் பக்கத்து வீட்டுச் சமாச்சாரத்தை சந்தியில் வைத்து அசிங்கமாக கதைச்சு வைச்ச குணம் மாறிப் போகுமா?

அதுவும் இல்லப் பாருங்கோ.. நையாண்டி என்று போட்டு...எதையும் இங்க வைக்கலாம் பாருங்கோ..அப்படி இருக்கேக்க...நாங்கள் மட்டும் நையாண்டி பண்ணினா..அதையேன் தூக்கிப் பிடிக்கிறியள்..! ஏதோ பிரச்சனை போல..! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இல்லப் பாருங்கோ.. நையாண்டி என்று போட்டு...எதையும் இங்க வைக்கலாம் பாருங்கோ..அப்படி இருக்கேக்க...நாங்கள் மட்டும் நையாண்டி பண்ணினா..அதையேன் தூக்கிப் பிடிக்கிறியள்..! ஏதோ பிரச்சனை போல..! :P :wink:

ஒரே ஆளையே தொடர்ந்து குறி வைத்து எழுதுவதற்குப் பெயர் நையாண்டி இல்லை பாருங்கோ! அதற்கும் முகமூடி( நையாண்டி) போட்டு தப்பிக்க பார்க்கின்றீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மாண்டி எழுதியதை நாரதர் சீரியசாக எடுத்ததன் விளைவு தான் இது. உம்மாண்டி தனது பெயருக்கேற்றால் போல் தான் எழுதியுள்ளார். ஒரு அரசாங்கம் இலவச மென்பொருளை பாவித்து தன் எதிரியின் இருப்பிடங்களை பார்க்கிறான் என்பது எவ்வளவு ஒரு அறிவுபூர்வமான விடயம். அத்துடன் அவர் அந்த மென்பொருளில் உலகின் எத்தனையோ இடங்கள் காண்பிக்கப்படவில்லை என்பதையும் அதிலே உல்ல படங்கள் எவ்வளவு பழையது என்பதையும் உம்மாண்டி பார்க்கவில்லை.

மட்டுறுத்தினர்கள் இதை நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் வடிவாகப் படித்துப் பாருங்கள். புலிகளை பாசிட்டுகளாக எழுதியிருக்கும் போது அதைச் சும்மா நகைச்சுவை என்ற விதத்தில் எடுத்துக் கொள்ளமுடியுமா?

எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களை அவமதி;க்கும் விதத்தை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

ஒரே ஆளையே தொடர்ந்து குறி வைத்து எழுதுவதற்குப் பெயர் நையாண்டி இல்லை பாருங்கோ! அதற்கும் முகமூடி( நையாண்டி) போட்டு தப்பிக்க பார்க்கின்றீர்களோ?

ஒருவரே..அடிக்கடி தன்னிலை அறியாமல் எழுதேக்க...சுட்டிக்காட்டத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாரதர் இணைத்த எண்ணம் எப்படியோ? ஆனால் புலிகளைப் புறம்பாடுவதற்கே என்று அலையும் கூட்டம் எதற்கெடுத்தாலும் புலிகளைத தான் குற்றம் சாட்டும் என்ற குட்டு, இலகுவாக வெளிப்படுத்தப்பட்டபோது அதை இங்கே அனைவருக்கும் காட்டியதில் தவறில்லை.

இப்போது எனக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால் மதிவதனனையும், இவ்வாறான கேலிக்குரிய நபரோடு ஒப்பிட்டு செய்தவன் மூலம் மதியையும் அப்படிக் கருதுகின்றீர்களா?

இதை அப்பவே சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சனை களத்தில் வந்திருக்காதல்லவா!

ஆனால் இருவரின் கருத்துக்களும் வேறுபாடு உண்டு. உம்மாண்டி எழுதுவது அப்பட்டமாகவே புலி எதிர்ப்பு என்பதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இரண்டாம் நபர் புலி எதிர்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல, அதற்குக் தீர்வாக துரோகக் கும்பலைச் சுட்டிக் காட்டுவது தான். மேலும் புலிகளின் மீதான நம்பிக்கையைக் குறைப்பதற்கு விசமத்தனமான கருத்துக்களும் வைக்கப்படுகின்றது!

இதை விட, என்னை நடுநிலமையாளர் என்று கருதாதீர்கள். தமிழிலேயே பிடிக்காத வார்த்தை அது தான். நான் இனச் சார்புள்ளவனாகவே இருக்க விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

அப்ப யாழ் களம் நையாண்டிப் பதிவுகளுக்குமான இடமாக மாறிவிட்டுதோ..இல்ல ஆரம்பத்தில..நகைச்சுவைக்குள்ள

Link to comment
Share on other sites

உம்மாண்டி எழுதிய மற்றப்பதிவுகளையும் வாசித்தால் 'அவர்கள்' தமது நையாண்டியின் மூலம் யாரை விமர்சிக்கின்றனர் என்பது தெளிவாகும்.மிளகாய் அரைப்பது என்ற பதிவுக்கு போடப்பட்டுள்ள படத்திற்கு ஒருவருக்கு நன்றி தெரிவிச்சிருக்கு.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா இதை இட்டவர் யார் என்று தெரியும்.

பெடியங்களின் பதிவுகளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிந்திக்க வேணும்.அது யாழ்க் களத்தில் உள்ள சிலரால் சாதியப் படாத விடயம் எண்டு விளங்குது.

Link to comment
Share on other sites

ஓமங்கோ...எனி இப்படித்தான் திரிச்சுச் சமாளிக்க வேணும். உம்மாண்டினதை இங்க ஒட்டுறதுக்கு ஒரே வழி அதில நையாண்டி என்று போட்டு உங்களுக்க உருவான சீரியஸ்நெச்ஸை இங்க எப்படியாவது காட்டிட வேணும்

அளவு மிகுந்த கற்பனை :lol::lol::lol::(

Link to comment
Share on other sites

உம்மாண்டி எழுதிய மற்றப்பதிவுகளையும் வாசித்தால் 'அவர்கள்' தமது நையாண்டியின் மூலம் யாரை விமர்சிக்கின்றனர் என்பது தெளிவாகும்.மிளகாய் அரைப்பது என்ற பதிவுக்கு போடப்பட்டுள்ள படத்திற்கு ஒருவருக்கு நன்றி தெரிவிச்சிருக்கு.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா இதை இட்டவர் யார் என்று தெரியும்.

பெடியங்களின் பதிவுகளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிந்திக்க வேணும்.அது யாழ்க் களத்தில் உள்ள சிலரால் சாதியப் படாத விடயம் எண்டு விளங்குது

ஓமங்கோ..எவனோ..உம்மாண்டி எழுதி..அதை நீங்கள் நையாண்டி என்று காட்டி...இங்க ஒட்டினா.அதை வைச்சு அலசி ஆராய்ஞ்சு.. சிந்திக்கனும்..எல்லோரும்...!ஆன

Link to comment
Share on other sites

ஓமங்கோ..எவனோ..உம்மாண்டி எழுதி..அதை நீங்கள் நையாண்டி என்று காட்டி...இங்க ஒட்டினா.அதை அவைச்சு அலசி ஆராய்ஞ்சு.. சிந்திக்கனும்..எல்லோரும்...ஆனா தாத்தா எழுதிட்டா...அதைப் பற்றி சிந்திக்காமலே..புலிக்காய்ச்ச

Link to comment
Share on other sites

சுருக்கமாச் சொன்னாங்கோ..உங்கட சிந்தனைல..உம்மாண்டி ஏற்படுத்தின தாக்கத்தைத்தான்..யாழிலையும் எதிர்பாக்கிறீங்க என்றீங்க..!

நல்ல முன்னேற்றங்கோ..பாசிசம் என்டது யாழில முந்தி முந்தி நீக்கப்படுற வார்த்தைகள்..இப்ப பாசிசப் புலிகள் என்டதே யாழில...உம்மாண்டிட நையாண்டியால வந்திருக்குன்னா...அது யாழின்ர சிந்தனை மாற்றம் தானேங்கோ..! ஆனா அதையே பாசிப் புலித் தலைவர் என்று தாத்தா போட்டிட்டா..அது துரோகங்கோ..! அதுக்கு வேறு யாரும் சிரிச்சிட்டா...அது.. துரோகத்திலும் துரோகங்கோ..! நீங்கள் சிந்தியிங்கோ..சரியான வழியிலதான் சிந்திக்க வழி காட்டுறியள்..விளங்குது பாருங்கோ..!

இப்படித்தான் அடிமட்டத்தில இருந்து தூண்டனுங்க..இன்னும் புளக் வழிய குப்பைகள் கிடந்தா கிள்ளி வந்து கொட்டி..அந்த துர்நாற்றத்துக்க..ஆராய்ச்சி பண்ணுங்க...அது துரோகமாவே தெரியாங்கோ...! அதுதான் சிந்தனைக் களத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுங்கோ..! :P :lol:

இங்க நாங்க உங்கட சுயசரிதை கேட்டமாங்கோ..இல்லையே..அப்புறம

Link to comment
Share on other sites

சுருக்கமாச் சொன்னாங்கோ..உங்கட சிந்தனைல..உம்மாண்டி ஏற்படுத்தின தாக்கத்தைத்தான்..யாழிலையும் எதிர்பாக்கிறீங்க என்றீங்க..!

நல்ல முன்னேற்றங்கோ..பாசிசம் என்டது யாழில முந்தி முந்தி நீக்கப்படுற வார்த்தைகள்..இப்ப பாசிசப் புலிகள் என்டதே யாழில...உம்மாண்டிட நையாண்டியால வந்திருக்குன்னா...அது யாழின்ர சிந்தனை மாற்றம் தானேங்கோ..! ஆனா அதையே பாசிப் புலித் தலைவர் என்று தாத்தா போட்டிட்டா..அது துரோகங்கோ..! அதுக்கு வேறு யாரும் சிரிச்சிட்டா...அது.. துரோகத்திலும் துரோகங்கோ..! நீங்கள் சிந்தியிங்கோ..சரியான வழியிலதான் சிந்திக்க வழி காட்டுறியள்..விளங்குது பாருங்கோ..!

இப்படித்தான் அடிமட்டத்தில இருந்து தூண்டனுங்க..இன்னும் புளக் வழிய குப்பைகள் கிடந்தா கிள்ளி வந்து கொட்டி..அந்த துர்நாற்றத்துக்க..ஆராய்ச்சி பண்ணுங்க...அது துரோகமாவே தெரியாங்கோ...! அதுதான் சிந்தனைக் களத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுங்கோ..! :P :lol:

நீர் இப்ப என்ன சொல்லுறீர் என்று எனக்கெண்டா விளங்கேல்ல, இப்ப தாத்தாவை யாழ்க் களத்தில பாசிசப்புலிகள் என்று எழுத விட வேணும் எண்டு சொல்லுறீரா இல்லை என்னைத் தடை செய்ய வேணும் எண்டு சொல்லுறீரா?அதுக்குத் தானே ஒரு திறந்த விவாததிற்கு வாங்கோ விவாதிக்கலாம் என்று சொல்லியாச்சு.அதிலையும் விவாதிக்கலாம் புலிகள் பாஸிஸ்ட்டுக்களா இல்லை தேசிய விடுதலை வீரர்களா என்று.அதுக்குத் தானே மாட்டன் எண்டு சொல்லிப் போட்டியள்?பிறகென்ன யாழ்க் களத்தைப் பற்றிக் குற்றச் சாட்டு.அதுக்குத் தானே மோகன் தரவுகளோட பதில் சொன்னார்?

'பாஸிசஸப் புலிகள்' என்று கூறுவோரை நையாண்டி செய்வதும், புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்று எழுதுவதும் எவ்வாறு ஒன்றாகும்?

குழம்பிப் போய் இருக்கிறீர், கொஞ்சம் ஆறுதலா இருந்து சிந்திக்கவும்.

:wink: :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.