Jump to content

அம்மாளாச்சியும் நானும்.. "ஜீவா"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே 
இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை.



கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட.

எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி.

 நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம்.

பத்து வயசிலையே அந்த அம்மன் கோவிலில் வைத்து "சிவ தீட்சை" எடுத்துவிட்டேன்.
ஐயர் பூசையாக்கும் போது கேட்டுக்கேட்டே எனக்கும் சில மந்திரங்கள்
அத்துப்படி. அந்தளவுக்கு அம்மாளாச்சி என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டா.



ஆனால் அப்பாவுக்கு அப்படியல்ல,

அப்பாவின் முன்னோர்கள் வழி வந்த கோவில் என்று அப்பாவும்,அவர் சகோதரர்களும்
சொல்லுவார்கள். பிற சாதியினர் செல்வதற்கு எல்லாம் தடைவிதிக்கப்பட்டிருந்த
காலங்கள் அவை வெளியில் இருந்து தான் கும்பிடலாம், கோவிலுக்குள்
நுழைவதோ,சுவாமி தூக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்தது, மீறினால் தண்டனைகளும்
வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பிறகாலத்தில் இயக்கங்களின் வருகையோடு பல
மாற்றங்கள் நடந்தது அப்படித்தான் இங்கும் "கிரகப்பிரவேஷம்" என்ற பெயரில்

புலிகளால் அனைத்து சமூகத்தவர்களும் கோயிலுக்குள் செல்லவும், திருவிழாவின்
போது ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திருவிழாவும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
இதை முன்னின்று செய்தது கூட ஒரு வகையில் எமக்கு பெரியப்பா முறை தான்,
அவர்களே திரும்பவும் கோவில் நிர்வாகத்தை பொதுச்சபையைக் கூட்டி திர்ம்ப
வந்தது போன்ற பல சம்பவங்களால் அப்பா கோவிலுக்குள் போவதே இல்லை. எப்போதாவது
வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்திடுவார்.



ஆனால் என்ரை அம்மாளாச்சியும் கன ஷெல்லடியளை எல்லாம் தாங்கினவாவாம்.
எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
தானாம் இருந்ததுகள், அப்ப ஆமிக்காரன் ஆட்லறி அடிச்சு எவ்வளவோ சனம்
உடல்சிதறிப்பலியானார்களாம். எல்லாற்றை சடலமும் பக்கத்திலை இருந்த
பள்ளிக்கூடத்திலையும், கோயில் மடத்திலையும் தான் புதைச்சாங்களாம்.

அந்த கொடுமையுக்குள்ளையும் கனக்கச் சனம் கொண்டுவந்த நகையள், பிணங்களிலை இருந்த நகையளைக் கூட கொள்ளையடிச்சதுகளாம்.

அப்படி அம்மாளச்சியும் தன்ரை வாசல்லை கனக்க கண்டுபோட்டா.



அதே போல அம்மாளாச்சியைப் பற்றிய கதைகளுக்கும் கூடக் குறைவில்லை.

அதுக்காக நான் வரலாறுகளை எல்லாம் சொல்ல வரேல்லைப் பாருங்கோ.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளைஞர்களிடம் தான் கோயில் நிர்வாகம்
இருந்தது. அப்ப தான் பொடியள் கனகாலத்துக்குப் பிறகு கோயிலுக்கு
கும்பாபிசேகம் செய்வதற்காக பல திட்டங்கள் போட்டிருந்தார்கள்.

கேணிகட்டுவது

பூங்காவனம் கட்டுவது

சித்திரத் தேரும்,மணிமண்டபமும்.

அன்னதான மடம்

இப்படிப் பல..



கும்பாபிசேகத்துக்காக இரவு,பகலா பொடியள் வேலை செய்துகொண்டிருந்த காலம்.
ஒருநாள் எல்லாரும் கோயிலடியிலை படுத்திருந்திருக்கிறாங்கள். விடிய
எழும்பிப் பார்க்க குகனை மட்டும் காணேல்லையாம். தேடிப் பார்க்க கனக்கத்
தூரம் தள்ளி ஒரு கடை வாசலிலை ஒவ்வொரு படியிலையும் தலை மேலை,கால் கீழை
இருக்கிற மாதிரி கிடத்தி இருக்காம். அவன் நல்ல நித்திரையாம். "அம்மாளாச்சி
தான் அங்கை தூக்கிக் கொண்டுபோய் போட்டிட்டா" என்று சொல்லுவாங்கள்.



அதை விட சாமப் பூசை முடிஞ்சதும். கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்
நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.
சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்.

ஆனால் எனக்கு அப்பவே இது உண்மையா என்று பார்க்க வேணும் என்று ஆசை. என்னை
அக்கா தான் எப்பவும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவாள். ஒரு நாள் கோயில்
திருவிழா நேரம் நான் அண்ணாட்டை கடைக்குப் போறேன் என்று சொல்லிப்போட்டு
சுவாமி வெளிவீதி வர நான் ஓடிப்போய் உள்ளை படுத்திட்டன்.

"அம்மாளாச்சி வருவா வருவா என்று பார்த்தால் வரவே இல்லை, சலங்கை சத்தம்
கூடக் கேட்கவே இல்லை" பிறகு என்ன நடந்தது என்றே தெரியலை படுத்திட்டன்.



யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சுது அம்மாளாச்சி தான் வந்திட்டா
"வரம் கேட்டிட வேண்டியது தான்" போல என்று பயந்து, நடுங்கி எழும்பிப்
பார்த்தால் அண்ணாவும்,அக்காவும், கோயில்லை மணி அடிக்கிறவனும்
நிக்கிறாங்கள்.



தொடரும்..

  • Like 15
Link to comment
Share on other sites

கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்

நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.

சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்

 

எல்லாரும் பினாட்டு தீத்திறாங்கள் எண்டு கிளியறாய் விளங்குது  :lol:  :lol: .  இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தளவில் ,  யாழில் மீண்டுமொரு அதிர்வு ஏற்படுவதற்கான சமிக்கைகளைக் காண்கின்றேன் . இளயதலைமுறையை சேர்ந்த உங்களின் சாதியம் பற்றிய கண்ணோட்டத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் .வலிமிகுந்த உண்மைகள் பேசப்பட்டு , அதனால் தெளிவுகள் ஏற்பட்டு நாம் போகப்போகின்ற பாதை செப்பனிடப்படவேண்டும் . உங்கள் தொடருக்கு எனது வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சி ஓகே.ஆனால் இந்த தொடரும் என்கிறதிலதான் பிரச்சனையே.

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஜீவா...

 

நானும் ஒரு காலத்தில் கொழும்புத்துறையை கடந்து போனால் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தவறாமல் போனவன். அங்கு தான் என் மச்சளுக்கு சின்ன முத்தமும் கொடுத்து ஆரம்பித்தவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசித்ததும்  எங்கள் ஊர் அம்மன் நினைவும் அது சார்ந்த விடயங்களும் நினைவில் வந்திட்டுது. வந்திட்டுது.

Link to comment
Share on other sites

எனது வீட்டுக்கு போகும் வழியிலும் ஒரு அம்மன் கோவில்.அதில் ஊர் பெடியள் தான் சிரமதானம் செய்கிறது.பிறகு இரவாக களவாக கோழி பிடித்து கோழிப்புக்கை சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் இன்றும் நினைவில் உண்டு. :D  :D
 
கோயில் பூசை தொடக்கம் அன்னதானங்கள் வரை கீழ் சாதியினர் வெளியில் நின்று தான் திருநீறு தொடக்கம் பிரசாதம் வரை வாங்குவார்கள்.மனதில் பெரிய மனவுறுத்தலாக இருக்கும்.சிலகாலத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டேன்.
 
தொடருங்கள் ஜீவா.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லடியில்....கணப்பொழுதில் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.....அதை இன்று நினைத்தாலும் பயம் போகவில்லை....நீங்கள் சொன்னவைகள் யாவும்  உண்மை...இவைபற்றிய கதைகளும் எனக்கு தெரியும்.... தொடருங்கள் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, ஒரு தன்னிலைத்தன்மையில் கதை சொல்லுகின்றீர்கள்!

 

ஒரு குழந்தை கதை சொல்வது போல, அழகாக இருக்கின்றது!  :D

 

தொடருங்கள்!

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

 ஜீவா நீங்கள் அப்பவே கடவுளைக்காண வெளிக்கிட்டிருக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா...

 

உங்களது எழுத்துப்பணி  தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்

நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.

சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்

 

எல்லாரும் பினாட்டு தீத்திறாங்கள் எண்டு கிளியறாய் விளங்குது  :lol:  :lol: .  இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தளவில் ,  யாழில் மீண்டுமொரு அதிர்வு ஏற்படுவதற்கான சமிக்கைகளைக் காண்கின்றேன் . இளயதலைமுறையை சேர்ந்த உங்களின் சாதியம் பற்றிய கண்ணோட்டத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் .வலிமிகுந்த உண்மைகள் பேசப்பட்டு , அதனால் தெளிவுகள் ஏற்பட்டு நாம் போகப்போகின்ற பாதை செப்பனிடப்படவேண்டும் . உங்கள் தொடருக்கு எனது வாழ்த்துக்கள் .

 

குறிப்பிட்ட சம்பவங்களில் நேரடித்தொடர்பு இல்லாமல் கேள்விப்பட்டவற்றையே எழுதுவதால், ஒரு கதை சொல்லியாக என் வரம்புக்குள் நடந்த சம்பவங்களின் கோப்புக்களாகவே எழுத முனைகிறேன்.

ஆனால் இது சாதியத்திற்கான ஒரு பதிவு அல்ல. :)

 

பினாட்டு தீத்துறது என்பது புதிய உரைநடையாய் இருக்கிறது. :rolleyes:

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும். :)

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட சம்பவங்களில் நேரடித்தொடர்பு இல்லாமல் கேள்விப்பட்டவற்றையே எழுதுவதால், ஒரு கதை சொல்லியாக என் வரம்புக்குள் நடந்த சம்பவங்களின் கோப்புக்களாகவே எழுத முனைகிறேன்.

ஆனால் இது சாதியத்திற்கான ஒரு பதிவு அல்ல. :)

 

பினாட்டு தீத்துறது என்பது புதிய உரைநடையாய் இருக்கிறது. :rolleyes:

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும். :)

 

நான் நகைச்சுவைக்கே அந்த சொல்லாடலைப் பாவித்தேன்  .  பினாட்டு தீத்துறது எண்டால் குணசறீபுலூட்டோ சாப்பிடுறதுக்கு முதல் வேர்சன்  :lol: :lol: :D :D  ( ஒருவரை இலகுவில் ஏமாற்றுதல் ) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா...ஆவலுடன் எதிர்பாக்கிறன் மீதியை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராச்சியில அம்மாளாச்சியைக் கூட விட்டு வைக்க இல்ல...ம்ம்ம்.. தொடரட்டும். :)

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
தானாம் இருந்ததுகள்,

 

உங்கடை கதை வாசிச்சன் . நல்லாய்தான் எழுதிறியள் . நீங்கள் சொல்லிற கோயில் அல்வாய் முத்துமாரிஅம்மன் கோயில் எண்டு நினைக்கிறன் . அதிலை மில்லர் நெல்லியடியிலை அடிக்கமுதலே , ஆமி கெலியிலை வந்து நோட்டீஸ் போட்டு சனங்களை இந்தக்கோயிலிலை இருக்கசொன்னவங்கள் . அப்பதான் இந்த செல்லடி நடந்தது . அந்த செல் அடியும் ஆர் அடிச்சதெண்டு சனம் கன்னைகட்டி கதைச்சது . அதிலதான் சனம் கூட செத்திது . கிட்டமுட்ட முள்ளிவாய்க்கால் மாதிரி . அப்ப இந்த மீடியாக்கள் இல்லாததாலை விசயம் வெளியாலை வரேலை . நானும் முதல் உதவி இரத்த தானத்துக்கு எல்லாம் போனனான் . மறக்கவேணும் எண்டு நினைக்கிற விசையங்களை எழுதி இருக்கிறிங்கள் . உங்களுக்கு என்ரை பாராட்டுக்கள் தம்பி :)  .

Edited by மைத்திரேயி
Link to comment
Share on other sites

ஜுவா  ஒப்பிறேசன் லிபரேசன்  ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தால்  உலங்கு வானூர்திகளில் இருந்து   மக்கள்  தஞசமடையவேண்டி  இடங்கள் என  குறிப்பிட்டு துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன  அதில் நீங்கள் கதையில் சொல்லும்  கோயிலின் பெயரும் ஒன்று என  நினைக்கிறேன். அதே நேரம்  பலாலியில் இருந்து  ஒலிபரப்பான வானொலியிலும்  மக்கள் தஞ்சமடைய சொல்லி சில இடங்களின் பெயர்களை  அறிவித்துக் கொண்டிருந்தா்கள்.  அதனால் சனங்கள்  சண்டை ஆரம்பித்ததுமே  இலங்கையரசு அறிவித்த  இடங்களில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தார்கள். இறுதி  முள்ளி வாயக்கால் சண்டையில் மக்கள்  இலங்கையரசு அறிவித்த  பாது காப்பு  பிரதேசங்களில்  பெருமளவான மக்கள்  தஞ்சமடைந்ததை போல.  பிறகு  பெருமளவாக  இறந்து போனார்கள். நீங்கள் எழுதும் கோயிலடியில்  குறைந்தது  ஆயிரம் பேர் அன்றே  கொல்லப் பட்டிருந்தனர். மந்திகை வைத்திய சாலை நிறைந்து வழிந்திருந்தது  அதற்கு மேல் எழுத விருப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் அருள் என்றும் கிடைக்க வேண்டும்.... அம்மன் அருள் தொடர வாழ்த்துக்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த சின்ன வயசிலேயே உங்களுக்கு நல்ல எழுத்தாற்ற‌ல் ஜீவா..தொட‌ருங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சி ஓகே.ஆனால் இந்த தொடரும் என்கிறதிலதான் பிரச்சனையே.

நேரப்பிரச்சனை தான் காரணம். வேலையில் இருந்தபடியே எழுதுவதால் அதிகம் எழுதமுடிவதில்லை.

காக்கவைக்காமல் விரைவிலெயே முடித்து விடுகிறேன்.

 

நன்றி ஈழப்பிரியன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

தொடருங்கள் ஜீவா...

 

நானும் ஒரு காலத்தில் கொழும்புத்துறையை கடந்து போனால் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தவறாமல் போனவன். அங்கு தான் என் மச்சளுக்கு சின்ன முத்தமும் கொடுத்து ஆரம்பித்தவன்.

 

கோயில்லையே கிஸ்ஸா ஆ?????? :rolleyes::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை வாசித்ததும்  எங்கள் ஊர் அம்மன் நினைவும் அது சார்ந்த விடயங்களும் நினைவில் வந்திட்டுது. வந்திட்டுது.

 

அநேகமா எல்லா ஊரிலையும் ஒரு அம்மன் கோவிலாவது இருக்கும், அந்த வகையில் அநேகம் பேருக்கு அதனோடு தொடர்புடைய ஞாபகங்களும் இருக்கும். ஆனால் ஏன் எக்கோ பண்ணுறிங்கள்???? :lol::icon_mrgreen:

 

நன்றி அக்கா உங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

எனது வீட்டுக்கு போகும் வழியிலும் ஒரு அம்மன் கோவில்.அதில் ஊர் பெடியள் தான் சிரமதானம் செய்கிறது.பிறகு இரவாக களவாக கோழி பிடித்து கோழிப்புக்கை சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் இன்றும் நினைவில் உண்டு. :D  :D
 
கோயில் பூசை தொடக்கம் அன்னதானங்கள் வரை கீழ் சாதியினர் வெளியில் நின்று தான் திருநீறு தொடக்கம் பிரசாதம் வரை வாங்குவார்கள்.மனதில் பெரிய மனவுறுத்தலாக இருக்கும்.சிலகாலத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டேன்.
 
தொடருங்கள் ஜீவா.

 

அப்ப நுணா அண்ணாவும் பெரிய விளையாட்டெல்லாம் காட்டியிருக்கிறிங்கள் போல .. :D

 

உண்மை. பல கோவில்களில் இன்றும் அதே தான் தொடருகிறது. பிரபலமான ஆலயங்களில் விருப்பம் இல்லையெனினும் கூட வருமானத்துக்கு வேண்டியாவது அனுமதித்தாலும், சுவாமி தூக்குவது போன்றவற்றை உள்ளூர்வாசிகளே செய்கிறார்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லடியில்....கணப்பொழுதில் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.....அதை இன்று நினைத்தாலும் பயம் போகவில்லை....நீங்கள் சொன்னவைகள் யாவும்  உண்மை...இவைபற்றிய கதைகளும் எனக்கு தெரியும்.... தொடருங்கள் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

 

அப்ப உங்கள் வயதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. :rolleyes:

 

பல சம்பவங்கள் கேள்விப்பட்டவற்றையே வைத்து எழுதுவதால் சிலதை தவிர்த்தே எழுதுகிறேன்.

ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

 

நன்றி அல்வாயான் அண்ணா, உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, ஒரு தன்னிலைத்தன்மையில் கதை சொல்லுகின்றீர்கள்!

 

ஒரு குழந்தை கதை சொல்வது போல, அழகாக இருக்கின்றது!  :D

 

தொடருங்கள்!

 

இதில் சில சம்பவங்கள் நான் தவழ்ந்து கொண்டு இல்லை அம்மாவின் வயிற்றினுள் இருக்கும் போது நடந்தவை அதனாலோ என்னவோ தெரியவில்லை. :rolleyes:

 

நன்றி அண்ணா,வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

ஓ  அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் போல? தொடர் மச்சி.

 

ஆக மொத்தம் என்னைக் காட்டிக்கொடுக்கிற பிளானோ மச்சான்???? :unsure::rolleyes:

 

விரைவில் முடித்து விடுகிறேன். நன்றி நண்பா :)

 ஜீவா நீங்கள் அப்பவே கடவுளைக்காண வெளிக்கிட்டிருக்கிறியள் .

 

:D :D :D

கொடியேற்றத்துக்கு முதல் நாள் வைரவரைக்கட்டுறது என்று கேள்விப்பட்டிருக்கிறியளோ?

அப்படித்தான் காவலுக்கு அம்மன் வெளிய வருவா என்று சொல்லுவார்கள் அதான் எப்படி இருப்பா என்று பார்க்கலாம் என்று தான். :rolleyes:

 

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீவா...

 

உங்களது எழுத்துப்பணி  தொடர வாழ்த்துக்கள்.

 

நன்றி விசுகு அண்ணா, :)

உங்கள் அனைவரின் ஊக்கம் தரும் உறசாகம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு ஜீவாவின் பதிவு.தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன்.ஆனால் சாத்திரி சொன்ன தகவலைப் பாத்தவுடன் நெஞ்சு கன்க்குது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.