Jump to content

உங்கள் சாப்பாட்டுக் கோப்பையை யார் கழுவினம்?: நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நிழலிக்கு நன்றிகள்.

இப்படியொரு திரி  என் வீட்டில் நடக்கும் விடயம்

நான் பார்த்த விடயங்கள் பற்றி  எழுதணும் என்றிருந்தேன்.

 

முதலில் குடும்பம் என்று வந்துவிட்டபின் எச்சில் கோப்பை என்பதில்  எனக்கு உடன்பாடில்லை.

அத்துடன் நான்தான் கழுவுவேன் நீதான் கழுவணும் என்பதிலும் உடன்பாடில்லை.

 

நாங்கள் ஒன்றாக  இருந்து  சாப்பிட்டால்  எனது கோப்பை உட்பட எல்லாகோப்பையையும்  மனைவி  எடுத்துக்கொண்டு  போவார்.

நான் தனியே  இருந்து சாப்பிட்டால் கழுவி  வைப்பேன்.  நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மனைவி  வேறு அலுவலாக  இருந்தால் மக்கள் எடுப்பார்கள். நானும் எடுப்பதுண்டு. அநேகமாக என்னை அனுமதிக்கமாட்டார்கள். இது தாயிடமிருந்து மக்களுக்கு வந்தது.  விருந்தினர்கள் வந்தால் பறித்து கழுவியது இல்லை.  தாங்கோ என்று என்று கேட்பதுண்டு.

 

ஞாயிறு நடந்த ஒரு சம்பவம்.

நான் காலையில் முழுகிவிட்டு வந்து கைநகம் வெட்டிக்கொண்டிருந்தேன்.

 பெரியவள் எனது கால் நகங்களைப்பார்த்தபடி பக்கத்தால் போனாள்.   திரும்பி  வந்து கீழே எனது காலடியில் உட்கார்ந்தபடி காலைத்தாருங்கோ அப்பா என்றாள்.  கொடுத்தேன்.  கால் நகங்களை  அவளே  வெட்டிவிட்டாள்.   இது பற்றியும் எழுதுங்கள்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கி சில வீடுகளுக்கு போனால் இப்படித் தான் இருக்கும் ஏன்.......?

 

 

dirty%20dishes%20sinkful%20lots%20filthy

Link to comment
Share on other sites

ஐயா மேசையில் இருக்க சாப்பாடு வரும் சாப்பிட்டுவிட்டு கையை மட்டும் கழுவுவதான் எனது வேலை .

நினைக்கவே பயமாக இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜாலியா குடும்பம் நடத்திற ஆட்களிட்ட கேட்கப்பட்ட கேள்வி. தனியாக இருந்து தவில் அடிக்கிற ஆட்கள் இந்தத் திரிக்குள்ள எட்டிப் பார்த்தால் கடுப்புத்தான் வரும். :D

கல்யாணம் கட்டின ஆம்பிளைகள் எல்லாரிடமும்...இந்த பீத்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ட‌ கோப்பையை நான் தான் கழுவிறது[வேற யார் கோப்பை கழுவுறத்திற்கு இருக்கினம் :lol: ]...எங்கே போனாலும்,அவங்கட‌ வீட்ட டிஸ்வோச‌ர் இருந்தாலும் நான் என்ட‌ கோப்பையை கழுவி வைச்சிடுவன்.
 
எனக்கு மற்றாக்களின்ட‌ கோப்பையை கழுவப் பிடிக்காது...சில பேர் சாப்பாட்டுக்கு வந்தால் கோப்பையை வைச்சிட்டு போய் கையை கழுவுங்கோ என்ட‌வுட‌ன் கோப்பையை கழுவாமல் வைச்சிடுவினம்.அதனால் அடுத்த தட‌வை அப்படி சொல்றேல்ல :D
 
எனக்கு என்ட‌ சில நண்பர்கள் சாப்பிட‌ வந்தால் அவர்கள் சாப்பிட்ட கோப்பையை வாங்கிக் கழுவ விருப்பம் :)
Link to comment
Share on other sites

நான் எதையுமே கழுவுவதில்லை  :lol: :lol: எல்லாரும் மூக்கை  பொத்திக் கொள்ளுங்கோ. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசியாவில் போட்ட அத்திவாரம் இடிஞ்சு போக...

ஐரோப்பா வந்து சேர்ந்தபோது காசுதேவை கிட்னி கண் விற்கும் அளவிற்கு வந்திருந்தது.
அப்போது நண்பர் ஒருவர் தான் முன்பு வேலை செய்த ஒரு ரேச்டுரண்டில் வேலை எடுத்து தந்தார்.
அன்று தூக்கின கோப்பைதான் இன்னமும் விடவில்லை ............ இனி விடுவதாய் எண்ணமும்  இல்லை.
"கோப்பையோடு ஒரு காதல்" என்று ஒரு கதையே எழுதலாம்.
 
அமெரிக்க வந்தபோது நினைத்தேன் ............... ச்சே இந்த அமெரிக்க வாழ்க்கை என்னை கோப்பையிடம்  இருந்து பிரித்துவிடுமோ என்று . மாணவர்கள் படிக்கும் காலுரிகளில் மட்டுமே வேலை செய்யாலாம் என்று சொன்னார்கள். அன்றைக்கே காண்டீனுக்க புகுந்து விட்டேன். 
 
எனது நண்பர்கள் வந்தாலும் வேண்டியே கழுவுவேன் (மற்றவர்களின் ) கழுவுதலில்  எனக்கு நம்பிக்கை இல்லை. கோப்பை எனதல்லவா?
 
ஒரு நண்பி வந்து............. நாம் சாப்பிட்டு முடிய தனது கோப்பையையும் எனது கோப்பையையும் எடுத்து சென்று கழுவினாள். எதி ஒரு கற்பனையில் நான் இருந்திருக்க வேண்டும்  மறுநாள்தான் ஏன் நான் அவளது கோப்பையை வேண்டி கழுவவில்லை என்று யோசித்தேன். 
Link to comment
Share on other sites

நான் எதையுமே கழுவுவதில்லை  :lol: :lol: எல்லாரும் மூக்கை  பொத்திக் கொள்ளுங்கோ. :icon_mrgreen:

 

 

 வீதியில் போகும்போது கவனம் ஈக்கள் பின்னுக்கு மொய்க்க தொடங்கிவிடும்  :lol:

இப்பதான்  Dishwasher Machine வந்திட்டதே பல வீடுகளில், இதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

 

 

சமைக்கவே செய்கிறம், இது செய்யமாட்டமா?

Link to comment
Share on other sites

எனது நண்பர்கள் வந்தாலும் வேண்டியே கழுவுவேன் (மற்றவர்களின் ) கழுவுதலில்  எனக்கு நம்பிக்கை இல்லை. கோப்பை எனதல்லவா?

 

இங்கும் சிலரை அவதானித்திருக்கிறேன். கோப்பை கழுவுகிறேன் என்ற பெயரில் சும்மா தண்ணீரில் அலசி வைத்து விட்டு செல்வார்கள். ஆனால் கோப்பை சரியாக கழுவுப்பட்டிருக்காது. சாப்பாடு ஒட்டியபடி இருக்கும். கூடுதலாக ஆண்களிலும், சிறுவர்களிலும் இந்த பழக்கம் உள்ளது.

அதேபோல் ஆண்களில் சிலர் சமைத்தால் சட்டி, பானையை பின்னர் சரியாக கழுவாமல் வைத்து விடுவார்கள். அதை பார்த்தால் அவர்கள் சமைத்த உணவை சாப்பிட மனம் வராது. சமைக்க முன்னர் ஒழுங்காக பாத்திரத்தை கழுவி விட்டு சமைத்தாரா என்ற நினைப்பு வரும்.

Link to comment
Share on other sites

என்ற அம்மா ஒரு ஒரு அரசாங்க உத்தியோகத்தில இருந்தவ,எந்த நேரமும் அரக்க பறக்க தான் ஓடியாடி வேலை செய்வா,அதனால சின்னனில இருந்தே எங்கட உடுப்புகளை துவைப்பதில் இருந்து  எங்கட தனிப்பட தேவைகளை நிறைவேற்றி பழகிவிட்டோம். எனது உணவு தட்டினை நான் தான் கழுவுவேன். அதே நேரம் நான் கழுவிக்கொண்டு இருக்கும் பொது வேறு யார் தட்டுடன் வந்தாலும் வேண்டிக்கழுவுவேன். ஊரில பழகிய பல பழக்கங்கள்   இங்கே நிறைய உதவியாக இருக்கு ....... சமையல் கூட ,



இங்கும் சிலரை அவதானித்திருக்கிறேன். கோப்பை கழுவுகிறேன் என்ற பெயரில் சும்மா தண்ணீரில் அலசி வைத்து விட்டு செல்வார்கள். ஆனால் கோப்பை சரியாக கழுவுப்பட்டிருக்காது. சாப்பாடு ஒட்டியபடி இருக்கும். கூடுதலாக ஆண்களிலும், சிறுவர்களிலும் இந்த பழக்கம் உள்ளது.

அதேபோல் ஆண்களில் சிலர் சமைத்தால் சட்டி, பானையை பின்னர் சரியாக கழுவாமல் வைத்து விடுவார்கள். அதை பார்த்தால் அவர்கள் சமைத்த உணவை சாப்பிட மனம் வராது. சமைக்க முன்னர் ஒழுங்காக பாத்திரத்தை கழுவி விட்டு சமைத்தாரா என்ற நினைப்பு வரும்.

இந்த நிலை இங்கே நிறைய அனுபவித்து விட்டேன், பெருங்குடிமக்கள் செய்யும் வேலைகள் தான் தாங்க முடியாது. ம்ம்ம்ம் நான் சமைக்கும் போதும் சரி சமைத்த பின்பும் சரி சமையலறையை சுத்தமாகத்தான் விடுவேன். என்ன மற்றவர்கள் எப்படி சமைத்தாலும் சாப்பிட்டு விடுவேன். மனம் சரியில்லை என்றால் ஏனோ தெரியா அன்றைய சமையல் மிக ருசியாக இருக்கும் பார்த்து பார்த்து சமைப்பேன் .......ம்ம்ம்ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மேசையில் இருக்க சாப்பாடு வரும் சாப்பிட்டுவிட்டு கையை மட்டும் கழுவுவதான் எனது வேலை .

நினைக்கவே பயமாக இருக்கு .

 

 ஐயனார்! கரண்டி,கத்தி போன்ற ஆயுதங்கள் பாவித்தால் கையும் கழுவத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.