Jump to content

எங்கள் பாலனின் பாதத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் கண்களே

 

துடிக்கும் காட்சி


பாலனின் மேனியில்

 

பலதுளைகள் கொடுங்கோற்  


சிங்களம் செய்த கொடுமை


கொலைக்களத்தின்


அதி உச்சக்கட்டம்


 

அவன் விழிகளில்


தெரிகின்றது அவன் ஒரு


வீரன் மகன் என்று


அவன் விழிகளைக்


கண்டு மிரண்டு அவன்


மேனியில் துளைத்ததா குண்டு


 

சிங்களம் செய்த


கொலை வேள்வியில்


எங்கள் குலவிளக்கை


எரித்ததா  ஈனம் இல்லாச் 


சிங்களம்   ஆடிய


கொலைவெறியில்


தங்கள் இச்சையைத் 


தீர்த்ததா  இச்சிறு வேங்கையின் 


பொற்திருவுருவில்


 

பாரெங்கும்  பரந்திருக்கும் 


நாமெல்லாம் கோர்த்திடுவோம் 


கரங்களைக் கொடுங்


கோலனை ஒளித்திடக் 


கூடிடுவோம் ஒன்றாய்  


கொலைக்களத்தின் உச்சத்தைப் 


பரப்பிடுவோம் உலகமெங்கும்  


எடுத்திடுவோம் சபதம் 


எங்கள்  பாலனின் பாதத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்களத்தின் உச்சத்தைப் 

பரப்பிடுவோம் உலகமெங்கும்  


எடுத்திடுவோம் சபதம் 


எங்கள்  பாலனின் பாதத்தில் 


நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

உறுதியும் வலிமையும் சேர்க்கும் காலத்திற்கு ஏற்ற கவிதைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

எந்த பாலச்சந்திரன்களுக்கும் (அடுத்த தலைமுறைக்கு) பாலச்சந்திரனுக்கு வந்த முடிவு வராமல் எமது இனத்தை பாதுகாக்க ஒன்று பட்டு பாடுபடுவோம்.

Link to comment
Share on other sites

பாரெங்கும்  பரந்திருக்கும் 

நாமெல்லாம் கோர்த்திடுவோம் 

கரங்களைக் கொடுங்

கோலனை ஒளித்திடக் 

கூடிடுவோம் ஒன்றாய்  /////////////காலத்தின் தேவையை உணர்த்தும் வரிகள். இணையட்டும் கரங்கள் இனியாவது. நன்றி ஐயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வா,

எனது சிறு குழந்தையே!

 

சிதறிப் போன முத்துக்களைத்,

தேடித் பொறுக்கி,

மாலையாக்கினாய்!

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

 

Link to comment
Share on other sites

அன்று..

 

கொட்டினர் நச்சு விதையை

உனக்கொரு தடாகமாம்

குளிர்பதனப் பெட்டியாம்

பெருந்திரைக் காட்சியாம்

 

துட்டர் போன தடம்

தெரியவில்லை இன்று

ஒளிந்தனர் ஆடையின்பின்

வருவரோ மறுபடி வாந்தியுடன்..

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி வாத்தியார் .

 

வெள்ளம் வரமுன் அணை கட்டுவது ஒன்று 

வந்தபின் எப்படி  என்று படம் போடுவது ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஒரு பச்சை கடன்! :o


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கவிதை வாத்தியார் அண்ணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்களத்தின் உச்சத்தைப் 

பரப்பிடுவோம் உலகமெங்கும்  

எடுத்திடுவோம் சபதம் 

எங்கள்  பாலனின் பாதத்தில் 

நன்றி  ஐயா

உங்கள் ஆதரவிற்கு நன்றி விசுகு அண்ணா

வியட்நாமில் அன்று ஒரு குழந்தை எரிகாயங்களுடன் 

இன்று எங்கள் குழந்தை சுடு காயங்களுடன் 

அநீதிக்கு நீதி கேட்பது எங்கள் உரிமை மட்டுமல்ல எங்கள் கடமையும் கூட   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியும் வலிமையும் சேர்க்கும் காலத்திற்கு ஏற்ற கவிதைக்கு நன்றிகள்.

நன்றி அகூதா

ஈழத்தமிழர்களை கருவோடு அழிக்கத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் படி இயங்கும்

சிங்கள இனவாத அரசை சர்வதேசத்தின் முன் நிறுத்தி எங்களுக்கு  நீதி கிடைக்கும் வரை ஒன்றுபட்டுப்  போராடினாலே  அது சாத்தியம்

எந்த பாலச்சந்திரன்களுக்கும் (அடுத்த தலைமுறைக்கு) பாலச்சந்திரனுக்கு வந்த முடிவு வராமல் எமது இனத்தை பாதுகாக்க ஒன்று பட்டு பாடுபடுவோம்.

உண்மை நுணாவிலான்  

பாரெங்கும்  பரந்திருக்கும் 

நாமெல்லாம் கோர்த்திடுவோம் 

கரங்களைக் கொடுங்

கோலனை ஒளித்திடக் 

கூடிடுவோம் ஒன்றாய்  /////////////காலத்தின் தேவையை உணர்த்தும் வரிகள். இணையட்டும் கரங்கள் இனியாவது. நன்றி ஐயா 

நன்றி நேற்கொழுதாசன்

சென்று வா,

எனது சிறு குழந்தையே!

 

சிதறிப் போன முத்துக்களைத்,

தேடித் பொறுக்கி,

மாலையாக்கினாய்!

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

நன்றி புங்கையூரான்

 

இந்த ஈனச்செயலைச் செய்த காட்டுமிராண்டி ராணுவம் 

தன்  குழந்தைக்கு இப்படியான ஒரு நிலை வரும் போது கூட  அதை உணரமாட்டான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஞ்சினம் கொண்டு நாம்
வீறுகொண்டு எழுந்திட்டால்
வீணர்கள் கொட்டம்
அடக்கிட முடியாதோ??

நன்றி வாத்தியார் கவிதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கவிதைக்கு நன்றி வாத்தியார்,இசை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் இணைக்கவிதை எழுதியவர்களுக்கும் என் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றிகள் வாத்தியார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

 

 

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

கவிதைக்கு நன்றி இசைக் கலைஞன்

 

நினைத்திருந்தால் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கலாம்

கவிதைக்கு நன்றி வாத்தியார் .

 

வெள்ளம் வரமுன் அணை கட்டுவது ஒன்று 

வந்தபின் எப்படி  என்று படம் போடுவது ஒன்று .

அர்ஜுன் அண்ணா

 

இன்னொரு முறையும்  வெள்ளம் வரலாம் 

அதைத் தடுப்பதற்காவது இனிமேல் எல்லோரும் ஒன்று சேருவோம் 

நன்றி வாத்தியர் கவிதைக்கு.

 

நன்றி வண்டுமுருகன் 

காலத்துக்கேற்ற கவிதை வாத்தியார் அண்ணா....

 

நன்றி சுபேஸ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஞ்சினம் கொண்டு நாம்

வீறுகொண்டு எழுந்திட்டால்

வீணர்கள் கொட்டம்

அடக்கிட முடியாதோ??

நன்றி வாத்தியார் கவிதைக்கு.

முடியாது என்பது ஒன்றுமில்லை.

ஒன்றுபட்டால் மட்டுமே அது சாத்தியம் 

கவிதைக்கு நன்றி வாத்தியார்,இசை

நன்றி ரதி 

 

போராட்டம் என்பது நீண்ட தூரப் பயணம் 

அதில் மக்கள் புரட்சி என்பது எந்த நிமிடமும் வெடிக்கலாம் 

அந்த மக்கள் புரட்சி ஒரு அதிசயம் அல்ல 

எங்களுக்கு இப்போது அவசியம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் இதை பார்த்தேன் வாத்தியார்... கவிதைக்கு நன்றி டங்கு வாத்தியார்.... அந்த பாலனின் புகைப் படத்தை பார்த்து என்னை அறியாமலே கண்ணீர் விட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

அவன் விழிகளில்

தெரிகின்றது அவன் ஒரு

வீரன் மகன் என்று

அவன் விழிகளைக்

கண்டு மிரண்டு அவன்

மேனியில் துளைத்ததா குண்டு

-----

எங்கள்  பாலனின் பாதத்தில் 

 

புலிக்குப் பிறந்தது, பூனையாகாது என்ற தமிழ்ப் பழமொழியை.... நிரூபித்து விட்டான் அந்தப் பாலகன்.

கவிதைக்கு, நன்றி வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

 

சிவப்புச் சால்வை போட்ட மிருகங்களுக்கு, பாலகன் பாலச்சந்திரனின் இறப்பு... இறுதி எச்சரிக்கையாய்... அமைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

 

கொட்டினர் நச்சு விதையை

உனக்கொரு தடாகமாம்

குளிர்பதனப் பெட்டியாம்

பெருந்திரைக் காட்சியாம்

 

துட்டர் போன தடம்

தெரியவில்லை இன்று

ஒளிந்தனர் ஆடையின்பின்

வருவரோ மறுபடி வாந்தியுடன்..

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

 

இசை, தமிழனின் சாபம் கோடாரிக் காம்புகள் தான்...

அதை, இந்தப் பாலகனின் கொலையைப் பார்த்தாவது ஒட்டுக் குழுக்கள் திருந்த வேண்டும்.

இல்லையேல்... இதுகள், எல்லாம்... அமாவாசைக்குப் பிறந்ததுகள் என்றோ.... ஒரு தகப்பனுக்குப் பிறக்காததுகள் என்றோ... நினைக்க வேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.