Jump to content

ஐக்கிய நாடுகள் முன்றலில் அகிம்சைப் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations

Dear Tamil brothers and sisters of America,

Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM.

By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops.

Let us fight for the political rights of all Eelam Tamils.

Dear Tamil brothers and sisters of America

- Collectively let us raise our voices reprimanding President Mahinda Rajapakse Government’s terrorism activities.

- Raise our voice to stop the unleashed brutal ethnic war forced upon our people comprised by the Sri Lankan Government.

- We will appeal to the entire world to protect and preserve the culture in conjunction with the high values of the democracy, by supporting the justifiable wishes of our people who have been harassed, tortured and been victims of genocide by the Sri Lankan Government.

- We have been given an opportunity to raise our voices on behalf of our loved ones in front of the United Nations Headquarters.

- To make use of this opportunity in the proper manner.

* Be present at the United Nations Headquarters to light up

* Solidarity among Tamils by raising your voice against injustice and revenge.

* Fulfill the duty of the time with responsiveness.

Venue: In Front of the United Nations HQ, 42nd St & 1st Ave, NYC.

Friday, 06-30-2006 between 2.00PM and 6.00PM

For additional info. Contact (718) 657-9463.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் வாழ்வுக்காக ஏங்கித் துடிக்கும் உங்கள் உறவுகளுக்காக குரல் கொடுக்க உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.எதிரவரும் வெள்ளிக்கிழமை ஒரு மணியில் இருந்து ஆறு மணி வரை ஐக்கய நாடுகள முன்றலில் எமது உரிமைக் குரலையும் ஒலிக்கச் செய்வோம் அனைவரும் வாரீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அமெரிக்காவில் வாழும் யுூட் போன்ற நண்பர்களும் இதற்காக ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்பலாம்! ஒருமித்த குரலால் தமிழராய் ஒன்றிணைவோம்!

Link to comment
Share on other sites

இளப்பிரியன் முக்கியமான நாட்டிலிருந்து கொண்டு உரிமைக்குரல் எழுப்ப போகின்றீர்கள்.

உங்கள் குரல்களை கேட்டு என்றாலும் அங்கு இருக்கும் வல்லவர்களின் காதுகள் திறபடுகின்றதோ பார்ப்போம்.

அங்கு வாழும் தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு வருவார்கள் என்றே நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

எம்மவர்களுக்காக ஒலிக்கும் குரல் உலகெங்கும் உரத்துக் கேட்கட்டும். அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றுவார்கள் என நம்புகிறோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அகிம்சைப் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

ஒருவிடயம்: நாங்கள் இங்கே இலண்டனில் நிகழ்த்திய அமைதிப் பேரணியின்போது நாம் துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்திருந்தோம். அதேவேளையில் இன்னொரு பகுதியில் சில சிங்களவர்கள் தாமும் ஒரு துண்டுப்பிரசுரம் தயாரித்து "தமிழ்ச்சமூகம்" இதனை வெளியிடுகின்றது என்கின்ற மாதிரி அச்சடித்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்து அங்கே தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியுடன் சென்றதும் அவர்கள் ஓடிவிட்டார்கள்.

இப்படியான சதிவேலைகள் செய்வதில் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர். நாம் எல்லோரும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைக்குரலால் கதவுகள் திறக்குதோ காதுகள் திறக்குதோ தெரியாது.ஆனால் களத்தில் உள்ள எமது உறவுகளுக்கு வைற்றமின் மாத்திரை மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

இந்தப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அமரிக்காவில் நடைபெறும் உரிமைக்குரல் பாராட்டம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அகிம்சைப் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

ஒருவிடயம்: நாங்கள் இங்கே இலண்டனில் நிகழ்த்திய அமைதிப் பேரணியின்போது நாம் துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்திருந்தோம். அதேவேளையில் இன்னொரு பகுதியில் சில சிங்களவர்கள் தாமும் ஒரு துண்டுப்பிரசுரம் தயாரித்து "தமிழ்ச்சமூகம்" இதனை வெளியிடுகின்றது என்கின்ற மாதிரி அச்சடித்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்து அங்கே தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியுடன் சென்றதும் அவர்கள் ஓடிவிட்டார்கள்.

இப்படியான சதிவேலைகள் செய்வதில் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர். நாம் எல்லோரும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது.

சிங்கள அரசினால் மேற்கொண்ட வங்காலைப்படுகொலைகளின் புகைப்படங்களினைக்காட்டி லண்டனில், சிங்களவர்கள் விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினைச்செய்தார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள் என நண்பர் ஒருவர் கேள்விப்பட்டதாகச் சொன்னார். உண்மையாகவா?. சிங்களவர்கள்,எட்டப்பர்கள் நடாத்தும் போராட்டங்களினை நாம் கண்காணிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

போராட்டம் இனிதே வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்...

வளர்க தமிழ் தரணியெங்கும்... வாழ்க தமிழீழம்..

Link to comment
Share on other sites

கந்தப்பு ஜயா....

ஆமாம் சில துரோகி எச்சில்இலைகள் ஜேவிபி காரரோட சேர்ந்து பொய்பரப்புரைகளை செய்யினம்...கடந்த பிபிஸி எதிர்ப்பு போராட்டத்தில் கூட அவர்களுடன் சில துரோகிகளும் நிண்டவையாம்...

எங்கட இளையோர் போனவங்களாம் உவையள் ஆர் ஆக்கள் எண்டு பார்க்க...

நல்ல அடி போட்டிருக்க வேணும் உவங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசினால் மேற்கொண்ட வங்காலைப்படுகொலைகளின் புகைப்படங்களினைக்காட்டி லண்டனில், சிங்களவர்கள் விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினைச்செய்தார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள் என நண்பர் ஒருவர் கேள்விப்பட்டதாகச் சொன்னார். உண்மையாகவா?. சிங்களவர்கள்,எட்டப்பர்கள் நடாத்தும் போராட்டங்களினை நாம் கண்காணிக்க வேண்டும்

ஆமாம் அதனைத்தான் நானும் குறிபிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. தலைமைச் செயலகம் முன்னால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி

ஈழத்தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும் ஐ.நா. தலைமைச் செயலகம் முன்பாக அமெரிக்காவிலுள்ள தமிழ் மக்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.

அமெரிக்காவிலுள்ள பல்வேறு தமிழ் சங்கங்களினால் இணைந்து இப்பேரணி நடத்தப்பட்டது.

பல மாநிலங்களிலும் இருந்தும் பெருந்திரளாக வருகை தந்திருந்த ஈழத்தமிழர்களுடன், தமிழகத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி, தொடர்ந்து நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் கடமை முடிந்து வெளியேறிய அனைத்து நாட்டு பிரதிநிதிகளினதும், அமெரிக்க மக்களினதும் கவனத்தினையும் இப்பேரணி வெகுவாக ஈர்த்திருந்தது.

அமைதிப்பேரணி நடைபெற்ற பகுதியில் சென்ற அனைத்து மக்களுக்கும் அரசினால் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், ஜனநாயகத்தின் உயர் விழுமியங்களையும், மரபுகளையும் உலக நாடுகள் பேண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும், அரசின் நடவடிக்கைகளை விபரிக்கும் விரிவான துண்டுப்பிரசுரங்கள் பெருமளவில் விநியோகிக்கப்பட்டன.

இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கரான மனித உரிமைகளின் சட்டத்தரணி திருமதி கரன் பாஸ்கர் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

அமெரிக்க மற்றும் கனேடிய தேவாலயங்களில் இருந்து பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அமைதிப் பேரணியின் சார்பாக விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் தலைமையில், மனித உரிமைகளின் சட்டத்தரணி திருமதி. கரன் பாஸ்கர் உள்ளிட்ட ஏனைய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுமாக ஐவர் அடங்கிய குழு ஒன்று ஐக்கிய நாடுகள் செயலகத்திற்குள் சென்று, ஐ.நா.வின் செயலாளர் கொபி அனானின் பிரதிநிதிகளிடம் மனுவொன்றினை கையளித்தனர்.

ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஒரு மணி நேரமாக அங்கு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர், பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் மனித உரிமைகள் சட்டத்தரணி திருமதி கரன் பாஸ்கர், அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் இளங்கோவன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சேவியர் அடிகளார், இலங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் ஷ்ரீதரன், அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதியாக சேரன் இளங்கோவன், விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி. உருத்திரகுமார் மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் கருணாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.