Jump to content

அக்கன்தோசிஸ் நிஹிரிகான்


Recommended Posts

கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)


 

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.image0042.jpg?w=1600&h=1200


 

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.


 

‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள்.


 

அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம். வருத்தம், நோய் என்று கூடச் சொல்ல முடியாது. தோலில் ஏற்படும் மாற்றம் என்ற சொல்லாம்.  கறுப்பாத் தடிப்பாக பள்ளங்களும் திட்டிகளுமாக வெல்வெட் போன்ற தோற்றத்தை பாதிப்புள்ள சருமத்தின் பகுதிக்குக் கொடுக்கும்.


 

பெரும்பாலும் கழுத்து அக்குள், முழங்கால், இடுப்புப் பகுதியில் வருவதுண்டு.


 

acanthosisnigricans3.jpg?w=250&h=170

அக்குளில் அக்கன்தோசிஸ் நிஹிரிகான்


 

நோயாளியைப் பொறுத்த வரையில் அதன் அசிங்கமான தோற்றம்தான் அக்கறையை ஏற்படுத்தும். ஆனால் மருத்துவர்களைப் பொறுத்த வரையில் இது தோன்றுவதற்கான அடிப்படைப் காரணம் என்ன என்பதையே ஆராயத் தோன்றும்.


 

காரணங்கள் என்ன?


 

எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவர்களில் இது ஏற்படக் கூடுமாயினும் வேறு சில நோய்களுடன் இதற்குத் தொடர்பு இருக்கக் கூடும்.


 

  • சிலருக்கு இது பிறப்பிலேயே தோன்றுகிறது.

  • வெள்ளைத் தோல் உள்ளவர்களைவிட கருமையான சருமம் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

  • நீரிழிவு நோயாளர்கள் மற்றும் அதீத எடையுள்ளவர்களின் குருதியில் இன்சுலின் அதிக அளவிலிருப்பதுதான் அவர்களிடையே அதிகம் தோன்றுவதற்குக் காரணமாகும்.

  • ரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்பவர்கள் (Hypothyroidism)

  • குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும் சிலரிடையே தோன்றலாம்.

  • அட்ரீனல் சுரப்பி (Adrenal gland ), பிட்டியுடரி சுரப்பி (pituitary gland) ஆகியவற்றின் செயற்பாடுகளில் குறைபாடு இருந்தாலும் தோன்றலாம்.

  • கொலஸ்டரேலைக் கட்டுப்படுத்த உபயோகிக்கும் நிக்கடனிக் அமிலம் (Nicotinic acid ) போன்ற மருந்துகளாலும் ஏற்பட வாய்ப்புண்டு.

  • பெண்களில் மாதவிடாய் குழப்பம், கொழுத்த உடல், ஆண்களைப் போன்ற உரோம வளர்த்தி இவற்றுடன் பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம்.


 

நீரிழிவும் அக்கன்தோசிஸ் நிஹிரிகானும்


 

acanthosisnigricans4.jpg?w=316&h=213

முழங்காலின் பிற்புறத்தே கருப்பான பட்டையாக


 

இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் அண்மைக் காலங்களில் இது நீரிழிவு வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கிறது என்பதே முக்கிய செய்தியாக இருக்கிறது.


 

கொழுத்த உடம்பு வாகையுடைய பல இளம் பிள்ளைகளிலும், இளைஞர்களிடையேயும் இது அதிகமாக காணப்படுகிறது. இதைக் கண்டவுடன் எனக்கு நீரிழிவு வரப்போகிறதே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நீரிழிவு வருவதற்கு முன்னர் இதைக் கண்டுகொண்டது அதிஸ்டம் என எண்ண வேண்டும்.


 

acan1.jpg


 

உடனடியாகவே உணவு முறைகளை மாற்றுவது, அதிகளவு உடல் உழைப்பில் ஈடுபடுவது, எடையைக் குறைப்பது போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அக்கன்தோசிஸ் நிஹிரிகானஸ்சின் அடர்த்தி குறையும். இது குருதியில் இன்சுலின் அளவினைக் குறைக்கும். இது எதிர்காலத்தில் நீரிழிவு ஏற்படாமல் தடுக்க உதவும்.


 

மருத்துவம் 


 

இந்தத் தோல் மாற்றத்தை குணமாக்குவதற்கென விசேடமான சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்குவதிலேயே சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது.


 

  • அதீத எடையுள்ளவராயின் மேலதிக எடையைக் குறைப்பதையே முதல் இலக்காகக் கொள்ள வேண்டும்.

  • அதற்கு உடற் பயிற்சி அவசியம்.

  • அத்துடன் இனிப்பு, மாப்பொருள், எண்ணெய் போன்றவற்றைக் குறைத்து

  • பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேணடும்.


 

அவ்விடத்து சருமத்தின் தடிப்பைக் குறைத்து மெருகூட்டுவதற்கு கிறீம். மற்றும் லோசன்கள் உதவலாம். ரேடின் ஏ (Retin-A ) கலந்தவை சற்று அதிகம் உதவலாம். சுலிசிலிக் அமில கிறீம், யூறியா கிறீம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா மீன் எண்எணய்க் மாத்திரைகளும் உதவக் கூடும்.


 

acanthosisnigricans1.jpg?w=226&h=306

விரல் மொளிகளில்


 

அவ்விடத்தில் சற்று துர்நாற்றம் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் கிறீம் சில் காலத்திற்குப் பூச நேரும்.


 

நோய்க்குக் காரணம் ஒருவர் உபயோகிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை அல்லது வேறு மருந்துகளாக இருந்தால், அல்லது முற் கூறிய நோய்களில் ஒன்று எனில் அதற்கான சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவர் விளக்குவார்.


 

எனது ஹாய் நலமா புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரை நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்

 

http://hainalama.wordpress.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி . ...........டாக்டர் முருகா நந்தனுக்கு என் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.