Jump to content

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்


Recommended Posts

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

கேள்வி கேக்க வேணும்தான்.... ஆனா சாதிச்சவை சொன்னால் கேக்கக்கபடாது.... இந்தியனோடை ஒட்டி வந்து அடிவாங்கிக்கொண்டு ஓடிப்போய் இந்தியாவில பதுங்கீட்டு பிறது சிங்களவனோடை வந்து ஒட்டினவை சொன்னால் கேக்கலாம்.....

அது சரி புலி ஆதரவாளர் எண்டு போட்டுத்தள்ளின சனத்தை நாங்கள்தான் போட்டனாங்கள் எண்டு எப்ப நீங்க உரிமை கோரப்போறீங்க..... சொல்லாமல் இருக்கிறதுக்கும் ஏதாவது இராஜதந்திரம் இருக்கா...???

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

Link to comment
Share on other sites

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

Link to comment
Share on other sites

அப்பு தலா உவருடையை நோக்கம் தெள்ளத் தெளிவா தெரியுது தானே பிறகேன் நேரத்தை வீணாக்குறீர்?

உங்களை சொல்லி என்ன உவை நிர்வாக குழு என்று குந்தியிருக்கிறவைக்கு சைட்சாஜர் வைச்சா எல்லாம் பக்குவமா நடக்கும் :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விசமிகளுக்கு பதில் அளிப்பதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் ஒரு இந்திய எதிர்பலையைத் தூண்ட வேண்டாம். பழையவற்றை மறந்து, ஒன்று கூடும் என்று பாலா அண்ணாவின் சொற்கள் புரிந்திருந்தால் இத்தலைப்பில் விவாதிக்க வேண்டிய தேவை இருக்காது!

Link to comment
Share on other sites

இந்தியா - ஈழம்

இன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது "சிலருக்கு" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் "தமிழீழ ஆதரவாளர்கள்" அனைவரும் "இந்தியாவின் எதிரிகள்" அல்லது "பிரிவினைவாதிகள்" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.

"தமிழீழ ஆதரவாளர்கள்" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

சில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். "இந்திய தேசியத்தை" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று "சிலரால்" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. "தமிழன்" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.

தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.

இந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.

சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் "வெறித்தனமான" அபிமானங்களோ, "சில" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல்களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.

http://thamizhsasi.blogspot.com/2006/06/bl...og-post_30.html

Link to comment
Share on other sites

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

அதுக்கு பேர் இராஜ தந்திரம் இல்லை... வேண்டுகோள்... இந்த இலவு கூட தெரியாமல் எப்பிடியோ குப்பை கொட்டுறீர்...??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அந்த ஒரு உயிர் தானா உயிர் ?

மூத்த பத்திரிiகாயளரும் சிறந்த பத்திரிகையாளருமான பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் 13.02.2001 எழுதிய ஆசிரியர் தலையங்கம் தற்காலத் தேவைகருதி பதிவிடுகிறேன்.

smg17xr.th.jpg

smg28sk.th.jpg

smg37oz.th.jpg

smg42le.th.jpg

Link to comment
Share on other sites

ராஜீவ் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் ?

இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

இது அவர்கள் நேரம். ஆடட்டும்.

எங்களுக்கும் காலம்வரும்.

நம்பிக்கையோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

Link to comment
Share on other sites

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

அப்பஉது டென்மார்க் துரையின்ரை கோஸ்டி. அவற்றை கதையிலேயே விளங்குது. கொஞ்ச நாளா நிகழ்சிகள் அது இது என்று அலைஞ்சவையள் ஆக்கள் தேறேல்ல போல அது தான். இஞ்ச வந்து குலைக்கீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலையும் பாலசிங்கத்தின் பேட்டியும்

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கடந்தவாரம் இந்தியத் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 15 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தெரிவித்த கருத்து இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் மாத்திரமல்ல, பிரதான சர்வதேச ஊடகங்களிலும் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இரு நாடுகளினதும் பிரதான பத்திரிகைகள் சகலதுமே அவரின் கருத்துக் குறித்து அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரிய தலையங்கங்களைத் தீட்டியிருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் அக்கருத்து பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கலாநிதி பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. 1991 மே 21 இல் சென்னைக்கு சமீபமாகவுள்ள ஷ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், `அது ஒரு மிகப்பாரிய - வரலாற்று முக்கியத்துவ அனர்த்தம். நாம் அதற்காக மிகவும் வருந்துகின்றோம். கடந்த காலத்தைப் புறந்தள்ளி வைத்துவிட்டு இந்திய அரசாங்கமும் மக்களும் பெருமனதுடன் இலங்கை இனநெருக்கடியை வித்தியாசமான நோக்குடன் அணுக வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த காலத்தைப் போன்று கசப்பான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதிமொழியை விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு வழங்க முடியுமா என்று கலாநிதி பாலசிங்கத்திடம் கேட்கப்பட்டபோது, `எந்தவொரு சூழ்நிலையின் கீழும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் என்ற உறுதிமொழியை இந்தியாவுக்கு தெரிவித்திருக்கின்றோம். ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இலங்கைப் பிரச்சினையில் பற்று அறுந்த அணுகுமுறையையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. சமாதான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்' என்று பதிலளித்திருக்கிறார்.

கலாநிதி பாலசிங்கம் அளித்த பேட்டியை நாமெவரும் முழுமையாகப் பார்க்கவில்லை. அது முழுமையாக இன்னும் ஒளிபரப்பப்படவுமில்லை என்றே அறிய முடிகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் வெளியான செய்திகளையே நாம் அறிந்திருக்கிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொலை செய்தமைக்காக விடுதலை புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் கலாநிதி பாலசிங்கத்தின் பேட்டியை அர்த்தப்படுத்திக் கொண்டன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்பதை அவர்களின் அரசியல் ஆலோசகர் ஒத்துக் கொண்டிருப்பதாகவோ, அக் கொலைக்காக இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாகவோ கருதக் கூடியதாக கலாநிதி பாலசிங்கத்தின் வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது, `கலாநிதி பாலசிங்கத்தின் கூற்று குழப்பமானதாகவும் எதுவுமே தெளிவற்றதாகவும் இருக்கிறது' என்று பதிலளித்திருப்பதை இக்கட்டத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால், பேட்டி ஒளிபரப்பான மறுநாளே இந்திய வெளியுறவு இணையமைச்சர் ஆனந்த் சர்மா `ராஜீவ்காந்தி கொலையை இந்திய அரசாங்கம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. இந்திய மக்களும் அக்கொலையை ஒரு போதும் மறந்து விடப் போவதில்லை' என்று அதே தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். விடுதலை புலிகளை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என்று வலியுறுத்தியே இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் கருத்து வெளி யிட்டன. கருத்துகளைத் தான்தோன்றித்தனமாக வெளியிடுவதில் பெயரெடுத்த அரசியல்வாதிகளும் அவ்வாறே பேசினார்கள். ஆனால், கலாநிதி பாலசிங்கத்தை பேட்டிகண்ட இந்தியச் செய்தியாளர் தற்போதைய சூழ்நிலையில் எதற்காக முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பில் கேள்வியை எழுப்புவதில் அக்கறை காட்டினார் என்பதும் அக்கேள்விக்கு விடுதலை புலிகளின் ஆலோசகர் அளித்த பதிலுக்கு ஊடகங்கள் எதற்காக அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில் அக்கறை காட்டின என்பதும் இங்கு ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பது எமது அபிப்பிராயம்.

உண்மையிலேயே, ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலை புலிகள் தரப்பினால் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருப்பது இது தான் முதற்தடவையல்ல. இலங்கை அரசாங்கத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்துகொண்ட பின்னர் 2002 ஏப்ரல் 10 இல் வன்னியில் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், `அது ஒரு துன்பியல் நிகழ்வு' என்று தெரிவித்திருந்தார். கலாநிதி பாலசிங்கமும் பிரபாகரனின் அந்தப் பதிலின் தொனியிலேயே தொலைக்காட்சிப் பேட்டியில் இப்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியுமே இந்தியாவின் ஆதரவும் பங்கேற்பும் இன்றி பயனளிப்பதென்பது அறவே சாத்தியமில்லை என்று முழு உலகமுமே நம்புகின்ற நிலையில், சமாதான முயற்சிகளில் இந்தியாவின் தீவிர பங்கேற்பை நாடி விடுதலை புலிகளின் சார்பில் கலாநிதி பாலசிங்கம் கருத்துத் தெரிவித்திருப்பதில் தவறேதும் இருக்கமுடியாது. முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தியா தொடர்பில் இத்தகைய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை தமிழ் மக்களும் இனநெருக்கடிக்கு இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு மாத்திரமல்ல, தங்களுக்கு நேருகின்ற தற்போதைய அவலங்களுக்கு முடிவைக் காணவும் இந்தியாவின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடி நிற்கிறார்கள். இலங்கையில் மீண்டும் போரையொத்த சூழ்நிலை தோன்றியிருக்கும் இவ் வேளையில், ஒரு தசாப்தத்துக்கும் கூடுதலான காலமாக இலங்கை நெருக்கடியில் தூரவிலகி நிற்கும் இந்தியா மீண்டும் அக்கறையைக் காண்பிக்க நிர்ப்பந்திக்கக் கூடியதாக தமிழ் நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் தோன்றிவரும் உணர்வலைகளைத் திசை திருப்பி விடுவதற்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான கலாநிதி பாலசிங்கத்தின் கருத்தை இரு நாடுகளிலுமுள்ள சில சக்திகள் தாராளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனவா என்பதே எமக்குத் தோன்றும் வலுவான சந்தேகம்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பத்திரிகையில் இருந்து

பிரபாகரனின் அனுமதியின்றி இந்தியாவிடம் மன்னிப்பு கோரினார் பாலசிங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வாங்க அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலே புலிகள் அமைப்பின் நியாயவாதி அல்லது பிரதம பேச்சாளராகிய அன்ரன் பாலசிங்கம் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது சம்பந்தமாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இதனால் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையே பாரதூரமான மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து பிரபாகரன் கடுமையான கோபத்துக்குள்ளாகியதாகவும் அவர் தனது செய்மதித் தொடர்பு மூலம் இயங்கும் தொலைபேசி மூலமாக லண்டனிலிருக்கும் அன்ரன் பாலசிங்கத்துடன் அவரசமாகத் தொடர்பு கொண்டு அவசியமில்லாத நேரத்தில் அவசியமில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதாக கடுமையாகப் பேசி பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தியதாகவும் குறித்த வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கு பாலசிங்கம் பதிலளித்திருப்பதாகவும் அப்பதிலில் அவர் தெரிவித்திருப்பதற்கேற்ப, இந்தியாவின் என்.டி.ரீ.வி. தொலைக்காட்சி சேவையின் ஜேர்மன் நாட்டு பெண் அறிவிப்பாளர் ஒருவரே தன்னுடன் குறித்த செவ்வியை நடத்தியதாகவும் அதன் பின்னர் அச்செவ்வி பற்றி தொகுப்புரையை மேற்படி பெண் அறிவிப்பாளர் வெளியிடும் போது அவரின் தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை விடயங்களைத் திரித்துக் கூறியிருப்பதாகவும் பாலசிங்கம் பிரபாகரனுக்கு அறிவித்துள்ளார் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் பாலசிங்கத்துக்கு பிரபாகரன் அளித்த பதிலில் பாலசிங்கம் அவர்மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட்டார் எனக் கூறியிருப்பதாகவும் மேலும் இது சம்பந்தமாக பாலசிங்கத்திடம் பிரபாகரன் சில முக்கிய விடயங்களைத் தெளிவாகத் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. பிரபாகரன் இவ்வாறு கூறியிருப்பதற்கேற்ப முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி இந்திய தொலைக்காட்சி சேவை தான் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கும் விடயத்திலேயே பெரும் பிரச்சினை எழுந்திருப்பதாகவும் அந்தத் தகவலை தான் மறுப்பதாகவும் பிரபாகரன் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் இடையே பாரதூரமான கருத்துமோதல் நிலை உருவாகியுள்ள போதும் இறுதியில் இவ்விடயம் பற்றி புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் "ஹிந்து" பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், மேற்படி மன்னிப்புக் கோரல் விடயம்பற்றி புலிகள் இயக்கத் தலைவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் மட்டுமே கூறியுள்ளார். -லங்காதீப 02.07.2006-

http://www.thinakkural.com/news/2006/7/4/s...ws_page5669.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.