Jump to content

சீனி முறுக்கு எப்படி செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சீனி முறுக்கு எப்படி செய்வது?
Link to comment
Share on other sites

முறுக்கு சுட தெரியுமா? அல்லது அதற்கான விளக்கமும் வெணுமா? :roll:

முறுக்கு சுட

1.கோதுமை மா/ கொதுமை மா+ கடலை மா கலவை உங்கள் அளவுக்கு அளந்து பொடுங்கோ :wink:

2.சுவைக்கு உப்பு சேருங்கோ,

நற்சீரகம்/ எள்ளு சிறிதளவு செருங்கோ.

3.இடியப்ப மா குழைக்கிற பதத்துக்கு குழைச்சு எடுங்கோ

4.நட்சத்திரம்/ ஆடித்தன்/ இப்படி பல்வேறு வடிவங்களிலை மாத்த கூடிய இடியப்ப தட்டு இருக்கும் அதிலை விரும்பினத போட்டு

5.சுளகிலை/ மரக்கறிவெட்டுற பலகையிலை நீளம புளிஞ்சு எடுங்கோ

6.ஒரு அங்குல துண்டுகளா வெட்டுங்கோ

7. அத எண்ணையிலை பொரிச்சு எடுங்கோ

ஒரு பெரிய சட்டியை எடுத்து

1 சில்வர் கப் தண்ணி விடுங்கோ

அதுக்கு நீங்கள் விரும்பின அளவு சீனிய போடுங்கோ

அத நல்ல தடிப்பா வர காய்ச்சுங்கோ

பதம் சரியோ எண்டு பாக்க ஒரு துளி பாணிய குளிர் நீருக்க விட அது கரையாமல் கட்டிய அடிலை படிஞ்சுதெண்டா அது சரியான பதம்

அதுக்கை பொரிச்சு வச்ச முறுக்கை போட்டு நல்லா கிண்டி கிளறி எல்லா முறுக்கிலையும் படத்தக்கதா செய்யுங்கோ

கொஞ்சம் குளிர்ந்த பிறகு

சாப்பிடுங்கோ. :lol::D

கிராம் கணக்கேல்லாம் சொல்ல தெரியாது. எனேண்டா சித்திரமும் கைப்பழக்கம் எண்டது போல முறுக்கு சுடுறதும் கைப்பழக்கம். :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

நல்லாக சுடுறியள் குளம் அண்ணா. நன்றி சுட சொல்லித்தந்தமைக்கு. :P (ஆத்துக்காரி புண்ணியம் செய்தவா)

Link to comment
Share on other sites

நான் சொன்ன முறுக்கு தானோ கறுப்பி அக்கா கேட்டது . :?

உங்கடை நன்றிக்கு நன்றி வெண்ணிலா , ரசிகை :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குலம்ஸ். அரிசி மா போட்டு ஒரு சீனி முறுக்கு செய்வினம் தானே. அது இல்லையா

Link to comment
Share on other sites

கோதுமைக்கு பதில் வெள்ளையரிசி மா போட்டால் சரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்ஸ் நீர் மேலே எழுதியது அச்சுப் பலகாரம்.முறுக்கென்றால் சட்டிக்குள்ளேயே பிழிந்துவிடுவினம்.முறுக்கு எப்பவும் வட்டமாகத் தான் சுடுவார்கள்.அது சரி நீரும் சொல்ல சொல்ல பின்னால் வந்த பிள்ளைகளும் நன்றியண்ணா நன்றியண்ணா என்று எழுதியிருக்கினம்.இதில் எழுதியவர்கள நாளைக்கு தமிழ் கடைக்கு போய் முறுக்கு என்று கேட்டு சாப்பிட்டு பாருங்கோ.வட்டமாக தருகினமோ அல்லது துண்டு துண்டாக தருகினமோ பார்ப்பம்

Link to comment
Share on other sites

சீனி முறுக்கு வட்டமாக இருக்காது ஈழபிரியன் :)

Link to comment
Share on other sites

குளக்ஸ் நீர் மேலே எழுதியது அச்சுப் பலகாரம்.முறுக்கென்றால் சட்டிக்குள்ளேயே பிழிந்துவிடுவினம்.முறுக்கு எப்பவும் வட்டமாகத் தான் சுடுவார்கள்.அது சரி நீரும் சொல்ல சொல்ல பின்னால் வந்த பிள்ளைகளும் நன்றியண்ணா நன்றியண்ணா என்று எழுதியிருக்கினம்.இதில் எழுதியவர்கள நாளைக்கு தமிழ் கடைக்கு போய் முறுக்கு என்று கேட்டு சாப்பிட்டு பாருங்கோ.வட்டமாக தருகினமோ அல்லது துண்டு துண்டாக தருகினமோ பார்ப்பம்

என்ன ஈழப்பிரியன் நல்லா குழம்பீட்டிங்க :):lol::lol: போல கிடக்கு

கறுப்பி கேட்டது சீனி முறுக்கு. அது இப்படி தான் செய்வது.

எதுக்கும் விசாரிச்சு பாருங்க. அடடா தமிழ் கடையை விட்டா உங்களுக்கு முறுக்கு சுட தெரியாதா :lol: 8) :wink:

நீங்க சொன்ன முறுக்க தாச்சிக்கை நேர சுடாம இடியப்பத்தட்டிலை பிளிஞ்சு போட்டும் தாச்சீக்க போடலாம்/ போடுறவை. :P :P :P அந்த முறுக்கை கறுப்பி கேட்டா சொல்லியிருக்க மாட்டன் எண்டா நினைக்கிறீங்க. :P :P

அட அந்த பொண்ணுங்க நன்றி சொன்னது தான் பிரச்சனையா? :lol::lol:

Link to comment
Share on other sites

நன்றி குலம்ஸ். அரிசி மா போட்டு ஒரு சீனி முறுக்கு செய்வினம் தானே. அது இல்லையா

கோதுமைக்கு பதில் வெள்ளையரிசி மா போட்டால் சரி :)

ம் சிவப்பரிசிமா/ உழுந்தும் அரிசியும் சேர்த்து அரைச்ச மாவும் சிலர் சேர்ப்பார்கள். தனியே/ கோதுமை மாவுடன் சேர்த்து பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஆகா சீனி முறுக்கு என்று இன்று தான் கேள்விப்படுகின்றேன். வீட்டில் சிப்பி சோகி என்று இனிப்பாக செய்வார்கள். ஆனால் இது புதுசாக இருக்கின்றது.

செய்முறைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

குளம் அண்ணா செய்முறைக்கு நன்றி

ரமாக்கா சொல்லுற மாதிரி இனிப்பாக சிப்பி தீபாவளிக்கு செய்யும் போது சாப்பிட்டிருக்கிறன்

சீனி முறுக்கு புதுசா இருக்கு

நான் அம்மம்மாவோடு ஊரில இருக்கும் போது குட்டியா ஒரு முறுக்கு செய்யுறவ கஜூ தூள் போட்டு முறுக்கு கலரில தான் இருக்கும்

அதுக்கு என்ன பெயர் எண்டு தெரிஞ்சவை சொல்லுங்களன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளம் அண்ணா!

ஆனர்ல சாப்பிடும்போது துணிந்து சாப்பிடலாம் தானே! ஏதும் பத்தியம் உண்டோ?? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தியம் உண்டு து}யவன்.. நான் சொன்னால் என்னைத்திட்ட மாட்டியள் என்று உத்தரவாதம் தந்தால் சொல்றன்.. :wink: :P :cry:

ஏதும் பத்தியம் உண்டோ??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தியம் உண்டு து}யவன்.. நான் சொன்னால் என்னைத்திட்ட மாட்டியள் என்று உத்தரவாதம் தந்தால் சொல்றன்.. :wink: :P :cry:

அண்ணாக்கில் முட்டாமல் என்று குழந்தைப் பிள்ளைத்தனமாக கதை விடாவிட்டால் ஒகே! :idea:

(அப்படி ஒன்றைச் சொல்லப் போகின்றீர்கள் என்ற எதிர்வு கூறல் தான் :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனி முறுக்கை அடியோடு மறந்து விடுவது தான் சிறந்த பத்தியம்.. சாப்பிட்டால் தானே.. பின்விளைவுகள் வரும்.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊயிரோடு இருந்தால் தானே வருத்தம் வருகின்றது என்று உயிரையே விடுவீர்கள் போல :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்ன.. உயிர்வாழ முறுக்கு அவசியமா..?? அவசியமானதை எடுத்தல் அநாவசியங்களால் வரும் பிரச்சனையைப்பற்றி வருந்தத்தேவையில்லையே.. வருத்தம் வரும்போது நினைப்பதுண்டு.. :wink: :P

Link to comment
Share on other sites

ஏப்பா..வருத்ததை இதுக்க சொல்லுறீங்கள். ஆசைப்பட்டு செய்முறை கேட்டு செய்து சாப்பிடுறதுகளை சாப்பிடவாவது விடுங்களன். உங்களுக்கு செய்யவும் வராது. சாப்பிடவும் வராது. அப்புறம் எதுக்கு முறுக்கு..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவயதில் இருந்தே முறுக்கில் எனக்கு ஒரு வெறுப்பு!

:twisted: :twisted:

(பிளாஸ்பாக்: ஒரு தடவை நண்பன் ஒருவன் "முறுக்கு வேணுமாடா என்றான். எனக்கும் நாக்கில் சுரக்க, பாய்ந்தோடிப் போய்த் தாடா என்றேன். அப்படியே காதில் ஒரு முறுக்கு முறுக்கி, முறுக்கு ஒகேவா என்றான். அந்தக் கடுப்பில் தான் இப்படி எரிச்சல் எல்லாம்!) :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யோவ் இது நேசறில நடக்கிறது வழமைதானே. இதுக்கெல்லாம்..போய்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவயதில் இருந்தே முறுக்கில் எனக்கு ஒரு வெறுப்பு!

(பிளாஸ்பாக்: ஒரு தடவை நண்பன் ஒருவன் "முறுக்கு வேணுமாடா என்றான். எனக்கும் நாக்கில் சுரக்க, பாய்ந்தோடிப் போய்த் தாடா என்றேன். அப்படியே காதில் ஒரு முறுக்கு முறுக்கி, முறுக்கு ஒகேவா என்றான். அந்தக் கடுப்பில் தான் இப்படி எரிச்சல் எல்லாம்!)

நான் நினைச்சன் முறுக்கு சாப்பிட பல் இல்லாமல்தான் வெறுப்பாக்கும் என்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடடே பத்தியம் கேட்டதன் காரணம் இதுவா.. ம்.. :wink: :P

(பிளாஸ்பாக்: ஒரு தடவை நண்பன் ஒருவன் "முறுக்கு வேணுமாடா என்றான். எனக்கும் நாக்கில் சுரக்க, பாய்ந்தோடிப் போய்த் தாடா என்றேன். அப்படியே காதில் ஒரு முறுக்கு முறுக்கி, முறுக்கு ஒகேவா என்றான். அந்தக் கடுப்பில் தான் இப்படி எரிச்சல் எல்லாம்!)
Link to comment
Share on other sites

அடடடடே பத்தியம் கேட்டதன் காரணம் இதுவா.. ம்.. :wink: :P

பயத்திலதான் பத்தியம் என்று உளறி இருக்கிறார் போல..! ஐஞ்சில முறுக்கினது அறுபதிலும் மாறுமோ..! :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.