Jump to content

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா: இன்று தேசிய அறிவியல் தினம்


Recommended Posts

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 

அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

 

முன்னோடி:@@ எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர்.

 

கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

 

அப்போ... இப்போ...: @@இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்;

 

வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.


யார் காரணம்: @@தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், ராமன் விளைவு கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், ராமன் விளைவை கண்டுபிடித்தார். நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 


தலை நிமிர வைத்தவர்கள்:@@ இந்தியா அறிவியல் அரங்கில் டாப்-20 இடத்துக்குள் இருப்பதற்கு, பல அறிவியலாளர்கள் உழைத்துள்ளனர். அவர்கள்:

 

Tamil_News_large_657027.jpg


பெயர் துறை
* ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்
* விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்
* ராமானுஜம் கணிதம்
* எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை
* எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
* சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு
* சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்
* அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி

 

http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A-200500699.html

Link to comment
Share on other sites

தேசிய அறிவியல் தினம்:மறைந்திருக்கும் வரலாற்றுப் பெருமை என்ன?

 

நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த விழா கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன?அதற்கு காரணமானவர் யார்? அவர் படித்த கல்லூரி ஆய்வகத்தின் தற்போதைய நிலை என்ன....

 

 

பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இந்த நிறமாலை மானியில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் அமர்ந்திருந்த இதே ஆய்வகத்தில்தான் தனது இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பின் போது ஆய்வு செய்தார் உலகம் போற்றும் ஒரு அறிவியல் அறிஞர். அவர் வேறு யாருமல்ல... சென்னை மாநிலக் கல்லூரியில் 1904 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இயற்பியல் அறிஞர் சர் சிவி இராமன்.

 

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%

 

கடலின் நீல நிறத்திற்கு காரணம் ஒளிச்சிதறலே என்பதையும், முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது 7 நிறங்களாக பிரியும் என்பதையும் கண்டுபிடித்து 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றார்.

 

இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28 ஆம் தேதியைதான் தேசிய அறிவியல் தினமாக நம் நாட்டில் கொண்டாடுகிறோம். அந்த கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாக விளங்கிய ஆய்வகங்களில் ஒன்றுதான் இந்த மாநிலக் கல்லூரியின் இயற்பியல் ஆய்வகம்.

 

எங்களுக்கெல்லாம் இது பெருமை: இராமன் ஆய்வு செய்த ஆய்வகத்தையும், அவரும் அவரது மனைவியும் படித்த அதே பழமையான வகுப்பறையிலும் படித்து வரும் மாணவர்கள் அவரின் சாதனை தங்களுக்கு உத்வேகத்தை அளித்து வருவதாக கூறுகின்றனர்.


அடிப்படை அறிவியல் மீதான ஆர்வம் குறைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், அதைப்பற்றிய விழிப்புணர்விற்காக இன்று நாடு முழுவதும் பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொலிவிழுந்து இருக்கும், இந்த வரலாற்று பெருமை மிக்க ஆய்வகத்தை அரசு பராமரிக்க முன்வர வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.

 

http://puthiyathalaimurai.tv/national-science-day-observed-today

Link to comment
Share on other sites

கல்வி கற்றலுக்கான வழிகாட்டல் தினம்

 

டென்மார்க் கொல்பெக் நகரில் திசைகள் இளையோர் அமைப்பினால் மாசி மாதம் 24ம் திகதி கல்வி கற்றலுக்கான வழிகாட்டல் தினம் நடாத்தப்பட்டது.

 

இவ் அறிவு பூர்வமான நிகழ்வில் பெருமளவான இளையோர் பெரியவர்கள் என பலரும் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

உயர் கல்விகளை பற்றிய தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இன்நிகழ்வு திசைகள் இளையோர் அமைப்பு பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பமாகியது.

 

அதனைத் தொடர்ந்து உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் கல்விகளை பற்றிய தகவல்களை தமிழ் மொழியில் மிகவும் நேர்தியாக பார்வையாளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.

 

டென்மார்க் வாழ் தமிழ் இளையோர்கள் பல துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்தது மாத்திரமன்றி பல சிறந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளார்கள்.

 

விமான ஒட்டுனர் பொறியியலாளர்கள், சமூக ஆலோசகர், காவல்துறை உத்தியோகத்தர், மருத்துவத்துறைசார் மாணவர்கள் அத்தோடு இன்னும் பல மாணவர்கள் இன்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள்.

 

பெற்றோருக்கும் உயர்கல்வி கற்க ஆயத்தமாகவிருக்கும் மாணவர்களும் பல புதிய பட்டப்படிப்புக்களை அறிந்து கொள்வதற்க்கான சந்தர்ப்பம் இந்நாளில் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந் நிகழ்வுக்கு கொல்பெக் மற்றும் அருகாமையில் அமைந்திருக்கும் நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் வருகை தந்திருந்து பல வகையான கல்விகளை பற்றி அறிந்து கொண்டனர்.

 

டென்மார்க் வாழ் தமிழ் இளம் சமுதாயத்தினர் கல்வித்துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார்கள் என டெனிஸ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் முக்கிய செய்திகளாக பல சந்தர்பங்களில் வெளியாகியுள்ளமை ஆனது உலகத்தமிழர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

 

அத்தோடு இன்நிகழ்வு தொடர்பாகவும் டெனிஸ் Nordvestnyt பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டது மாத்திரம் அல்லாது இது போன்ற நிகழ்விற்க்கு தம்மையும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டது.

 

இதன் அடுத்த கட்டமாக வரும் மார்ச் மாதம் 9 திகதி Ikast நகரில் நடைபெறவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

 

thi21.jpg

 

http://www.alaikal.com/news/?p=123384

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.