Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kerala_01.jpg
 

 

எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக்  கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது.
இன்னும் வேறும் இருக்கலாம்.

இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான்.

எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில்  என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும்  அதுவே பழகிவிட்டது.

திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் அம்மாவைப் போன்றே உலிர் பிட்டை அவிப்பேன். ஒன்றிரண்டு தடவைகளின் பின் கணவர் தன் தாய் இப்படி அவிப்பதில்லை. அம்மாவைப் போல் அவி என்று ஒவ்வொரு முறையும் பிட்டவிக்கும் போதும் கூறியதனால், நானும் சரி என்று சுடுநீர் கொஞ்சம் அதிகம் விட்டு கணவருக்குப் பிடித்தது போன்றே அவித்துக் கொடுத்தேன்.

 

கணவருக்கோ மிகுந்த மகிழ்வு. அம்மா மாதிரியே அவிக்கிறாய் என ஒன்றுக்கு மூன்றுதரம் சொல்ல, எனக்கு உள்ளுக்குள் என் சுவையில் அவிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தும் கணவர் மகிழ்வாக உண்கிறாரே என்னும் நிறைவில் அப்படியே அவிக்க ஆரம்பித்தேன்.

இருந்துவிட்டடு எப்பவாவது ஆசை வரும்போது  எனது விருப்பத்துக்கு அவித்து வைத்தால் கணவர் வேண்டா வெறுப்பாகவே அதை உண்டு முடிப்பார். என் கணவரைப் பொருத்தவரை எந்த உணவெனினும் உண்ணக் கூடியவர். ஆனாலும் பிட்டு விடயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பார்.

இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 

 

பிட்டு ஈழத்து உணவென இத்தனை நாள் எண்ணியிருந்தேன். இணையத்தில்  படத்தைத் தேடினால் வரவே இல்லை. கேரளப் புட்டு என்று தேடியபோதே படம் வந்தது.

 

அதுசரி பிட்டு ஈழத்து உணவா???   கேரளத்து உணவா ???




 

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

ஏன்.. குழைக்கும்போது இரண்டு பாகமாக்கி இரண்டுமுறையிலும் அவிக்கலாம்தானே.. :D



பிட்டு ஈழத்து உணவுமல்ல.. கேரளத்தின் உணவுமல்ல.. தமிழரின் உணவு.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

Link to comment
Share on other sites

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

 

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:
Link to comment
Share on other sites

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.



நன்றி நண்பி பகிர்வுக்கு!



ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

 

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!




என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:

 

 

:lol:  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

Link to comment
Share on other sites

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.



 

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

 

 

 

 


 

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.




 

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

Link to comment
Share on other sites

bambooputtu2.jpg?w=300&h=225

 

 

bambooputtu.jpg?w=300&h=400

 

 

எனக்கு அம்மா மூங்கில் குளாய் புட்டுதான் செய்து தருவா . மூங்கில் குளாய் புட்டுத்தான் ருசி கூட . ஆனால் இப்ப மூங்கில் குளாயை தேட வேண்டிக்கிடக்கு . எல்லாரும் ஒவ்வருமாதிரி சாப்பிடுவினம் . ஆனால் கோவின்ரை பாணியே தனி . ஐஞ்சாறு கதலி வாளைப்பழத்தைக் கையாலை பிசைஞ்சு , இந்தக் குளாய்ப்புட்டோடை குளைஞ்சு , அப்பிடியே ஒரே எறியல் :o:lol: :lol: . என்ரை சகோதரம் ஒண்டும் என்ரை அரையண்டத்தாலை பக்கத்திலை இருந்து சாப்பிடுறேலை கண்டியளோ :icon_mrgreen::unsure::lol::D .
 

Link to comment
Share on other sites

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 


இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

 

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.

நன்றி நண்பி பகிர்வுக்கு!

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!

 

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

 

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது அண்ணா. அங்கு தமிழர்கள்தானே? கேரளாவுக்கு எப்படிப் பிட்டுப் போனது?

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

அந்தி பூத்ததா??? வருகைக்கு நன்றி நிழலி. பெண்களின் இழப்புகளுக்கு முன்னால் ஆண்கள் எத்தனை தந்தாலும் தகும்.

 

 

இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

புட்டு இல்லாட்டில் பிரச்சனை இல்லை.பிரச்சனை இல்லாட்டால் பிட்டும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் கோமகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.

 

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

 

 

 

 

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

 

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில, நானும் புட்டு அவிச்சிருக்கிறன்! :o

 

இந்தக் குழல், கிழல் ஒண்டும் கிடையாது!

 

கொஞ்சம் வறுத்த மா 

சுடு தண்ணி

தேங்காய்ப் பூ 

ஒரு முள்ளுக்கரண்டி 

ஒரு ஸ்டீமர் 

 

இவ்வளவும் தான் தேவை!

 

புட்டும் அந்தமாதிரி வரும்!

 

புட்டும் மலையாளத்து உணவு என்பது தான் எனது ஆய்வின் முடிவும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

 

எல்லா சாப்பாட்டிலையும் வாய்வைக்க அலையும் தம்பிமாரின் கவனத்திற்கு!
எல்லாச்சாப்பாடும் எல்லாருக்கும் சரிவராது! ஓடிஆடி பார வேலை செய்யிற மனிசருக்குத்தான் புட்டு,ஆட்டுறைச்சி,கணவாய்,றால் எல்லாம் சரிவரும்......செமிக்கும்.
 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:
Link to comment
Share on other sites

குழல் புட்டுக்கு சில்லை(அதுவும் தேங்காயில் எடுத்த ஒரு துண்டுதான் ) அடியில் போட்டு மாவையும் தேங்காய் பூவையும் மாறிமாறி போட்டு அதற்கு ஒரு சில்லு மூடி போட்டு அவிப்பதை கண்டுபிடித்தவர்கள்  உண்மையில் பேய்காய்கள் தான் .

அடியில் போடும் சில்லை வடிவாக வைக்காவிட்டால் புட்டு தண்ணிக்குள் கொட்டுண்டுவிடும் .

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

Link to comment
Share on other sites

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

 

அப்படித்தான் நினைக்கின்றன். சாப்பிட்டால் அடுத்த பசி எடுக்க கன நேரம் போகும்.அத்துடன் வயிறும் heavy ஆக இருக்கும். இரவுச் சாப்பாடாக புட்டை சாப்பிடுவதை குறைத்த பின் தான் உடம்பு வைப்பது எனக்கு குறைவானது, நிறையும் கட்டுக்குள் வந்தது.

 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:

 

நன்றி.. நீங்கள் சொன்ன இவற்றைத் தான் நான் Snack time இல் சாப்பிடுவது :icon_mrgreen:

.

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

 

எப்பவாவது தாரா முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் கருவாட்டுப் பொரியலும் அல்லது புட்டும் பழைய மீன் கறியும் அந்தமாதிரி இருக்கும்.    :wub:

Link to comment
Share on other sites

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

எல்லாம் நண்பி மீதுள்ள அன்பு தான் 

 

 

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

இங்கு 80 வயதிலும் திருமணம் செய்யுதுகள் உந்த வெள்ளையள் அதோடு பார்க்கேக்கை 58 குழந்தைப் பருவம்!

 

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது 

அட அலை உதையும் மறந்து போச்சுது!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் வெந்தயக் குழம்பும் (நான் சைவம் என்பதால்!) நல்ல விருப்பம்.. ஆனாலும் குழல் புட்டு ஏனோ பிடிப்பதில்லை.

 

தமிழ்ப் பெட்டையள் புட்டு மாதிரி லேசில இறங்கமாட்டுது ஆனால் வெள்ளைக் குட்டியள் குளுக்கோஸ் மாதிரி டக்கென்று இறக்கிடலாம் என்று எனது நண்பன் சொல்லுவான். நான் இந்த உவமானங்களுக்காக புட்டை விட்டுக் குடுப்பதிலை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:



Kerala_01.jpg
 

 



இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 




 

 


இனி நினைச்சுத்தான் என்னேயிறது. :mellow: விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு என்கிறது உபநிடதம். விரும்பிய புட்டு சாப்பிடமுடியாவிட்டால் கணவருக்குப் பிடித்த புட்டை சாப்பிடுங்கோ.

 

Link to comment
Share on other sites

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:

 

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

 

 

 

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்த உணவு புட்டும் கொத்து ரொட்டியும். மூங்கில் குழலில் அவித்தால் தனியே ஒரு வாசம் வரும். சமையல் நன்றாகத் தெரியும். இந்த புட்டு அவிக்கிற 'ரெக்னிக்' மாத்திரம் இன்னும் பிடிபடுகுதில்லை. வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் புட்டு வேண்டும். வழமையாக மீன் குழம்புடந்தான் சாப்பிடுவேன்.

 

இந்தத் திரியைப் பார்த்ததால் இரவு புட்டுடன் வெந்தயக் குழம்பு, நெத்தலிக் கருவாட்டுப் பிரட்டல், கூனி தேங்காய்ப் பூச் சம்பல், ஆணம், முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

கூனி தேங்காய்ப் பூச் சம்பல்

 

வழமையாக இலங்கையில் அரைக்கும் சம்பலா இது? ( தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,தேசிக்காய்புளி)

Link to comment
Share on other sites

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

 

 

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

 

அலைமச்சி இப்பிடி சுனாமியாகீட்டீங்களே ? :lol:

சரி மச்சி இனி பொறாமைப்பட்டு என்னேயிறது. யேர்மனி வரேக்கை உங்களுக்கு இத்தாலி , யேர்மன் ஸ்பெஷல் சமையல் செய்முறை ரமேஷிடம் கேட்டு எழுதித்தரலாம். :icon_idea:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.