Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்குள்ள  இத்தனை ரகசியம் இருப்பது இப்பத்தான் தெரியுது.

நான் ஊரில் இருக்கும் போது ஒருமுறை புட்டும் புறாக்கறியும் :wub:  சாப்பிட்டனான்


அதுக்குப் பிறகு புட்டே வெறுத்துப் போட்டுது. :)

 

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் குறுகிய காலத்திலேயே எமது உணவுப்பழக்க வழக்கங்களைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்!

 

குறிஞ்சாப் புட்டு, மிகவும் பிரபல்யமானது. பனைமரங்களில் ஒட்டுண்ணியாக வளரும் குறிஞ்சா மரத்தின் இலைகள், நீரிழிவு போன்ற வருத்தங்களுக்கு ஒரு இயற்கை மருந்துமாகும்! மலையான், நீங்களும் எங்கட பக்கமா இருக்கும் போல கிடக்கு! :D

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

இல்லையே, உடையார்!

 

ஊரிலையும் காணக் கிடைக்கேல்லை! 

 

கண்டிருந்தாக் கள்ளமா எண்டாலும், கருவாட்டுக்குள்ள வைச்சு, ஒரு குச்சித் தடியாவது கொண்டு வந்திருப்பனே! :lol:

Link to comment
Share on other sites

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் குறுகிய காலத்திலேயே எமது உணவுப்பழக்க வழக்கங்களைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்!

 

குறிஞ்சாப் புட்டு, மிகவும் பிரபல்யமானது. பனைமரங்களில் ஒட்டுண்ணியாக வளரும் குறிஞ்சா மரத்தின் இலைகள், நீரிழிவு போன்ற வருத்தங்களுக்கு ஒரு இயற்கை மருந்துமாகும்! மலையான், நீங்களும் எங்கட பக்கமா இருக்கும் போல கிடக்கு! :D

இல்லையே, உடையார்!

 

ஊரிலையும் காணக் கிடைக்கேல்லை! 

 

கண்டிருந்தாக் கள்ளமா எண்டாலும், கருவாட்டுக்குள்ள வைச்சு, ஒரு குச்சித் தடியாவது கொண்டு வந்திருப்பனே! :lol:

 

பொதுவாக பனை மரத்தை சுற்றி வளரும் என்பதற்காக ஒட்டுண்ணி என்று சொல்ல கூடாது. ஆல /அரச மரங்கள் மாதிரி தான் தன தேவைக்குரிய சத்தை மண்ணில் இருந்து தான் எடுக்கும். குருவிச்சை மாதிரி ஒட்டுண்ணி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

 

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

 

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கொடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

 

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

 

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

இது முசுட்டை !

hdmalarnews_48916262389.jpg

 

முல்லை மரம் 

 

mullai_tree_3_67935_200.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

 

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

 

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கோடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

 

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

 

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

 

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

 

இப்போது நினைவு வருகிறது, எனது மாமாவுக்கு சலரோகம் இருந்தது. அவருக்கு குறிஞ்சா இல்லை புட்டு அவித்து கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

இதில் பன்னம் பிட்டு பற்றிச் சொல்லப்பட்டிருக்கு. இஸ்வும் ஒரு நோய்க்கு மருந்தாகத்தான் சொல்லப்பட்டிருக்கு. 

 

http://www.yarlmann.lk/viewsingle.php?id=535



இது மேலே சொல்லப்பட்ட பிட்டுகளில் ஒன்றுதானா தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

நானும் குரக்கன்புட்டு சாப்பிட்டு வளர்ந்தவன்......எங்கடை வீட்டை குரக்கன்புட்டு எண்டால் நல்ல முட்டுக்காய் தேங்காய்த்துருவலோடை சாப்பிடுவம்......அந்தமாதிரியிருக்கும் :wub: ......நாங்கள் ஊரிலை காணிபூமி,தோட்டம்துரவு,நல்ல சொத்துபத்தோடை வாழ்ந்தனாங்கள். <_<

Link to comment
Share on other sites

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

ஜேர்மனியிலிருந்து சென்றிருந்த திருமதி. சந்திரவதனா செல்வக்குமார் அவர்கள்தான் இதைப் பற்றி எழுதியிருந்தார்.  அவரின் வன்னி பயணக் கட்டுரையை 2004இல் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

 

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

Link to comment
Share on other sites

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

 

இணைப்புக்கு நன்றி கிருபன்.. இன்றுதான் படித்தேன். கருத்து எழுத விருப்பம். ஆனால் எழுதவில்லை.. புட்டு திரி திசைமாறிவிடும்.

Link to comment
Share on other sites

சந்திரவதனா அக்கா பயணத்துடன் நிறுத்தி விட்டா. தெரிந்தவர்கள் அது என்ன டுபாய் புட்டு என்று எழுதுங்களேன்.

Link to comment
Share on other sites

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

 

 

வேம்படிப் பெட்டையளைச் சொல்லி வேலையில்லை, வாய்காறக் கூட்டம்., அதோடை பட்ட அட்டகாசங்கள்!! :lol:  :lol:   அது சரி இல்லையை எங்கப்பா விக்கிறார்கள்?

நேற்றுப் பிட்டும் வெந்தயக் குழம்பும் செய்து சாப்பிட்டேன், நல்லாய் தான் இருந்தது!

பிட்டுக்கு பலாப்பழம்/ மாம்பழம்/ வாழைப்பழம் நல்லாய் இருக்கும்!

Link to comment
Share on other sites

ஒடியல்மா புட்டு செய்முறை. கூகுள் புண்ணியத்தில..
 
அவர்கள் நொருவல் செத்தல் மிளகாய்த்தூள் போட்டு மாவைக் குழைப்பதைப்பற்றிச் சொல்ல வில்லை. மாவுடன் நொருவல் செத்தல் மிளகாய் சிறிதளவு எள்ளு என்பன போட்டுக் குழைக்கலாம்.
 
 
Link to comment
Share on other sites

இடியப்பமும் சொதியும் ( முட்டைச் சொதி) அல்லது இடியப்பமும் உருளைக்கிழங்குக் குழம்பும் நல்ல சாப்பாடு  ஆனால் புட்டு மாதிரி நிண்டு பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

 

 

உந்த டுபாய் புட்டுச் செய்முறையைப் பார்க்க ஒரு மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

நன்றி சுமே அக்கா. அது புட்டு இல்லை என்பதால் இங்கே வருவது பொருத்தமில்லைத்தான். முயற்சி பண்ணிப்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

Link to comment
Share on other sites

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

 

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

 

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

 

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

 

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

Link to comment
Share on other sites

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

 

டுபாய் புட்டு சமாதான காலத்திலை முக்கியமான  இரண்டுபேரோடை மட்டும்தான் சாப்பிடலாம். அதுவும் நீங்கள் இரண்டுதரம்  சாப்பிட்டிருக்கிறீங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

 

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

 

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

 

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

 

புட்டுத் திரியை மற்றத் திரியா மாத்த நாங்கள் விடமாட்டமெல்லே தமிழச்சி. :D  வரவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.