Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kerala_01.jpg
 

 

எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக்  கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது.
இன்னும் வேறும் இருக்கலாம்.

இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான்.

எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில்  என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும்  அதுவே பழகிவிட்டது.

திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் அம்மாவைப் போன்றே உலிர் பிட்டை அவிப்பேன். ஒன்றிரண்டு தடவைகளின் பின் கணவர் தன் தாய் இப்படி அவிப்பதில்லை. அம்மாவைப் போல் அவி என்று ஒவ்வொரு முறையும் பிட்டவிக்கும் போதும் கூறியதனால், நானும் சரி என்று சுடுநீர் கொஞ்சம் அதிகம் விட்டு கணவருக்குப் பிடித்தது போன்றே அவித்துக் கொடுத்தேன்.

 

கணவருக்கோ மிகுந்த மகிழ்வு. அம்மா மாதிரியே அவிக்கிறாய் என ஒன்றுக்கு மூன்றுதரம் சொல்ல, எனக்கு உள்ளுக்குள் என் சுவையில் அவிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தும் கணவர் மகிழ்வாக உண்கிறாரே என்னும் நிறைவில் அப்படியே அவிக்க ஆரம்பித்தேன்.

இருந்துவிட்டடு எப்பவாவது ஆசை வரும்போது  எனது விருப்பத்துக்கு அவித்து வைத்தால் கணவர் வேண்டா வெறுப்பாகவே அதை உண்டு முடிப்பார். என் கணவரைப் பொருத்தவரை எந்த உணவெனினும் உண்ணக் கூடியவர். ஆனாலும் பிட்டு விடயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பார்.

இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 

 

பிட்டு ஈழத்து உணவென இத்தனை நாள் எண்ணியிருந்தேன். இணையத்தில்  படத்தைத் தேடினால் வரவே இல்லை. கேரளப் புட்டு என்று தேடியபோதே படம் வந்தது.

 

அதுசரி பிட்டு ஈழத்து உணவா???   கேரளத்து உணவா ???




 

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

ஏன்.. குழைக்கும்போது இரண்டு பாகமாக்கி இரண்டுமுறையிலும் அவிக்கலாம்தானே.. :D



பிட்டு ஈழத்து உணவுமல்ல.. கேரளத்தின் உணவுமல்ல.. தமிழரின் உணவு.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

Link to comment
Share on other sites

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

 

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:
Link to comment
Share on other sites

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.



நன்றி நண்பி பகிர்வுக்கு!



ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

 

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!




என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:

 

 

:lol:  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

Link to comment
Share on other sites

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.



 

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

 

 

 

 


 

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.




 

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

Link to comment
Share on other sites

bambooputtu2.jpg?w=300&h=225

 

 

bambooputtu.jpg?w=300&h=400

 

 

எனக்கு அம்மா மூங்கில் குளாய் புட்டுதான் செய்து தருவா . மூங்கில் குளாய் புட்டுத்தான் ருசி கூட . ஆனால் இப்ப மூங்கில் குளாயை தேட வேண்டிக்கிடக்கு . எல்லாரும் ஒவ்வருமாதிரி சாப்பிடுவினம் . ஆனால் கோவின்ரை பாணியே தனி . ஐஞ்சாறு கதலி வாளைப்பழத்தைக் கையாலை பிசைஞ்சு , இந்தக் குளாய்ப்புட்டோடை குளைஞ்சு , அப்பிடியே ஒரே எறியல் :o:lol: :lol: . என்ரை சகோதரம் ஒண்டும் என்ரை அரையண்டத்தாலை பக்கத்திலை இருந்து சாப்பிடுறேலை கண்டியளோ :icon_mrgreen::unsure::lol::D .
 

Link to comment
Share on other sites

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 


இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

 

 

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.

நன்றி நண்பி பகிர்வுக்கு!

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!

 

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

 

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது அண்ணா. அங்கு தமிழர்கள்தானே? கேரளாவுக்கு எப்படிப் பிட்டுப் போனது?

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

அந்தி பூத்ததா??? வருகைக்கு நன்றி நிழலி. பெண்களின் இழப்புகளுக்கு முன்னால் ஆண்கள் எத்தனை தந்தாலும் தகும்.

 

 

இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

புட்டு இல்லாட்டில் பிரச்சனை இல்லை.பிரச்சனை இல்லாட்டால் பிட்டும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் கோமகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.

 

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

 

 

 

 

 

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

 

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில, நானும் புட்டு அவிச்சிருக்கிறன்! :o

 

இந்தக் குழல், கிழல் ஒண்டும் கிடையாது!

 

கொஞ்சம் வறுத்த மா 

சுடு தண்ணி

தேங்காய்ப் பூ 

ஒரு முள்ளுக்கரண்டி 

ஒரு ஸ்டீமர் 

 

இவ்வளவும் தான் தேவை!

 

புட்டும் அந்தமாதிரி வரும்!

 

புட்டும் மலையாளத்து உணவு என்பது தான் எனது ஆய்வின் முடிவும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

 

எல்லா சாப்பாட்டிலையும் வாய்வைக்க அலையும் தம்பிமாரின் கவனத்திற்கு!
எல்லாச்சாப்பாடும் எல்லாருக்கும் சரிவராது! ஓடிஆடி பார வேலை செய்யிற மனிசருக்குத்தான் புட்டு,ஆட்டுறைச்சி,கணவாய்,றால் எல்லாம் சரிவரும்......செமிக்கும்.
 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:
Link to comment
Share on other sites

குழல் புட்டுக்கு சில்லை(அதுவும் தேங்காயில் எடுத்த ஒரு துண்டுதான் ) அடியில் போட்டு மாவையும் தேங்காய் பூவையும் மாறிமாறி போட்டு அதற்கு ஒரு சில்லு மூடி போட்டு அவிப்பதை கண்டுபிடித்தவர்கள்  உண்மையில் பேய்காய்கள் தான் .

அடியில் போடும் சில்லை வடிவாக வைக்காவிட்டால் புட்டு தண்ணிக்குள் கொட்டுண்டுவிடும் .

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

Link to comment
Share on other sites

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

 

அப்படித்தான் நினைக்கின்றன். சாப்பிட்டால் அடுத்த பசி எடுக்க கன நேரம் போகும்.அத்துடன் வயிறும் heavy ஆக இருக்கும். இரவுச் சாப்பாடாக புட்டை சாப்பிடுவதை குறைத்த பின் தான் உடம்பு வைப்பது எனக்கு குறைவானது, நிறையும் கட்டுக்குள் வந்தது.

 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:

 

நன்றி.. நீங்கள் சொன்ன இவற்றைத் தான் நான் Snack time இல் சாப்பிடுவது :icon_mrgreen:

.

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

 

எப்பவாவது தாரா முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் கருவாட்டுப் பொரியலும் அல்லது புட்டும் பழைய மீன் கறியும் அந்தமாதிரி இருக்கும்.    :wub:

Link to comment
Share on other sites

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

எல்லாம் நண்பி மீதுள்ள அன்பு தான் 

 

 

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

இங்கு 80 வயதிலும் திருமணம் செய்யுதுகள் உந்த வெள்ளையள் அதோடு பார்க்கேக்கை 58 குழந்தைப் பருவம்!

 

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது 

அட அலை உதையும் மறந்து போச்சுது!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் வெந்தயக் குழம்பும் (நான் சைவம் என்பதால்!) நல்ல விருப்பம்.. ஆனாலும் குழல் புட்டு ஏனோ பிடிப்பதில்லை.

 

தமிழ்ப் பெட்டையள் புட்டு மாதிரி லேசில இறங்கமாட்டுது ஆனால் வெள்ளைக் குட்டியள் குளுக்கோஸ் மாதிரி டக்கென்று இறக்கிடலாம் என்று எனது நண்பன் சொல்லுவான். நான் இந்த உவமானங்களுக்காக புட்டை விட்டுக் குடுப்பதிலை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:



Kerala_01.jpg
 

 



இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

 

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

 




 

 


இனி நினைச்சுத்தான் என்னேயிறது. :mellow: விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு என்கிறது உபநிடதம். விரும்பிய புட்டு சாப்பிடமுடியாவிட்டால் கணவருக்குப் பிடித்த புட்டை சாப்பிடுங்கோ.

 

Link to comment
Share on other sites

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

 

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

 

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:

 

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

 

 

 

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்த உணவு புட்டும் கொத்து ரொட்டியும். மூங்கில் குழலில் அவித்தால் தனியே ஒரு வாசம் வரும். சமையல் நன்றாகத் தெரியும். இந்த புட்டு அவிக்கிற 'ரெக்னிக்' மாத்திரம் இன்னும் பிடிபடுகுதில்லை. வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் புட்டு வேண்டும். வழமையாக மீன் குழம்புடந்தான் சாப்பிடுவேன்.

 

இந்தத் திரியைப் பார்த்ததால் இரவு புட்டுடன் வெந்தயக் குழம்பு, நெத்தலிக் கருவாட்டுப் பிரட்டல், கூனி தேங்காய்ப் பூச் சம்பல், ஆணம், முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

கூனி தேங்காய்ப் பூச் சம்பல்

 

வழமையாக இலங்கையில் அரைக்கும் சம்பலா இது? ( தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,தேசிக்காய்புளி)

Link to comment
Share on other sites

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

 

 

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

 

அலைமச்சி இப்பிடி சுனாமியாகீட்டீங்களே ? :lol:

சரி மச்சி இனி பொறாமைப்பட்டு என்னேயிறது. யேர்மனி வரேக்கை உங்களுக்கு இத்தாலி , யேர்மன் ஸ்பெஷல் சமையல் செய்முறை ரமேஷிடம் கேட்டு எழுதித்தரலாம். :icon_idea:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.