Jump to content

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.


Recommended Posts

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். 

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு´மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் ,  கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம்.

DSCF4281_zpsf6e895d1.jpg

இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€)

10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€)

13குடும்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம்  கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக 123€)

13குடும்பங்களுக்கும் தேவையான நிதி – 259038,00 (அண்ணளவாக 1599,00€)

இதர 12 குடும்பங்களும் கோழிவளர்ப்பு , சிறு வியாபரம் , கால்நடை வளர்ப்புக்கான உதவியை வேண்டியுள்ளனர்.

தலா குடும்பமொன்றுக்கு – 20000,00ரூபா (123,00€)

12 குடும்பங்களுக்கும் தேவையான நிதி – 240000,00ரூபா. (அண்ணளவாக 1476,00€)

35 குடும்பங்களுக்கும் மொத்தம் தேவைப்படும் உதவி -  749038,00ரூபா (4618,00€)

DSCF4284_zpsbc32ace1.jpg

DSCF4285_zps3128eb76.jpg

DSCF4292_zps3de355b6.jpg

 

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு :-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

http://nesakkaram.org/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/

 

Link to comment
Share on other sites

இத்திட்டத்திற்கான உதவியை யாழ்கள உறவுகள் இணைந்து செய்ய முடியுமென்ற ஆலோசனையையும் தந்து அதற்கான முதல் அடியாக தனது பஙகளிப்பையும் வழங்க முன்வந்த சுண்டலுக்கு மிக்க நன்றிகள்.

சுண்டல் - AUD200 அவுஸ்ரேலிய டொலர்கள்.
சபேசன் - €100யூரோ
சுமேரியர் - £300பிரித்தானியபவுண்கள்
சுமேரியரின் நண்பர்  நகுலேந்திரன் - £300பிரித்தானியபவுண்கள்.

 

இக்குடும்பங்களுக்கு தங்களது உதவிகளை வழங்க முன்வந்த சுண்டல் , சபேசன் , சுமேரியர் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

நானும் 100 euro தருகிறேன் சாந்தி, PayPal இல் அனுப்ப விரும்புகிறேன்.

 

தனிமடலில் விபரம் தருகிறீர்களா?

Link to comment
Share on other sites

நானும் 100 euro தருகிறேன் சாந்தி, PayPal இல் அனுப்ப விரும்புகிறேன்.

 

தனிமடலில் விபரம் தருகிறீர்களா?

 

வணக்கம் நவீனன்,

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு.

தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

வணக்கம் நவீனன்,

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு.

தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கள்.

 

சாந்தி உங்கள் வங்கிக்கு காசு போட்டுவிட்டேன் online Überweisung.

Link to comment
Share on other sites

திட்ட நடைமுறைப்படுத்தல் அறிக்கை

 

தேர்வு செய்யப்பட்ட 35குடும்பங்களையும் ஒரே நிர்வாக அலகினுள் இணைத்து செயற்குழு ஒன்றை நிறுவவுள்ளோம். 35குடும்பங்களுக்கும் தனித்தனியே பொருளாதாரத்தை வழங்க எம்மால் முடியாமையால் இவர்களை 3 குழுவாகப் பிரித்து இவர்களை குழும தொழில் முயற்சியில் இணைத்து உறவுகளிடமிருந்து கிடைக்கும் உதவியை பகிர்ந்தளிக்கவுள்ளோம்.


1)    கடற்தொழில் செய்வோர் 10பேரும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். 4வலைகள் இவர்களுக்கு வழங்கப்படும். (4வலைகளுக்கும் ஒருலட்சரூபா)

2)    விவசாயம் செய்ய உதவிகோரிய 13குடும்பங்களையும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். இவர்களுக்கு 4 தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்படும். (4தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும் 80ஆயிரம் ரூபா)

வழங்கப்படும் தண்ணீர் இயந்திரம் இவர்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் பொறுப்பாளரிடம் இருக்கும். சுழற்சி முறையில் பயன்படுத்த கொடுக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பொறுப்பாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றைத் திருத்துவது குழும முயற்சியில் பங்கேற்கும் அனைவரின் பங்களிப்போடே செய்யப்படல் வெண்டும்.

3)    12குடும்பங்களையும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தவுள்ளோம். 12குடும்பங்களையும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். இவர்களுக்கு ஆடுவளர்ப்பும் கோழிவளர்ப்பும் செய்ய ஒழுங்கு செய்து கொடுப்போம். (ஒருலட்சரூபா இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும்)



இக்குழும முயற்சியின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையும் செயற்பாடும் மாதாந்தம் செயற்குழு தலைவரால் அறியத்தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு நேற்று இவ்விடயம் பற்றி மன்னார்மாவட்ட நேசக்கரம் தொடர்பாளர் ,  நேசக்கரம் இலங்கை இணைப்பாளரையும் இணைத்து கலந்துரையாடியிருந்தேன்.

கலந்துரையாடலின் முடிவில் முதலில் கடற்தொழிலுக்குரிய வலைகளும் , விவசாயிகளுக்குரிய தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் முதலில் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பங்கேற்று திட்டம் நின்று போகாமலிருக்க நேசக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
 

Link to comment
Share on other sites

சாந்தி உங்கள் வங்கிக்கு காசு போட்டுவிட்டேன் online Überweisung.

 

நவீனன்,

நீங்கள் அனுப்பிய 100€ இன்று கிடைத்தது. மிக்க நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

சபேசன் உங்கள் உதவி 100€ இன்று கிடைத்தது நன்றிகள்.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சாந்தி எதுவந்தாலும் தொடருங்கோ .

கருத்துக்கு நன்றிகள் கோமகன்.

 

Link to comment
Share on other sites

அக்கா,

$165 + $10(பணமாற்ற செலவிற்காக) எனது நண்பரின் ஊடாக அனுப்பியுள்ளேன்.

நன்றி.

 

நீங்கள் அனுப்பிய  130,94€உதவி கிடைத்தது மிக்க நன்றிகள்.

அக்கா, ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் வாங்க உதவ ஆவல்.

கனடிய டொலரில் $165. 

எனது நண்பர் சசிகுமாருக்கு நேசக்கரத்தின் சேவைகளை பற்றி கூறினேன். அவர் ஒவ்வொரு மாதமும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

 

மிக்க நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

Link to comment
Share on other sites

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

 

மன்னிக்கவும் இளங்கதிர். உங்கள் மேலான ஆலோசனைகளுக்கு நன்றிகள். ஆனால் உங்கள் எழுத்து ஒருவகை தெளிவின்மையை காட்டுகிறது.

 

நேசக்கரம் சேர்க்கிற பணத்துக்கும் அதன் பயனைப்பெறுகிற பயனாளிக்கும் உதவும் நபருக்குமிடையிலான தொடர்பையும் உறுதிப்படுத்தலையும் செய்து கொடுத்தே உதவிகளை கொண்டு செல்கிறது.

 

குறிப்பான நேசக்கரத்திற்கான சகல நிர்வாக தொலைபேசி தபால் செலவுகளிலிருந்து முழுவதும் எனது தனித்த ஒருத்தியின் உழைப்பே செலவிடப்படுகிறது. இதில் உதவுகிறவர்களின் உதவி முழுவதும் உதவி கோருகிறவர்களிடமே போய் சேர்கிறது.

 

இதில் பணி செய்கிற தாயகப் பணியாளர்கள் அனைவரும் சேவையாகவே இணைந்துள்ளனர்.

 

நேசக்கரத்தின் நேர்மையை புரிந்து கொண்டவர்கள் தான் இந்தத்திட்டங்களிலும் பங்கெடுத்து உதவி வருகிறார்கள். என்பதனையும் தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளது.

நேசக்கரம் ஐரோப்பிய சட்ட வரைமுறைகளுக்கு அமையவே இயங்குகிறது. வருடாவருடம் கிடைத்த உதவிகளுக்கும் செய்யப்பட்ட உதவிகளுக்கும் ஒவ்:வொரு சதத்துக்கும் வரித்திணைக்களத்திற்கு கணக்கறிக்கை வங்கி வரவு செலவிலிருந்து யாவும் கொடுக்க வேண்டும். கடந்த 3ஆண்டுகளாக வருடாவரும் வரித்திணைக்கள பரிசோதனை நடாத்தப்பட்டு நீண்டகால வரிச்சலுகையும் தந்துள்ளார்கள். நேசக்கரம் வங்கிக்கு வருகிற பணத்திற்கு ஒவ்வொருவருக்கும் வரிச்சலுகை கடிதம் கொடுக்க வேண்டியதும் சட்டம். ஆக எல்லாம் சரியாகவே நடக்கிறது.

உங்கள் சந்தேகத்தை சிவப்பால் மாற்றியுள்ளேன். இங்கு நீங்கள் குறித்துள்ள விடயம் எங்களுக்கு பொருத்தமில்லை. ஆகவே இதற்கான உங்கள் பதிலை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

 

Link to comment
Share on other sites

Posted 22 March 2013 - 05:22 AM

ilankathir, on 22 Mar 2013 - 03:14, said:snapback.png

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

 

விமர்சிப்பதற்கும்   தகுதிவேண்டும் .

 
சாந்தி  வேறு ஒரு திரியில்  உங்களுக்கு  எதிராக 
கருத்து  எழுதினதுக்கு பழிவாங்க  எழுதப்பட்டது .
 
நேசக்கரம்  இணையம்  தாக்குதலுக்கு  உள்ளானபொழுது 
அதை  திருத்த  உதவி (நிதி ) வேணுமா  என்று  கேட்க ,
தேவை  இல்லை என்று  சொல்லி விட்டு ,விரும்பினால் 
கல்விப்பணிக்கு உதவுங்கள்  ,என்ற மனம் எல்லோருக்கும் 
வராது .
  
நான்   சாந்திக்கு  ஆதரவாக  எழுதுவதற்கு  காரணம் 
எவரும்  செய்ய  பின்னிப்பதை  துணிந்து செய்வது அதாவது 
போராளிகள் ,மாவீரர்  குடும்பங்களிட்கு உதவுதல் .
 
Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் விவசாயி விக். உங்கள் நண்பரின் உதவி 130€ கழிவு போக 125,49€ கிடைத்தது.


 

Link to comment
Share on other sites

நன்றி அக்கா.

எமது தோட்டத்தில் தொண்டராக இருக்கும் சசி, ஒரு கோழி வளர்ப்பு திட்டத்திற்கு உதவ ஆவல்.

இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்?

நான் வேறும் பலரிடம் உதவி கோரி உள்ளேன்.  எம்மால் ஆன உதவிகளை செய்கின்றோம்.

நன்றி.

 

உங்கள் முயற்சிகளுக்கு நன்றிகள் விவசாயி விக்.

சாதாரணமான ஒரு கோழிக்கூடு செய்து ஊர்க்கோழி வளர்ப்பிற்கு 30ஆயிரம் ரூபா போதுமானது. இதுவே இறைச்சிக்கோழி இதன் காலம் 45நாள். 45நாளில் குஞ்சுகள் வளர்த்து இறைச்சிக்கு விற்பது.30ஆயிரம் ரூபாவில் இறைச்சிக்கோழியும் வளர்க்கலாம். கோழி வளர்ப்பில் அதிகம் கிராமங்களில் ஊர்க்கோழி வளர்ப்பைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். காரணம் பராமரிப்பு இலகுவானது. கோழி வளர்ப்பு முழுமையான செயற்திட்ட அறிக்கை இருக்கிறது. மின்னஞ்சலில் போட்டுவிடுகிறேன் பாருங்கோ.

 

Link to comment
Share on other sites

45 நாள் கோழிக்கு மாஸ், அன்டிபயோடிக் வாங்கியே விவசாயிகள் நொந்து விடுவார்கள்.  உலக  கோழி துறையால் உள்ளூர் கோழி வகைகள் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

நாம் இயற்கை விவசாயிகள் என்றபடியால் உள்ளூர் கோழிகளையே தேர்ந்தெடுப்போம்.  

ஒண்டாரியோவில் நடமாடும் கோழிக்கூடு தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் எமது தொண்டருக்கு தெரியபடுத்துகிறேன்.

அவர் காசை அனுப்பியவுடன் அறிவிக்கிறேன். நன்றி.

 

கருத்துக்கு நன்றிகள் விவசாயி விக்.

மாஸ் மருந்துகள் எதிர்பார்க்கும் அளவுக்கு செலவில்லை. குறைந்த செலவில் அதிக இலாபத்தை கொடுக்கிறது இந்த மாஸ்கோழிகள். ஆனால் நீங்கள் குறித்தது போல ஊர்க்கோழிகளை இந்த மாஸ் வளர்ப்பு ஊக்குவிப்பால் பாதிப்படையச் செய்கிறது. இப்போது எம்மவர்கள் ஊர்க்கோழிகளுக்கும் மாஸ்போடத் தொடங்கியுள்ளார்கள். அதன் சாதக பாதங்கள் பற்றிய முழு விவரங்களும் தெரியவில்லை.

உதவி கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனக்கு தெரிந்து நல்ல திட்டங்களை தேர்ந்து எடுத்து அதற்கு நிதி சேகரித்து பின் பயனாளியை உதவி சேர்ந்தவுடன் அவர்களிடம் இருந்து கடிதம்,  ஆதார படங்கள் தந்து செயற்படும் தமிழ் அமைப்பு நேசக்கரம்.

மற்றும் சாந்தி அக்காவின் நிர்வாக திறமையும்,  எம்மக்களுக்கான அவரின் அர்பணிப்பும் போற்றப்படவேண்டியது.

நேசக்கர கணக்குகளில் பணமாற்று செலவுகள் தொண்டர்களால் உள்வாங்க படுவதை கண்டு அதற்கும் சேர்த்து காசு அனுப்பினேன்.

நேசக்கரதிற்கு உதவாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.

இது ஏழைகளுக்கு வாழ்வழிக்கும் அமைப்பு.  அரசியல் அமைப்பு அல்ல.

 

உங்கள்  கருத்தில்  100%  உடன்படுகின்றேன் .காந்தியத்திற்கு 
நடந்த  அழிவுக்குப்பிறகு  எந்த  ஒரு  அமைப்புக்கும்  அழிவு 
நடக்கக் கூடாது ,என்பதில்  விழிப்பாக  இருந்தனான் . 
Link to comment
Share on other sites

அக்கா,

சசியும், ஜனனியும் சேர்ந்து $200 + $10(பணமாற்று செலவு) அனுப்பி உள்ளார்கள்.

இதை உள்ளூர் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பாவிக்க வேண்டுகிறார்கள்.

நன்றி.

 

உங்கள் உதவி கிடைத்தது விவசாயி விக். மேலதிக விபரங்கள் விரைவில் தருகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

விவசாயி விக் நீங்கள் மன்னார் அபிவிருத்தித் திட்டத்திற்காக உங்களது பக்கத்து வீட்டு இளைப்பாறிய ஆசிரியை ஐவோன் அவர்களிடமிருந்து  பெற்று அனுப்பிய உதவி 130€ கழிவு 4,51€போக 125,49€ கிடைத்தது. மிக்க நன்றிகள். அடுத்த திட்டத்தில் இந்த உதவியை ஒரு குடும்பத்துக்கு வழங்குகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காலாண்டு கூட்டறிக்கையும் பதிவொன்றும் கேட்டுள்ளேன். விரைவில் கிடைக்கும் கிடைத்ததும் தருகிறேன் விவசாயி விக். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். இன்னொரு நூறுபேர் இணைந்தால் மேலும் பல குடும்பங்களை வாழ வைக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.