Jump to content

செய்! செருக்கை மற!!


Recommended Posts

கனடாவில் தடைச்சட்டம் என்று சொல்லும்போது அச்சட்டத்தை

நியாயமற்றது என்று நிரூபிக்க இங்குள்ள 3 இலட்சம் தமிழ்மக்களால் முடியவில்லையா?

அல்லது அவரவர் தங்கள் வாழ்வை மட்டுமே சிந்தித்து தாயக உறவுகளின்

துயர்களை தங்களுக்குச் சாதகமாக்கிக் குளிர் காய்கிறார்களா?

தாயகத்தின் வலியில் தம்வாழ்வை வளர்த்தவர்கள் (உணர்வுள்ள

மக்கள் மன்னிக்க) தமிழினத்தின் அவலம் சொல்ல மறப்பது ஏன்?

உணர்வுூட்டஇ எழுச்சிப்படுத்த பிரத்தியேகமாக ஊடகங்கள் இயங்க

வேண்டுமா?

உயிர்வதையில் தாய் துடித்துக் கிடக்கப் பிள்ளைகளுக்கு

'உதவு உதவு" என்று உடுக்கடித்துத்தான் உசுப்பவேணுமோ?

எப்போதுமே சரியாக வாசிக்காமல் கோபப்படுவதே ரமாவுக்குப்

பிழைப்பாகி விட்டது......

ஆதிவாசி

Link to comment
Share on other sites

வாசிப்பதை பற்றி நீர் எனக்கு சொல்ல தேவையில்லை.

உமது சூரணை கெட்டதுகள் என்ற கருத்துக்கு தான் நான் பதில் எழுதினேன்.

ஏன் நீங்களும் அந்த மூன்று லட்சம் தழிழர்கள் என்பது ஏன் புரியவில்லை உமக்கு?.

எல்லா தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டமால் யார் யார் குளிர் காய நினைக்கின்றார்களோ அவர்களை கண்டுபிடித்து வடிவாக வாசிக்க எழுதி கொடும். ஆறுதலாக இருந்து வாசிக்கட்டும்.

Link to comment
Share on other sites

வாசிப்பதை பற்றி நீர் எனக்கு சொல்ல தேவையில்லை.

உமது சூரணை கெட்டதுகள் என்ற கருத்துக்கு தான் நான் பதில் எழுதினேன்.

ஏன் நீங்களும் அந்த மூன்று லட்சம் தழிழர்கள் என்பது ஏன் புரியவில்லை உமக்கு?.

எல்லா தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டமால் யார் யார் குளிர் காய நினைக்கின்றார்களோ அவர்களை கண்டுபிடித்து வடிவாக வாசிக்க எழுதி கொடும். ஆறுதலாக இருந்து வாசிக்கட்டும்.

உணர்வில்லாதவர்களை எப்படிச் சொல்வதாம்?

ஆதிவாசி

Link to comment
Share on other sites

உணர்வில்லாதவர்களை எப்படிச் சொல்வதாம்?

ஆதிவாசி

தமிழ் அகாரதியை எடுத்து நல்ல தமிழ் சொற்களை அறிந்து கொள்ளும் .

Link to comment
Share on other sites

எனது தேவைகளை எனக்கு புர்த்தி செய்ய தெரியும். நீர் உமது வேலையை பாரும்.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

கனடாவில் தடைச்சட்டம் என்று சொல்லும்போது அச்சட்டத்தை

நியாயமற்றது என்று நிரூபிக்க இங்குள்ள 3 இலட்சம் தமிழ்மக்களால் முடியவில்லையா?

ஆதிவாசி - ஒண்ணு சொல்லவா?

எத்தனை இலட்சம்பேர் - சேர்ந்து நின்றாலும் ......

ஒரு நாடு தனது வெளியுறவு கொள்கைகள் - என்று திட்டமிட்டு வகுப்பதை - யாராலுமே தடுக்க முடியாது!

தேர்தல் முடிந்த பின்னேதான் - வெளியுறவு அமைச்சு தீர்மானிக்கப்படுகிறது என்பதை விட -......

வெளியுறவு விடயங்களை கையாளும் சக்திகள் உள்நாட்டு அரசியலில்.........

அரசியலுக்கு அப்பற்பட்டு செல்வாக்கு செலுத்தலாமோ என்னமோ!

அதுக்கு - ரஸ்யா வோ - யு எஸ் - இந்தியாவோ - கனடாவோ - விதிவிலக்கல்ல -

விசயம் எல்லாம் - கே .எஃவ்பி - சி.ஐ.ஏ- றோ - ஆர்.சி.எம் பி என்று நீளலாம்!

அடுத்தொரு கேள்வி உங்களிடம் கைவசமிருக்கலாம் - அது

வாக்களிக்கும் உரிமையை வைத்து - செல்வாக்கு செலுத்தமுடியாதா என்று!

அப்பிடி இருந்தாலும் - அடுத்த தேர்தலுக்குமுன் - இவர்களை எப்பிடி கையாள்வது என்பதை - உளவுத்துறை - முடிவெடுத்தே ஆகும்- .......

கருத்துதான் இது - முடிவல்ல.........

இவ்ளோவும் - தடை என்பது - இயக்கத்துக்கு எதிராய் - போடப்பட்டதை நீங்கள் - இங்கே அர்த்தப்படுத்தி இருந்தால்! 8)

Link to comment
Share on other sites

எனது தேவைகளை எனக்கு புர்த்தி செய்ய தெரியும். நீர் உமது வேலையை பாரும்.

நான் என்னுடைய வேலையைத்தான் பார்க்கிறேன்......

ஆதிவாசி

Link to comment
Share on other sites

என்ன செய்யிறாங்க?.......

களியாட்ட விழாக்கள், இன்னிசை இரவுகள், சினிமாக்கலக்கல்கள்

தேவைதானா?

இன்று ஈழத்தமிழினம் எத்தகைய சூழலில் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது?...

கனடாவில் தடைச்சட்டம் என்று சொல்லும்போது அச்சட்டத்தை

நியாயமற்றது என்று நிரூபிக்க இங்குள்ள 3 இலட்சம் தமிழ்மக்களால் முடியவில்லையா?

இன்னும் முடிக்கேல்லை களைச்சுப்போனன்..

மீண்டும் வருவேன்

ஆதிவாசி

ஆதிவாசி நீங்கள் ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்கள்? நீங்களும் கனடாவிலதானே இருக்கிறியள்

உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் அல்ல. நீங்கள் இவ்வாறு ஒட்டுமொத்த கனடா வாழ்

தமிழ் மக்களைக் குற்றம் சுமத்துவது தவறு. எங்கள் பல்கலைக்கழகத்தில் எல்லாம்

உந்த தடைச்சச்ட்டம் நியாயமற்றது என்று போராடினார்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் போராடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏலாது எல்லாரும்

உணர்ந்து வர வேண்டும். நீங்க அதற்கான முயற்சி எடுக்க வேண்டுமே ஒழிய. இப்படி

முயற்சி செய்கிறவர்களையும் வெறுபேத்துற மாதிரி கதைக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

கனடாவில் தடைச்சட்டம் என்று சொல்லும்போது அச்சட்டத்தை

நியாயமற்றது என்று நிரூபிக்க இங்குள்ள 3 இலட்சம் தமிழ்மக்களால் முடியவில்லையா?

ஆதிவாசி - ஒண்ணு சொல்லவா?

எத்தனை இலட்சம்பேர் - சேர்ந்து நின்றாலும் ......

ஒரு நாடு தனது வெளியுறவு கொள்கைகள் - என்று திட்டமிட்டு வகுப்பதை - யாராலுமே தடுக்க முடியாது!

தேர்தல் முடிந்த பின்னேதான் - வெளியுறவு அமைச்சு தீர்மானிக்கப்படுகிறது என்பதை விட -......

வெளியுறவு விடயங்களை கையாளும் சக்திகள் உள்நாட்டு அரசியலில்.........

அரசியலுக்கு அப்பற்பட்டு செல்வாக்கு செலுத்தலாமோ என்னமோ!

அதுக்கு - ரஸ்யா வோ - யு எஸ் - இந்தியாவோ - கனடாவோ - விதிவிலக்கல்ல -

விசயம் எல்லாம் - கே .எஃவ்பி - சி.ஐ.ஏ- றோ - ஆர்.சி.எம் பி என்று நீளலாம்!

அடுத்தொரு கேள்வி உங்களிடம் கைவசமிருக்கலாம் - அது

வாக்களிக்கும் உரிமையை வைத்து - செல்வாக்கு செலுத்தமுடியாதா என்று!

அப்பிடி இருந்தாலும் - அடுத்த தேர்தலுக்குமுன் - இவர்களை எப்பிடி கையாள்வது என்பதை - உளவுத்துறை - முடிவெடுத்தே ஆகும்- .......

கருத்துதான் இது - முடிவல்ல.........

இவ்ளோவும் - தடை என்பது - இயக்கத்துக்கு எதிராய் - போடப்பட்டதை நீங்கள் - இங்கே அர்த்தப்படுத்தி இருந்தால்! 8)

தடை அமைப்புக்கு மட்டுந்தானே வர்ணன்..

மக்களுக்கு இல்லையே......

தாயகத்தில் எங்களின் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை

எடுத்துக்காட்டி எங்கள் மக்கள் போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு

புலம்பெயர்ந்த தேசங்களில் நாம் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லைத்தானே......

இங்கு பேச்சுரிமை இருக்கிறதுதானே....

ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி எழுதியது:

தடை அமைப்புக்கு மட்டுந்தானே வர்ணன்..

மக்களுக்கு இல்லையே......

தாயகத்தில் எங்களின் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை

எடுத்துக்காட்டி எங்கள் மக்கள் போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு

புலம்பெயர்ந்த தேசங்களில் நாம் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லைத்தானே......

இங்கு பேச்சுரிமை இருக்கிறதுதானே....

இதற்கு நான் என்ன சொல்ல மீண்டும்?

ரசிகை மேலே சொன்னது - ஏதும் - விளக்கம் தரலாமோ என்னவோ - உங்களூக்கு! 8)

Link to comment
Share on other sites

இரசிகை இங்கு நான் யாரையும் வெறுப்பேற்றவில்லை.

கவனியுங்கள்....

'உணர்வுள்ள மக்கள் மன்னிக்க" என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

ஆதிவாசி

Link to comment
Share on other sites

இரசிகை இங்கு நான் யாரையும் வெறுப்பேற்றவில்லை.

கவனியுங்கள்....

'உணர்வுள்ள மக்கள் மன்னிக்க" என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

ஆதிவாசி

சரி ஆதிவாசி நாம இங்க சண்டை போடுறதை முதலில் விடுவம். யாழ்களத்தில் உள்ளவர்களால் இந்த பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேணும் என்று சிந்திக்கலாமே????? :roll: :!: :!: :?: :idea:

Link to comment
Share on other sites

தடை அமைப்புக்கு மட்டுந்தானே வர்ணன்..

மக்களுக்கு இல்லையே......

தாயகத்தில் எங்களின் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை

எடுத்துக்காட்டி எங்கள் மக்கள் போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு

புலம்பெயர்ந்த தேசங்களில் நாம் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லைத்தானே......

இங்கு பேச்சுரிமை இருக்கிறதுதானே....

ஆதிவாசி

எப்படியான பேச்சுரிமையை பற்றி கதைக்கின்றீர்கள் ஆதிவாசி? இங்கு பேச்சு உரிமை இருந்தும் ஆர்எம்சி ஒவ்வொருவரையும் எப்படி கண்காணித்து கொண்டு திரிகின்றது என்பது உமக்கு தெரியாதோ?

எத்தனையோ ஆட்கள் ஆகிலும் பேப்பர் போடுவதை கருத்தில் கொண்டு அவர்களின் நடவடிக்கைகள் நோட்டம் இடப்படுகின்றனா என்பது புரியதா?

அன்று உரிமைக்குரலில் கூடியிருந்த அந்த திரளான மக்களை பார்த்து ஒரு வெளிநாட்டு ஊடகம் என்றாலும் ஒரு வார்த்தை கூறினார்களா?

இவற்றை மீறி நாம் வெளிவரவேண்டும் என்றால் இப்படி இணையங்களில் மூகமுடி போட்டு கொண்டு அடிபடுவதை விட நல்லதொரு முயற்சியில் ஈடுபடவேண்டும்.

அன்று கூடியிருந்த மக்களின் உண்ர்ச்சிகள் உமது கண்ணுக்கு படவில்லையா?

இப்படியாக ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறமால் அதற்கான நடவடிக்கையில் இறங்குங்கள். துணைக்கு ஒரு 1000 பேர் வந்தாலும் வெற்றி தான்.

Link to comment
Share on other sites

இங்க வருபவர்கள் உணர்வுள்ளவர்கள் என்று தானே ரமா சொல்லிக் கொண்டிருக்கிறா? இப்படி உணர்வுள்ளவர்களையும் உமது எழுதுக்கள் காயப் படுத்துகின்றன. எதோ கனடா வாழ் தமிழ் மக்களின் இயலாமையால் தான் இந்தத் தடை வந்ததாகத் தான் உமது எழுதுக்கள் உள்ளன.

இது அடிப்படையில் உமது மேற்குலகின், உலக ஒழுக்கு பற்றிய புரிதலின் குறைபாடு.

கனேடிய தமிழ் மக்களை ஒரு அமைப்பின் கீழ் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக ஒரு அரசியற் சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறான ஒன்றுபட்ட முயற்ச்சிகளாலயே உங்களது குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யலாம். உள்ளூர் அரசியலில் தாக்கம் செலுத்தலாம். ஆனால் இதன் தாக்கமும் மட்டுப்படுத்தப்பட்டதே.

இங்கிருப்பவர்களை சீண்டாமால் எவ்வாறு ஒன்றுபட்டுச் செயற்படுவது, கரிசனை அற்று இருப்போரை எப்படி ஒன்றிணைப்பது போன்றா ஆரோக்கியமான கருத்தாடலை நிகழ்த்தும் ஆதிவாசி. நீர் நினைப்பதற்கு எதிர்மாறான விளைவுகளையே உமது கருத்தாடல் இது வரை தந்திருகிறது. வெறுப்பேற்றுவதனால் உணர்வுள்ளவர்களை சலிப்படைய வைத்திருகிறீர். நொந்து போயிருப்பவர்களை இன்னும் நோகடிக்கக்கூடாது. இதனை விடுத்து நீர் என்ன மாதிரியான செயற்பாடுகளால் இதனைச் செய்து கொண்டிருக்கிறீர் என்பதை எழுதி மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இரும். மற்றவர்களை விமர்சிக்க முன் நாம் எமது செயற்பாடுகளை சுய விமர்சனம் செய்ய வேணும்.

Link to comment
Share on other sites

நல்ல கருத்து நாரதரிடம் இருந்து...

ஆனாலும் என்ன என்ன வழிமுறைகள் இருக்கின்றன எமது இனத்தினவரை ஒன்று சேர்ப்பதற்கு...

1) நேரம் இல்லை எண்டு சொல்லுவது.

2) வந்தால் காசு கேட்பினம் என்பார்கள்.

3) பதவியைத் தா வாறன் எண்டுறது..

4) "அவன்" வந்தா நான் வரேல்லை எண்டுறது..

5) தமிழீழம் கிடைச்சாலும் எங்கடை தமிழர் எல்லாம் போட்டியும் பொறாமையால அடிபட்டுக்கொண்டு தான் இருப்பினம்....எண்டு சொல்றது...

6) தான் ரைகஸ் சப்போட்டர் இல்லை எண்டு சொல்லுறது...

7) நிகழ்ச்சிக்கு வாறது தங்கட பிள்ளையள் மேடையில நிக்கிறதை பெருமையா மற்றவர்களுக்கு பீற்றிக்கொள்ள.

8) நிகழ்ச்சியள்ல பொடியள் அடிபிடியள் வரும்..வந்து சோலி எனடு;றது...

7) அதைவிட விசா கிடைச்சபிறகு ஆள் எஸ்கேப் ...

இவையெல்லாம் பார்த்தலையும் கேட்டவையும்..

நாரதரே என்ன செய்யலாம் இதையெல்லாம் நிப்பாட்ட?

ஏதாச்சும் ஒரு வழிவகை வேண்டும் இப்படியானவர்களை சினேகமான முறையில் திருத்த..

சிலவேளை கதைக்க போய் சண்டையும் வருகிறது.!!!!

உண்மையான ஈழ பக்தர்கள் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

ரமா எழுதியது

எப்படியான பேச்சுரிமையை பற்றி கதைக்கின்றீர்கள் ஆதிவாசி? இங்கு பேச்சு உரிமை இருந்தும் ஆர்எம்சி ஒவ்வொருவரையும் எப்படி கண்காணித்து கொண்டு திரிகின்றது என்பது உமக்கு தெரியாதோ?

எத்தனையோ ஆட்கள் ஆகிலும் பேப்பர் போடுவதை கருத்தில் கொண்டு அவர்களின் நடவடிக்கைகள் நோட்டம் இடப்படுகின்றனா என்பது புரியதா?

அம்மா ரமா இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஆதிவாசியின்

பணி நகர்கிறது. என்னினத்தின் அவலம் என்னை நிற்க வைத்துக்

கேள்வி கேட்கிறது. ஏதடா சாட்டுக்கிடைக்கும் மெல்ல ஒதுங்குவோம்

என்ற இரகம் இல்லை ஆதிவாசி.

நானாக உங்களுடன் எடுத்ததற்கெல்லாம் முரண்படவில்லை.

நீங்களாக நான் எழுதியது தவறான கருத்து என்று

காய் காயென்று காய்ந்தீர்கள்.

சரி அப்படியே வைத்துக் கொள்வோம்..

உங்களைப் போன்ற உணர்வுஉள்ளவர்கள் இந்தக்கனடாவில்....

வேண்டாம் ஒன்ராறியோவில் எத்தனை வீதமானவர்கள்?

ஆக மிஞ்சினால் ஆயிரம் காரணங்கள் வரிசையாக வைத்திருப்பீர்கள். (கவனியுங்க உங்களைப் போன்ற மிகச்சிலரைத் தவிர்த்துத்தான் பெரும்பான்மை விடயத்தைக் கூறுகிறேன்)

ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இங்கயிருந்து சண்டைபிடிக்காமல் மிகவிரைவில் எல்லாரும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்திற்காக செயற்படுங்கள்.

ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் தானாகவே உங்கள் வாசல் கதவை தட்டும். அப்போதாவது உங்கள் (மனக்)கதவுகளை சற்று அகலத் திறவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா எழுதியது

எப்படியான பேச்சுரிமையை பற்றி கதைக்கின்றீர்கள் ஆதிவாசி? இங்கு பேச்சு உரிமை இருந்தும் ஆர்எம்சி ஒவ்வொருவரையும் எப்படி கண்காணித்து கொண்டு திரிகின்றது என்பது உமக்கு தெரியாதோ?

எத்தனையோ ஆட்கள் ஆகிலும் பேப்பர் போடுவதை கருத்தில் கொண்டு அவர்களின் நடவடிக்கைகள் நோட்டம் இடப்படுகின்றனா என்பது புரியதா?

அம்மா ரமா இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஆதிவாசியின்

பணி நகர்கிறது. என்னினத்தின் அவலம் என்னை நிற்க வைத்துக்

கேள்வி கேட்கிறது. ஏதடா சாட்டுக்கிடைக்கும் மெல்ல ஒதுங்குவோம்

என்ற இரகம் இல்லை ஆதிவாசி.

நானாக உங்களுடன் எடுத்ததற்கெல்லாம் முரண்படவில்லை.

நீங்களாக நான் எழுதியது தவறான கருத்து என்று

காய் காயென்று காய்ந்தீர்கள்.

சரி அப்படியே வைத்துக் கொள்வோம்..

உங்களைப் போன்ற உணர்வுஉள்ளவர்கள் இந்தக்கனடாவில்....

வேண்டாம் ஒன்ராறியோவில் எத்தனை வீதமானவர்கள்?

ஆக மிஞ்சினால் ஆயிரம் காரணங்கள் வரிசையாக வைத்திருப்பீர்கள். (கவனியுங்க உங்களைப் போன்ற மிகச்சிலரைத் தவிர்த்துத்தான் பெரும்பான்மை விடயத்தைக் கூறுகிறேன்)

ஆதிவாசி

முகமூடியைக் கழட்டி வைத்துவிட்டு யாழில கருத்தெழுதவே முடியலையாம் அதுக்குள்ள தான் ஏதோ செய்யிறதா பீற்றுறார் ஆதிவாசி. ஆதிவாசி உங்களின் முகமூடியைக் கழட்டி வையுங்கோ அப்போது கனடால இருக்கிறவர்கள் கூறுவார்கள் உங்கள் பணியின் வேகம் பற்றி :twisted:

ஆதிவாசியும் வல்வைசாகராவும் ஒருவரோ. ஓர் குறிப்பிட்ட பிரதேச மக்களை சீண்டுவதற்காக ஒராள் கவிதை எழுத அதுக்குப்பின்னால அடுத்தவர் பக்கவாத்தியம் எழுதுறார் :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.