Jump to content

ஹைதராபாத்தில் 2வது டெஸ்ட்: ஆஸி. முதல் இன்னிங்ஸில் 237/9- திடீர் டிக்ளேர்! இந்தியா 5/0!


Recommended Posts

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறதுஇந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.,தொடக்க வீரர்களாக வார்னரும் கோவனும் களத்தில் இறங்கினர். 2.2 ஆவது ஓவரில் அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அதிரடி ஆட்டக்காரரான வார்னர் 6 ரன்கள் எடுத்த நிலையில்புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து 4.2-வது ஓவரில் கோவனும் புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆனார். கோவன் 4 ரன்கள்தான் எடுத்திருந்தார். களத்தில் இருந்த ஹியூக்ஸுடன் கை கோர்த்த வாட்சன் அதிரடியாக ஆடி வந்தார். அவரையும் புவனேஷ்குமார் வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஹியூக்ஸும் சொற்ப ரன்களில வுட் ஆனார். பின்னர் வாடேவுடன் கை கோர்த்த ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடினர். இருவரும் அணியின் ஸ்கோரை 200ஐ தாண்ட வைத்தனர். அந்த அணி 208 ரன்கள் எடுத்த நிலையில் வாடே அவுட் ஆனார். அதன் பின்னர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் சரிந்தன. 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. களத்தில் இரண்டு வீரர்கள் அவுட் ஆகாமல் நின்றிருந்த நிலையில் திடீரென ஆஸ்திரேலியா அணி கேப்டன் கிளார்க் டிக்ளேர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த மொத்தம் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்திருந்தது.இந்திய அணியின் புவனேஷ்குமார், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் புவனேஷ்குமார் அபாரத்தைக் காட்ட பின்பகுதியில் ஜடேஜா ஜொலித்தார்.பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. முரளி விஜய்யும் சேவாக்கும் களத்தில் இறங்கினர். 3 ஓவர்கள் வீசப்பட்டு இந்திய அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Read more at: http://tamil.thatscricket.com/news/2013/03/02/india-vs-australia-second-test-day-1-hyderabad-001728.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆடுகளங்களை பன்னாட்டு கிரிக்கட் வாரியம் தடைசெய்யவேண்டும். இங்கிலாந்துடனான தொடரின் தோல்விக்குப் பின்னர் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணிக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் போனால் இந்தியா வெளிநாடுகளில் ஒருபோதும் வெல்ல முடியது. இந்திய ஆடுகளங்கள் தாயாரிப்பதை அய்.சீ.சீ. பொறுப்பேற்கவேண்டும்

Link to comment
Share on other sites

கிளார்க் அந்த கடைசி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் என்றாலும் விழுத்தலாம் என்று தான் டிக்ளர் செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

பகலவன் சொன்னதுதான் நானும் நினைத்தது .

ஆடுகளம் அவனவன் தன்ரை நாட்டில அதுதான் செய்கின்றான் ,இதில் ஆஸி தான் மிக மோசமாக நடைமுறையை வைத்திருக்கின்றது .

Link to comment
Share on other sites

புவனேஷ்குமார், இவர் புது முகம்  இல்லையா??

ஓம் இவர் புது முகம்தான், 2012 மார்கழி மாதம்  பாகிஸ்தான் உடனான போட்டிகளில் தான் அறிமுகம் ஆனவர்.

 

மேலதிக விபரம் http://www.espncricinfo.com/india/content/player/326016.html

Link to comment
Share on other sites

இந்திய ஆடுகளங்களை பன்னாட்டு கிரிக்கட் வாரியம் தடைசெய்யவேண்டும். இங்கிலாந்துடனான தொடரின் தோல்விக்குப் பின்னர் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணிக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் போனால் இந்தியா வெளிநாடுகளில் ஒருபோதும் வெல்ல முடியது. இந்திய ஆடுகளங்கள் தாயாரிப்பதை அய்.சீ.சீ. பொறுப்பேற்கவேண்டும்

உண்மைதான் காவாலி, ஆனால் இந்திய ஆடுகளங்களை மட்டும் அல்ல ஆஸ்திரேலிய,இங்கிலாந்து,ஸ்ரீலங்கா, icc பொறுப்பேற்கவேண்டும்.ஏன் என்றால்

இவர்கள் ஒன்றும் கனவான்கள் அல்ல. இவர்கள் கூட தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களை தான் தயாரிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஐதராபாத் டெஸ்ட்: முரளி விஜய், புஜாரா அசத்தல் சதம்

 

   



   

ஐதராபாத்:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தமிழக வீரர் முரளி விஜய், புஜாரா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்து.

சேவக் ஏமாற்றம்: இரண்டாவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு முரளி விஜய், சேவக் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. முதலில் முரளி விஜய், பட்டின்சன் பந்தில் பவுண்டரி அடித்தார். சேவக் (6) சிடில் வேகத்தில் வெளியேறினார். புஜாரா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவங்கினார். இருவரும் இணைந்து ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்தனர்.

உணவு இடைவேளைக்கு பின் புத்துணர்ச்சியடைந்த முரளி விஜய், சிடில் வேகத்தில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். பின் தோகர்டி பந்தில் சிக்சர் அடித்த முரளி விஜய் அரைசதம் கடந்தார். எதிர்முனையில் புஜாரா தன் பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். முரளி விஜயைவிட விரைவாக ரன்கள் சேர்த்த புஜாரா டெஸ்ட் அரங்கில் 4வது சதத்தை பதிவு செய்தார். எதிர் முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் 2வது சதம் கடந்தார்.

இரண்டாவது நாள் தேநீர் இடைவேளைக்கு பின் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (109), புஜாரா (112) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2013/03/1362242159/HyderabadTestIndiaAustralia.html

 

 

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றது. விஜய் (129), புஜாரா (169) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

Link to comment
Share on other sites

ஹைதராபாத் டெஸ்ட்: திடீர் டிக்ளேர் செய்த கிளார்க்கின் முடிவு துணிச்சலானது: கவாஸ்கர்

 

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கிளார்க்கின் முடிவு துணிச்சலானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.ஹைதராபாத் டெஸ்ட்டில் விக்கெட் கையில் வைத்திருந்த நிலையில் குறைவான ரன்கள் எடுத்த போதும் ஆஸ்திரேலியா திடீரென டிக்ளேர் அறிவிப்பு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், கிளார்க்கின் இந்த முடிவு நல்ல தந்திரமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். இது துணிச்சலான முடிவு. கடைசி விக்கெட் ஜோடி நீடிக்காது என்பதை அவர் தெரிந்து இருப்பார். இதனால் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 237 ரன்னில் டிக்ளேர் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறார். மேலும் எஞ்சிய சில ஓவர்களில் இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் என்ற விருப்பத்தில் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றார்.ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டீன்ஜோன்ஸ், இந்திய பவுலர்கள் புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா ஆகியோரை பாராட்டியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/03/sports-clarke-s-decision-declare-bold-one-gavaskar-170770.html

Link to comment
Share on other sites

புஜாரா இரட்டை சதம் : இந்தியா 503, ஆஸ்திரேலியா 74/2

 


   

ஐதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், புஜாரா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்கள் எடுத்தது.

 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றது. விஜய் (129), புஜாரா (169) அவுட்டாகாமல் இருந்தனர்.

விஜய் ஏமாற்றம்: மூன்றாவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு முரளி விஜய், புஜாரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்று இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய் (167) டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தார். புஜாரா தனது 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். தவிர, டெஸ்ட் அரங்கில் 1000 ரன்களை கடந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் (18) 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார். இவர் 204 ரன்கள் எடுத்த போது பட்டின்சன் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லியும் டெஸ்ட் அரங்கில் 1000 ரன்களை கடந்தார்.

சச்சின் சொதப்பல்: அடுத்து வந்த இந்திய அணியின் அனுபவ வீரர், சச்சின் (7) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கடந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் தோனி, இம்முறையும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 44 ரன்கள் எடுத்த போது மேக்ஸ்வெல் "சுழலில்' சிக்கினார். அடுத்து வந்த ஜடேஜா (10) நிலைக்கவில்லை. பின் வந்த அஷ்வின் (1), ஹர்பஜன் சிங் (0) ஏமாற்றினர். கோஹ்லி (34) மேக்ஸ்வெல் "சுழலில்' வெளியேறினார்.  புவனேஷ் குமார் (10) அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. இதன் மூலம் 266 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. "சுழலில்' அசத்திய அஷ்வின் முதலில் வார்னரை (26) போல்டாக்கினார். அடுத்த வந்த ஹியுஸ் "டக்' அவுட்டானார்.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

 

http://sports.dinamalar.com/2013/03/1362329501/indiatestcricketaustralia.html

 

 

Link to comment
Share on other sites

இரண்டு கேள்விகள்..

 

  • இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? :unsure:
  • சச்சின் ஓய்வு பெற்றுவிட்டாரா? :D
Link to comment
Share on other sites

கருத்து சொல்ல வாயை திறக்க கூடாது ,தேர்தலில வாக்கு போட்டால் விரலை வெட்டுவது எல்லாம் தான் சுதந்திரம் என்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை .

Link to comment
Share on other sites

மெலிந்து போகும் கங்காரு : மிரட்டி வரும் இந்தியாவுக்கு கிடைத்த இன்னிங்ஸ் வெற்றி !

 

 

ஐதராபாத்: ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த புஜாரா ( இரட்டை சதம் ),முரளி விஜய் (167 ரன்கள்), ஜடேஜா ( 3 விக்கெட் ) , அஸ்வின் (5 விக்கெட்) வீழ்த்தி பெரும் துணையாக இருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தவிர, டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

 

ஆஸி.,க்கு மீண்டும் அடி :


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237/9 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜடேஜா அசத்தல்:


நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

 

 

அஷ்வின் அபாரம்:


பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன் அவுட்'டாக்கினார். வேட் (10), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த பட்டின்சனும் (0) அஷ்வினிடம் சரணடைய, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த வெற்றி:


இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது. தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

தோனி "நம்பர்-1' :


இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி), பின்னுக்கு தள்ளி தோனி (45 டெஸ்ட், 22 வெற்றி) முதலிடம் பிடித்தார்.

மோசமான ஸ்கோர் :


இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்களுக்கு "ஆல் அவுட்டான' ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக தனது, 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு "ஆல் அவுட்டானது'.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=660711

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.