Jump to content

மலர்ந்தும் மலராத……………………


Recommended Posts

கதையும் கதைக்கான படங்களும் அழகு தொடருங்கள்.

 

வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சாத்திரி .

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி....மனசுக்கு கொஞ்சம் கவலையைத் தந்தாலும் இப்படியான பிள்ளை தான் பிறக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கு உடனடியாகவே அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்பதே சிறந்தது...புரிந்துணர்வோடு செயல் பட்ட தந்தையாருக்கு நன்றிகள்...பிள்ளை இல்லையே என்ற ஒரு கவலை தான் அவர்களை உறுத்தும்...அல்லது வைத்தியரின் அறிவுரையினை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ளும் முயற்சியை செய்யலாம்...

 

உடல்,உள ஆரோக்கியம் இல்லாத ஒரு பிள்ளை பெற்று விட்டு தாங்களும் கஸ்ரப்பட்டு பின்னர் பிள்ளையையும் உடலளவில்,மனதளவில் கஸ்ரப்பட வைக்காமல் இருப்பது சிறந்த வழி.இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இப்படியான குறை பாடுகளுடன் பிறப்பவர்கள் அனுபவிக்கும் கஸ்ர,நஸ்ரங்கள் ஏராளம் என்று சொல்லலாம்...

கூடப்பிறந்தவர்களால்,உறவுகளால் ஊதாசீனப்படுத்தபட்டு வளரும் பிள்ளைகளாகவே இருப்பார்கள்..தங்கள் முயற்சியில் முன்னேறினாலும் அதில் கூட குழப்பத்தை விழைவிப்பார்கள்..ஆகவே இனிவரும் காலத்திலாவது பெற்றோர் (espicially disablity child) விடையத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளவேணும்.

 

உங்கள் கருத்துக்களில் ஒருசிலதுடனே என்னால் உடன்படமுடிகின்றது . இந்தக்கதை எழுதுவதற்கு எனக்கு இரண்டு சம்பவங்கள் உந்து சக்தியாக இருந்தன . ஒன்று தற்செயலாகப் பார்க நேரிட்ட " அஞ்சலி " படம் . இரண்டவாது எனது உயிர் நண்பனுக்கு  திருமணமாகி இரண்டுவருடத்தில்  இது நடந்தது . அவனது மனைவி  நான்பார்க்க ஊரில் வளர்ந்தவள் . இருவருக்கும் பிறென்ஜ் சரளமாக கதைக்கத் தெரியாது . நானே அவளிற்கு மொழிபெயர்புகளுக்கு செல்லவேண்டியதாக இருந்தது  . ஒருகட்டத்தில் டொக்ரர் இதைச் சொன்னபொழுது அவளை என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது . பின்பு எனது அறிவுரைகளால் அவள் அரைமனதுடன் சம்மதித்தாள் . ஆனால் அந்த சம்பவம் என்னை உறுத்தியபடியே இருந்தது . ஏனெனில் அஞ்சலியில் அந்தக்குழந்தையை அதன் தாயால் வசதிகள் குறைந்த நாட்டில் பார்க்க முடிகின்றது என்றால் ஏன் வசதிவாய்ப்புகள் உள்ள நாட்டில் இப்படியான உயிர்களை காப்பாற்ற தயங்குகின்றோம் ??? வேலைவாய்பிலும் கல்வியிலும் , மற்றும் எல்லாவிடயத்திலும் சரிசமனாக நடத்தும் நாடுகளில் இருந்துகொண்டு எமதுவசதிக்காக இப்படியான கருணைக்கொலையைச் செய்யலாமா ???? முடிவுகளை உங்களைப்போன்ற வாசகர்களதான் சொல்லவேண்டும் . நன்றி .

 

Link to comment
Share on other sites

பல இல்லங்களில் நடந்த உண்மைக்கதை இது ....எழுத்துருவில் வடிவமைத்த கோமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

 

கதை என்பது வானத்தில் இருந்து குதிப்பவை அல்ல . எம்மைச்சுற்றி அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களே கதைகளாகின்றன .  உங்கள் நேரத்திற்கும் கருத்துகளிற்கும் மிக்க நன்றிகள் குமாரசாமி அண்ணை .

 

Link to comment
Share on other sites

எப்படி கருத்தினை பதிவது என்றே தெரியவில்லை மிக அழகான  கொஞ்சம் கூட தளம்பாத எழுத்து நடை நகர்வு, கதையின் கருவினை நகர்த்திய விதம் எல்லாவற்றையும் விட சில சொற்கள் .....உதாரணம் பதியம் ......... அருமை ஐயா தொடருங்கள் காத்திருக்கிறேன் அடுத்த படைப்பிற்காக

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள் கதைக்கு கருத்தெழுதிவிட்டு அனுப்ப மறந்துவிட்டேன். இன்றுதான் நினைவு வந்தது. கதை நன்றாக இருக்குக் கோமகன்.

Link to comment
Share on other sites

கதையும் பாத்திரப்படைப்பும் எழுத்து நடையும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளன. பாத்திரங்களின் மனஉணர்வுகளை மிகவும் யதார்த்தமாக எடுத்து வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் கோமகன்.

 

உங்கள் வரவிற்கும் கருத்துக்கும்  மிக்க நன்றிகள் காவலூர் கண்மணி அக்கா .

Link to comment
Share on other sites

இந்த மலர்ந்தும் மலராத மலரில் தங்களது நேரத்தையும் கருத்துக்களையும் பதிந்த கள உறுவுகளான அலைமகள் , ரதி அக்கா , தப்பிலி neethimathi , வந்தியதேவன் , மைத்திரேயி , விசுகு , nunavilan , நேற்கொழு தாசன் , மெசொபொத்தேமியா சுமேரியர் ஆகியோருக்கு எனது தலைசாய்கின்றது  . நேரப்பற்றாக்குறை காரணமாக தனித்தனியாக ஒவ்வொருவருடனும் கருத்தாட முடியாமைக்கு வருந்துகின்றேன் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.