Jump to content

பிப்டி கலிபர்


Recommended Posts

050119f0000w001.jpg

 

 

 

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது.

 

நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள்.

ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த

காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது.

 

டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு

மட்டும் இல்லை, எங்க ஊர் கிழடுகளும் சொல்லுங்கள், பெடியள் பிப்டியோட வந்திட்டாங்கள் இனி பொம்மர்காரன் துலைஞ்சான் என்று.

கேட்க கேட்க எப்படியும் பிப்டி கலிபரை ஒரு நாள் எண்டாலும் சுடவேணும் எண்ட ஆசை எனக்கு அப்பவே வந்துவிட்டது.

 

இயக்க அண்ணாமார் பிப்டியை கொண்டு வந்து அடிச்சால் நாங்கள் உடனே அந்த இடத்துக்கு ஓடி போயிடுவோம். சுட்டு முடிய விழுகிற வெறும் கோதுகளை பொறுக்க. அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 
பின்னர் ஒரு நாளில் கோட்டை பகுதியில் கப்டன் ஹீரோராஜ் பிப்டி கலிபர் வைச்சு சியாமா செட்டியை விழுத்தினபோது, பிப்டியிலே எனக்கு இருந்த ஆசை கூடிவிட்டது.
 
அது ஒரு காலம்.
 
 
 
 
 

மகாதேவாவின் வகுப்பில் பென்சீனை பற்றி படிச்சு கொண்டிருக்கும் போது ஜவான் அண்ணை ஒரு காலை தாண்டியபடி வகுப்புக்குள் நுழைந்தார். மகாதேவா மாஸ்டர் மெல்ல கழற எங்களுக்கு விளங்கிட்டுது. இயக்கம்பங்கர் வெட்ட ஆட்களை கொண்டுபோக போறாங்கள் எண்டு. அதுவரைக்கும் பெட்டைகளுக்கு கடலை போட்டுகொண்டிருந்தநானும் இன்னும் இரண்டு நண்பர்களும் வாசலை நோக்கி ஓட அங்கயும் இரண்டு பேர்நிண்டாங்கள். சரி பின் வேலிக்குள்ளாளே ஓடுவம் என்றால் அதிலையும் ஒருத்தன்.இண்டைக்கு துலைஞ்சம்டா என்று நினைக்கும்போது தான் கிணறு ஞாபகம் வந்தது. டியுசன் ஆட்கள் வந்து போறதால பாதி மூடின கிணறு.ஒருத்தருக்கும் தெரியாமல் நானும் பாலாவும் அதுக்குள்ளே இறங்கி

ஒளிசிருந்தோம்.

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 வானுக்குள்ளே இடம் இல்லை என்று நாங்கள் வானுக்கு மேலே ஏறி இருந்தம்.கை சும்மா இருக்குமா, ரோடிலே இருக்கிற மரங்களிலே குழைகளை முறிச்சு, போற வாற பெட்டைகளுக்கு எறிஞ்சம். வான் டிரைவர் அண்ணைக்கு  எப்படி தெரிஞ்சுதோ தெரியவில்லை, தாவடி சந்தியிலே வைச்சு கிளுவந்தடி முறிச்சு சக்கை அடி எங்களுக்கு. அது

மட்டுமில்லை எங்களை கொண்டு போய் இயக்கதிண்ட கட்டவுட்டுக்கு கிட்டே பங்கர் வெட்ட விட்டுவிட்டான். இரவு முழுக்க வெட்டி விடியத்தான் போகலாம் எண்டான்.

 

அப்போ முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. ஆமி சண்டிலிப்பாய் சந்தியிலே நிண்டவன். இயக்கம் சீரணி கோயிலுக்கு பின்பக்கம் தொடக்கம், கட்டுடை -  நவாலி வீதியிலே கட்டவுட் போட்டு நிண்டது.

 

 கட்டுடை சந்தியிலே இருந்து ஆள் உயரத்துக்கு மூவிங் பங்கர் வெட்டுறோம். நவாலி வீதியிலே ஒரு தொடர்ச்சியான பங்கர். பின்னேரம் நாலுமணிக்கு தான் ஒரு சோத்து பாசல் கொண்டுவந்து தந்தாங்கள். அங்கெ நிண்ட இயக்க பெட்டைகளுக்கு 

ஒரு எறியல் விட்டு கொண்டு வெட்டி முடிச்சோம். இருட்டின உடனே விடுவாங்கள் எண்டு நினைச்சு கடைசி மணித்தியாலம் கொஞ்சம் வெட்டுற மாதிரி பேய்க்காட்டினோம்.

மணி ஆறரை ஆச்சு எங்களை ஏத்தி கொண்டு போறதுக்கு வாகனமும் வரவில்லை.  சென்றி மாறி சண்டை டீம் வேற வந்திட்டுது. சொர்ணம் அண்ணையிண்ட ஆட்களாம். ஆட்கள் நல்ல உருப்படியா உருண்டு திரண்டு இருந்தாங்கள். டே

வாங்கடா ஒரு பிப்டி பொசிசன் அடிக்க வேணும் எண்டு சொன்ன போது தான் விளங்கிச்சு இவங்கள் இண்டைக்கு என்னை விடமாடான்கள் என்று.

அவங்களிலே ஒருத்தன் இடம் காட்டுறன் எண்டு எங்களிலே நாலு பேரை கூட்டி கொண்டு போனான். சீரணி சந்திக்கும் கட்டுடை சந்திக்கும் இடையிலே ஒரு சணல் வெளி. சணல் வெளி முடிய ஒரு கல் வீடு. அதுக்கு நல்ல சீமேந்தாலே சுத்து

மதில்.

அந்த மதிலுக்கு பின்னாலே மண் மூட்டைகள் செய்து அடுக்கி, மதிலே ஒரு சின்ன ஓட்டை போட வேணும். அதுகுள்ளாலே பிப்டியை வைச்சு முன்னேறுகிற ஆமிக்கு அடிப்பாங்களாம். எப்படி மதிலே ஓட்டை போடுறது என்று பின் மதிலிலே செய்து காட்டினான். அந்த மதில் பூசி முடிக்கவில்லை. கல்லை வைச்சு சீமெந்து பூசின அடையாளம் அப்படியே தெரியும். அந்த பூசின இடங்களிலே மூலைகளில் அலுவாங்கால் நாலு தட்டு தட்டுறது, பிறகு கல்லுக்கு ஒரு இடி அவ்வளவு தான் மதில் இருக்க கல்லு கழறும்.
 
நாங்கள் முதல்ல மண் மூட்டைகளை செய்து அடுக்கினோம். கடைசியாக மதில்ல ஓட்டை போடுவம் என்று. வீட்டுக்குள்ளே பிப்டியை கழட்டி ஒயில் போட்டு கழுவினான்கள். எங்கையோ தூரத்திலே இருந்து பார்த்த பிப்டி இப்போ கண்ணுக்கு

முன்னாலே.

 அண்ணே ஒருக்கா தொட்டு பார்க்கலாமோ.?

 

பாருங்கடா..

 

ஆசை தீர தடவி பார்த்து கொண்டேன். அதன் பரல்கள் , சொடுக்கி , ரவைகள் , எல்லாமே நாங்கள் தொடும் தூரத்தில்.     

அவ்வளவு வேலை செய்து களைப்பு இருந்தாலும் ஒரு இனம்புரியாத சந்தோசம். நாளைக்கு வகுப்பிலே பிப்டியை தொட்ட கதையை சொன்னால் நாலு சரக்குகள் ஆவெண்டு கேக்குங்கள்.

 

இரவு ஒரு மணி இருக்கும் மண் மூட்டை அடுக்கி முடிய. இனி கல்லு கழட்டுற வேலை தான். நாலு மூலையிலும் நாலு தட்டு அலுவாங்காலே தட்டி போட்டு கல்லுக்கு ஒரு இடி இடச்சேன். கல்லு கழறுவதற்கு பதிலாக அப்படியே மதில் பாறி விழுந்திட்டுது. வந்து பார்த்த பொறுப்பாளர் நாய் படா பேச்சு. இதை நம்பித்தான் விடிய சண்டையே இருக்கு.

விடியிற துக்குள்ளே மதில் இருந்த இடம் எல்லாம் மண் மூட்டை இருக்க வேணும்.

 

எங்களுக்கு வேற என்ன கதி, விடியும் மட்டும் உரபாக்குள்ளே  மண்ணை நிரப்பி, மதில் இருந்த இடத்தை அடைச்சது தான் வேலை. ஆமிக்காரன் கூட விடிய எழும்பி பார்த்து திகைக்க போறான், என்னடா சுவர் இருந்த இடத்திலே மண் மூட்டை

எண்டு.

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

  

ஒரு பக்கம் நிஜ பிப்டி முழங்க எங்கட பிப்டியும் முழங்க தொடங்கியது.
 
டட் ..டட் டட் ...டும் டும் டும் ....
 
நண்பன் முதுகிலே தட்டி போட்டு சொன்னான் 
 
மச்சான் இனி  ஈழம் கிடைச்சிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M63_aa-mount.gif

 

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

Link to comment
Share on other sites

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

அந்தக் காலத்தில்.. நாங்க கண்ணால தான் காண முடியும் ஏன்னா அவ்வளவோ.. குட்டி பசங்க..! தொடக் கூடிய காலத்தில் தொட்டாச்சு. யாழ் நகர வாசிகளுக்கு கோட்டையும் கலிபரும் புதிதல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.



நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)



இதில விசேசம் என்னென்றால் பவர்புள் லேசர் இருக்குது. அது மட்டும் போது எதிரியின் பார்வை போயிடும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

:D :D டங்கு .. சீ.. கை சிலிப் ஆயிட்டுது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)

 

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

Link to comment
Share on other sites

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

Link to comment
Share on other sites

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.
Link to comment
Share on other sites

050119f0000w001.jpg

 

 

 

அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

050119f0000w001.jpg

 

 

 

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

Link to comment
Share on other sites

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

Link to comment
Share on other sites

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

 

நன்றி நெடுக்ஸ். அந்த காலம் மீண்டும் எங்கள் வாழ்கையில் வாராதா என்று ஏங்கி  ஏங்கியே எங்களின்  இந்த காலமும்  கரைகிறது.

 

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

நன்றி நந்தன் அண்ணா. எனக்கு நிச்சயமாக தெரியும் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று.

 

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

 

நன்றி சாத்திரி அண்ணா, உங்கள் மேலதிக தகவல்களுக்கும் வருகைக்கும். நீங்கள் தான் கதைகளுக்கு பலம் சேர்க்கிறீர்கள்.

 

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

 

நன்றி புங்கை. அப்போப்போ தொட்டு வைச்சிருந்தால் பினால் உபயோகப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

 

 

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

 

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

நன்றி ஜீவா. நிச்சயமாக தமிழீழம் காமெடி அல்ல. ஆனால் அன்றைய காலப்பகுதியில் காமடியில் எல்லாம் தமிழீழம் இருந்தது.

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

நன்றி சஜீவன். வாழ்கையில் ஒரு முறையாவது தொட்டு பாருங்கள். எத்தனையோ சண்டைகளை மாற்றிய கருவிகள் அவை.

 

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

 

நன்றி கோமகன் அண்ணா. நாங்கள் செயின் புளக் எண்டு சொல்லுவோம். நான் இந்தியம் ஆமி காலத்திலேயே கண்டிருக்கிறேன். அவன் பிரம்படியுக்குள்ளே இருந்த ஆமிகாரரை மீட்க தண்டவாளத்தாலே செயின் புலக் கொண்டுவந்தவன் கண்ணிவெடி பயத்திலே. எண்டாலும் இயக்கம் காரைக்காலிலே வைச்சு அதை பிரட்டி போட்டாங்கள்.

 

 

 

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.

 

நன்றி விழி அண்ணா. புக்காரா புகைஞ்சு கொண்டு விழும்போது வந்த சந்தோசத்துக்கு அளவில்லை. அப்போ நவாலி தேவாலய படுகொலை நடந்துகொஞ்ச நாட்கள் தான். ஒரு பழி தீர்த்த உணர்வு.

 

 

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

 

நன்றி இசை அண்ணா. நீங்களும் நகைச்சுவையாக எழுத வல்லவர் உங்கள் நினைவுகளையும் எழுதுங்கள்.

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

Link to comment
Share on other sites

நன்றி

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

 

அதுவொரு கனாக்காலம் எல்லாக் கனவுகளும் கனவுகளாகவே போயிட்டுது.

எட பொடியா ஆயிரம் கோடியில ஏதும் கொடிகட்டிற ஐடியா இருக்கோ ? :lol: அந்தப் பிறப்பில நானும் இருந்தா ஆயிரம் தனியே தர ஏற்பாடு செய்யலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

 

அது ஒரு சிம்பள் ஆக இருக்கிறது.. அந்த வகையில்.. தேசத்தின் துயர் மிகு கணங்களை.. தியாகங்கள் நிறை கணங்களை கண் முன்னே கொண்டு வருகிறது.

 

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் போட்டோவே எடுத்து வைத்துக் கொள்வதில்லையா..????! :)

Link to comment
Share on other sites

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

 

நன்றி மைத்திரேயி. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக என் அனுபவங்களை பகிர்வேன்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ,மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்கள் பதிவுகள் .

Link to comment
Share on other sites

எழுத்துகள் அந்த மாதிரிப் போகுது பகலவன்.  :)
 
யாழ்ப்பாணத்திற்கு கலிபர் வந்திட்டிது என்ற செய்தி பள்ளிக்கூடத்தில் பரவியது. பள்ளிக்கூடம் விட்டதும் கொக்குவில் முகாமுக்குப் போய்ப் பார்த்தோம். கிட்டரோடு அவரின் குரங்கும் நின்றது. கலிபர், முகாம் போட்டிக்கொ அருகில் நின்ற மரதின் கீழ் ஸ்டான்டில் பொறுத்தப் பட்டிருந்தது. இன்னுமொரு ஸ்டான்டையும் கண்டதாக ஞாபகம்.
 
சிங்கள விமானப்படை பெல் ஹெலியிலிருந்து 50 கலிபர் அடிக்கும் போது அதன் சத்தம் மிகவும் பிடிக்கும். இரவுச் சண்டைகளில் ட்ரேசர் அடிப்பார்கள், சொல்லி வேலையில்ல.  
 
இரை மீட்டதற்கு நன்றி.  :D
Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைக்கதை நன்றாக என்னை சிறிக்க வைத்தது. என்னையும் ஒரு முறை பதுங்கு குழிவெட்ட கட்டுவனுக்கு கூட்டிச் சென்றார்கள். நான் வீட்டில தேடுவாங்கள் என்று கவலைப்பட்டு சொல்ல ஒரு மணித்தியாலத்தின் பின் என்னை மட்டும் மற்றவர்களுக்கு தெரியாமல் செல்ல அனுமதித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான்.

 

தாவடியில் முதன்முதலாக இராணுவம் குண்டு போடும்போது இணுவில் பகுதியில் ஒரு பொதுமக்களும் இறக்கவில்லை. குண்டு விழுந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த மேல்மாடி வீட்டில் ஈபிஆர் எல் எவ் இயக்கமும் இருந்திருக்கிறது. முதன் முதலாக தாவடியில்தான் குண்டு வீச்சு நடந்தாலும் உலங்குவானூர்தியில் இருந்து கட்டுவன், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி குப்பிளான் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பே வானில் இருந்து சுட்டார்கள்.

Link to comment
Share on other sites

163664_large.jpg

 

இந்த ஆயுதத்தை எப்ப கையில பிடிசீங்கள் எப்பிடி பயிற்சியெடுத்தீங்கள் என்ற கதையையும் எழுதுங்கோ பகலவன். வரலாறு முக்கியம் அமைச்சரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.