Jump to content

பிப்டி கலிபர்


Recommended Posts

050119f0000w001.jpg

 

 

 

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது.

 

நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள்.

ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த

காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது.

 

டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு

மட்டும் இல்லை, எங்க ஊர் கிழடுகளும் சொல்லுங்கள், பெடியள் பிப்டியோட வந்திட்டாங்கள் இனி பொம்மர்காரன் துலைஞ்சான் என்று.

கேட்க கேட்க எப்படியும் பிப்டி கலிபரை ஒரு நாள் எண்டாலும் சுடவேணும் எண்ட ஆசை எனக்கு அப்பவே வந்துவிட்டது.

 

இயக்க அண்ணாமார் பிப்டியை கொண்டு வந்து அடிச்சால் நாங்கள் உடனே அந்த இடத்துக்கு ஓடி போயிடுவோம். சுட்டு முடிய விழுகிற வெறும் கோதுகளை பொறுக்க. அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 
பின்னர் ஒரு நாளில் கோட்டை பகுதியில் கப்டன் ஹீரோராஜ் பிப்டி கலிபர் வைச்சு சியாமா செட்டியை விழுத்தினபோது, பிப்டியிலே எனக்கு இருந்த ஆசை கூடிவிட்டது.
 
அது ஒரு காலம்.
 
 
 
 
 

மகாதேவாவின் வகுப்பில் பென்சீனை பற்றி படிச்சு கொண்டிருக்கும் போது ஜவான் அண்ணை ஒரு காலை தாண்டியபடி வகுப்புக்குள் நுழைந்தார். மகாதேவா மாஸ்டர் மெல்ல கழற எங்களுக்கு விளங்கிட்டுது. இயக்கம்பங்கர் வெட்ட ஆட்களை கொண்டுபோக போறாங்கள் எண்டு. அதுவரைக்கும் பெட்டைகளுக்கு கடலை போட்டுகொண்டிருந்தநானும் இன்னும் இரண்டு நண்பர்களும் வாசலை நோக்கி ஓட அங்கயும் இரண்டு பேர்நிண்டாங்கள். சரி பின் வேலிக்குள்ளாளே ஓடுவம் என்றால் அதிலையும் ஒருத்தன்.இண்டைக்கு துலைஞ்சம்டா என்று நினைக்கும்போது தான் கிணறு ஞாபகம் வந்தது. டியுசன் ஆட்கள் வந்து போறதால பாதி மூடின கிணறு.ஒருத்தருக்கும் தெரியாமல் நானும் பாலாவும் அதுக்குள்ளே இறங்கி

ஒளிசிருந்தோம்.

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 வானுக்குள்ளே இடம் இல்லை என்று நாங்கள் வானுக்கு மேலே ஏறி இருந்தம்.கை சும்மா இருக்குமா, ரோடிலே இருக்கிற மரங்களிலே குழைகளை முறிச்சு, போற வாற பெட்டைகளுக்கு எறிஞ்சம். வான் டிரைவர் அண்ணைக்கு  எப்படி தெரிஞ்சுதோ தெரியவில்லை, தாவடி சந்தியிலே வைச்சு கிளுவந்தடி முறிச்சு சக்கை அடி எங்களுக்கு. அது

மட்டுமில்லை எங்களை கொண்டு போய் இயக்கதிண்ட கட்டவுட்டுக்கு கிட்டே பங்கர் வெட்ட விட்டுவிட்டான். இரவு முழுக்க வெட்டி விடியத்தான் போகலாம் எண்டான்.

 

அப்போ முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. ஆமி சண்டிலிப்பாய் சந்தியிலே நிண்டவன். இயக்கம் சீரணி கோயிலுக்கு பின்பக்கம் தொடக்கம், கட்டுடை -  நவாலி வீதியிலே கட்டவுட் போட்டு நிண்டது.

 

 கட்டுடை சந்தியிலே இருந்து ஆள் உயரத்துக்கு மூவிங் பங்கர் வெட்டுறோம். நவாலி வீதியிலே ஒரு தொடர்ச்சியான பங்கர். பின்னேரம் நாலுமணிக்கு தான் ஒரு சோத்து பாசல் கொண்டுவந்து தந்தாங்கள். அங்கெ நிண்ட இயக்க பெட்டைகளுக்கு 

ஒரு எறியல் விட்டு கொண்டு வெட்டி முடிச்சோம். இருட்டின உடனே விடுவாங்கள் எண்டு நினைச்சு கடைசி மணித்தியாலம் கொஞ்சம் வெட்டுற மாதிரி பேய்க்காட்டினோம்.

மணி ஆறரை ஆச்சு எங்களை ஏத்தி கொண்டு போறதுக்கு வாகனமும் வரவில்லை.  சென்றி மாறி சண்டை டீம் வேற வந்திட்டுது. சொர்ணம் அண்ணையிண்ட ஆட்களாம். ஆட்கள் நல்ல உருப்படியா உருண்டு திரண்டு இருந்தாங்கள். டே

வாங்கடா ஒரு பிப்டி பொசிசன் அடிக்க வேணும் எண்டு சொன்ன போது தான் விளங்கிச்சு இவங்கள் இண்டைக்கு என்னை விடமாடான்கள் என்று.

அவங்களிலே ஒருத்தன் இடம் காட்டுறன் எண்டு எங்களிலே நாலு பேரை கூட்டி கொண்டு போனான். சீரணி சந்திக்கும் கட்டுடை சந்திக்கும் இடையிலே ஒரு சணல் வெளி. சணல் வெளி முடிய ஒரு கல் வீடு. அதுக்கு நல்ல சீமேந்தாலே சுத்து

மதில்.

அந்த மதிலுக்கு பின்னாலே மண் மூட்டைகள் செய்து அடுக்கி, மதிலே ஒரு சின்ன ஓட்டை போட வேணும். அதுகுள்ளாலே பிப்டியை வைச்சு முன்னேறுகிற ஆமிக்கு அடிப்பாங்களாம். எப்படி மதிலே ஓட்டை போடுறது என்று பின் மதிலிலே செய்து காட்டினான். அந்த மதில் பூசி முடிக்கவில்லை. கல்லை வைச்சு சீமெந்து பூசின அடையாளம் அப்படியே தெரியும். அந்த பூசின இடங்களிலே மூலைகளில் அலுவாங்கால் நாலு தட்டு தட்டுறது, பிறகு கல்லுக்கு ஒரு இடி அவ்வளவு தான் மதில் இருக்க கல்லு கழறும்.
 
நாங்கள் முதல்ல மண் மூட்டைகளை செய்து அடுக்கினோம். கடைசியாக மதில்ல ஓட்டை போடுவம் என்று. வீட்டுக்குள்ளே பிப்டியை கழட்டி ஒயில் போட்டு கழுவினான்கள். எங்கையோ தூரத்திலே இருந்து பார்த்த பிப்டி இப்போ கண்ணுக்கு

முன்னாலே.

 அண்ணே ஒருக்கா தொட்டு பார்க்கலாமோ.?

 

பாருங்கடா..

 

ஆசை தீர தடவி பார்த்து கொண்டேன். அதன் பரல்கள் , சொடுக்கி , ரவைகள் , எல்லாமே நாங்கள் தொடும் தூரத்தில்.     

அவ்வளவு வேலை செய்து களைப்பு இருந்தாலும் ஒரு இனம்புரியாத சந்தோசம். நாளைக்கு வகுப்பிலே பிப்டியை தொட்ட கதையை சொன்னால் நாலு சரக்குகள் ஆவெண்டு கேக்குங்கள்.

 

இரவு ஒரு மணி இருக்கும் மண் மூட்டை அடுக்கி முடிய. இனி கல்லு கழட்டுற வேலை தான். நாலு மூலையிலும் நாலு தட்டு அலுவாங்காலே தட்டி போட்டு கல்லுக்கு ஒரு இடி இடச்சேன். கல்லு கழறுவதற்கு பதிலாக அப்படியே மதில் பாறி விழுந்திட்டுது. வந்து பார்த்த பொறுப்பாளர் நாய் படா பேச்சு. இதை நம்பித்தான் விடிய சண்டையே இருக்கு.

விடியிற துக்குள்ளே மதில் இருந்த இடம் எல்லாம் மண் மூட்டை இருக்க வேணும்.

 

எங்களுக்கு வேற என்ன கதி, விடியும் மட்டும் உரபாக்குள்ளே  மண்ணை நிரப்பி, மதில் இருந்த இடத்தை அடைச்சது தான் வேலை. ஆமிக்காரன் கூட விடிய எழும்பி பார்த்து திகைக்க போறான், என்னடா சுவர் இருந்த இடத்திலே மண் மூட்டை

எண்டு.

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

  

ஒரு பக்கம் நிஜ பிப்டி முழங்க எங்கட பிப்டியும் முழங்க தொடங்கியது.
 
டட் ..டட் டட் ...டும் டும் டும் ....
 
நண்பன் முதுகிலே தட்டி போட்டு சொன்னான் 
 
மச்சான் இனி  ஈழம் கிடைச்சிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M63_aa-mount.gif

 

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

Link to comment
Share on other sites

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

அந்தக் காலத்தில்.. நாங்க கண்ணால தான் காண முடியும் ஏன்னா அவ்வளவோ.. குட்டி பசங்க..! தொடக் கூடிய காலத்தில் தொட்டாச்சு. யாழ் நகர வாசிகளுக்கு கோட்டையும் கலிபரும் புதிதல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.



நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)



இதில விசேசம் என்னென்றால் பவர்புள் லேசர் இருக்குது. அது மட்டும் போது எதிரியின் பார்வை போயிடும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

:D :D டங்கு .. சீ.. கை சிலிப் ஆயிட்டுது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)

 

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

Link to comment
Share on other sites

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

Link to comment
Share on other sites

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.
Link to comment
Share on other sites

050119f0000w001.jpg

 

 

 

அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

050119f0000w001.jpg

 

 

 

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

Link to comment
Share on other sites

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

Link to comment
Share on other sites

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

 

நன்றி நெடுக்ஸ். அந்த காலம் மீண்டும் எங்கள் வாழ்கையில் வாராதா என்று ஏங்கி  ஏங்கியே எங்களின்  இந்த காலமும்  கரைகிறது.

 

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

நன்றி நந்தன் அண்ணா. எனக்கு நிச்சயமாக தெரியும் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று.

 

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

 

நன்றி சாத்திரி அண்ணா, உங்கள் மேலதிக தகவல்களுக்கும் வருகைக்கும். நீங்கள் தான் கதைகளுக்கு பலம் சேர்க்கிறீர்கள்.

 

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

 

நன்றி புங்கை. அப்போப்போ தொட்டு வைச்சிருந்தால் பினால் உபயோகப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

 

 

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

 

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

நன்றி ஜீவா. நிச்சயமாக தமிழீழம் காமெடி அல்ல. ஆனால் அன்றைய காலப்பகுதியில் காமடியில் எல்லாம் தமிழீழம் இருந்தது.

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

நன்றி சஜீவன். வாழ்கையில் ஒரு முறையாவது தொட்டு பாருங்கள். எத்தனையோ சண்டைகளை மாற்றிய கருவிகள் அவை.

 

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

 

நன்றி கோமகன் அண்ணா. நாங்கள் செயின் புளக் எண்டு சொல்லுவோம். நான் இந்தியம் ஆமி காலத்திலேயே கண்டிருக்கிறேன். அவன் பிரம்படியுக்குள்ளே இருந்த ஆமிகாரரை மீட்க தண்டவாளத்தாலே செயின் புலக் கொண்டுவந்தவன் கண்ணிவெடி பயத்திலே. எண்டாலும் இயக்கம் காரைக்காலிலே வைச்சு அதை பிரட்டி போட்டாங்கள்.

 

 

 

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.

 

நன்றி விழி அண்ணா. புக்காரா புகைஞ்சு கொண்டு விழும்போது வந்த சந்தோசத்துக்கு அளவில்லை. அப்போ நவாலி தேவாலய படுகொலை நடந்துகொஞ்ச நாட்கள் தான். ஒரு பழி தீர்த்த உணர்வு.

 

 

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

 

நன்றி இசை அண்ணா. நீங்களும் நகைச்சுவையாக எழுத வல்லவர் உங்கள் நினைவுகளையும் எழுதுங்கள்.

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

Link to comment
Share on other sites

நன்றி

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

 

அதுவொரு கனாக்காலம் எல்லாக் கனவுகளும் கனவுகளாகவே போயிட்டுது.

எட பொடியா ஆயிரம் கோடியில ஏதும் கொடிகட்டிற ஐடியா இருக்கோ ? :lol: அந்தப் பிறப்பில நானும் இருந்தா ஆயிரம் தனியே தர ஏற்பாடு செய்யலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

 

அது ஒரு சிம்பள் ஆக இருக்கிறது.. அந்த வகையில்.. தேசத்தின் துயர் மிகு கணங்களை.. தியாகங்கள் நிறை கணங்களை கண் முன்னே கொண்டு வருகிறது.

 

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் போட்டோவே எடுத்து வைத்துக் கொள்வதில்லையா..????! :)

Link to comment
Share on other sites

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

 

நன்றி மைத்திரேயி. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக என் அனுபவங்களை பகிர்வேன்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ,மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்கள் பதிவுகள் .

Link to comment
Share on other sites

எழுத்துகள் அந்த மாதிரிப் போகுது பகலவன்.  :)
 
யாழ்ப்பாணத்திற்கு கலிபர் வந்திட்டிது என்ற செய்தி பள்ளிக்கூடத்தில் பரவியது. பள்ளிக்கூடம் விட்டதும் கொக்குவில் முகாமுக்குப் போய்ப் பார்த்தோம். கிட்டரோடு அவரின் குரங்கும் நின்றது. கலிபர், முகாம் போட்டிக்கொ அருகில் நின்ற மரதின் கீழ் ஸ்டான்டில் பொறுத்தப் பட்டிருந்தது. இன்னுமொரு ஸ்டான்டையும் கண்டதாக ஞாபகம்.
 
சிங்கள விமானப்படை பெல் ஹெலியிலிருந்து 50 கலிபர் அடிக்கும் போது அதன் சத்தம் மிகவும் பிடிக்கும். இரவுச் சண்டைகளில் ட்ரேசர் அடிப்பார்கள், சொல்லி வேலையில்ல.  
 
இரை மீட்டதற்கு நன்றி.  :D
Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைக்கதை நன்றாக என்னை சிறிக்க வைத்தது. என்னையும் ஒரு முறை பதுங்கு குழிவெட்ட கட்டுவனுக்கு கூட்டிச் சென்றார்கள். நான் வீட்டில தேடுவாங்கள் என்று கவலைப்பட்டு சொல்ல ஒரு மணித்தியாலத்தின் பின் என்னை மட்டும் மற்றவர்களுக்கு தெரியாமல் செல்ல அனுமதித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான்.

 

தாவடியில் முதன்முதலாக இராணுவம் குண்டு போடும்போது இணுவில் பகுதியில் ஒரு பொதுமக்களும் இறக்கவில்லை. குண்டு விழுந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த மேல்மாடி வீட்டில் ஈபிஆர் எல் எவ் இயக்கமும் இருந்திருக்கிறது. முதன் முதலாக தாவடியில்தான் குண்டு வீச்சு நடந்தாலும் உலங்குவானூர்தியில் இருந்து கட்டுவன், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி குப்பிளான் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பே வானில் இருந்து சுட்டார்கள்.

Link to comment
Share on other sites

163664_large.jpg

 

இந்த ஆயுதத்தை எப்ப கையில பிடிசீங்கள் எப்பிடி பயிற்சியெடுத்தீங்கள் என்ற கதையையும் எழுதுங்கோ பகலவன். வரலாறு முக்கியம் அமைச்சரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.