Jump to content

அகோராஃபோபியா (திறந்தவெளி பற்றிய பேரச்சம்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகோராஃபோபியா (திறந்தவெளி பற்றிய பேரச்சம்)

 

திங்கள், 4 மார்ச் 2013( 16:17 IST )
 
அகோராஃபோபியா என்பது பயம் தொடர்பான ஒரு மன நோயாகும். இதுபோன்ற அச்ச உணர்வுள்ளவர்கள் திறந்தவெளி இடங்களையும், கூட்டம், நெரிசல் அதிகமான இடங்களையும், அதுபோன்ற சூழ்நிலைகளையும் கண்டு மனப்பீதி அடைவார்கள்.
 
அதாவது தான் தப்பிக்கவே வழியல்ல என்று நினைத்துக் கொண்டு பெரும் அச்சங்கொள்வார்கள். டிரைவிங் செய்யும்போது, பாலங்களைக் கடக்கும் போதும், கூட்டம் மிகுந்த இடங்களிலும் இவ்வகையான பேரச்சம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த இடங்கள் மட்டுமல்லாது, அதுபோன்ற சூழ்நிலைகளை கற்பனை செய்வதன் மூலமும் ஒரு சிலர் பேரச்சத்திற்குள் தள்ளப்படும் நிலையும் உண்டு.
 
இதனால் சிலர் தங்கள் வீட்டை விட்டுக்கூட கிளம்பாமல் முடங்கிவிடும் அபாயமும் உள்ளது.
 
இந்த வகையான அச்ச உணர்வு ஏன் ஏற்படுகிறது என்று மருத்துவ ரீதியாக சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற மனநோய்கள் போலவே இதற்கும் மரபுரீதியான காரணிகளும், சுற்றுப்புற சூழல் ரீதியான காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
நோய் அறிகுறிகள் :
 
சில இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதும், தப்பிக்க வழியில்லை என்ற அச்சத்தில், ஏதோ ஒன்றை செய்து கொண்டிருப்பதும் அகோராஃபோபியா என்ற மனச்சிக்கல் இருப்பதற்கான கூறுகள் ஆகும்.
 
திடீரென இருதய துடிப்பு அதிகரித்தல்.
 
வெப்பம் இல்லாத போதும் வியர்த்துக்கொட்டுதல்.
 
உடல்நடுக்கம், தடுமாற்றம்.
 
சரியாக மூச்சுவிட முடியவில்லை என்ற உணர்வில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்.
 
நெஞ்சுவலி.
 
குமட்டல்.
 
தலைசுற்றல்.
 
பைத்தியம் ஆகிறோம் என்ற அச்சம் அல்லது உடல் செயல்பாடுகளின் கட்டுப்பாடுகள் இழக்கிறோம் மற்றும் மரணம் பற்றிய பேரச்சம்.
 
புலன் உணர்வு குறைந்த நிலை.
 
பேரச்ச உணர்வு ஒரே நாளில் பலமுறையோ அல்லது திடீர், திடீரென எப்போதாவதோ ஏற்படலாம். இந்த அச்ச உணர்வு 10 அல்லது 15 நிமிடங்கள் நீடிக்கலாம்.
 
பொதுவாக மருத்துவர் நோய்க்குறிகளை பற்றி விசாரணை மேற்கொள்வார். இந்நோய்க்கான பிற பொது அறிகுறிகளை கணக்கில் எடுத்துக் கொள்வார். மருத்துவரீதியான உடல் நலமின்மை அல்லது குடிப்பழக்கம் பற்றிய விசாரணை இதில் அடங்காது. இதற்கு தனியாக மருத்துவப் பரிசோதனை தேவைப்படும்.
 
சிகிச்சை என்ன?
 
தினசரி வாழ்க்கையில் இந்த அச்ச உணர்வின் பங்கு என்ன என்பதை பொறுத்து சிகிச்சை அமையும். அகோராஃபோபியாவுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. நடத்தை முறை சிகிச்சை, அறிதல் முறை சிகிச்சை, தளர்வு சிகிச்சை (Relaxation Therapy) காட்சிப் பிம்பங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் முறையில் சிகிச்சை அளித்தல்.
 
இதில் மிக பயனுள்ள சிகிச்சையாக, எந்த சூழ்நிலை அல்லது அனுபவம் கண்டு அச்சம் ஏற்படுகிறதோ, அதே சூழ்நிலை அல்லது அனுபவத்திற்கு நோயாளியை மீண்டும் உட்படுத்துவது. அதாவது நம்பகமான ஒரு நண்பருடன் இதை செய்து பார்க்கலாம். அதாவது ஒரு பாலத்தை கடப்பதோ, கூட்டம் அதிகமாக உள்ள இடங்களோ அல்லது இதுபோன்ற சூழ்நிலைகளோ எந்தவித ஆபத்தும் இல்லை என்று நோயாளி உணரும் வரை சிகிச்சை முறையை நீட்டிக்கலாம்.
 
அகோராஃபோபியா என்ற பேரச்ச உணர்வு சில வருடங்களுக்கோ, ஏன் ஆயுள் முழுவதும் கூட நீடிக்கலாம்.
 
சாதாரண பயங்களையும், இதுபோன்ற பேரச்சங்களையும் இனம் பிரித்துக்காண மனநோய் மருத்துவர்களை ஆலோசிப்பது உசிதம்.
 
பொதுவாக தனிமையை தவிர்ப்பது நல்லது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.