Jump to content

எனக்குமொரு ஆசை.....


Recommended Posts

எனக்குமொரு ஆசை

---------------------------

தீப்பற்றி உரசிப் போகும் - உன்

ஞாபகத் தீண்டல்கள்

தீப்பிழம்பாய் எரியும் என் இதயத்தில் - சிறு

ஆறுதல் நீரை ஊற்றும்

அடிவானத்துக்கும் அப்பாலும் காணவில்லை -உன்

இதயத்தின் ஆழம்

அருகினில் இருக்கின்றாய் என்பதன்றி -வேறு

புரிதல் எதுவும் இல்லை

கண்களின் சிமிட்டலில் - என்ன

மர்மத்தை வைத்திருக்கிறாய் -என்

காதல் அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே

அங்கத்தின் அசைவுகளில் அடைகாத்திருப்பதைப்போல

ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன்

உனை விட்டு வெகுதூரம் விலகிப்போக

தளும்பி வழியும் மதுக்குவளைபோல -என்

இதயமும் உனை இறுக்கிக்கொள்கிறதே

சொல்லிவிடு -உன்னைக்

காதலிகிறேன் என்று சொல்லிவிடு

அறுத்துப் போட்ட ஒவ்வொரு கணங்களையும்

மாலையாக்கிக் கொள்ள எனக்குமொரு ஆசை

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஆகா எல்லாள மகாராஐாவுக்கும் காதல் நோய் பற்றிக்கொண்டு விட்டதா?

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆகா மாகாராஜா காதலில் கசிந்துருகி வடித்த கவிதை அருமை. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

அறுத்துப் போட்ட ஒவ்வொரு கணங்களையும்

மாலையாக்கிக் கொள்ள எனக்குமொரு ஆசை

தங்கள் தவிப்புகளை எல்லாம் உணர்ந்து தங்கள் கணங்களை

எல்லாம் இனிமையாக்க அந்த அரசி சொல்லிவிடுவாள்...வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளா!

காதல் கவிதையில பிச்சு வாங்கிட்டீங்க

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எல்லாள மகாராஐாவுக்கும் காதல் நோய் பற்றிக்கொண்டு விட்டதா?

வாழ்த்துக்கள்.

அவர் ஆட்சியுலும் கலக்கினர் காதலிலும் கலக்குவார் போல் இருகிறது வாழ்த்துக்கல் மகாராஜா

Link to comment
Share on other sites

அவர் ஆட்சியுலும் கலக்கினர் காதலிலும் கலக்குவார் போல் இருகிறது வாழ்த்துக்கல் மகாராஜா

என்னங்க தீபா....என்னைக் கலக்கிறார் என்று கூறிவிட்டு நீங்கள் வாழ்த்து கல் அனுப்பியிருக்கிறீர்களே... :(:D

இந்தக் கல்லுகளை வைத்து நான் என்னங்க கோட்டையா கட்டப் போறேன்..... :lol::lol:

மல்லாவி எங்கேங்க இருக்கிறது..... சும்மா படையெடுக்கலாம்னு தான்..... :lol::lol::lol:

கல்லை வைத்துக் கொண்டு யோசிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளா!

காதல் கவிதையில பிச்சு வாங்கிட்டீங்க

அன்புடன்

மணிவாசகன்

ஐயா மணி.....!

பெண்கள் தான் காதல்னாலே பிச்சுக்குவாங்க... (செருப்பைக் கழட்டிக் காட்டியே பிச்சிடுவாங்க)

ஆண்கள் எல்லாம் காதல் பிசை தானுங்க வாங்கு வாங்க...

என்ன சில ஆண்களுக்கு பல பிச்சை கிடைப்பதுண்டு....

பிச்சை கிடைக்காத ஏக்கத்தில் (பிச்சை போட யாரும் ரெடின்னா கடதாசி போடுங்க ....c/o எல்லாள சமஸ்தானம்)

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அறுத்துப் போட்ட ஒவ்வொரு கணங்களையும்

மாலையாக்கிக் கொள்ள எனக்குமொரு ஆசை

தங்கள் தவிப்புகளை எல்லாம் உணர்ந்து தங்கள் கணங்களை

எல்லாம் இனிமையாக்க அந்த அரசி சொல்லிவிடுவாள்...வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.