Jump to content

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்..!


Recommended Posts

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்

----------------------------------------------------

நடிப்பு : ஆதிவாசி, முருகன் மற்றும் பலர்.....

இரசிகை,வெண்ணிலா,நித்திலா,அலி

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

நீதிக்கதை சூப்பர் மாமு...அட...சே...மன்னா, தாடகை வந்து நீதி சொல்லமல் இருந்தால் சரி நீதிக்கதை2 ஐ விரைவில் எதிர் பாக்கிறேன் :(

Link to comment
Share on other sites

"மன்னர் மன்னன் வீர தீர கூரை கோபுர

ஜெக ஜால எல்லாளமகாராஜா"

எப்போது இருந்து டப்பாங்குத்து பாடகரானார்?

எல்ஸ் ரொம்பக் குத்தாதேப்பா....

டப்பா நெளிஞ்சு கிடக்கு...

மச்சம் கேட்டபோதே ஆதிவாசி உசாராயிருக்கவேணும்...

ம்....

நைசா ஆப்பக்கார ஆச்சியிட்ட ஆதிபட்ட அவதியை

'இசையும் கதையும்" ஆக யாழ்களத்தில அள்ளிவீடுகிறீர்..

"ஆச்சி வைச்ச சூடு.....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா.... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை..

நாசி வழி வாசம் ஏற்றி

ஓசித் தோசை தின்ன ஓடி

ஆப்பக்கார ஆச்சி வைச்ச

ஐயய்யோ..........

என்ன சூடு.. என்ன சூடு

வெந்து போச்சு எந்தன் அங்கம்

நொந்து போச்சு உள்ளத் தங்கம்

சிந்தும் கண்ணீர் ஏந்தும் நெஞ்சம்

எங்கிருக்கு?.... எங்கிருக்கு?

ஆச்சி வைச்ச சூடு....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை.."

வேதனைப் பாட்டோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

Link to comment
Share on other sites

:lol: :arrow: :D:lol::lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P எல்ஸ் சூப்பரோ சூப்பர்

வெண்ணிலா .... !

உங்களுக்கும் ஒரு இசையும் கதையும் ரெடியாகின்றது... :lol: ...நல்லமாதிரி வரும்.....

இல்லையென்றால் நான் சொல்ல மாட்டேன்....எழுதிய பிறகு

சிரிப்புத் தான் போங்க..... :lol::lol:

எழுதுகோலுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

ஆதி வாசி வாலைச் சுருட்டி எவ்வளவோ காலமாயிட்டு ....நித்திலா.....

சின்னத்தம்பி பரியாரிடம் பத்து (வாலிருந்த பகுதிக்கு)வைத்துக் கட்டிக் கொண்டு திரிவதாக .... :lol::D ....வழிப்போக்கர்கள் வந்து சபையிலே சொன்னார்களே....

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே....

சுட்டுப் போட்ட வாலும் ..... :lol::lol:

சுருட்டிக் கொண்டோடிய ஆசிவாசியும்..... :lol: ஞாபகம் வருதே

பத்துப் போட்ட சின்னத்தம்பி பரியாரியும்.. :lol:

படுக்க முடியாமல் அவதிப்பட்ட ஆதி வாசியும்

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே....

ஞாபகத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நீதிக்கதை 2----------

வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்

----------------------------------------

யார் யாரோவெல்லாம் உசுப்பேத்தி விட இரசிகைக்கும் வெள்ளி இரவு நடனம் ஆடி விட வேணும்னு ஆசை பிடித்துக் கொண்டது.....

யாரையாவது பிடித்து வெள்ளி இரவு நடனத்துக்குப் போகணும்னு....கங்கணம் கட்டிக் கொண்டா....

அந்த நேரம் தான் அயல் வீட்டு அங்காள பரமேஸ்வரியும் முக்குச் சந்தி முனியம்மாவும் அகப்பட்டாங்க....

வெள்ளி இரவு நடனம்னா ஹார்லிக்ஸ்சும் போர்விண்டாவும் கலந்து முழுங்குற மாதிரின்னு ....முனியம்மா றீல் விட...பால் ஆப்பம் சாப்பிடுற டேஸ்ட்டுன்னு அங்காளம் எடுத்து விட்டது....

இவங்களின் லாலாதேவிக் கதைங்க எல்லாம் கேட்ட இரசிகை....இப்பிறவியின் பயனுண்டென்றால் இரவு நடனம் ஆடுவதில் தான் உண்டென்றும் இல்லாவிட்டால்....உயிரை விடுவதே உத்தமமென்றும் கடுந் தவம் செய்யத் தொடங்கினா......

இரசிகையின் தவத்துக்கு மனமிரங்கிய கோடி வீட்டில் கோயில் கொண்டிருக்கும் காளியம்மாவும் சூ...மந்திரக்காளி சொல்லி வேஷம் மாறி குட்டித் தேவதையாக இரசிகையின் முன் வந்து குதித்தா.....

இரசிகையின் போன உயிரும் திரும்பி வர...வெள்ளி இரவு நடனத்துக்கான உண்ணாவிரதம் ஒத்தி வைப்புன்னு பத்திரிகைங்களுக்கெல்லாம் அறிக்கை விட்டிட்டு ....காளியம்மாவை வறுத்தெடுக்கத் தொடங்கினா....நம்ம இரசிகை.....

"தங்கத்தில பவுடரு

வெள்ளியில கொலுசு

ஜிகினாவுல டவுசரு-ஒரு

பொய்ப்பல்லு செட்டுன்னு..."

வெள்ளி இரவு நடனத்துல அப்ஸரஸாக ஜொலிக்க ...எல்லாம் அள்ளிக் கொடுத்தா காளியம்மா....

சப்பாத்து மட்டும் பாட்டாவில கொடுக்க இரசிகையின் முகம் சிணுங்கியது.....

பாட்டாவில சப்பாத்தும்

ரப்பரில சிலிப்பரும் போட்டா

என் ஸ்டேட்டஸு என்னாவது

என் அந்தஸ்து லோ..வாகும்மே

காளியம்மா...நீ...யோசீம்மான்னு.....

கண்ணீர் சொரிய கோரிக்கை ஒண்ணு வைச்சா....

கன்னி இரசிகையின் கண்ணீர் கண்டு கலங்கிப் போன காளியம்மா...

''கேளு அம்மா கேளு

கேள் வரகுக் கஞ்சி நான் தரவோ

கேளு அம்மா கேளு

இனியவளே.......

இடிச்ச சம்பல் நான் தரவோ....

கேளு அம்மா கேளு

இளையவளே....

இஞ்சி போட்ட தேனீர் தான் தரவோ

இயம்பும்மா...இயம்புன்னு....

இரசிகையை இழுத்து உச்சி முகர்ந்தாள் காளியம்மாள்....

காளியம்மாவின் இம்சை தாளாத இரசிகையும்

கல்லூரிக் கன்னிகை ஆனாலும்

சின்ன வயதில் படித்த

சிண்டெரல்லா கதையில் வந்த...

கண்ணாடிக் காலணி கேட்டு

காளியம்மாவைக் கடுப்படித்தா.....

மந்திர தந்திரங்கள் செய்தும் மை போட்டும் காணாத கண்ணாடிக் காலணிகள் மார்வாடி கடையில் அடைவில் கிடப்பதை கடைசியாகக் கண்டு பிடித்தா.... காளியம்மா...

மனசே இல்லா மார்வாடியிடம்

காசில்லைனா ..கடைசி வரை இரங்கா

கடங்காரனிடம்.....

சிண்டெரல்லாவின் சிறு செருப்பு மாட்டிக் கொண்டதைக் கண்டு பிடிச்சுச் சொன்னா...காளியம்மா...

பெரிசாகப் பவிஸு காட்டப் பெரு முயற்சி செய்யும் இரசிகையும்.....காளியம்மாவைக் கடுக்கிப் பிடித்தா.....

ஈற்றிலே இறங்கி வந்த காளியம்மா.....விடிவதற்குள் கொண்டு வந்து வைத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ....கடையுடைத்து கால் செருப்பு எடுத்துக் கொடுத்தா.....

காளியம்மாவையே... கள்ளியாக்கிய அவள் மனம் கொள்ளை கொண்ட கன்னி இரசிகையும் சந்தோஷத்துடன் இரவு நடனம் போனாவாம்.....

"வானத்து வெள்ளி நிலவு

வாசல்வரை வந்ததோ ...

வல்ல சமுத்திரத்து வேல்ஸும்

வால் சுழட்டி வந்ததோ

முத்துக் குவியல் ஒன்று

முன்னால் வந்ததோவென்று

செத்துச் செத்துப் போனார்

சென்றி நின்றார் ஆண்களெல்லாம்

என்று சொல்லும் வண்ணம்

ஆண்களின் தோட்டத்தில் அல்லி ஒன்று பூத்திருந்தது.

பெண்களைப் பிடித்து பிசாசு (பொறாமை) ஆட்ட....

ஆண்கள் நெருப்பில் (மோக) விழுந்து உருகிப் போக...

ஆடினா...இரசிகை....அப்படியொரு ஆட்டம்.....

"இரவினில் ஆட்டம்

இதிலொரு நாட்டம்

விடியுமுன் ஓட்டம் -அதுவரை

விழுந்தெழும்பும் கூட்டம்

என்று கூட்டம் குதூகலிக்க... அப்படியொரு ஆட்டம்....

ஆடினா....பாடினா

ஆடிப் பயமுறுத்தினா....

சுட்டும் விழிகளைச் சுழட்டினா

சோகை மனக் காளையரைத் துவட்டினா..

கட்டம் போட்டு அழகு காட்டினா

கலங்காத மனங்களிலும் தீ மூட்டினா

ஆசைத் தீய மூட்டினா....

என்று இரவு முழுக்க ஆடினா....ஆட்டத்தின் அற்புத அயக்கத்தில் திளைத்திருந்த போது.....

ஆங்கொரு அழகிய இராஜ குமாரன் வந்தான்......

அண்ணலும் நோக்க ....அவளும் நோக்க.....

பத்திக்கிச்சு.....பத்திக்கிச்ச

Link to comment
Share on other sites

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

இரசிகையின் படம் காட்டல் முடியட்டும்....ஆதி ..அதற்குள் என்னா அவசரம்.....

காதல் கதை படிக்க விருப்பமில்லையோ ஆதிக்கு.....காட்டுல திரிஞ்சு ...திரிஞ்சு...ஆதிக்கு சென்ஸ் கெட்டுப் போச்சி........ :lol::lol::lol: என்னா சென்ஸ்ன்னு ...கேட்கப்படாது....சொல்லிப்புட்

Link to comment
Share on other sites

வெண்ணிலா ரொம்பத் தான் படம் காட்டுறா.... :(:D அடுத்தது அவ தான்னு தானே ஆதி சொன்னீங்க..... :lol::lol::lol:

இப்ப என்ன ஒரு கேள்வி.....அந்தர் பல்டி அடிக்கிறீங்களே ..ஆதி... நீங்க சொன்னதை வெண்ணிலாவுக்கு சொல்ல மாட்டேன்.......

சத்தியத்தை மீறமாட்டாத

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

என்ன சொல்றீங்க ..இரசிகை ...ஒரு மூடுவோடை

------------------

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

ஆண்களெல்லாம் சென்றி நின்றால் யாருக்குத்தான் குளிராது..(இந்தப் பெண்களில் யாருக்குத் தான் என்று வாசிக்க வேண்டுகின்றேன்)

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

Link to comment
Share on other sites

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

வெள்ளி இரவு நடனத்துக்கு இந்த ஆடை அலங்காரம் நன்றாக இருக்கின்றது ...இரசிகை...

சிந்தனைக் கதை 2 இன் தலையில் இந்தப் படத்தைப் போட்டு விடுங்கள் இரசிகை :lol::lol: வேண்டுதலுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P
Link to comment
Share on other sites

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:(:D:lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

Link to comment
Share on other sites

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

இன்னும் இருக்குங்க பிரிய சகி....அக்காத்தை ஆடுறார் ...அள்ளிக்கோ....அள்ளிக்கோன்னு....

உன்னைப்பிடி என்னைப்பிடி போட்டிகள்.....வில்லன் தீரப்பாவின் அதிரடி அட்டாக்குகள் என்று .....முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக நீளப் போகின்றது....

பைனான்சியர் முருகன் தான் பல்லுப் போன பாம்பாய் பெட்டிக்குள்ளே படுக்கப் போறார் ....அதுதான் யோசிக்கிரேன்.......

அதிரடி படத்தின் டைரக்டராக

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:lol::lol::lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

ஆதி வாசி ரெண்டு காரணங்களுக்காக உங்களைப் பெண்களெல்லாம் பிடித்து உலுக்கப் போகிறார்கள்.....

1. குளிர்ச்சி நடிகைங்கிறது..... குளிச்சி நடிக்கிற நடிகை என்பது போல கேட்கின்றது.....

பெண்களை இப்படி விளம்பரப் படுத்துவதற்கு உங்களுக்கு தடா...... :roll: :roll:

2. பெண்களை சன்மானமாகக் கொடுப்பது வள்ளிக் கிழங்குகளாக....என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..... :twisted: :twisted:

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத கிழங்குகளா.. :lol::lol: ... என்ன சகோதரிகளே

கிளர்ந்து எழுங்கள்.........ஆதி வாசிக்கு எறிகிற முதல் கல்லாக எனது கல் இருக்கட்டும்......

பெண்களை அவமானப்படுத்தும் ஆதி வாசி ...ஒழிக..... :lol::lol::lol:

கல்லுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

அப்படியே செய்கிறேன் அனிதா....

.பெண்களின் ஏகப் பாராட்டைப் பெற்ற எல்லாள மஹாராஜா அப்பிடின்னு ஒரு வாழ்க :lol::lol: சொல்லிக் கொண்டு போங்க....அனிதா.. :lol::lol:

அப்படியே ....பெண்களை கொச்சை? படுத்தும் ஆதி வாசிக்கும் ஒரு கல்லெறி......ஹி...ஹி.....

எந்த நாட்டில என்றாலும் எலக்ஷன் வந்தா சொல்லிடுங்க...நானும் ஒரு நாமினேஷன் தாக்கல் செய்து விடுகிறேன்.....இவ்வளவு பெண் வாக்கையும் தவறவிட விருப்பமில்லை.....

வாழ்க கேட்டு புளகாங்கிதமடையும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நகைச்சுவையாக , நன்றாக இருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.