Jump to content

பொதுவாக்கெடுப்பு மற்றும் சர்வதேச விசாரணைகோரி லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்.


Recommended Posts

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு
நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய
அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ,
சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற
உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாநிலை போராட்டம்
குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே
நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை
நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

தற்போது 12 வயதான
சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை
ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகமும்,
ஐ.நா. மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளது. 4 வருடங்களுக்கு
பிறகு இன்றும் ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை மூடி
மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே தமிழ் ஈழத்திற்கான
பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழ மக்களுக்கு ஒரே தீர்வு ஆகும்.

இப்போது
எங்களது கோரிக்கைகள் என்னவென்றால், இலங்கையில் நடைபெற்றது வெறும்
போர்க்குற்றமோ, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. அது திட்டமிடப்பட்ட
இனப்படுகொலை.

சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே தமிழ்
மக்களுக்கான ஒரே தீர்வு இதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து கொண்டு
வர வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து
வெளியேற்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்தியா இலங்கை அரசுடனான அனைத்து
அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணை குழுவில் இடம்பெறக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத்
தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால்
தமிழகத்தில் இருந்து எந்த வரியையும் செலுத்த மாட்டோம். இதற்கான
பிரச்சாரத்தில் மாணவர்களாகிய நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம் என்றனர்.

 


இன்று மேலும் ஒரு போராட்டம்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று (08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஜெனீவாவில்
இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு
ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று
(08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 அப்போது பேசிய
மாணவர்கள், இலங்கையில் லட்சக்கணக்கில் நம் தமிழ் மக்களை கொடூரமாக கொலை
செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதைவிட திட்டமிட்ட தமிழின
படுகொலை என்பதுதான் உண்மை. இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு ஏன் மவுனம்
காக்கிறது என்பது புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால்
ஒரு குட்டி தீவுதான். அதற்கு ஏன் இந்தியா பயப்பகிறது?
ஜெனீவாவில்
நடக்கும் ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை
தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண
வேண்டும். தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. இதற்காக நாங்கள் கடைசி வரை
போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.
இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13206:loyola-college&catid=36:tamilnadu&Itemid=102

Link to comment
Share on other sites

இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் , 
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் , 
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

 

https://www.facebook.com/photo.php?fbid=613942675287253&set=pcb.613945318620322&type=1&relevant_count=2&ref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

நன்றி உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.... நன்றி தோழர்களே....

Link to comment
Share on other sites

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை.இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பிரிட்டோ, சதீஷ், மணி, திலீப் உள்ளிட்ட 9 மாணவர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தினுள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

(வைகோவின் பதிவுகள்)

 

லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தினை துவக்கி இருக்கிறார்கள்... வாழ்த்துக்கள் தோழர்களே... 


நண்பர்களே நீங்கள் சார்ந்திருக்கிற நிறுவனம், கல்லூரிகள், தொழிற்சங்கம் சார்பாக போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். மாணவர்கள் தங்களது கல்லூரி நிர்வாகத்தினை மீறி போராட்டம் நடத்த வரும் பொழுது நமக்கும் துணிவு இருக்கவேண்டும். பின்பு அரசியல் கட்சிகளை குறை சொல்லிப் பயனில்லை. நாம் போராடாமல் சமூகப் போராட்டம் நிகழாது. அரசியல் கட்சிகள் அடையாளப்போராடங்களை மட்டுமே நடத்தும். நமது போராட்டத்தினை நாம் நடத்துவோம்.

 

Thirumurugan Gandhi
Link to comment
Share on other sites

போராட்டங்களை நசுக்க சில சக்திகள் திட்டமிடும். அதையும் தாண்டி தொடர்ச்சியாக நடாத்தும் அனைவருக்கும் நன்றிகள்!

 

 

ஐ.நா. வாக்கெடுப்பு முடிந்தும் இவை தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

இந்தக் கோரிக்கைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் சாக வேண்டித்தான் வரும். இப்பொழுது சாகவும் விடமாட்டார்கள். தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போட்டு விடுவார்கள். வேறு போராட்ட வடிவங்கள் பற்றி சிந்திப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றி

கட்சிபேதம் இன்றி அனைத்து ஈழ உணர்வாளர்களும்

போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் மாணவமணிகளே....உங்களுக்கு உள்ள உணர்வுகூட .ஈழத்தவன் என்று பெயர்கொண்ட சிலருக்கு இல்லை...அதுதான் புதிய தலைமுறை  t,v  யில் 13+பாவித்து தீர்வு சொன்னவருக்கு....***

Link to comment
Share on other sites

லயோலா கல்லூரியில் உண்ணாநிலை தொடர முடியாத காரணத்தால்..

போராட்டம் கோயம்பேடு அருகில் மாற்றப்பட்டுள்ளது...

போராட்டம் தொடரும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உறவுகளுக்கு நன்றி,
மாணவர் சக்தி மாபெரும் சக்தி ஒரு மாணவன் நினைத்தால் நிச்சயமாக கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்றுஉள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

அப்போது பேசிய மாணவர்கள், இலங்கையில் இலட்சக்கணக்கில் நம் தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதைவிட திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதுதான் உண்மை. இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது என்பது புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு குட்டி தீவுதான். அதற்கு ஏன் இந்தியா அஞ்சுகின்றது?

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ஜனாதிபதி ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும். தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. இதற்காக நாங்கள் கடைசி வரை போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர்.

protes0022025120020.jpg

 
Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் இன்றுஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொண்டு, பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணை தூதரகத்தை மூட வேண்டும், இந்திய அரசு இலங்கையுடன் வைத்திருக்கும் உறவை தூண்டிக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அங்கு படிக்கும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் இலங்கை அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணை தூதரகம் அருகே உள்ள அக்கல்லூரி மாணவர்கள் ஜோ பிரிட்டோ, சண்முக பிரியன், பால்ஜூனத், லியோ ஸ்டாலின், திலீபன், பிரசாத், அனிஸ்குமார், ஆண்டனி ஷாஜி உள்பட 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://dinamani.com/latest_news/article1493483.ece

Link to comment
Share on other sites

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு
நடத்தக்கோரி சென்னை லயோலா கல்லூரி  மாணவர்களின்  தமிழீழ விடுதலைக்கான
மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா
கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன்,
சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 9
மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த    
காவல்துறையினர் அங்கு விரைந்து கல்லூரி அனுமதியின்றி வாளகத்தில் 
உண்ணாவிரதம் இருப்பதால் கைது செய்யபோவதாக கூறினார்கள். இதனை அடுத்து 
மாணவர்கள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதாவது மூவர் தூக்குதண்டனை க்கு 
எதிராக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தாம் தொடர்ந்தும் தமது போராட்டத்தை
முன்னெடுக்க போவதாக அறிவித்து தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம்
அருகாமையில் அப் போராட்டம் நடை பெற்றுக்கொண்டு உள்ளது . இதற்க்கு ஆதரவாக
உணர்வாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு வந்து தங்கள் ஆதரவை
தெரிவித்தவண்ணம்  உள்ளனர் .

இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து
அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே
நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை
நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.


தற்போது
12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது
இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச
சமூகமும், ஐ.நா. மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளது. 4
வருடங்களுக்கு பிறகு இன்றும் ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் இந்த
இனப்படுகொலையை மூடி மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே
தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழ மக்களுக்கு ஒரே தீர்வு
ஆகும்.

இப்போது எங்களது கோரிக்கைகள் என்னவென்றால், இலங்கையில்
நடைபெற்றது வெறும் போர்க்குற்றமோ, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. அது
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

சர்வதேச விசாரணையும்,
பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு இதற்கான தீர்மானத்தை
இந்தியா முன்மொழிந்து கொண்டு வர வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை
தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இந்தியா இலங்கை அரசுடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

news2day.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13215:lolaya-college-students&catid=36:tamilnadu&Itemid=102
Link to comment
Share on other sites

ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க 2 வது நாளாக கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் 
 
8/03/13 காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் , 

சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் , 

உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர் . இதில் 8 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர் . பின்பு மாலை நேரத்தில் காவல்துறை மாணவர்களை களைந்து செல்லும்படி மிரட்டினர் . கைது செய்வதாக கூறினர். அதனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தக்க வைக்கும் பொருட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள செங்கொடி திடலுக்கு  தங்கள் உண்ணா நிலை போராட்டத்தை மாற்றம்  செய்தனர் . இந்த இடத்தில தற்போது பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் பெரும் திரளாக வந்து மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . திரு வைகோ அவர்கள் இன்று காலை மாணவர்களை நேரில் சந்தித்துள்ளார் . 

 
உண்ணா நிலையில் இருக்கும் இலோயல கல்லூரி மாணவர்கள் விவரம் 
 
 
1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
 
2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
 
3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
4.பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
 
5.பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
6.மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
 
7.சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
 
8.லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
போராட்டம் வெல்லும் வரை மாணவர்கள் உன்ன நிலையில் இருக்கப் போவதாக தெரிவித்தனர் . மேலும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மாணவர்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர் . 
 
 

537634_222825251197058_678636051_n.jpg

 

P1180307.JPG

 

P1180308.JPG

 

P1180306.JPG

 

vaiko+koyambedu.jpg

 

P1180332.JPG

 

 

 

 

http://newsalai.com/details/college-students-go-on-fast-for-the-2nd-day.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09-layalo-44-300.jpg

 

இலங்கை மீது நடவடிக்கை கோரி, சென்னை மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!

சென்னை: இனப்படுகொலை நிகழத்திய இலங்கை மீது போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

"இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை..இந்த இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைப்பது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

லயோலா கல்லூரிக்குள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு இடம் மாறினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

நன்றி உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்சக்தி மாபெரும் சக்தி.இவர்கள் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சிந்திப்பவர்கள்.மாணவர் போராட்டம் அரசியல்வாதிகளுக்கு தலைவலியாக இருக்கும்.வெல்லட்டும் மாணவர்போராட்டம்.நன்றி தொப்புள் கொடி உறவுகளே!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்துப்போக செய்யும் குறுக்கு வேலைகளையும் மீறி, போராட்டம் பல்கிப் பரவிட வாழ்த்துக்கள்.

 

இந்நடவடிக்கையால் கல்லூரி படிப்பு சிறிதே தடைபட்டாலும், காலத்தின் தேவை கருதி, இன அழிப்பை தடுக்க, தமிழகத்தில் சொங்கியாய், மந்த நிலையில் உணர்ச்சியற்றிருக்கும் மக்களின் உணவுகளை தட்டியெழுப்பி, தீப்பொறியாய் பற்ற வைக்க ஒரு உந்து சக்தி இந்த மாணவர்கள்தான்.

 

என்ன செய்வது? தமிழனுக்கு எப்பொழுதுமே அடுத்தவன் இடித்துரைத்தால் மட்டுமே உறைக்கும்! :icon_idea:

Link to comment
Share on other sites

உண்ணாவிரத பந்தலில் இருந்து உங்கள் ஊமை அழகிரி...


உறவுகளே வாருங்கள் ஓன்றுதிரள்வோம் ..
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்...

 

உண்ணாவிரதப்போராளிகளில் ஒருவன் தம்பி திலிபனின் அப்பா பேசியது கண்ணீரை வரவழைத்து விட்டது....

 

- முகநூல் நண்பர்

Link to comment
Share on other sites

தமிழினம் காக்க காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் விபரம்"
=======================
1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு

2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு

3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

4.பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு

5.பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

6.மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு

7.சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு

8.லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழத் தமிழருக்கு புத்துணர்வைத் தருகின்றது- சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை..

 

65546_4451625818854_1991269952_n.jpg

Link to comment
Share on other sites

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, லயோலா கல்லூரி மாணவர்கள், சென்னை கோயம்பேடு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Link to comment
Share on other sites

லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கை மிக மிக முக்கியமானது, வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்க - இலங்கை ஒப்பந்தம் உருவாகி, தமிழீழத் தமிழர்களின் விடுதலை கோரிக்கையை அழிக்க இலங்கையோடு வெகு விரைவில் அமெரிக்காவும் கைகோர்க்க இருக்கும் நிலையில் , “ அமெரிக்கத் தீர்மானத்தினைப் புறக்கணித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து” என்கிற முழக்கம் தமிழகம், தமிழீழம், புலம்பெயர் என அனைத்து இடத்திலும் எதிரொளிக்க வேண்டும்.

 

 

இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்கிற பெயரில் எவ்வாறு இந்தியா தமிழர்களை காக்கிறோம் என்கிற பெயரில் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக தலைவிரித்து ஆடியதோ, அதே போன்றதொரு சூழல் தெற்காசிய பிராந்தியத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி உள்ளது. தமிழரின் பிரச்சனைகளை அமெரிக்க பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது. ஒட்டகம் கூடாரத்தினுள் நுழைந்திருக்கிறது. 1987ல் இவ்வாறு இந்திய ஒட்டகம் நுழந்தபோது துரத்தியடிக்க தமிழர் படைகள் இருந்தன. இன்று நாம் மட்டுமே இருக்கிறோம். மக்களாக திரண்டால் மட்டுமே இதை வெல்ல முடியும். 2009இல் நம்மை பின்னுக்கு தள்ளிய ஆற்றல்களை நம்பி நாம் களம் காண முடியாது. நாமே ஆற்றல்களாக மாறுவோம்.


நீங்கள் நேர்மையான தமிழீழ ஆதரவாளர் என்றால் உங்கள் பகுதியில், பணியிடத்தில், கல்லூரியில் போராட்டத்தினை துவக்குங்கள்.

 

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்

 

“ தமிழீழம் வெல்வது எனது காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை, அதற்காக என்னால் இயன்ற அனைத்து பங்களிப்பினை செய்வேன், இல்லையென்றால் சரித்திரம் என்னை மன்னிக்காது”.

 

தமிழீழத்தினை வெல்வோம். அதில் சமரசமில்லை.

 

திருமுருகன் காந்தி (முகநூல்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.