Jump to content

எங்கட கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

உங்களை யாரும் தூற்றும்  நிலையில் நீங்கள் இல்லை. 

 

 

மனிதர்கள் எல்லோரும்  உயிருக்கு ஆபத்து வரும்  சந்தர்பத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது யதார்த்தமே .
அதைக் கூட பிழை என்று நினைத்து மனம் வருந்துவது, உங்கள் நல்ல மனதையே காட்டுகிறது .
 
நீங்கள் எட்டப்பன் வேலை பார்க்கவில்லையே. பின்னர் என்ன குற்ற  உணர்வு ? 
Link to comment
Share on other sites

போராட்டத்தில சில குடும்பங்கள் சரியாய் பாதிக்கப்பட்டுப் போக,சில குடும்பங்கள் ஆதாயமும் அடைஞ்சிட்டினம்.ஊரில எங்கட வீட்டிற்கு கிட்ட ஒரு குடும்பம் இருக்குது.அந்த குடும்பத்தில மூன்று பிள்ளைகள் .ஒருவன் மாவீரன் ஒருவன் இறுதி யுத்தத்திற்கு பிறகு எங்கைஎன்றே தெரியாது ஒருவன் சில காலம் போராளியாய் இருந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அந்த வீட்டு ஐயாவிட்ட மட்டும் நான் வெளி நாட்டுக்குப் போறதை சொன்னனான்.மற்றப்படி என்ற அம்மாவிற்கு மட்டும்தான் தெரியும் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடுவது.அதே நேரம் எங்கட ஊர் கிராம சேவையாளர் அவருக்கும் மூன்று பிள்ளைகள் அவை மூன்று பேரும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்.அவை கொழும்பில்தான் வேலை செய்வினம்.  கிராம சேவையாளர் முந்தி புலிகளின்ர கை ஆள் இப்ப அரசுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளுக்கு சேவகம் செய்யிறார்.அவங்கள் வாழ்ந்திடுவாங்கள்.

இயக்கம் இல்லாததால பல குடும்பங்கள் சரியாய் கஷ்டப்படுகுதுகள் .இயக்கம் எவ்வளவு ஆட்களை பராமரிச்சது. எல்லாரும் நினைப்பினம் இயக்கம் தனிய போராடினது மட்டும்தான் என்று.ஆனால் அவையின்ர நிருவனங்களில எத்தனை ஆயிரம் பேர் வேலைசெயதவை.அந்தந்த நாட்களில சம்பளம் வரும்.

 

தொடரும் 

Link to comment
Share on other sites

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

 

நீங்கள் இறுதி வரை தாய் மண்ணில் இருந்ததை இட்டுப் பெருமையடைகின்றேன். 

தொடருங்கள் வாசிக்க ஆவல்!

Link to comment
Share on other sites

ஆசாமி,

 

உங்கள் கதையை இன்று வாசித்தேன். நீங்கள் கூறும்கதையை கேட்கும்போது வாழ்க்கையில் பல முடிவுகளை சுயமாகவே தீர்மானித்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. எனவே, அனுதாபங்களோ அறிவுரைகளோ கூறமுடியவில்லை. ஆனால், உங்கள் பயணத்தில் சுகத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற எனது பிரார்த்தனைகள். 

Link to comment
Share on other sites

உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். பல அறியாத விடயங்களை , உங்கள் வலிகளை  அறிய முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை ஆயிரம் மக்கள் வலியோடும் வேதனைகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது .. என்னை போல பல பேர் சௌகர்யத்தோடு வாழ்வதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன் ....  

விரைவில் நல்ல  விடியல் உங்கள் வாழ்வில் வர பிரதிகிறேன் ....

Link to comment
Share on other sites

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

 

 

உண்மையைச் சொல்லுவதால் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளது.

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  

 

 

நீங்கள் உண்மையையை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள் ஆசாமி. 

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில நானும் அண்ணையும் தான். அண்ணா ஓயாத அலைகள் இரண்டில வீரச்சாவு அடைஞ்சிட்டான்.நான் தான் ஐயாவையும் அம்மாவையும் பார்க்கோணும்.ஐயாவும் மீள் குடியேறி கொஞ்ச நாளில இறந்திட்டார்.அதாலதான் புலிகள் கஷ்டப்படுற நேரத்தில உதவேலாமல் போயிற்று.அண்ணா சொல்லுறவன் கொஞ்ச ஆட்கள் இயக்கத்திற்கு சேர்ந்தால் இரவிலாவது கொஞ்சம் கூட நித்திரை கொள்ளலாம் என்று.போராட்டம் என்று வெளிக்கிடையிக்க அநேக சனங்கள் ஆதரவு தந்ததுகள்.அதுகளாலையும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்யமுடியும்?.   யாரிலையும் பிழை கண்டு பிடிக்க ஏலாது.நாங்கள் சிறிய இனம்.மற்ற நாடுகளின்ர நலனுக்கு எங்களை விட்டுக்கொடுக்க தன் மானம் விடயில்லை.  

 

போர் என்றால் கரடு முரடான பாதைதான். புலிகள் வெற்றி பெறயிக்க  சாமரம் வீசின என்னைப்போன்ற பலர்.ஆபத்தான நேரத்தில கைகொடுக்காமல் கைவிட்டிட்டம். அண்ணா சொல்லுவான் உதவி செய்யிறதெண்டால் தேவையான நேரத்தில செய்யோணும்.அந்த நேரத்தில ஒன்றும் செய்யேலாமல் போயிற்று.இப்ப இருக்கிற மனநிலை அப்ப இருக்கயில்லை. புலிகள் யுத்த நிறுத்தம் கேட்டவை ஆனால் அது சாத்தியப்படயில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் ஆராலதான் என்ன செய்யமுடியும்?
 
தொடரும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆசாமி தேவையான நேரத்தில வேண்டியது கிடைச்சிருந்தா எங்கட நிலைமை இப்பிடி இருந்திருக்காதுதான்.

Link to comment
Share on other sites

புலிகள் தோற்றதற்க்கு பல காரணகளைச் சொல்லலாம்.இதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கு முக்கியமானது. புலிகளின் கடல் வழி வழங்கலைத் தடுத்ததில் அமெரிக்காவும், இந்தியாவும் முக்கிய பங்கை ஆற்றின.சி|றிலங்காவிற்கு ஆயுதங்களை சீனா பாக்கிஸ்தான் வழங்கின. உங்கள் பதிவு முக்கியமானது.ஆனால் இதில் அங்கு இனி இல்லையென்ற துயரை அனுபவித்த மக்களையோ போராளிகளையோ நாம் தவறு சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தினூடாக புலிகளின் தோல்விக்கான அனைத்து நிலமைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

 

உங்களிடம் எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, இயக்கத் தலமை ஏன் இது நிகழ்வதை அவதானிக்கவில்லை? எதிரி மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் போது, குறிப்பாக சந்திரிகா ரணிலின் ஆட்சியைக் கலைத்த போது, புலிகள் திருகோணமலையக் குறி வைத்து தாக்குதல்களை ஆரம்பித்து இருந்தால் , இத் தகைய பாரிய பின் அடைவையும் அழிவையும் சந்தித்திருக்க முடியாது அல்லவா? இது சர்வதேச சக்திகளிடம் புலிகளின் பேரம் பேசும் வலுவை இன்னும் அதீகரித்திருக்கும். சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அனுசரணைகளை இது இடை நிறுத்தி இருக்கும்.

 

அவர்களை பிழையாக வழி நடாத்தியவர்கள் யார் என்னும் கேள்விக்கு ,உங்களுக்கு பதில் தெரிந்து இருந்தால் விளக்கவும்.இந்தக் கேள்விக்கு இது வரை எவரும் சரியான விளக்கம் தந்ததில்லை.

பதில் தரவல்ல திரு,நிலாந்தன்  போன்றோர் இதுவரை எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே ஒரு தனிக்கதையா போய்க்கிட்டு இருக்குது ஆசாமி.

 

எங்கள் மத்தியில் (யாழ் களம் உட்பட) உள்ள பல்வேறு மனிதர்களை இனங்காட்டும் ஒரு கதை உங்களின் கதைக்கு சமாந்திரமா இங்க ஓடிக்கிட்டு இருக்குது..!

 

வாழ்த்தோ.. தொடருங்கவோ சொல்ல முடியவில்லை. உங்கள் கஸ்டத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்து கொண்டு.. ஓசில அட்வைசும்.. கதையும் படிக்கும்..  சராசரி மனிதனாக இருந்து கொண்டு.. embarrassing.. என்னை நினைக்க எனக்கே அவமானமா இருக்குது..! :(:rolleyes:

Link to comment
Share on other sites

இலங்கையைப் பொருத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம். நாங்கள் போராட வெளிக்கிட்டதே ஒரு வெற்றிதான்.எங்கட போராட்டம் எந்த நாட்டிலையும் தங்கியிருக்கவில்லை.புலம் பெயர் உறவுகளின் உழைப்பில்தான் மிளிர்ந்தது.ஆய்வாளர்களுக்கு எம் போராட்டம் ராஜதந்திரம் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் றால் போட்டு சுறா பிடிக்கும் உதவி நாடுகளால் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்காது.கிணறு வெட்ட பூதம் தான் வரும்.எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இத்தனை நாடுகளுக்கும் நடுவில் தமிழன் அரசாண்ட வரலாறு  என்றும் நிலைத்திருக்கும்.எதையும் யாரும் கதைக்கலாம் செய்துகாட்ட முடியாது.
தாயகமானால் என்ன புலமானால் என்ன எமது மக்களில் மூன்றில் ஒன்றுதான் ஏதோ ஒரு விதத்தில் போராட்ட பங்காளிகளாய் இருந்தனர்.இது மிகவும் கவலையானது.எமது பலத்தையே ஒன்றாக்க முடியவில்லை.இதுவும் இனத்தின் துயர்தான்.
போராட்ட வளர்ச்சி துரோகங்களால் சாண் ஏற முலம் சறுக்கிற்று.
 
தொடரும் 
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      

 

அந்த மொழி பழகிறது சாதாரணம்...நிங்..சொங்..சாம்..சிப் எண்டு தொடங்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ஆசாமி. நல்லதே நடக்கும் உங்களுக்கு என்று நம்பிக்கையோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

உங்கட கதையை தொடர்ந்து வாசிச்சுக்கொண்டு வாறன்.

உங்கட நிலையை என்னால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

 ஏனென்றால்...நானும் இவற்றையெல்லாம் கடந்து வந்தவன்தான். இலக்கை அடையும்வரை என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது.

துணிந்தவனுக்கு எல்லாமே துரும்புதான்.

தங்களின் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கடந்த புதன் கிழமை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நானும் மோகனும் போயிருந்தோம்.அது ஒரு கிறிஸ்தவ நிறுவனம் . அந்நிறுவனம் ஐ நா பதிவுள்ள அகதிகளுக்கு மாதாமாதம் சிறு தொகை பணமும் சில பொருட்களும் தருவார்கள்.நாங்கள் அதை பெற போயிருந்தோம்.   அங்கு எமது நாட்டு அம்மா ஒருவரையும் தற்செயலாய் சந்தித்தோம்.அந்த அம்மாவின் கணவர்,இருபிள்ளைகள் உள்ளீடாய் ஏழு பேர் சிறிலங்கா இராணுவத்தின் செல் வீச்சில் தேவிபுரத்தில் படு கொலை செய்யப்பட்டனர்.அவரும் மிகுதி குடும்பத்தினருடன் இங்கு வந்திருக்கிறார்.அந்த அம்மா புலிகளின் சமையல் கூடம் ஒன்றில் பதினோரு வருடம் வேலை செய்திருக்கிறார்.அதை அந்த அம்மா இப்படிச் சொன்னார் தன்ர போன பிறப்புப் நல் பயனால அந்தப்பிள்ளைகளுக்கு ( புலிகளுக்கு)சமைச்சுப்போடுற பாக்கியம் கிடைச்சது என்றா.அவ அதை எப்படி உணர்ந்தா என்பதை அவவின் முகத்தில் இருந்து நான் அறிந்தேன்.ஆனால் என் எழுத்து எவ்வளவு விளங்கப்படுத்தியிருக்குமோ தெரியவில்லை.அந்த அம்மாவின் ஒரு பிள்ளை இத்தாலியில் வாழ்வதையும் அவன்தான் தங்களை பார்ப்பதையும் சொன்னா . இரண்டு பேரப்பிள்ளைகள் இத்தாலியில் இருப்பதாயும் ஆனால் அந்தப்பிள்ளைகள் தமிழ் கதைக்காது என்றும் கவலைப்பட்டா.  
 
தொடரும் 
Link to comment
Share on other sites

நாளைக்கு வருஷம் பிறக்கப்போகுது.இன்றைக்கு எங்கட மண்ணில வித்தியாசமான குதுகலம் இருக்கும் . இங்க எல்லாம் ஒரே மாதிரித்தான்.இணையத்தில எங்கட மண்ணில என்ன நடக்குது என்று பார்ப்பமென்றால் உதயன் காரியாலம் தாக்கப்பட்ட செய்திதான் கிடக்கு.நானும் ஊடகத்தில வேலை செய்ததால எனக்கு இன்னும் ஒருதடவை நெஞ்சில குத்திச்சு.முழு இராணுவ ஆட்சி நடக்கிற மண்ணில வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்குள்ள கொஞ்சப்பேர் (அடிவருடிகள்) அபிவிருத்தி என்று பேப்பே காட்டினம்.அரசாங்கத்தின்ர அராஜகத்தை மறைக்க நாடகம் ஆடினம்.சர்வதேசம் வழமை மாதிரி பார்வையாளராய் மட்டும் இருக்கு.  

 

 

இந்த நாட்டில இலங்கையை மாதிரி இரண்டு மடங்கு சனம் இருக்கு ஆனால் இலங்கையை விட அமைதி இருக்கு. நாங்கள் தங்கி இருக்கிற இடம் நாட்டுப்புரமும் இல்லை டவுனும் இல்லை. இங்கையும் கன ஆம்பிளைகள் மோட்டச்சையிக்கில்லில கூட ஆக்களை காசுக்கு ஏத்தி இறக்குவினம்.பொம்பிளைகள் இரவில எல்லாம் தனிய திரியுங்கள்.போலீஸ் காரங்கள் சரியான இறுக்கம். இந்தியா ஆட்கள் கடை வைச்சிருக்கினம்.எங்களுக்குரிய சாமான்கள் அங்க வாங்கலாம் .பருப்பு ,பப்படம், மிளகாய்த்தூள் அப்பிடியான சாமான்கள்.இன்றைக்கு அங்க போற பிளான் இருக்கு.டாவினும் வாற என்டவன் அதால அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறம்.நேற்று மழை பெய்தது.மீனும் விழுந்தது.சின்ன மீன் எங்கட ஊரில பார்த்த மீனுகள் மாதிரி இல்லை.ஆனால் சந்தையில எல்லா மீனும் வாங்கலாம்.இன்றைக்கு ஒடியல் மா வாங்கிற நோக்கம் இருக்கு.
 
தொடரும்      

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.