Jump to content

எங்கட கதை


Recommended Posts

எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று
பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய
நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில
கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில
குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப்
பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால
இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான்
எழுதிக்கொண்டிருக்கிறன்.



அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து
இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அவன் தானும் தன்ர பாடுமாய்த்தான்
பெரும்பாலும் இருப்பான்.சமையல் சாப்பாடு ஒன்றாய்த்தான் செய்வம்.பெரும்பாலும்
இரவில்தான் பெரிய சமையல்.   எனக்கும்
மோகனுக்கும் காய்ச்சல் ஒன்று வந்து உடைச்சுப்போட்டுது. டாவின் கொஞ்சம் தண்ணி,புகைத்தல்
எல்லாம் செய்வான்.நாங்கள் சமாளிச்சுக்கொள்ளுவம்.ஆனால் டாவின் நல்ல பெடியன்.நானாவது
இருந்திட்டு கொம்புயுட்டர் பக்கம் தலை காட்டுவன்.மோகன் அதுவும் இல்லை.ஆனால் எங்கட
அறை வேலையில அதிகம் அவன்தான் செய்வான்.அவனுக்கு கொமாண்டஸ் பயிற்சியை விட எதுவும்
தெரியாது என்பான்.  நாங்கள் மூன்று பேரும்
பிரமச்சாரியாய்த்தான் இதுவரை இருக்கிறம்.ஆனால் டாவினுக்கு லவ் இருக்கு.அவள்
கொழும்பில இருக்கிறாள்.இவன் போனுக்கு காட் போட்டான்  என்றால் முடியும் மட்டும்

கதைப்பான்.

 

 இன்றைக்கு
சந்தையில நல்ல மரவள்ளிக்கிழங்கு 
வாங்கிவந்தனாங்கள்.மோகன் வெட்டி அவிக்கிறான்.இன்றைக்கு நேற்றையான் மீன்

குழம்போட  அதை அடிக்க வேண்டியதுதான்.என்ன எல்லாரும் முகம் சுளிக்கிறது

தெரியுது.சாப்பிட்டு பாத்திங்க என்றால்த்தான் தெரியும்.எங்களுக்கு இன்னும் ஆறு
மாதத்திற்கு இந்த நாட்டு விசா இருக்கு.அதால போலிஸ் பயம் இல்லை.டாவினை ஒருக்கா வேறு
ஆட்களோட போலிஸ் கொண்டு போயிற்று பிறகு விசாவை பார்த்திட்டு விட்டிட்டாங்கள்.



 

                                                                              

தொடரும்              

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான கதை ஆசாமி. தொய்வில்லாமல்.... தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

 

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

கொஞ்ச நாளா, இந்தக் கூகிள் மொழிபெயர்க்கிற சாமான், ஆணா அல்லது பெண்ணா என்றொரு சந்தேகம்! :o

 

இண்டைக்குத் தான் தெரிஞ்சுது, அது பெண் எண்டு! :D

 

நானொண்டை எழுத, அது தானொண்டை எழுதுது! :wub:

Link to comment
Share on other sites

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

Link to comment
Share on other sites

(2)

 

 மோகன் எப்போதும் தனிமையை விரும்புகிறான்.அவனாய் வலிந்து கதைப்பது குறைவு.ஓரளவு நன்றாக
சமைப்பான்.சாப்பாடு போதாமல் இருக்கும் போது சரியாக மூன்றாய்
பிரித்துவைப்பான்.அவனுக்குத்தான் கொஞ்சம் குறைவாய் இருக்கும்.மாட்டு இறைச்சிக்கை
மரவள்ளி போட்டு சமைப்பான்.குத்தரிசி சோத்துக்கு உண்மையிலேயே நல்லா இருக்கும்.நான்
இப்பதான் முதல் முதல் இப்படி சாப்பிடுறன்.நீங்கள் முந்தி சாப்பிட்டு இருக்கலாம்.
அவனை நான் முதலில் நாங்கள் எல்லைப்படை பயிற்சி எடுக்கும்போது கண்டேன்.அவன் எங்களது
பயிற்சி ஆசிரியன்.அப்பவும் பெரிய கதை இல்லை.தன்ர வேலையிலதான் கவனமாய்

இருப்பான். 



 

 டாவின் ஒரு விளையாட்டுப்பிள்ளை.ஆனால் அவனுக்கும் எங்கட வயதுதான் . அவன் வீட்டில செல்லமாய்
வளர்ந்திருக்கிறான். அவன் எங்களோட தங்கோனும் எண்டு இல்லை . அவன்ர வசதிக்கு அவன்
தனிய ரூம் எடுத்து தங்கலாம்.எங்கள்ள இருக்கிற பிடிப்பாள எங்களோட தங்கி
இருக்கிறான். ஒரு நல்ல கமரா வாங்கி வைச்சிருக்கிறான். அதை அவனுக்கு பழக்கி
களைச்சுப்போனேன். ஏதாவது நல்ல இடங்களைப்பார்த்திட்டு வந்து ஒற்றைக்காலில நிற்பான்
வா வந்து ஒரு படம் எடுத்துவிடு!. பிறகென்ன போகத்தான் வேணும்.எந்த கள்ளமும்
தெரியாதவன்.எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பயம் கப்பல் ஏறுறது.நான் வெளியால
காட்டுறதில்லை. அவன் பச்சையாய் வெளியால சொல்லி அழுவான்.டேய் இப்படி ஐநூறு பேருக்கு
மேல கடலுக்குள்ள போயிருக்காங்கடா!.   மோகன்
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்வதில்லை. 
டாவின நம்பேலாது கடைசி நேரத்திலேயும் சறுக்கிருவான்.பொறுத்திருந்துதான்

பார்க்கோணும்.



 



தொடரும்         

Link to comment
Share on other sites

அறையில் பெடியள்களுடன் ஆன வாழ்க்கை என்றுமே மறக்கமுடியாதவை . அனுபவப் பகிர்வுக்குமனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்துக்களும் ஆசாமி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த மாதிரி கதைகள் கேக்க விருப்பம்..அங்கெ இங்கே பாதி பதியே தெரியும்- இன்னுமொரு நாட்டுக்கு புலம் பெயருவது..நான் கலியாணம் கட்டி வந்து போட்டு, போன்சரில் வந்துபோட்டு ஊரில் செய்த வேலை கிடைக்க வில்லை என்று புலம்பிய/ புலம்புற கூட்டத்தை சார்ந்தவன்..உங்கள் பயணமும் கதை தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசாமி.. தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

தகவலுக்கு நன்றிகள் சாந்தி! :D

Link to comment
Share on other sites

முடிவில்லாத ஏதிலி வாழக்கைப் பயணங்கள்.  இப்படி வெளிநாட்டிற்கு என புறப்பட்டு நாடுநாடாய் அலைந்த பலரை சந்தித்த அனுபவங்களை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள். தொடருங்கள் அதே நேரம் உங்கள் பயணம் வெற்றிபெற வேண்டும்.

Link to comment
Share on other sites

நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்ல வருவது மிகவும் பெரிய விடயம்போல உள்ளது.பாராட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் உண்மையை எழுதும் பொது பாராட்ட' வாழ்த்து சொல்ல முடியாது முடிவு தெரியும் வரை ஏனெனில் உண்மை சுடும் 'காயப்படுத்தும் 'அழ வைக்கும் இன்னும் பலவும் செய்யும்.அப்படியானத்தை பாராட்ட முடியாது.
மாறாக மௌனமாக ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.நீங்களும் எங்கட கதைய கதைக்கிறிங்கள்.
என்னத்தை சொல்ல தோல்வியை பாடுவோம்.

Link to comment
Share on other sites

 

எங்கட

கதைக்கு இவ்வளவு பேர் கருத்தூட்டி வழிகாட்டியுள்ளீர்கள்.தங்களுக்கு நன்றிகள் பல.

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

உண்மையிலேயே நாட்டில வாழுறது அந்தமாதிரித்தான்.ஆனால் மனசுக்குள்ள ஏதோ நிம்மதி இல்லை.அதாலதான்

இப்படி எல்லாத்தையும் விட்டிட்டு வெளிக்கிடவேண்டியிருக்கு. 

நான் முந்தி

இயக்கத்தின்ர ஊடகம் ஒன்றில வேலை செய்தனான். பிறகு

யுத்தத்திற்கு பிறகும் ஊருக்குப்போய் வேலை தேடிப்பார்த்தன்.

வேலை எடுக்கிறது அந்தளவு சுலபம் இல்லை. இடைக்கிடை யார் யாரெல்லாம் வந்து

விசாரிப்பாங்கள்.இதுக்குள்ள முந்தி இயக்கத்தோட நின்ற ஒருத்தர் ஒரு வேலை இருக்கு

நல்ல சம்பளமும் என்றார்.யாழ்ப் பானத்திட்குத்தான் போகவேணும் என்றார்.எனக்கும் என்ற

குடும்பத்திற்கும் வந்த சந்தோசத்தை எப்படி சொல்லுறது?. பிறகு பார்த்தால் அது மாற்றுக்குழு ஒன்றின்ற

ஊடகத்தில வேலை நான் மாட்டன் என்றிட்டன் வீட்டிலயும் ஒரேயடியாய்

சொல்லிப்போட்டுதுகள் நீ வீட்டிலேயே இரு என்று. 

மோகனும் இப்படித்தான் கொஞ்சக்காலம் கலோரஸ்ட் மிதிவெடி அகற்றலில வேலை செய்திட்டு காசு

கொஞ்சம் சேர்த்துக்கொண்டு வெளிக்கிட்டான்.அந்த வேலையும் நிரந்தர வேலை இல்லைத்தானே?

வேற ஆட்கள் எங்களுக்கு வேலை இல்லை என்றதை பாவிச்சு கொஞ்ச சம்பளத்தை தருகினம்.வேலையை மட்டும்

சரியாய் வாங்கிப்போடுவினம்.இப்பவும் நாங்கள் வெளிக்கிட்டதை பிழையாய் நினைக்கிறீங்களோ? 

 

உண்மையை சொன்னால் என்ன. முந்தி இயக்கத்தின்ற நிருவாகத்திற்க 
வாழ்ந்த சந்தோசத்தில ஒரு ஐந்து வீதம் கூட இப்ப அங்க வராது.முந்தியும் 
வாழ்ந்திட்டு இப்பயும் வாழுறது சரியான கஷ்டம்.அதை எப்படி விளங்கப்படுத்திறது என்று தெரியவில்லை.

 

 

தொடரும்         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ உங்கள் அனுபவங்களை.

Link to comment
Share on other sites

 

 

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

இப்படி எதிர் மறையாக  ஆக யோசிப்பதும் கதைப்பத்தும் கூடாது என்று சொல்வார்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கோ.

 நீங்கள் ஆபத்து ஏதும் இல்லாமல் பத்திரமாக போக நினைத்த இடத்திற்கு போய்ச்சேர்வீர்கள்.
Link to comment
Share on other sites

புலப்பெயர்வு காலத்துக்கு காலம் வடிவமாற்றத்தோடு வலிகளையே தந்து செல்கிறது அனுபவமாக.  ஆசாமி கதையை கொஞ்சம் கெதியிலை எழுதி முடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நானும் உங்கட‌ கதையை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்
Link to comment
Share on other sites

ஆசாமி, 
 
தடங்களுக்கு வருந்துகிறோம். 
 
வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்.  :) 
Link to comment
Share on other sites

நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.

 

மன்னிக்கக வேண்டும் ஆசாமி. அவுஸ் வருவதற்காக இந்தோனேசியாவில் நிற்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் கப்பல் ஏறாமல் விடுவது உங்களுக்கு நல்லது என்பதை மட்டும் என்னால் கூற முடியும். ஈசன் கீழே கூறியுள்ளதைத் தான் அவுஸ் அரசாங்க அகதிகளுக்கான புதிய கொள்கை கூறுகிறது. தற்போது இந்தோனேசியாவிலிருந்து வெளிக்கிடும் படகுகளின் எண்ணிக்கை குறைந்ததட்கும் இதுவே காரணம்.அண்மையில் வந்தவர்களை தொடர்புகொண்டு கேட்டால் நிலவரம் புரியும். தற்காலிக வதிவிட உரிமையுடன் யாரும் பிணை எடுத்து விட்டாலும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க மிக அதிக காலம் செல்லும். இன்னும் ஆறு மாதங்களில் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதால் அகதிகள் தொடர்பான கொள்கைகள் மேலும் இறுக்கம் அடையும் எனவே நம்புகிறேன். உங்களினதும் உங்கள் நண்பர்களினதும் நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை ஆனால் படுத்திருந்தபடி Ipad  இல் யாழை மேய்ந்து கொண்டிருந்த நான் மடிக் கணனிக்கு தாவியதே உங்களுக்கு பதில் எழுதத் தான். 

Link to comment
Share on other sites

Quote:"இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு."
 
இப்போதைக்கு சாத்தியமில்லை.
 
உங்கள் மனதை தளரவிட வேண்டாம். அவுஸ் இல்லாவிட்டால் இன்னமொரு நாடு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.