Jump to content

எங்கட கதை


Recommended Posts

எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று
பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய
நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில
கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில
குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப்
பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால
இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான்
எழுதிக்கொண்டிருக்கிறன்.



அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து
இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அவன் தானும் தன்ர பாடுமாய்த்தான்
பெரும்பாலும் இருப்பான்.சமையல் சாப்பாடு ஒன்றாய்த்தான் செய்வம்.பெரும்பாலும்
இரவில்தான் பெரிய சமையல்.   எனக்கும்
மோகனுக்கும் காய்ச்சல் ஒன்று வந்து உடைச்சுப்போட்டுது. டாவின் கொஞ்சம் தண்ணி,புகைத்தல்
எல்லாம் செய்வான்.நாங்கள் சமாளிச்சுக்கொள்ளுவம்.ஆனால் டாவின் நல்ல பெடியன்.நானாவது
இருந்திட்டு கொம்புயுட்டர் பக்கம் தலை காட்டுவன்.மோகன் அதுவும் இல்லை.ஆனால் எங்கட
அறை வேலையில அதிகம் அவன்தான் செய்வான்.அவனுக்கு கொமாண்டஸ் பயிற்சியை விட எதுவும்
தெரியாது என்பான்.  நாங்கள் மூன்று பேரும்
பிரமச்சாரியாய்த்தான் இதுவரை இருக்கிறம்.ஆனால் டாவினுக்கு லவ் இருக்கு.அவள்
கொழும்பில இருக்கிறாள்.இவன் போனுக்கு காட் போட்டான்  என்றால் முடியும் மட்டும்

கதைப்பான்.

 

 இன்றைக்கு
சந்தையில நல்ல மரவள்ளிக்கிழங்கு 
வாங்கிவந்தனாங்கள்.மோகன் வெட்டி அவிக்கிறான்.இன்றைக்கு நேற்றையான் மீன்

குழம்போட  அதை அடிக்க வேண்டியதுதான்.என்ன எல்லாரும் முகம் சுளிக்கிறது

தெரியுது.சாப்பிட்டு பாத்திங்க என்றால்த்தான் தெரியும்.எங்களுக்கு இன்னும் ஆறு
மாதத்திற்கு இந்த நாட்டு விசா இருக்கு.அதால போலிஸ் பயம் இல்லை.டாவினை ஒருக்கா வேறு
ஆட்களோட போலிஸ் கொண்டு போயிற்று பிறகு விசாவை பார்த்திட்டு விட்டிட்டாங்கள்.



 

                                                                              

தொடரும்              

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான கதை ஆசாமி. தொய்வில்லாமல்.... தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

 

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

கொஞ்ச நாளா, இந்தக் கூகிள் மொழிபெயர்க்கிற சாமான், ஆணா அல்லது பெண்ணா என்றொரு சந்தேகம்! :o

 

இண்டைக்குத் தான் தெரிஞ்சுது, அது பெண் எண்டு! :D

 

நானொண்டை எழுத, அது தானொண்டை எழுதுது! :wub:

Link to comment
Share on other sites

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

Link to comment
Share on other sites

(2)

 

 மோகன் எப்போதும் தனிமையை விரும்புகிறான்.அவனாய் வலிந்து கதைப்பது குறைவு.ஓரளவு நன்றாக
சமைப்பான்.சாப்பாடு போதாமல் இருக்கும் போது சரியாக மூன்றாய்
பிரித்துவைப்பான்.அவனுக்குத்தான் கொஞ்சம் குறைவாய் இருக்கும்.மாட்டு இறைச்சிக்கை
மரவள்ளி போட்டு சமைப்பான்.குத்தரிசி சோத்துக்கு உண்மையிலேயே நல்லா இருக்கும்.நான்
இப்பதான் முதல் முதல் இப்படி சாப்பிடுறன்.நீங்கள் முந்தி சாப்பிட்டு இருக்கலாம்.
அவனை நான் முதலில் நாங்கள் எல்லைப்படை பயிற்சி எடுக்கும்போது கண்டேன்.அவன் எங்களது
பயிற்சி ஆசிரியன்.அப்பவும் பெரிய கதை இல்லை.தன்ர வேலையிலதான் கவனமாய்

இருப்பான். 



 

 டாவின் ஒரு விளையாட்டுப்பிள்ளை.ஆனால் அவனுக்கும் எங்கட வயதுதான் . அவன் வீட்டில செல்லமாய்
வளர்ந்திருக்கிறான். அவன் எங்களோட தங்கோனும் எண்டு இல்லை . அவன்ர வசதிக்கு அவன்
தனிய ரூம் எடுத்து தங்கலாம்.எங்கள்ள இருக்கிற பிடிப்பாள எங்களோட தங்கி
இருக்கிறான். ஒரு நல்ல கமரா வாங்கி வைச்சிருக்கிறான். அதை அவனுக்கு பழக்கி
களைச்சுப்போனேன். ஏதாவது நல்ல இடங்களைப்பார்த்திட்டு வந்து ஒற்றைக்காலில நிற்பான்
வா வந்து ஒரு படம் எடுத்துவிடு!. பிறகென்ன போகத்தான் வேணும்.எந்த கள்ளமும்
தெரியாதவன்.எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பயம் கப்பல் ஏறுறது.நான் வெளியால
காட்டுறதில்லை. அவன் பச்சையாய் வெளியால சொல்லி அழுவான்.டேய் இப்படி ஐநூறு பேருக்கு
மேல கடலுக்குள்ள போயிருக்காங்கடா!.   மோகன்
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்வதில்லை. 
டாவின நம்பேலாது கடைசி நேரத்திலேயும் சறுக்கிருவான்.பொறுத்திருந்துதான்

பார்க்கோணும்.



 



தொடரும்         

Link to comment
Share on other sites

அறையில் பெடியள்களுடன் ஆன வாழ்க்கை என்றுமே மறக்கமுடியாதவை . அனுபவப் பகிர்வுக்குமனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்துக்களும் ஆசாமி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த மாதிரி கதைகள் கேக்க விருப்பம்..அங்கெ இங்கே பாதி பதியே தெரியும்- இன்னுமொரு நாட்டுக்கு புலம் பெயருவது..நான் கலியாணம் கட்டி வந்து போட்டு, போன்சரில் வந்துபோட்டு ஊரில் செய்த வேலை கிடைக்க வில்லை என்று புலம்பிய/ புலம்புற கூட்டத்தை சார்ந்தவன்..உங்கள் பயணமும் கதை தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசாமி.. தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

தகவலுக்கு நன்றிகள் சாந்தி! :D

Link to comment
Share on other sites

முடிவில்லாத ஏதிலி வாழக்கைப் பயணங்கள்.  இப்படி வெளிநாட்டிற்கு என புறப்பட்டு நாடுநாடாய் அலைந்த பலரை சந்தித்த அனுபவங்களை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள். தொடருங்கள் அதே நேரம் உங்கள் பயணம் வெற்றிபெற வேண்டும்.

Link to comment
Share on other sites

நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்ல வருவது மிகவும் பெரிய விடயம்போல உள்ளது.பாராட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் உண்மையை எழுதும் பொது பாராட்ட' வாழ்த்து சொல்ல முடியாது முடிவு தெரியும் வரை ஏனெனில் உண்மை சுடும் 'காயப்படுத்தும் 'அழ வைக்கும் இன்னும் பலவும் செய்யும்.அப்படியானத்தை பாராட்ட முடியாது.
மாறாக மௌனமாக ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.நீங்களும் எங்கட கதைய கதைக்கிறிங்கள்.
என்னத்தை சொல்ல தோல்வியை பாடுவோம்.

Link to comment
Share on other sites

 

எங்கட

கதைக்கு இவ்வளவு பேர் கருத்தூட்டி வழிகாட்டியுள்ளீர்கள்.தங்களுக்கு நன்றிகள் பல.

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

உண்மையிலேயே நாட்டில வாழுறது அந்தமாதிரித்தான்.ஆனால் மனசுக்குள்ள ஏதோ நிம்மதி இல்லை.அதாலதான்

இப்படி எல்லாத்தையும் விட்டிட்டு வெளிக்கிடவேண்டியிருக்கு. 

நான் முந்தி

இயக்கத்தின்ர ஊடகம் ஒன்றில வேலை செய்தனான். பிறகு

யுத்தத்திற்கு பிறகும் ஊருக்குப்போய் வேலை தேடிப்பார்த்தன்.

வேலை எடுக்கிறது அந்தளவு சுலபம் இல்லை. இடைக்கிடை யார் யாரெல்லாம் வந்து

விசாரிப்பாங்கள்.இதுக்குள்ள முந்தி இயக்கத்தோட நின்ற ஒருத்தர் ஒரு வேலை இருக்கு

நல்ல சம்பளமும் என்றார்.யாழ்ப் பானத்திட்குத்தான் போகவேணும் என்றார்.எனக்கும் என்ற

குடும்பத்திற்கும் வந்த சந்தோசத்தை எப்படி சொல்லுறது?. பிறகு பார்த்தால் அது மாற்றுக்குழு ஒன்றின்ற

ஊடகத்தில வேலை நான் மாட்டன் என்றிட்டன் வீட்டிலயும் ஒரேயடியாய்

சொல்லிப்போட்டுதுகள் நீ வீட்டிலேயே இரு என்று. 

மோகனும் இப்படித்தான் கொஞ்சக்காலம் கலோரஸ்ட் மிதிவெடி அகற்றலில வேலை செய்திட்டு காசு

கொஞ்சம் சேர்த்துக்கொண்டு வெளிக்கிட்டான்.அந்த வேலையும் நிரந்தர வேலை இல்லைத்தானே?

வேற ஆட்கள் எங்களுக்கு வேலை இல்லை என்றதை பாவிச்சு கொஞ்ச சம்பளத்தை தருகினம்.வேலையை மட்டும்

சரியாய் வாங்கிப்போடுவினம்.இப்பவும் நாங்கள் வெளிக்கிட்டதை பிழையாய் நினைக்கிறீங்களோ? 

 

உண்மையை சொன்னால் என்ன. முந்தி இயக்கத்தின்ற நிருவாகத்திற்க 
வாழ்ந்த சந்தோசத்தில ஒரு ஐந்து வீதம் கூட இப்ப அங்க வராது.முந்தியும் 
வாழ்ந்திட்டு இப்பயும் வாழுறது சரியான கஷ்டம்.அதை எப்படி விளங்கப்படுத்திறது என்று தெரியவில்லை.

 

 

தொடரும்         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ உங்கள் அனுபவங்களை.

Link to comment
Share on other sites

 

 

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

இப்படி எதிர் மறையாக  ஆக யோசிப்பதும் கதைப்பத்தும் கூடாது என்று சொல்வார்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கோ.

 நீங்கள் ஆபத்து ஏதும் இல்லாமல் பத்திரமாக போக நினைத்த இடத்திற்கு போய்ச்சேர்வீர்கள்.
Link to comment
Share on other sites

புலப்பெயர்வு காலத்துக்கு காலம் வடிவமாற்றத்தோடு வலிகளையே தந்து செல்கிறது அனுபவமாக.  ஆசாமி கதையை கொஞ்சம் கெதியிலை எழுதி முடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நானும் உங்கட‌ கதையை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்
Link to comment
Share on other sites

ஆசாமி, 
 
தடங்களுக்கு வருந்துகிறோம். 
 
வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்.  :) 
Link to comment
Share on other sites

நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.

 

மன்னிக்கக வேண்டும் ஆசாமி. அவுஸ் வருவதற்காக இந்தோனேசியாவில் நிற்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் கப்பல் ஏறாமல் விடுவது உங்களுக்கு நல்லது என்பதை மட்டும் என்னால் கூற முடியும். ஈசன் கீழே கூறியுள்ளதைத் தான் அவுஸ் அரசாங்க அகதிகளுக்கான புதிய கொள்கை கூறுகிறது. தற்போது இந்தோனேசியாவிலிருந்து வெளிக்கிடும் படகுகளின் எண்ணிக்கை குறைந்ததட்கும் இதுவே காரணம்.அண்மையில் வந்தவர்களை தொடர்புகொண்டு கேட்டால் நிலவரம் புரியும். தற்காலிக வதிவிட உரிமையுடன் யாரும் பிணை எடுத்து விட்டாலும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க மிக அதிக காலம் செல்லும். இன்னும் ஆறு மாதங்களில் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதால் அகதிகள் தொடர்பான கொள்கைகள் மேலும் இறுக்கம் அடையும் எனவே நம்புகிறேன். உங்களினதும் உங்கள் நண்பர்களினதும் நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை ஆனால் படுத்திருந்தபடி Ipad  இல் யாழை மேய்ந்து கொண்டிருந்த நான் மடிக் கணனிக்கு தாவியதே உங்களுக்கு பதில் எழுதத் தான். 

Link to comment
Share on other sites

Quote:"இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு."
 
இப்போதைக்கு சாத்தியமில்லை.
 
உங்கள் மனதை தளரவிட வேண்டாம். அவுஸ் இல்லாவிட்டால் இன்னமொரு நாடு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.