Jump to content

எங்கட கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

உங்களை யாரும் தூற்றும்  நிலையில் நீங்கள் இல்லை. 

 

 

மனிதர்கள் எல்லோரும்  உயிருக்கு ஆபத்து வரும்  சந்தர்பத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது யதார்த்தமே .
அதைக் கூட பிழை என்று நினைத்து மனம் வருந்துவது, உங்கள் நல்ல மனதையே காட்டுகிறது .
 
நீங்கள் எட்டப்பன் வேலை பார்க்கவில்லையே. பின்னர் என்ன குற்ற  உணர்வு ? 
Link to comment
Share on other sites

போராட்டத்தில சில குடும்பங்கள் சரியாய் பாதிக்கப்பட்டுப் போக,சில குடும்பங்கள் ஆதாயமும் அடைஞ்சிட்டினம்.ஊரில எங்கட வீட்டிற்கு கிட்ட ஒரு குடும்பம் இருக்குது.அந்த குடும்பத்தில மூன்று பிள்ளைகள் .ஒருவன் மாவீரன் ஒருவன் இறுதி யுத்தத்திற்கு பிறகு எங்கைஎன்றே தெரியாது ஒருவன் சில காலம் போராளியாய் இருந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அந்த வீட்டு ஐயாவிட்ட மட்டும் நான் வெளி நாட்டுக்குப் போறதை சொன்னனான்.மற்றப்படி என்ற அம்மாவிற்கு மட்டும்தான் தெரியும் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடுவது.அதே நேரம் எங்கட ஊர் கிராம சேவையாளர் அவருக்கும் மூன்று பிள்ளைகள் அவை மூன்று பேரும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்.அவை கொழும்பில்தான் வேலை செய்வினம்.  கிராம சேவையாளர் முந்தி புலிகளின்ர கை ஆள் இப்ப அரசுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளுக்கு சேவகம் செய்யிறார்.அவங்கள் வாழ்ந்திடுவாங்கள்.

இயக்கம் இல்லாததால பல குடும்பங்கள் சரியாய் கஷ்டப்படுகுதுகள் .இயக்கம் எவ்வளவு ஆட்களை பராமரிச்சது. எல்லாரும் நினைப்பினம் இயக்கம் தனிய போராடினது மட்டும்தான் என்று.ஆனால் அவையின்ர நிருவனங்களில எத்தனை ஆயிரம் பேர் வேலைசெயதவை.அந்தந்த நாட்களில சம்பளம் வரும்.

 

தொடரும் 

Link to comment
Share on other sites

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

 

நீங்கள் இறுதி வரை தாய் மண்ணில் இருந்ததை இட்டுப் பெருமையடைகின்றேன். 

தொடருங்கள் வாசிக்க ஆவல்!

Link to comment
Share on other sites

ஆசாமி,

 

உங்கள் கதையை இன்று வாசித்தேன். நீங்கள் கூறும்கதையை கேட்கும்போது வாழ்க்கையில் பல முடிவுகளை சுயமாகவே தீர்மானித்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. எனவே, அனுதாபங்களோ அறிவுரைகளோ கூறமுடியவில்லை. ஆனால், உங்கள் பயணத்தில் சுகத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற எனது பிரார்த்தனைகள். 

Link to comment
Share on other sites

உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். பல அறியாத விடயங்களை , உங்கள் வலிகளை  அறிய முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை ஆயிரம் மக்கள் வலியோடும் வேதனைகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது .. என்னை போல பல பேர் சௌகர்யத்தோடு வாழ்வதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன் ....  

விரைவில் நல்ல  விடியல் உங்கள் வாழ்வில் வர பிரதிகிறேன் ....

Link to comment
Share on other sites

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

 

 

உண்மையைச் சொல்லுவதால் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளது.

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  

 

 

நீங்கள் உண்மையையை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள் ஆசாமி. 

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில நானும் அண்ணையும் தான். அண்ணா ஓயாத அலைகள் இரண்டில வீரச்சாவு அடைஞ்சிட்டான்.நான் தான் ஐயாவையும் அம்மாவையும் பார்க்கோணும்.ஐயாவும் மீள் குடியேறி கொஞ்ச நாளில இறந்திட்டார்.அதாலதான் புலிகள் கஷ்டப்படுற நேரத்தில உதவேலாமல் போயிற்று.அண்ணா சொல்லுறவன் கொஞ்ச ஆட்கள் இயக்கத்திற்கு சேர்ந்தால் இரவிலாவது கொஞ்சம் கூட நித்திரை கொள்ளலாம் என்று.போராட்டம் என்று வெளிக்கிடையிக்க அநேக சனங்கள் ஆதரவு தந்ததுகள்.அதுகளாலையும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்யமுடியும்?.   யாரிலையும் பிழை கண்டு பிடிக்க ஏலாது.நாங்கள் சிறிய இனம்.மற்ற நாடுகளின்ர நலனுக்கு எங்களை விட்டுக்கொடுக்க தன் மானம் விடயில்லை.  

 

போர் என்றால் கரடு முரடான பாதைதான். புலிகள் வெற்றி பெறயிக்க  சாமரம் வீசின என்னைப்போன்ற பலர்.ஆபத்தான நேரத்தில கைகொடுக்காமல் கைவிட்டிட்டம். அண்ணா சொல்லுவான் உதவி செய்யிறதெண்டால் தேவையான நேரத்தில செய்யோணும்.அந்த நேரத்தில ஒன்றும் செய்யேலாமல் போயிற்று.இப்ப இருக்கிற மனநிலை அப்ப இருக்கயில்லை. புலிகள் யுத்த நிறுத்தம் கேட்டவை ஆனால் அது சாத்தியப்படயில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் ஆராலதான் என்ன செய்யமுடியும்?
 
தொடரும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆசாமி தேவையான நேரத்தில வேண்டியது கிடைச்சிருந்தா எங்கட நிலைமை இப்பிடி இருந்திருக்காதுதான்.

Link to comment
Share on other sites

புலிகள் தோற்றதற்க்கு பல காரணகளைச் சொல்லலாம்.இதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கு முக்கியமானது. புலிகளின் கடல் வழி வழங்கலைத் தடுத்ததில் அமெரிக்காவும், இந்தியாவும் முக்கிய பங்கை ஆற்றின.சி|றிலங்காவிற்கு ஆயுதங்களை சீனா பாக்கிஸ்தான் வழங்கின. உங்கள் பதிவு முக்கியமானது.ஆனால் இதில் அங்கு இனி இல்லையென்ற துயரை அனுபவித்த மக்களையோ போராளிகளையோ நாம் தவறு சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தினூடாக புலிகளின் தோல்விக்கான அனைத்து நிலமைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

 

உங்களிடம் எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, இயக்கத் தலமை ஏன் இது நிகழ்வதை அவதானிக்கவில்லை? எதிரி மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் போது, குறிப்பாக சந்திரிகா ரணிலின் ஆட்சியைக் கலைத்த போது, புலிகள் திருகோணமலையக் குறி வைத்து தாக்குதல்களை ஆரம்பித்து இருந்தால் , இத் தகைய பாரிய பின் அடைவையும் அழிவையும் சந்தித்திருக்க முடியாது அல்லவா? இது சர்வதேச சக்திகளிடம் புலிகளின் பேரம் பேசும் வலுவை இன்னும் அதீகரித்திருக்கும். சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அனுசரணைகளை இது இடை நிறுத்தி இருக்கும்.

 

அவர்களை பிழையாக வழி நடாத்தியவர்கள் யார் என்னும் கேள்விக்கு ,உங்களுக்கு பதில் தெரிந்து இருந்தால் விளக்கவும்.இந்தக் கேள்விக்கு இது வரை எவரும் சரியான விளக்கம் தந்ததில்லை.

பதில் தரவல்ல திரு,நிலாந்தன்  போன்றோர் இதுவரை எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே ஒரு தனிக்கதையா போய்க்கிட்டு இருக்குது ஆசாமி.

 

எங்கள் மத்தியில் (யாழ் களம் உட்பட) உள்ள பல்வேறு மனிதர்களை இனங்காட்டும் ஒரு கதை உங்களின் கதைக்கு சமாந்திரமா இங்க ஓடிக்கிட்டு இருக்குது..!

 

வாழ்த்தோ.. தொடருங்கவோ சொல்ல முடியவில்லை. உங்கள் கஸ்டத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்து கொண்டு.. ஓசில அட்வைசும்.. கதையும் படிக்கும்..  சராசரி மனிதனாக இருந்து கொண்டு.. embarrassing.. என்னை நினைக்க எனக்கே அவமானமா இருக்குது..! :(:rolleyes:

Link to comment
Share on other sites

இலங்கையைப் பொருத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம். நாங்கள் போராட வெளிக்கிட்டதே ஒரு வெற்றிதான்.எங்கட போராட்டம் எந்த நாட்டிலையும் தங்கியிருக்கவில்லை.புலம் பெயர் உறவுகளின் உழைப்பில்தான் மிளிர்ந்தது.ஆய்வாளர்களுக்கு எம் போராட்டம் ராஜதந்திரம் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் றால் போட்டு சுறா பிடிக்கும் உதவி நாடுகளால் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்காது.கிணறு வெட்ட பூதம் தான் வரும்.எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இத்தனை நாடுகளுக்கும் நடுவில் தமிழன் அரசாண்ட வரலாறு  என்றும் நிலைத்திருக்கும்.எதையும் யாரும் கதைக்கலாம் செய்துகாட்ட முடியாது.
தாயகமானால் என்ன புலமானால் என்ன எமது மக்களில் மூன்றில் ஒன்றுதான் ஏதோ ஒரு விதத்தில் போராட்ட பங்காளிகளாய் இருந்தனர்.இது மிகவும் கவலையானது.எமது பலத்தையே ஒன்றாக்க முடியவில்லை.இதுவும் இனத்தின் துயர்தான்.
போராட்ட வளர்ச்சி துரோகங்களால் சாண் ஏற முலம் சறுக்கிற்று.
 
தொடரும் 
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      

 

அந்த மொழி பழகிறது சாதாரணம்...நிங்..சொங்..சாம்..சிப் எண்டு தொடங்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ஆசாமி. நல்லதே நடக்கும் உங்களுக்கு என்று நம்பிக்கையோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

உங்கட கதையை தொடர்ந்து வாசிச்சுக்கொண்டு வாறன்.

உங்கட நிலையை என்னால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

 ஏனென்றால்...நானும் இவற்றையெல்லாம் கடந்து வந்தவன்தான். இலக்கை அடையும்வரை என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது.

துணிந்தவனுக்கு எல்லாமே துரும்புதான்.

தங்களின் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கடந்த புதன் கிழமை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நானும் மோகனும் போயிருந்தோம்.அது ஒரு கிறிஸ்தவ நிறுவனம் . அந்நிறுவனம் ஐ நா பதிவுள்ள அகதிகளுக்கு மாதாமாதம் சிறு தொகை பணமும் சில பொருட்களும் தருவார்கள்.நாங்கள் அதை பெற போயிருந்தோம்.   அங்கு எமது நாட்டு அம்மா ஒருவரையும் தற்செயலாய் சந்தித்தோம்.அந்த அம்மாவின் கணவர்,இருபிள்ளைகள் உள்ளீடாய் ஏழு பேர் சிறிலங்கா இராணுவத்தின் செல் வீச்சில் தேவிபுரத்தில் படு கொலை செய்யப்பட்டனர்.அவரும் மிகுதி குடும்பத்தினருடன் இங்கு வந்திருக்கிறார்.அந்த அம்மா புலிகளின் சமையல் கூடம் ஒன்றில் பதினோரு வருடம் வேலை செய்திருக்கிறார்.அதை அந்த அம்மா இப்படிச் சொன்னார் தன்ர போன பிறப்புப் நல் பயனால அந்தப்பிள்ளைகளுக்கு ( புலிகளுக்கு)சமைச்சுப்போடுற பாக்கியம் கிடைச்சது என்றா.அவ அதை எப்படி உணர்ந்தா என்பதை அவவின் முகத்தில் இருந்து நான் அறிந்தேன்.ஆனால் என் எழுத்து எவ்வளவு விளங்கப்படுத்தியிருக்குமோ தெரியவில்லை.அந்த அம்மாவின் ஒரு பிள்ளை இத்தாலியில் வாழ்வதையும் அவன்தான் தங்களை பார்ப்பதையும் சொன்னா . இரண்டு பேரப்பிள்ளைகள் இத்தாலியில் இருப்பதாயும் ஆனால் அந்தப்பிள்ளைகள் தமிழ் கதைக்காது என்றும் கவலைப்பட்டா.  
 
தொடரும் 
Link to comment
Share on other sites

நாளைக்கு வருஷம் பிறக்கப்போகுது.இன்றைக்கு எங்கட மண்ணில வித்தியாசமான குதுகலம் இருக்கும் . இங்க எல்லாம் ஒரே மாதிரித்தான்.இணையத்தில எங்கட மண்ணில என்ன நடக்குது என்று பார்ப்பமென்றால் உதயன் காரியாலம் தாக்கப்பட்ட செய்திதான் கிடக்கு.நானும் ஊடகத்தில வேலை செய்ததால எனக்கு இன்னும் ஒருதடவை நெஞ்சில குத்திச்சு.முழு இராணுவ ஆட்சி நடக்கிற மண்ணில வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்குள்ள கொஞ்சப்பேர் (அடிவருடிகள்) அபிவிருத்தி என்று பேப்பே காட்டினம்.அரசாங்கத்தின்ர அராஜகத்தை மறைக்க நாடகம் ஆடினம்.சர்வதேசம் வழமை மாதிரி பார்வையாளராய் மட்டும் இருக்கு.  

 

 

இந்த நாட்டில இலங்கையை மாதிரி இரண்டு மடங்கு சனம் இருக்கு ஆனால் இலங்கையை விட அமைதி இருக்கு. நாங்கள் தங்கி இருக்கிற இடம் நாட்டுப்புரமும் இல்லை டவுனும் இல்லை. இங்கையும் கன ஆம்பிளைகள் மோட்டச்சையிக்கில்லில கூட ஆக்களை காசுக்கு ஏத்தி இறக்குவினம்.பொம்பிளைகள் இரவில எல்லாம் தனிய திரியுங்கள்.போலீஸ் காரங்கள் சரியான இறுக்கம். இந்தியா ஆட்கள் கடை வைச்சிருக்கினம்.எங்களுக்குரிய சாமான்கள் அங்க வாங்கலாம் .பருப்பு ,பப்படம், மிளகாய்த்தூள் அப்பிடியான சாமான்கள்.இன்றைக்கு அங்க போற பிளான் இருக்கு.டாவினும் வாற என்டவன் அதால அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறம்.நேற்று மழை பெய்தது.மீனும் விழுந்தது.சின்ன மீன் எங்கட ஊரில பார்த்த மீனுகள் மாதிரி இல்லை.ஆனால் சந்தையில எல்லா மீனும் வாங்கலாம்.இன்றைக்கு ஒடியல் மா வாங்கிற நோக்கம் இருக்கு.
 
தொடரும்      

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.