Jump to content

எங்கட கதை


Recommended Posts

ஆசாமியின் இயல்பான எழுத்து நடை உணர்வுகளை நன்கே வெளிப்படுத்துகிறது. நன்றி ஆசாமி.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

இன்றைக்கு புது வருஷம் ஆனால் எதுவும் புதிதாய் இல்லை.நாங்கள் இன்றைக்கு அவுசு சமைச்சம் . மரக்கறி சோற்றுக்குழையல்   அது மிளகாயிப்பொரியல் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.இன்றைக்கு இனிப்பில்லா புது வருஷம்.இந்த வருசத்திலயாவது எங்களுக்கு விடியாட்டியும் எங்கட மக்களுக்கு விடியோனும்.அந்த மக்கள் நிம்மதியாய் வாழோணும் . போராட்டத்திட்காய் உழைத்தவர்கள் நொய்ந்து போனார்கள்.ஆனாலும் அவர்கள் அவர்களாய் மெல்ல மெல்ல எழுவார்கள்.   அடிவருடிகளை தவிர்த்து ஏனைய தமிழர்கள் ஒன்றாக எழவேண்டும்.சுயநலங்கள் போதும் . எங்களுக்குள் உள்ள சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் , ஒருவரை ஒருவர் மதித்து விடுதலைக்கான ஒவ்வொரு முயற்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்கவேண்டும்.

 

எழுதுவது சுலபமானது எதையும் செய்து காட்டுவது அவ்வளவு சுலபமில்லை. இன்று செய்து காட்டுபவர்களைப்பற்றி எழுதுபவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.இதை யாரிட்ட சொல்லி அழுவது? யாரையும் விமர்சிக்க முன் அவர்களது போராட்ட பங்களிப்பையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.என்னைப்போல் எழுதும் பலருக்கு பெரிய போராட்ட பங்களிப்புகள் இல்லை.நான் என்னை நினைத்து வெட்கம் கொள்கிறேன்.இறுதி போராட்டத்துடன் உரிய பங்களிக்காத  சில வேஷதாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்து இன்று அடிவருடிகளுடன் இணைந்து  உள்ளனர். அவர்கள் இன்றும் இயக்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.
 
தொடரும்  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைக்கு புது வருஷம் ஆனால் எதுவும் புதிதாய் இல்லை.நாங்கள் இன்றைக்கு அவுசு சமைச்சம் . மரக்கறி சோற்றுக்குழையல்   அது மிளகாயிப்பொரியல் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.இன்றைக்கு இனிப்பில்லா புது வருஷம்.இந்த வருசத்திலயாவது எங்களுக்கு விடியாட்டியும் எங்கட மக்களுக்கு விடியோனும்.அந்த மக்கள் நிம்மதியாய் வாழோணும் . போராட்டத்திட்காய் உழைத்தவர்கள் நொய்ந்து போனார்கள்.ஆனாலும் அவர்கள் அவர்களாய் மெல்ல மெல்ல எழுவார்கள்.   அடிவருடிகளை தவிர்த்து ஏனைய தமிழர்கள் ஒன்றாக எழவேண்டும்.சுயநலங்கள் போதும் . எங்களுக்குள் உள்ள சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் , ஒருவரை ஒருவர் மதித்து விடுதலைக்கான ஒவ்வொரு முயற்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்கவேண்டும்.

 

எழுதுவது சுலபமானது எதையும் செய்து காட்டுவது அவ்வளவு சுலபமில்லை. இன்று செய்து காட்டுபவர்களைப்பற்றி எழுதுபவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.இதை யாரிட்ட சொல்லி அழுவது? யாரையும் விமர்சிக்க முன் அவர்களது போராட்ட பங்களிப்பையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.என்னைப்போல் எழுதும் பலருக்கு பெரிய போராட்ட பங்களிப்புகள் இல்லை.நான் என்னை நினைத்து வெட்கம் கொள்கிறேன்.இறுதி போராட்டத்துடன் உரிய பங்களிக்காத  சில வேஷதாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்து இன்று அடிவருடிகளுடன் இணைந்து  உள்ளனர். அவர்கள் இன்றும் இயக்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.
 
தொடரும்  

 

உங்களுக்கு மட்டுமல்ல  எங்கள் அனைவருக்கும் ஒரு நாள் விடியும் 

அன்று நாங்கள் அனைவரும்  புத்தாண்டு கொண்டாடுவோம்  

தொடருங்கள் ஆசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாமி அவுஸ்திரேலியாவின் ஆரம்ப கால குடிவரவு கொள்கை தனி வெள்ளை இன மக்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பித்தது(ஆரம்பத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குடியேற்றிய நாடு) ,ஆனாலும் அவர்களது கொள்கையை தொடர முடியாத நிலையில் சில துறைசார் இடைவெளியை நிரப்ப வேற்று இனத்தவரையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது , தற்போதைய நிலையில் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி துறையினால் மற்ற நாடுகளினுடன் விலை ரீதியாக போட்டியிட முடியாமல் உள்ளது அதற்கு காரணம் நிர்வாகத்துறையின் மித மிஞ்சிய செலவு காரணம் ,எமது நிறுவனம் தனது பய் ரொல்ல் பகுதியை ஆசிய நாடு ஒன்றுக்கு மாற்றி விட்டது. இந்நிலை வெள்ளை சட்டை உத்தியோகம் அவுஸ்திரேலியாவில் குறைந்து வருகிறது. உற்பத்திதுறை கூட விலை ரீதியாக மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது,காரணம் நாணயம் மாற்று விகிதம் அதிகம். இருப்பினும் 6 தங்கி வாழ்வோருக்கு 1 உழைக்கும் பகுதி இருக்கின்றது. இன்னிலையை ஈடு செய்ய உங்கள் உதவி இந்த அவுஸ்திரேலியாவுக்கு தேவை அது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தெரியும் ஆனால் நிறவெறி பிடித்த முட்டாள் அவுஸ்திரேலியர்கள் ஒரு அகதிக்கு அரசு ஆண்டொன்றுக்கு 80000 செலவு செய்கிறது என்று கத்துகிறார்கள் அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுக்கே செலவாகிறது. குறிப்பாக ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் 10000 வரை மாதமொன்றுக்கு நோகாமல் உழைக்கின்றனர். காசு வருகிறது என்பதற்காக பலர் புதிது புதிதாக இதை செய்கிறார்கள் பாவம் புதிதாக வருபவர்கள் இவர்கள் சரியாக மொழிபெயர்க்காமல் பலருடைய வாழ்க்கையில் விளையாடிவிடுகிறார்கள். எப்படியோ இங்கு அகதிகள் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையாகிவிட்டது.ஆனால் அது எங்கள் பிரச்சனை இல்லை, நானும் உங்களைப்போல் ஒரு அகதி இப்பவும் எப்பவும்.முயற்சி திருவினையாக்கும். மறந்து விடாதீர்கள் இந்த மண் திராவிட மண் அவர்கள் தான் வந்தேறு குடிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா நல்ல நாடு வர முடிந்தால் வாங்கோ......தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ஆசாமி.

 

Link to comment
Share on other sites

எழுதி வாழ வேண்டிய தேவை பலருக்கு இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் இனத்தை காட்டிக்கொடுக்க எழுதக்கூடாது.போராட்டத்தை உந்த போராட்ட காலத்தில் பலர் எழுத்து மூலமும் பங்களித்தனர்.ஊடகம் மூலமும் பங்களித்தனர்.அதே காலத்திலேயே போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய எழுதிய தமிழரும் உண்டு.இது ஒரு இனத்தின் சாபக்கேடு.இன்றும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராய் எழுத்தினை பயன்படுத்தும் பங்காளிகள் உண்டு.இன்றும் சிங்களத்திற்கு நேரிடையாயும் மறைமுகமாயும் முண்டு கொடுக்கும் கோடரிக்காம்புகளும் உண்டு. காலம் எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும்.
 
தொடரும் 
Link to comment
Share on other sites

 

எழுதி வாழ வேண்டிய தேவை பலருக்கு இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் இனத்தை காட்டிக்கொடுக்க எழுதக்கூடாது.போராட்டத்தை உந்த போராட்ட காலத்தில் பலர் எழுத்து மூலமும் பங்களித்தனர்.ஊடகம் மூலமும் பங்களித்தனர்.அதே காலத்திலேயே போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய எழுதிய தமிழரும் உண்டு.இது ஒரு இனத்தின் சாபக்கேடு.இன்றும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராய் எழுத்தினை பயன்படுத்தும் பங்காளிகள் உண்டு.இன்றும் சிங்களத்திற்கு நேரிடையாயும் மறைமுகமாயும் முண்டு கொடுக்கும் கோடரிக்காம்புகளும் உண்டு. காலம் எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும்.
 
தொடரும் 

 

 

இது இயக்கத்திலிருந்து இப்ப மக்களை விழிப்படைய செய்கின்றோம் என எழுதிப்பிழைப்பவர்களைப்பற்றியா?

Link to comment
Share on other sites

கடைசி வரை முள்ளி வாய்க்காலில் நின்றனான் என சொல்லி திரியும் யோ கர்ணன் போன்றவர்களை பற்றி...

Link to comment
Share on other sites

கடைசி வரை முள்ளி வாய்க்காலில் நின்றனான் என சொல்லி திரியும் யோ கர்ணன் போன்றவர்களை பற்றி...

 

நன்றி சுண்டல், அட அவரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாமி போன கிழமையும் 60 பேர் இங்கு வந்தவர்கள் (Perth, Western Australia)

 

நல்ல நாடு, நல்லதே நடக்கும் என நினைத்து வாருங்கள்

 

தொடருங்கள் உங்கள் கதையை 

 

Link to comment
Share on other sites

என்னற்றையும் மோகனிற்றையும் கொஞ்ச உடுப்புகள் தான் இருக்கு.ஆனால் எப்போதும் மரவள்ளி கிழங்கை சீவி பொரிச்சு வைத்திருப்போம்.நாங்கள் வெளிக்கிடையிக்கை அதைத்தான் கொண்டுபோவதாய் உள்ளோம்.இப்ப நாட்கள் மாதங்களாகி ஆறு தடவை பொறித்து சாப்பிட்டுட்டம்.ஆனால் இப்பையும் பொரிச்சு வைச்சிருக்கிறம். ஒரு தடவை எங்கள் மூன்று பேரையும் காய்ச்சல் விழுத்திட்டுது. அப்பவும் அந்த மரவள்ளிப் பொரியல்தான் எங்கட தஞ்சம்.அந்த நேரம் மிகக் கஷ்டமாய் இருந்தது.அநாதை போல் அகதி போல் அது இருந்திருக்கக்கூடும்.இந்த இடங்களில நோய் வரக்கூடாது.யாராவது ஒராள் இறந்தால் அதை எப்படி அடக்கம் செய்யிறது என்று கூட யோசித்தோம்.டாவினுக்கு தீர்வு இருந்திருக்கும். 
மரவள்ளிப் பொரியலை தயாரிக்கிற பொறுப்பு மோகனுக்குத்தான்.நாங்களும் உதவி செய்வோம்.இப்பவும் நானும் டாவினும் பொரியலோட பிளேன்றி அடிச்சு அரசியல் கதைத்துக்கொண்டிருக்கிறம் . வழமைமாதிரி மோகன் வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.இன்றைக்கு மழை குறைவு.ஆனாலும் வானம் இருட்டி இருக்கு.
தொடரும்   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதையை தொடந்து வாசிக்கிறனான் . உங்களுக்கு என்ன சொல்லிறது எண்டு தெரியேலை .

Link to comment
Share on other sites

உங்கட எழுத்தில் ஒரு இயல்பும் உண்மையும் இருக்கு. இது உங்களை சாகும்வரை எழுத வைக்கும். இப்போ நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு நினைவும் பொருந்தும். அதை உங்கட கதையில் யதார்த்தமாக பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

போன கிறிஸ்மஸ் இற்கு இரண்டு கிழமைக்கு முதல் திடீரென எங்களுக்கு எங்கன்ர முகவரிட்ட இருந்து அழைப்பு வந்துது.போறத்துக்கு ஆயுத்தமாய் வாங்கோ . நாங்களும் அறையை எல்லாம் ஒப்படைச்சிட்டு எங்களிட்ட இருந்த குசினிச் சாமான்களை டாவினின்ர நண்பனுக்கு கொடுத்துட்டு வெளிக்கிட்டம்.வெளிக்கிடையிக்க டாவின் சொன்னான் உயிரோட நாங்கள் இருந்தால் பிறகு ஒரு தடவையாவது மூன்று பேரும் பிளேன்லை
மீண்டும் இந்த நாட்டுக்கு வந்து ஹோட்டல்ல தங்கோனும்  என்று.நானும் எல்லா இடத்தையும் கடைசியாய் பார்க்கிறமாதிரி பார்த்துட்டுப்போனன்.இரண்டு நாள் கடக்கரையில தங்கி இருந்திட்டு வந்தம்.வரையிக்க டாக்ஸி பிடிச்சு வந்தம்.இங்க டாக்சி எல்லாம் ஓடுற கிலோமீட்டருக்குத்தான் காசு.அவன் சுத்தி சுத்தி வந்து இரண்டு மடங்கு காசு வாங்கிட்டான்.ஒவ்வொரு கிலோமீட்டரும் கூடக்கூட நெஞ்சு பக் பக் என்று அடிச்சுக்கொள்ளும் , அவனோட கதைக்க மொழி தெரியாதே/புரியாதே.பனையால வீழ்ந்தவனை மாடு ஏறி உலக்கின மாதிரி.வந்த உடன் அறை எடுக்க கஷ்டமாய்ப்போயிற்று . எல்லாம் சி என்று போச்சு.
 
தொடரும்    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்பாளர்கள் எம்மவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக அவர்களை முழுமையாக நம்பிவிட வேண்டாம், அவர்களுக்கு அரசாங்கம்தான் காசு கொடுக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம் ஆசாமி நீங்கள் வெறும் பெயரளவில் ஆசாமி எம்மவர்கள் உண்மையிலேயே பெரிய ஆசாமிகள்.அவுஸ்திரேலியா இன்று 39 பேரை திருப்பியனுப்ப உள்ளது.

Link to comment
Share on other sites

நேற்று டாவின் கொம்புயுட்டரில் இணையத்தை பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் தொடர்ந்து நெற் பார்க்கிற வசதி இல்லை.திடீரென்று மோகனை கூப்பிட்டான் டாவின்.அங்கவீனமுற்ற  முன்னாள் போராளிகள் நேரடியாய் உதவி கேட்கிற ஒரு வீடியோவை அரசோட இயங்கிற அரச சார்பற்ற இணையம் பதிவேற்றம் செய்திருந்தது.மோகனும் உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்கும் போராளிகள் கதைக்கும் குரல் கேட்டது.இடையில் மோகன் அழத்தொடங்கிவிட்டான் .டாவினின் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.சொறி மோகன் சொறி மோகன் என்றபடி இருந்தான்.சிறிது நேரத்தில் மோகன் நித்திரையாகிவிட்டான்.நேற்று என்ரபாடுதான் சமையல். மீனும் சோறும். ஒருகாலத்தில் உயிரை வைத்து போராடிய போராளிகளின் நேரடியாய் உதவி கோரும் குரல் நெஞ்சை இன்னும் பிசைகிறது. அவர்களுக்கு உதவி தேவை அங்கிருப்பவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் கேட்காமல்  நேரடியாய் உதவும் நிலையை உருவாக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் அரசாங்க அரச சார்பற்ற நிருவனங்களுக்கூடாக உதவி அந்நிறுவனங்களை வளர்த்துவிடக்கூடாது .   அரசாங்கம் ஏதோ ஒரு காரணத்திக்காய்த்தான்   அதை உருவாக்கியுள்ளது.  வெளிநாடுகள்  மீள்குடியேற்றத்திட்கும், புனர்வாழ்விற்கும் கொடுக்கின்ற நிதி அரசாலும் ,அடிவருடிகளாலும் கொள்ளை அடிக்கப்படுகிறது.சிங்கள குடியேற்றமும் நடக்கிறது. எது எப்படி இருப்பினும் அந்த மனிதங்களுக்கு  வேறு ஒரு வழியில் உதவி கிடைத்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.
 
தொடரும்  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி நிலைமை இடங்கொடாத போதும், சில பாரங்களை, விரும்பிச் சுமக்கிறேன்! அதே வேளை, போராட்டங்களைக் காரணம் காட்டி வந்தவர்கள் பலர், வசதியாக உள்ள நிலையிலிருந்தும் கூடப் பின்னடிப்பதைப் பார்க்க, மிகவும் கடினமாக இருக்கும்!

 

தொடர்ந்து எழுதுங்கள், ஆசாமி!, :D

Link to comment
Share on other sites

எங்கட மண் முந்தி கறையான் அரிச்சமாதிரித்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இப்ப வெளிச்சத்தில ஆக்கிரமிக்கப்படுகிறது.எங்கட அடிப்படை வாழ்வு ஆட்டம் காணத்தொடங்குகிறது. ஆனால் எங்கட அரசியல் வாதிகளில பலர்  தங்கட ஈ கோ பிரச்சனைகளைத்தான் தீர்க்கிறதில கண்ணா இருக்கினம்.எங்கட பிரச்சனை ஒரு இனத்தினர பிரச்சனை.அனைவரும் ஏதோ ஒருவகையில இனத்தின்ர எதிர்காலத்தை காக்கவேணும் இல்லாட்டி அடுத்த அடுத்த சந்ததிகளிலேயே ஈழத்தில தமிழனின் அடையாளம் கேள்விக்குறியாயிடும். இவ்வளவு பிரச்சனைகளுக்குள்ளும் ஆக்கிரமிப்பாளனுக்கு வேலை செய்யிற தமிழ் ஆட்களும் இருக்கிறார்கள் .இது மிக துரதிஷ்ட வசமானது.
 
இயக்கம் இல்லா இடைவெளியில் எங்களில் பலரின் சுயம் வெளித்தெரிகிறது. நேற்றும் டாவின் சொன்னான்.ஈழத்தை மீட்க இல்லாட்டியும் இந்த கோடரிக்காம்புகளை கவனிக்க ஒரு இயக்கம் உருவாகோணும். இது அவனின் முதிர்ச்சியற்ற கூற்றாய் இருக்கலாம்.ஆனாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை.
 
இங்க ஞாயிற்றுக் கிழமை என்றால் எல்லாம் ஓய்ஞ்சு போகும். எங்கட நாள் வழமை மாதிரி சந்தை பிறகு சமையல் பிறகு நடை எப்போதும் திருப்பி திருப்பி ஊரைப்பற்றி கதை.வெறும் கதையோடையே காலம் கழிக்கிற வெறுவாய் சப்பிகள் ஆகிற்று எங்கட வாழ்க்கை . பிள்ளைகளை பழி வாங்கிற புதிய அத்தியாயம் மகிந்தவால ஆரம்பிக்கப்பட்டது.   காலம் இதுக்கு என்ன பதிலை கொடுக்கும்?
இது இப்ப பதில் அளிக்க வேண்டிய கேள்வி.
 
தொடரும்       
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி ஆசாமி

 

Link to comment
Share on other sites

நீங்கள் இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி ஆசாமி

Link to comment
Share on other sites

ஆசாமி  எப்பிடியாவது  வெளிநாடு வந்து சேர்ந்து விடுங்கள்  பிறகு இங்கிருந்து  இணையத்தில் போராட்டம் நடாத்தி தமிழீழம்  வாங்கி விடலாம். ********** ******. அது சரி கப்பல் எப்ப வருமாம்.??

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.