Jump to content

ரெண்டு லட்டு தின்ன ஆசையா?


Recommended Posts



 

அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று
பின்னேரம்  ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு
வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா
வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும்
ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி
போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான்
பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி
கையை  காட்டுகின்றா கீழே போனால்
சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள்
கூட்டம்..



 

“இவர்தான் தம்பி”என அக்கா என்னை அவர்களுக்கு
அறிமுகபடுத்தி “டேய் உனக்கு ஒண்டும் 
சொல்லாமல் கூப்பிட்டு விட்டன். இது கனடா வேம்படி கொமிட்டி ,இந்த முறை
கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?
வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).



 

“யோசித்து சொல்லுகிறன்” என்றேன்



 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை
விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்
காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி
“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க
போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து
ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை
இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு
இல்லை . 



 

“எதற்கும் நாளைக்கு முடிவு சொல்கின்றேன் “
என்றேன்.



 

“நாடகத்தில் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு லவர்
இருக்கு அதற்கும் ஒரு பெடியன் தேவை உனக்கு தெரிந்த நல்ல? பெடியன் யாரும் இருந்தா
கேட்டுப்பார் ,அடுத்த கிழமை ரிகர்சல் தொடங்க வேணும்.”என்றார் அக்கா .



 

“எனக்கும் உங்களை மாதிரி ஒரு வடிவான பெடியனை
பாருங்கோ” இது ராகினி.



 

நக்கலோ உண்மையோ என்று விளங்கவில்லை இருந்தாலும்
“அது ரொம்ப கஷ்டம் “ என்றுவிட்டு வந்து காரை எடுக்கிறேன் ,எடுத்த எடுப்பில்லேயே
கார் நூறில  பறக்குது. மதுசிறி ,ராகினி
இரண்டு பேரையும் நாட்டிலேயே எனக்கு தெரியும்,எத்தனை பெடியங்களை பின்னால அலைய
விட்டு  யாழ்பாணத்தில் டியுசனுக்கு
சயிக்கிளில் சுற்றிய ஆட்கள். ஏதோ தாங்கள் தேவதைகள் என்ற நினைப்பில் மிதந்தவர்கள்.



 

நான் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டன். மற்ற
ஆளுக்கு யாரை பிடிக்கலாம் என்று நினைக்கையில் பலகுரல் மன்னன் பிரேம்சங்கர் நினைவு
வந்தான் ,அவன்தான் மேடை கூச்சம் இல்லாதவன்.யாழ் இந்து கல்லூரி நிகழ்வுகளுக்கும்
வந்து அமிர்தலிங்கம்,விசுவநாதன்,பொன்னம்பலம் போன்றவர்களின் குரல்களில் பேசி கை
தட்டு வாங்குபவன் ,உந்த  நாடகத்தில் நான்
தற்செயலாக வசனங்கள் மறந்தாலும் இவன் சமாளித்துவிடுவான்.பிரேமிற்கு போனை அடித்தேன்.விஷயத்தை
கேட்டு விட்டு நடிக்கிறது பிரச்சனை இல்லை மச்சான் ஆனால் அன்று பகல் தனக்கு  ஊர் பிக்னிக் இருக்கு என்றான் ,கலைவிழா
இரவுதானே பிக்னிக் முடிய வந்தால் காணும் என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டேன்.



 

கிழமைக்கு மூன்று,நாலு நாட்கள்  ரிகேர்சல் அக்கா வீட்டு பேஸ்மேன்டிற்குள் நடக்கும்,இரண்டு
பேரும் ஒவ்வொரு நாளும் அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு கிழமையில் எல்லோரும் அன்னியோன்னியம் ஆகி நாடகத்தில் சீரியஸ் ஆகிவிட்டோம்.



 

அக்கா தான் இயக்குனர் கண்டபடி வேறு கதைகள்
கதைக்க இடம் தரமாட்டா. மதுசிறி ,ராகினி இரண்டுபேருமே தங்களுக்கும் ஊரில என்னை
நீண்ட  மயிருடன் பெரிய பெல்போட்டத்துடன்  கண்ட ஞாபகம் இருப்பதாக சொன்னார்கள்.அவர்
அப்படிதான் திரிந்து படிப்பை கோட்டை விட்டவர் என்று அக்கா ஒரு குத்தில் என்னை
நொக்அவுட் ஆக்கிவிட்டார்.சும்மா சொல்ல கூடாது அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம்
பண்ணுவது ஒன்றும் இலகுவானதில்லை .பிரேம்சங்கர்,மதுசிறி இருவரும் வெகு இயல்பாக
நடிக்க தொடங்கிவிடார்கள் .மதுசிறி யாழ் பல்கலைகழகத்தில் ஏற்கனவே தனக்கு நடித்த
அனுபவங்கள் உண்டென சொன்னார்.



 

வெள்ளி இரவு கடைசி ரிகேர்சல்.ரென்சன் நன்றாக
குறைந்து விட்டிருந்தது. மிக இயலப்பாக நடிப்பும் வசனமும் எல்லோரிடமும் இருந்து
வந்ததில் அக்காவிற்கு நல்ல சந்தோசம். நாலு ஐந்து தடவைகள் ஒத்திகை
பார்த்தோம்.இனியென்ன நாளை மேடையில் சந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்



 

நாளை சனி நிகழ்சிக்கு முதல் ஒரு  சனியன் பிடிக்க போகின்றது என்று எவருக்கும் அப்ப
தெரியவில்லை.



 

தொடரும் . .  ..



 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை

விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்

காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி

“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க

போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து

ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை

இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு இல்லை .

 

திரிஷாக்கு வயசு கூடுதான், அதுக்காக..நீங்கள் துரத்தின/ துரத்தின கால பொண்ணுகள் உடன் ஒப்பிடுவது ..டூஊஊஊஊஊ மச்

Link to comment
Share on other sites

இதுவும் நகைச்சுவை இழையோடும் திரிபோல் இருக்கு.. :D தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இடத்தில்... கதையை நிற்பாட்டி விட்டீர்கள், அர்ஜூன். :)

உங்களுக்கு பிடித்த சனியனை வாசிக்க, ஆவலாக உள்ளோம். :D

Link to comment
Share on other sites

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

Link to comment
Share on other sites

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, அந்த உயரமான 'ராகினியா; அர்ஜுன்!

 

அவளும் இப்ப அங்கால வந்திட்டாளா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

 

-----

இந்த முறை கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?

வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).

 

நாடகத்தில் நடிப்பதற்கு பெடியன்கள் வேடத்தில் அர்ஜுன் நடிக்கும் போது, புது லட்டு... எதிர்பார்க்கலாமா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டுது

அர்ஜுன் அண்ணா தொடர்ந்து நடியுங்கள் 

Link to comment
Share on other sites

லட்டு எல்லாம் இப்ப திருப்பதி சைசா? :D

Link to comment
Share on other sites

நல்லா எழுதுகிறீங்கள். தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

உண்மையிலேயே அப்படி சொல்லி இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..தவறுக்கு வருந்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு  காய முன் எடுத்து விடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

பதின்ம வயதில் நெஞ்சில் பதிந்திருந்தால் பூசணிக்காயும் 'லட்டு' ஆகத் தெரியும். :lol:

 

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் லட்டு திண்ண ஆசையாயிருந்தது :D கடைக்கு போய் வாங்கிச் சாப்பிட்டேன் :lol: ...நீங்கள் உங்கள் கதையைத் தொட‌ருங்கள் அண்ணா வாசிக்க ஆவலாய் உள்ளேன் :)
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுனுக்குப் பாராட்டுக்கள் . பழைய காயளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுன்னுக்ப் பாராட்டுக்கள் . பழைய காய்யளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

 

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

Link to comment
Share on other sites

பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி .

நேற்று கடையில் கிடைத்த இடைவெளியில் முகபுத்தகத்தில் மதுசிறியின் பதிவு ஒன்றை பார்த்ததில்  பழையதை மீட்டு இதை எழுதினேன் .சும்மா பகிடிக்கு இட்ட தலைப்பு .அவர்கள் பெயர்களும் உண்மையானது இல்லை புங்கையூரான் .

இன்று ஞாயிறு கடை அவ்வளவு பிசியாக இல்லை களத்தில இறங்க்குவம் என்று யோசிக்கின்றேன் .

சந்திப்பம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி
நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் biggrin.png

 

அர்சுன் வாழ்த்துகள்

Edited by முனிவர் ஜீ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் :D

 

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர். உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர்.

உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? biggrin.png

யோவ் சிறி என‌க்கு வ‌ய‌து இப்பதான் 18 பாய்ந்து பாய்ந்து அடிக்கிற‌ வய‌து சீசீ ந‌டிக்கிற‌ வ‌ய‌து :lol: :lol:

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.