Jump to content

ரெண்டு லட்டு தின்ன ஆசையா?


Recommended Posts



 

அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று
பின்னேரம்  ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு
வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா
வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும்
ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி
போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான்
பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி
கையை  காட்டுகின்றா கீழே போனால்
சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள்
கூட்டம்..



 

“இவர்தான் தம்பி”என அக்கா என்னை அவர்களுக்கு
அறிமுகபடுத்தி “டேய் உனக்கு ஒண்டும் 
சொல்லாமல் கூப்பிட்டு விட்டன். இது கனடா வேம்படி கொமிட்டி ,இந்த முறை
கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?
வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).



 

“யோசித்து சொல்லுகிறன்” என்றேன்



 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை
விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்
காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி
“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க
போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து
ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை
இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு
இல்லை . 



 

“எதற்கும் நாளைக்கு முடிவு சொல்கின்றேன் “
என்றேன்.



 

“நாடகத்தில் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு லவர்
இருக்கு அதற்கும் ஒரு பெடியன் தேவை உனக்கு தெரிந்த நல்ல? பெடியன் யாரும் இருந்தா
கேட்டுப்பார் ,அடுத்த கிழமை ரிகர்சல் தொடங்க வேணும்.”என்றார் அக்கா .



 

“எனக்கும் உங்களை மாதிரி ஒரு வடிவான பெடியனை
பாருங்கோ” இது ராகினி.



 

நக்கலோ உண்மையோ என்று விளங்கவில்லை இருந்தாலும்
“அது ரொம்ப கஷ்டம் “ என்றுவிட்டு வந்து காரை எடுக்கிறேன் ,எடுத்த எடுப்பில்லேயே
கார் நூறில  பறக்குது. மதுசிறி ,ராகினி
இரண்டு பேரையும் நாட்டிலேயே எனக்கு தெரியும்,எத்தனை பெடியங்களை பின்னால அலைய
விட்டு  யாழ்பாணத்தில் டியுசனுக்கு
சயிக்கிளில் சுற்றிய ஆட்கள். ஏதோ தாங்கள் தேவதைகள் என்ற நினைப்பில் மிதந்தவர்கள்.



 

நான் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டன். மற்ற
ஆளுக்கு யாரை பிடிக்கலாம் என்று நினைக்கையில் பலகுரல் மன்னன் பிரேம்சங்கர் நினைவு
வந்தான் ,அவன்தான் மேடை கூச்சம் இல்லாதவன்.யாழ் இந்து கல்லூரி நிகழ்வுகளுக்கும்
வந்து அமிர்தலிங்கம்,விசுவநாதன்,பொன்னம்பலம் போன்றவர்களின் குரல்களில் பேசி கை
தட்டு வாங்குபவன் ,உந்த  நாடகத்தில் நான்
தற்செயலாக வசனங்கள் மறந்தாலும் இவன் சமாளித்துவிடுவான்.பிரேமிற்கு போனை அடித்தேன்.விஷயத்தை
கேட்டு விட்டு நடிக்கிறது பிரச்சனை இல்லை மச்சான் ஆனால் அன்று பகல் தனக்கு  ஊர் பிக்னிக் இருக்கு என்றான் ,கலைவிழா
இரவுதானே பிக்னிக் முடிய வந்தால் காணும் என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டேன்.



 

கிழமைக்கு மூன்று,நாலு நாட்கள்  ரிகேர்சல் அக்கா வீட்டு பேஸ்மேன்டிற்குள் நடக்கும்,இரண்டு
பேரும் ஒவ்வொரு நாளும் அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு கிழமையில் எல்லோரும் அன்னியோன்னியம் ஆகி நாடகத்தில் சீரியஸ் ஆகிவிட்டோம்.



 

அக்கா தான் இயக்குனர் கண்டபடி வேறு கதைகள்
கதைக்க இடம் தரமாட்டா. மதுசிறி ,ராகினி இரண்டுபேருமே தங்களுக்கும் ஊரில என்னை
நீண்ட  மயிருடன் பெரிய பெல்போட்டத்துடன்  கண்ட ஞாபகம் இருப்பதாக சொன்னார்கள்.அவர்
அப்படிதான் திரிந்து படிப்பை கோட்டை விட்டவர் என்று அக்கா ஒரு குத்தில் என்னை
நொக்அவுட் ஆக்கிவிட்டார்.சும்மா சொல்ல கூடாது அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம்
பண்ணுவது ஒன்றும் இலகுவானதில்லை .பிரேம்சங்கர்,மதுசிறி இருவரும் வெகு இயல்பாக
நடிக்க தொடங்கிவிடார்கள் .மதுசிறி யாழ் பல்கலைகழகத்தில் ஏற்கனவே தனக்கு நடித்த
அனுபவங்கள் உண்டென சொன்னார்.



 

வெள்ளி இரவு கடைசி ரிகேர்சல்.ரென்சன் நன்றாக
குறைந்து விட்டிருந்தது. மிக இயலப்பாக நடிப்பும் வசனமும் எல்லோரிடமும் இருந்து
வந்ததில் அக்காவிற்கு நல்ல சந்தோசம். நாலு ஐந்து தடவைகள் ஒத்திகை
பார்த்தோம்.இனியென்ன நாளை மேடையில் சந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்



 

நாளை சனி நிகழ்சிக்கு முதல் ஒரு  சனியன் பிடிக்க போகின்றது என்று எவருக்கும் அப்ப
தெரியவில்லை.



 

தொடரும் . .  ..



 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை

விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்

காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி

“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க

போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து

ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை

இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு இல்லை .

 

திரிஷாக்கு வயசு கூடுதான், அதுக்காக..நீங்கள் துரத்தின/ துரத்தின கால பொண்ணுகள் உடன் ஒப்பிடுவது ..டூஊஊஊஊஊ மச்

Link to comment
Share on other sites

இதுவும் நகைச்சுவை இழையோடும் திரிபோல் இருக்கு.. :D தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இடத்தில்... கதையை நிற்பாட்டி விட்டீர்கள், அர்ஜூன். :)

உங்களுக்கு பிடித்த சனியனை வாசிக்க, ஆவலாக உள்ளோம். :D

Link to comment
Share on other sites

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

Link to comment
Share on other sites

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, அந்த உயரமான 'ராகினியா; அர்ஜுன்!

 

அவளும் இப்ப அங்கால வந்திட்டாளா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

 

-----

இந்த முறை கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?

வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).

 

நாடகத்தில் நடிப்பதற்கு பெடியன்கள் வேடத்தில் அர்ஜுன் நடிக்கும் போது, புது லட்டு... எதிர்பார்க்கலாமா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டுது

அர்ஜுன் அண்ணா தொடர்ந்து நடியுங்கள் 

Link to comment
Share on other sites

லட்டு எல்லாம் இப்ப திருப்பதி சைசா? :D

Link to comment
Share on other sites

நல்லா எழுதுகிறீங்கள். தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

உண்மையிலேயே அப்படி சொல்லி இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..தவறுக்கு வருந்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு  காய முன் எடுத்து விடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

பதின்ம வயதில் நெஞ்சில் பதிந்திருந்தால் பூசணிக்காயும் 'லட்டு' ஆகத் தெரியும். :lol:

 

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் லட்டு திண்ண ஆசையாயிருந்தது :D கடைக்கு போய் வாங்கிச் சாப்பிட்டேன் :lol: ...நீங்கள் உங்கள் கதையைத் தொட‌ருங்கள் அண்ணா வாசிக்க ஆவலாய் உள்ளேன் :)
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுனுக்குப் பாராட்டுக்கள் . பழைய காயளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுன்னுக்ப் பாராட்டுக்கள் . பழைய காய்யளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

 

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

Link to comment
Share on other sites

பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி .

நேற்று கடையில் கிடைத்த இடைவெளியில் முகபுத்தகத்தில் மதுசிறியின் பதிவு ஒன்றை பார்த்ததில்  பழையதை மீட்டு இதை எழுதினேன் .சும்மா பகிடிக்கு இட்ட தலைப்பு .அவர்கள் பெயர்களும் உண்மையானது இல்லை புங்கையூரான் .

இன்று ஞாயிறு கடை அவ்வளவு பிசியாக இல்லை களத்தில இறங்க்குவம் என்று யோசிக்கின்றேன் .

சந்திப்பம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி
நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் biggrin.png

 

அர்சுன் வாழ்த்துகள்

Edited by முனிவர் ஜீ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் :D

 

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர். உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர்.

உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? biggrin.png

யோவ் சிறி என‌க்கு வ‌ய‌து இப்பதான் 18 பாய்ந்து பாய்ந்து அடிக்கிற‌ வய‌து சீசீ ந‌டிக்கிற‌ வ‌ய‌து :lol: :lol:

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.