Jump to content

ரெண்டு லட்டு தின்ன ஆசையா?


Recommended Posts



 

அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று
பின்னேரம்  ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு
வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா
வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும்
ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி
போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான்
பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி
கையை  காட்டுகின்றா கீழே போனால்
சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள்
கூட்டம்..



 

“இவர்தான் தம்பி”என அக்கா என்னை அவர்களுக்கு
அறிமுகபடுத்தி “டேய் உனக்கு ஒண்டும் 
சொல்லாமல் கூப்பிட்டு விட்டன். இது கனடா வேம்படி கொமிட்டி ,இந்த முறை
கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?
வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).



 

“யோசித்து சொல்லுகிறன்” என்றேன்



 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை
விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்
காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி
“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க
போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து
ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை
இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு
இல்லை . 



 

“எதற்கும் நாளைக்கு முடிவு சொல்கின்றேன் “
என்றேன்.



 

“நாடகத்தில் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு லவர்
இருக்கு அதற்கும் ஒரு பெடியன் தேவை உனக்கு தெரிந்த நல்ல? பெடியன் யாரும் இருந்தா
கேட்டுப்பார் ,அடுத்த கிழமை ரிகர்சல் தொடங்க வேணும்.”என்றார் அக்கா .



 

“எனக்கும் உங்களை மாதிரி ஒரு வடிவான பெடியனை
பாருங்கோ” இது ராகினி.



 

நக்கலோ உண்மையோ என்று விளங்கவில்லை இருந்தாலும்
“அது ரொம்ப கஷ்டம் “ என்றுவிட்டு வந்து காரை எடுக்கிறேன் ,எடுத்த எடுப்பில்லேயே
கார் நூறில  பறக்குது. மதுசிறி ,ராகினி
இரண்டு பேரையும் நாட்டிலேயே எனக்கு தெரியும்,எத்தனை பெடியங்களை பின்னால அலைய
விட்டு  யாழ்பாணத்தில் டியுசனுக்கு
சயிக்கிளில் சுற்றிய ஆட்கள். ஏதோ தாங்கள் தேவதைகள் என்ற நினைப்பில் மிதந்தவர்கள்.



 

நான் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டன். மற்ற
ஆளுக்கு யாரை பிடிக்கலாம் என்று நினைக்கையில் பலகுரல் மன்னன் பிரேம்சங்கர் நினைவு
வந்தான் ,அவன்தான் மேடை கூச்சம் இல்லாதவன்.யாழ் இந்து கல்லூரி நிகழ்வுகளுக்கும்
வந்து அமிர்தலிங்கம்,விசுவநாதன்,பொன்னம்பலம் போன்றவர்களின் குரல்களில் பேசி கை
தட்டு வாங்குபவன் ,உந்த  நாடகத்தில் நான்
தற்செயலாக வசனங்கள் மறந்தாலும் இவன் சமாளித்துவிடுவான்.பிரேமிற்கு போனை அடித்தேன்.விஷயத்தை
கேட்டு விட்டு நடிக்கிறது பிரச்சனை இல்லை மச்சான் ஆனால் அன்று பகல் தனக்கு  ஊர் பிக்னிக் இருக்கு என்றான் ,கலைவிழா
இரவுதானே பிக்னிக் முடிய வந்தால் காணும் என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டேன்.



 

கிழமைக்கு மூன்று,நாலு நாட்கள்  ரிகேர்சல் அக்கா வீட்டு பேஸ்மேன்டிற்குள் நடக்கும்,இரண்டு
பேரும் ஒவ்வொரு நாளும் அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு கிழமையில் எல்லோரும் அன்னியோன்னியம் ஆகி நாடகத்தில் சீரியஸ் ஆகிவிட்டோம்.



 

அக்கா தான் இயக்குனர் கண்டபடி வேறு கதைகள்
கதைக்க இடம் தரமாட்டா. மதுசிறி ,ராகினி இரண்டுபேருமே தங்களுக்கும் ஊரில என்னை
நீண்ட  மயிருடன் பெரிய பெல்போட்டத்துடன்  கண்ட ஞாபகம் இருப்பதாக சொன்னார்கள்.அவர்
அப்படிதான் திரிந்து படிப்பை கோட்டை விட்டவர் என்று அக்கா ஒரு குத்தில் என்னை
நொக்அவுட் ஆக்கிவிட்டார்.சும்மா சொல்ல கூடாது அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம்
பண்ணுவது ஒன்றும் இலகுவானதில்லை .பிரேம்சங்கர்,மதுசிறி இருவரும் வெகு இயல்பாக
நடிக்க தொடங்கிவிடார்கள் .மதுசிறி யாழ் பல்கலைகழகத்தில் ஏற்கனவே தனக்கு நடித்த
அனுபவங்கள் உண்டென சொன்னார்.



 

வெள்ளி இரவு கடைசி ரிகேர்சல்.ரென்சன் நன்றாக
குறைந்து விட்டிருந்தது. மிக இயலப்பாக நடிப்பும் வசனமும் எல்லோரிடமும் இருந்து
வந்ததில் அக்காவிற்கு நல்ல சந்தோசம். நாலு ஐந்து தடவைகள் ஒத்திகை
பார்த்தோம்.இனியென்ன நாளை மேடையில் சந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்



 

நாளை சனி நிகழ்சிக்கு முதல் ஒரு  சனியன் பிடிக்க போகின்றது என்று எவருக்கும் அப்ப
தெரியவில்லை.



 

தொடரும் . .  ..



 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை

விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்

காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி

“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க

போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து

ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை

இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு இல்லை .

 

திரிஷாக்கு வயசு கூடுதான், அதுக்காக..நீங்கள் துரத்தின/ துரத்தின கால பொண்ணுகள் உடன் ஒப்பிடுவது ..டூஊஊஊஊஊ மச்

Link to comment
Share on other sites

இதுவும் நகைச்சுவை இழையோடும் திரிபோல் இருக்கு.. :D தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இடத்தில்... கதையை நிற்பாட்டி விட்டீர்கள், அர்ஜூன். :)

உங்களுக்கு பிடித்த சனியனை வாசிக்க, ஆவலாக உள்ளோம். :D

Link to comment
Share on other sites

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

Link to comment
Share on other sites

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, அந்த உயரமான 'ராகினியா; அர்ஜுன்!

 

அவளும் இப்ப அங்கால வந்திட்டாளா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

 

-----

இந்த முறை கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?

வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).

 

நாடகத்தில் நடிப்பதற்கு பெடியன்கள் வேடத்தில் அர்ஜுன் நடிக்கும் போது, புது லட்டு... எதிர்பார்க்கலாமா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டுது

அர்ஜுன் அண்ணா தொடர்ந்து நடியுங்கள் 

Link to comment
Share on other sites

லட்டு எல்லாம் இப்ப திருப்பதி சைசா? :D

Link to comment
Share on other sites

நல்லா எழுதுகிறீங்கள். தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

உண்மையிலேயே அப்படி சொல்லி இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..தவறுக்கு வருந்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு  காய முன் எடுத்து விடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

பதின்ம வயதில் நெஞ்சில் பதிந்திருந்தால் பூசணிக்காயும் 'லட்டு' ஆகத் தெரியும். :lol:

 

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் லட்டு திண்ண ஆசையாயிருந்தது :D கடைக்கு போய் வாங்கிச் சாப்பிட்டேன் :lol: ...நீங்கள் உங்கள் கதையைத் தொட‌ருங்கள் அண்ணா வாசிக்க ஆவலாய் உள்ளேன் :)
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுனுக்குப் பாராட்டுக்கள் . பழைய காயளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுன்னுக்ப் பாராட்டுக்கள் . பழைய காய்யளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

 

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

Link to comment
Share on other sites

பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி .

நேற்று கடையில் கிடைத்த இடைவெளியில் முகபுத்தகத்தில் மதுசிறியின் பதிவு ஒன்றை பார்த்ததில்  பழையதை மீட்டு இதை எழுதினேன் .சும்மா பகிடிக்கு இட்ட தலைப்பு .அவர்கள் பெயர்களும் உண்மையானது இல்லை புங்கையூரான் .

இன்று ஞாயிறு கடை அவ்வளவு பிசியாக இல்லை களத்தில இறங்க்குவம் என்று யோசிக்கின்றேன் .

சந்திப்பம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி
நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் biggrin.png

 

அர்சுன் வாழ்த்துகள்

Edited by முனிவர் ஜீ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் :D

 

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர். உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர்.

உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? biggrin.png

யோவ் சிறி என‌க்கு வ‌ய‌து இப்பதான் 18 பாய்ந்து பாய்ந்து அடிக்கிற‌ வய‌து சீசீ ந‌டிக்கிற‌ வ‌ய‌து :lol: :lol:

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.