Jump to content

ரெண்டு லட்டு தின்ன ஆசையா?


Recommended Posts

சனி காலை பிரேம்சங்கரிடம் இருந்து போன் “CAN YOU DO ME A FAVOUR ?ஒருக்கா என்னை பிக் பண்ணி பிக்னிக்கில் விட்டுவிட முடியுமா.நான் அப்படியே SCABOROUGH இல் நின்றுவிட்டு கலைவிழாவிற்கு வந்துவிடுகின்றேன்” பிரேம்சங்கர் இருப்பது WESTEND ரிகேசலுக்கு வரும் போதும் அவனை நான்தான் போய் சப்வேயில் பிக் பண்ணுவேன்.சரி கடைசி நாள்தானே என்று அவனை போய் அவனது வீட்டில் ஏற்றிக்கொண்டு பிக்னிக் நடக்கும் MILLIKEN MILLS PARK இல் இறக்கிவிட்டேன் .பிக்னிக்கிலும் பல இந்துக்கல்லூரி மாணவர்கள் இருந்தபடியால் கலைவிழாவில் பிரேம் நடிப்பது பற்றி சொல்லி குடிக்கவிட வேண்டாம் என்று சொல்லிவைத்தேன் .கலைவிழா நடக்கும் இடத்திற்கு கிட்டத்தான் அந்த பார்க்கும் இருந்தது .புறப்படுமுன் பிரேம் பிக்னிக் முடிய போய் தங்கவிருக்கும் அப்பாட்மென்ட் விலாசமும் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.


சரியாக ஐந்து மணிக்கு மண்டபத்திற்கு போனால் ஒரே சருகை சேலை மயம் ஊரில திருவிழாவிற்கு போனது மாதிரி இருந்தது. எமது நாடகம்“வேர்கள்” நாலாவது நிகழ்வாக நேரம் 8.10p.m என்று அழைப்பிதளில் இருந்தது . நாடகம் நடிப்பவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.கலைவிழா தொடங்கி நடன நிகழ்சி ஒன்று போய்கொண்டிருக்கின்றது.நேரம் எழு மணியை எட்டுகின்றது பிரேமை இன்னமும் காணவில்லை. போன் அடித்தால் எவரும் எடுக்கின்றார்கள் இல்லை .நாடகத்திற்கு நேரம் இருக்கு இருந்தாலும் என்னை போய் பிரேமை ஏற்றிக்கொண்டு வா என அக்கா சொல்லிவிட்டார்.வேம்படி கூட்டத்தை ஒருக்கா மேய்வம் என்றால் அதுக்கும் ஆப்பா என்று புறுபுறுத்தபடி காரை எடுத்துக்கொண்டு பிரேம் தந்த விலாசம் நோக்கி செல்கின்றேன் .


பிரேம் அப்பாட்மென்ட்டின் விலாசம் தந்தானே ஒழிய அப்பாட்மேன்ட் நம்பர் தரவில்லை.எப்படி அவன் இருக்கும் ரூமை கண்டு பிடிப்பது.போன் அடிக்குது எவரும் எடுப்பதாயில்லை .அனேகமாக மண்டபத்திற்கு போய்கொண்டிருப்பான் என்று மனதில் ஒரு நப்பாசை .அவனிடம் கைத்தொலை பேசியும் இல்லை .அவன் மண்டபத்திற்கு போனதும் அக்கா போன் பண்ணுவார்தானே என்ற நம்பிக்கையில் அப்பாட்மேண்டிற்கு கீழேயே காருக்குள் காத்துக்கொண்டுஇருக்கின்றேன்.எந்த வித அசுமாத்தத்தையும் காணவில்லை.பொறுமை இழந்து அக்காவிற்கு போன் பண்ண “எனக்கு தெரியாது நீ எப்படியும் பிரேமை கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று விட்டு போனை வைத்துவிட்டார்..நான் மதுசிறிக்கு போன் பண்ணி பிரேம் பிக்னிக்கு போன விஷயத்தை சொல்லி தற்செயலாக நான் வர பிந்தினால் நாடக நேரத்தை பின் தள்ள முடியுமா என கேட்டேன் .மதுசிறி தான் வேம்படி பழையமாணவர் நிகழ்சி பொறுப்பாளர். சரி எப்படியும் ஆளை கொண்டுவந்து சேரும் என்று சொல்லிவிட்டார் .நானோ பிரேமின் தொலைப்பேசிக்கு திரும்ப திரும்ப அடித்துக்கொண்டே இருக்கின்றேன் .நேரம் எட்டை தாண்டிவிட்டது .


“கலோ” இம்முறை யாரோ போனை எடுத்தார்கள் .”கலோ பிரேம்”


“போன இடத்தில கொஞ்சம் கூட அடித்துவிட்டேன்,ஒரே தலயிடி அதுதான் படுத்துவிட்டேன் ,இப்ப நேரம் என்ன மச்சான் “


மனது நாயே நாயே நாயே என்று திட்டுகின்றது இருந்தாலும் காட்டிக்கொள்லாமல் “நேரம் போட்டுது ஓடிவா மச்சான் “என்கின்றேன் .கீழே இறங்கிவருகின்றான் எதுவும் உணர்ச்சி வசப்பட்டு வாயை விட்டு நடக்க போகும் நாடகத்தை சொதப்பகூடாது என்ற முடிவுடன் “பரவாயில்லை மச்சான் இப்ப போக சரி” என்கின்றேன்.


அக்காவிற்கும் போன் அடித்து பிரேமை ஏற்றியதை சொல்லி நாடகம் முடியும் வரை எதுவும் கதைக்க வேண்டாம் என கேட்டுகொள்கிறேன். இடைவேளைக்கு பின்னர் தான் நாடகம் என தாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் அவசரபடாமல் வரும்படியும் அக்கா சொன்னார் .


மண்டபத்திற்குள் நுழைந்து உடுப்புகளை மாற்றி வயர்லஸ் மைக்கையும் கோட்டில் கொழுவிக்கொண்டு மேடையில் முதலாவது சீன் திரை இழுக்க மனைவி மதுசிறி எனது தங்கை ராகினியை பார்த்து “நான் ஷோல்ல ஷோல்ல கேட்காமல் ஒவ்வொரு நாளும் ஸ்பெசல் கிளாஸ் என்று லேட்டா லேட்டா வாறா உங்கட ஸேல்ல சிஸ்டர் ,ஈப்டடியே விட்டா நீங்க தான் ரிக்ரெட் பண்ண வேண்டிவரும் “ மது சிறியின் எடுப்பு சாய்ப்பிற்கும் நெளிப்பிற்கும் உச்சரிப்பிற்கும் விசில் பறக்குது.


“அண்ணா .... அண்ணி இப்படிதான் எப்பவும் என்னில ஒரே கொம்பிளையின் ,நான் உங்கட செல்லம் தானே பிழை விடுவனோ “


வாசித்து கொண்டிருந்த TIME MAGAZINE ஐ மேசையில் வைத்துவிட்டு சோபாவில் இருந்து எழும்புகின்றேன் மண்டபம் நிறைந்த கூட்டம் வலது பக்கம் மதுசிறி இடதுபக்கம் ராகினி என்னை பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .அடுத்து நான் தான் வசனம் பேச வேணும் எல்லாம் ஒரே பிளாங்காக இருக்கு, எல்லாமே விறைத்தது போன்ற உணர்வு. திரை மறைவில் நின்ற அக்காவை திரும்பி பார்க்கின்றேன் அவர் கையில் இருக்கும் கருப்பு பைலை பார்த்ததும் திடீரென .பாடமாக்கிய ஒற்றைகள் எங்கிருந்தோ பறந்து வருவது போலிருந்தது.


“ஏன் செல்லங்கள் சும்மா சண்டை பிடிக்கிறீங்கள்”


ராகினியை பார்த்து “.அண்ணி சொல்லுறதை நீ கேட்க வேணும் என்ன செல்லம்”


மதுசிறியை பார்த்து “அவள் சின்ன பிள்ளைதானே சொன்னால் கேட்பாள்” வசனங்கள் வந்து விழுகின்றன .


பலத்த கை தட்டல்களுடன் நாடகம் முடிந்து விட்டது. பார்வையாளர்களிடம் இருந்து நிறைய வரவேற்பு .எல்லோருமே நன்றாக செய்தார்கள் போன்றதொரு உணர்வு. மதுசிறியின் உண்மையான தங்கை வந்து “அத்தான் நாடகம் நல்லா இருந்தது” என்றார். நான் நேரே திரைக்கு பின்னால் நிற்கும் பிரேமிடம் போகின்றேன்.ஆறு மணியில் இருந்து எட்டுமணிவரை நான் பட்ட அவலத்திற்கு பிரேமை ஒரு பிடி பிடிக்க நினைத்துவிட்டு பின்னர் எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது இனி ஏன் கோபப்டுவான் என்று மனத்தை மாற்றி பிரேம் நில்லும் நிகழ்சிகள் எல்லாம் முடிய ஒரு சின்ன பாட்டி ஒன்று போடுவம் என்கின்றேன்.


“சின்னன் ஏன் பெரிசா ஒன்றை போட்டா போச்சு” என்றான். .

Edited by arjun
  • Like 1
Link to comment
Share on other sites

லட்டு நல்லாய் தான் இருக்கு, பச்சை தான் இல்லை, லட்டுத் தொடருமா அல்லது இவ்வளவும் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி முடிக்க வேணும் ஏண்ட அவதியில எழுதின மாதிரி இருக்கு. முடிந்ததா அல்லது தொடருமா??

முதல் பகுதியில் வந்த சுவாரசியமான எழுத்துநடை இங்கே இல்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

எழுதி முடிக்க வேணும் ஏண்ட அவதியில எழுதின மாதிரி இருக்கு.

அப்படி தான் நானும் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

 

  இந்தத்  திரியில் என்னை தேவை இல்லாமல் ஏனப்பா இழுக்கிறீர் அலை :lol:

 

Link to comment
Share on other sites

சனி காலை பிரேம்சங்கரிடம் இருந்து போன் “CAN YOU DO ME A FAVOUR ?ஒருக்கா என்னை பிக் பண்ணி பிக்னிக்கில் விட்டுவிட முடியுமா.நான் அப்படியே SCABOROUGH இல் நின்றுவிட்டு கலைவிழாவிற்கு வந்துவிடுகின்றேன்” பிரேம்சங்கர் இருப்பது WESTEND ரிகேசலுக்கு வரும் போதும் அவனை நான்தான் போய் சப்வேயில் பிக் பண்ணுவேன்.சரி கடைசி நாள்தானே என்று அவனை போய் அவனது வீட்டில் ஏற்றிக்கொண்டு பிக்னிக் நடக்கும் MILLIKEN MILLS PARK இல் இறக்கிவிட்டேன் .பிக்னிக்கிலும் பல இந்துக்கல்லூரி மாணவர்கள் இருந்தபடியால் கலைவிழாவில் பிரேம் நடிப்பது பற்றி சொல்லி குடிக்கவிட வேண்டாம் என்று சொல்லிவைத்தேன் .கலைவிழா நடக்கும் இடத்திற்கு கிட்டத்தான் அந்த பார்க்கும் இருந்தது .புறப்படுமுன் பிரேம் பிக்னிக் முடிய போய் தங்கவிருக்கும் அப்பாட்மென்ட் விலாசமும் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.

சரியாக ஐந்து மணிக்கு மண்டபத்திற்கு போனால் ஒரே சருகை சேலை மயம் ஊரில திருவிழாவிற்கு போனது மாதிரி இருந்தது. எமது நாடகம்“வேர்கள்” நாலாவது நிகழ்வாக நேரம் 8.10p.m என்று அழைப்பிதளில் இருந்தது . நாடகம் நடிப்பவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.கலைவிழா தொடங்கி நடன நிகழ்சி ஒன்று போய்கொண்டிருக்கின்றது.நேரம் எழு மணியை எட்டுகின்றது பிரேமை இன்னமும் காணவில்லை. போன் அடித்தால் எவரும் எடுக்கின்றார்கள் இல்லை .நாடகத்திற்கு நேரம் இருக்கு இருந்தாலும் என்னை போய் பிரேமை ஏற்றிக்கொண்டு வா என அக்கா சொல்லிவிட்டார்.வேம்படி கூட்டத்தை ஒருக்கா மேய்வம் என்றால் அதுக்கும் ஆப்பா என்று புறுபுறுத்தபடி காரை எடுத்துக்கொண்டு பிரேம் தந்த விலாசம் நோக்கி செல்கின்றேன் .

பிரேம் அப்பாட்மென்ட்டின் விலாசம் தந்தானே ஒழிய அப்பாட்மேன்ட் நம்பர் தரவில்லை.எப்படி அவன் இருக்கும் ரூமை கண்டு பிடிப்பது.போன் அடிக்குது எவரும் எடுப்பதாயில்லை .அனேகமாக மண்டபத்திற்கு போய்கொண்டிருப்பான் என்று மனதில் ஒரு நப்பாசை .அவனிடம் கைத்தொலை பேசியும் இல்லை .அவன் மண்டபத்திற்கு போனதும் அக்கா போன் பண்ணுவார்தானே என்ற நம்பிக்கையில் அப்பாட்மேண்டிற்கு கீழேயே காருக்குள் காத்துக்கொண்டுஇருக்கின்றேன்.எந்த வித அசுமாத்தத்தையும் காணவில்லை.பொறுமை இழந்து அக்காவிற்கு போன் பண்ண “எனக்கு தெரியாது நீ எப்படியும் பிரேமை கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று விட்டு போனை வைத்துவிட்டார்..நான் மதுசிறிக்கு போன் பண்ணி பிரேம் பிக்னிக்கு போன விஷயத்தை சொல்லி தற்செயலாக நான் வர பிந்தினால் நாடக நேரத்தை பின் தள்ள முடியுமா என கேட்டேன் .மதுசிறி தான் வேம்படி பழையமாணவர் நிகழ்சி பொறுப்பாளர். சரி எப்படியும் ஆளை கொண்டுவந்து சேரும் என்று சொல்லிவிட்டார் .நானோ பிரேமின் தொலைப்பேசிக்கு திரும்ப திரும்ப அடித்துக்கொண்டே இருக்கின்றேன் .நேரம் எட்டை தாண்டிவிட்டது .

“கலோ” இம்முறை யாரோ போனை எடுத்தார்கள் .”கலோ பிரேம்”

“போன இடத்தில கொஞ்சம் கூட அடித்துவிட்டேன்,ஒரே தலயிடி அதுதான் படுத்துவிட்டேன் ,இப்ப நேரம் என்ன மச்சான் “

மனது நாயே நாயே நாயே என்று திட்டுகின்றது இருந்தாலும் காட்டிக்கொள்லாமல் “நேரம் போட்டுது ஓடிவா மச்சான் “என்கின்றேன் .கீழே இறங்கிவருகின்றான் எதுவும் உணர்ச்சி வசப்பட்டு வாயை விட்டு நடக்க போகும் நாடகத்தை சொதப்பகூடாது என்ற முடிவுடன் “பரவாயில்லை மச்சான் இப்ப போக சரி” என்கின்றேன்.

அக்காவிற்கும் போன் அடித்து பிரேமை ஏற்றியதை சொல்லி நாடகம் முடியும் வரை எதுவும் கதைக்க வேண்டாம் என கேட்டுகொள்கிறேன். இடைவேளைக்கு பின்னர் தான் நாடகம் என தாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் அவசரபடாமல் வரும்படியும் அக்கா சொன்னார் .

மண்டபத்திற்குள் நுழைந்து உடுப்புகளை மாற்றி வயர்லஸ் மைக்கையும் கோட்டில் கொழுவிக்கொண்டு மேடையில் முதலாவது சீன் திரை இழுக்க மனைவி மதுசிறி எனது தங்கை ராகினியை பார்த்து “நான் ஷோல்ல ஷோல்ல கேட்காமல் ஒவ்வொரு நாளும் ஸ்பெசல் கிளாஸ் என்று லேட்டா லேட்டா வாறா உங்கட ஸேல்ல சிஸ்டர் ,ஈப்டடியே விட்டா நீங்க தான் ரிக்ரெட் பண்ண வேண்டிவரும் “ மது சிறியின் எடுப்பு சாய்ப்பிற்கும் நெளிப்பிற்கும் உச்சரிப்பிற்கும் விசில் பறக்குது.

“அண்ணா .... அண்ணி இப்படிதான் எப்பவும் என்னில ஒரே கொம்பிளையின் ,நான் உங்கட செல்லம் தானே பிழை விடுவனோ “

வாசித்து கொண்டிருந்த TIME MAGAZINE ஐ மேசையில் வைத்துவிட்டு சோபாவில் இருந்து எழும்புகின்றேன் மண்டபம் நிறைந்த கூட்டம் வலது பக்கம் மதுசிறி இடதுபக்கம் ராகினி என்னை பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .அடுத்து நான் தான் வசனம் பேச வேணும் எல்லாம் ஒரே பிளாங்காக இருக்கு, எல்லாமே விறைத்தது போன்ற உணர்வு. திரை மறைவில் நின்ற அக்காவை திரும்பி பார்க்கின்றேன் அவர் கையில் இருக்கும் கருப்பு பைலை பார்த்ததும் திடீரென .பாடமாக்கிய ஒற்றைகள் எங்கிருந்தோ பறந்து வருவது போலிருந்தது.

“ஏன் செல்லங்கள் சும்மா சண்டை பிடிக்கிறீங்கள்”

ராகினியை பார்த்து “.அண்ணி சொல்லுறதை நீ கேட்க வேணும் என்ன செல்லம்”

மதுசிறியை பார்த்து “அவள் சின்ன பிள்ளைதானே சொன்னால் கேட்பாள்” வசனங்கள் வந்து விழுகின்றன .

பலத்த கை தட்டல்களுடன் நாடகம் முடிந்து விட்டது. பார்வையாளர்களிடம் இருந்து நிறைய வரவேற்பு .எல்லோருமே நன்றாக செய்தார்கள் போன்றதொரு உணர்வு. மதுசிறியின் உண்மையான தங்கை வந்து “அத்தான் நாடகம் நல்லா இருந்தது” என்றார். நான் நேரே திரைக்கு பின்னால் நிற்கும் பிரேமிடம் போகின்றேன்.ஆறு மணியில் இருந்து எட்டுமணிவரை நான் பட்ட அவலத்திற்கு பிரேமை ஒரு பிடி பிடிக்க நினைத்துவிட்டு பின்னர் எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது இனி ஏன் கோபப்டுவான் என்று மனத்தை மாற்றி பிரேம் நில்லும் நிகழ்சிகள் எல்லாம் முடிய ஒரு சின்ன பாட்டி ஒன்று போடுவம் என்கின்றேன்.

“சின்னன் ஏன் பெரிசா ஒன்றை போட்டா போச்சு” என்றான். .

ம்ம்

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

 

மச்சி லட்டுக்கை ஏனப்பா என்னையும் சேர்த்திருக்கிறீங்கள் ? :lol: புரியமாட்டேங்கு.

Link to comment
Share on other sites

Arjun எழுத வந்த வேகத்துக்கு ஏதோ கன புதினம் சொல்லப்போறீங்களெண்டு காத்திருக்க இப்பிடி முடிச்சிட்டீங்களே ? :lol:  ஆனாலும் லட்டுக்கதை நல்லாத்தானிருக்கு. நினைவுகள் நெஞ்சில் சுட நீங்கள் சொல்ல வந்த கதையை பந்து போய் முடிச்சமாதிரியிருக்கு. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதை நல்லாய் இருக்கு இன்னும் எழுதுங்கோ .

 

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு. எழுத வந்ததை ஏதோ காரணத்துக்காக எழுதவில்லை போல உள்ளது.

Link to comment
Share on other sites

வேம்படி லட்டா அல்லது வேப்பம் பூ வடகமா? :D



ஏம்பா லட்டு தின்ன என்னு கூப்பிட்டு வாய் நெறைய புளிகரச்சு வாக்கிறாங்க?

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.